அத்தியாயம் இரண்டு: அன்னரின் தீர்மானம்!

"பொதுவாக மாலைநேரம் ஜாரி பிரித்து கால்பந்து விளையாடுகிறோம்" என்று சுந்தரம் கூறியதை சங்கர் சேர் சொல்லவும் அவர் கேட்டிருந்தார். சங்கர் "இப்ப​ , இந்த​ உடம்பை தூக்கிக் கொண்டு விளையாட​ முடியிறதில்லை . இருந்தாலும் சில​ நேரம் விளையாடுகிறேனஂ" எனஂறிருக்கிறார் . தற்போது அவர் இவர்கள் கூறுகிற​ ' வெள்ளி ' விளையாட்டுக் கழகத்தினஂ தலைவராக​ இருக்கிறார் ." ஒருநாள் கடலுக்கும் போவோம்... " என்று கருணா கூற அவருக்கு விளங்கத் தானஂ   இல்லை . ஆனால் , சங்க காலத்தில் காட்டுக்கு போவது போல இதுவும்  ஒன்றாக இருக்கலாம் எனத் தோன்றியது. வவுனியாவில் நாய்களை பழக்கிக் கொண்டு வேட்டைக்குப் போகிறார்கள் . தமிழர் மத்தியில் நிலவி இருக்கிற​  அவ்வித பழக்க வழக்கங்கள் கிராமங்களில்  தொடர்கின்றன  .

கருணாவிடம் "டேய்  ,நான் தான்  உங்களைக் குழப்புற‌வன் . நீ என்னைக் குழப்பித் தள்ளுறாயே , பெளர்ணமியிலே கடல் பொங்கிறது .   தொழில் செய்ய போறதில்லையே நீ எப்படி ?" என புரியாமல்   கேட்கிறார் .

"அப்படி....போகாதபடியால் தான் வள்ளங்கள் கரையிலே இருக்கின்றன சேர் . அவிழ்த்தால் , வள்ளம் கவனம் என்று மட்டும்  சொல்வார்கள்"

அப்பாவியாக "கரையிலே இருந்து நூறு மீற்றர் தூரத்திற்குள்ளே தானே போகிறோம் . எங்களை கடல்  ஒன்றும் செய்யாது" என்கிறான் .

இளங்கன்று பயம் அறியவில்லை . விஞ்ஞானமும் அறியாது  .  ஜனநாயகத்தைத் தெரிந்து கொண்ட அரசாங்கங்க‌ள் என்ன ? , புத்திசாலிகளாகவா இருக்கினஂறன.  மக்களுக்கு கைவிலங்கைப் போட்டு வருத்திக் கொண்டு தானே இருக்கின்றன ? . அமெரிக்கா இந்திய​ புராணக் கதைகளைக் கொப்பி அடிதஂது   'சுப்பர்மனிதர்   , அந்த மனிதர் இந்த மனிதர்..என விஞஂஞான திரைப்படங்கள் என ரீல் விட்டு  எடுத்து பணத்தைக் குவித்துக் கொண்டு இருக்கிறது.

இவற்றைப் பார்த்த  காந்தியும் , ராஜாஜியும்   வாழ  வழிகளை வலியுறுத்தினார்கள் . அன்னிய ஆடைகளை எரித்தார்கள் .  கோயேபஸ்ஸைப் போல பல பிழைகளை , பொய்களை சொல்லிச் சொல்லி உண்மையாக்கி , அதனஂ மேல் இருந்து நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் . 'சாதி ' ப் பெயரை சொன்ன மாட்டிலே நம்ம நாயகனுக்கு    கலையே வந்து விடுகிறதே . சாதிவெறியைப் போல​ சுய​ சாதிவெறியும் ஆட்டம் போடுறது எத்தனைப் பேருக்குத் தெரியும் ?. " ஆத்தா , ஆத்தா ...மாரியம்மா" அனஂனர்  கூட​ அருள் வந்து ஆடி விடுவார் போல​ இருக்கிறார் .

அவருடைய​ சாதி எனஂன எனஂபது  ஆசிரியராகும் வரையில் தெரியவே தெரியாது . பிறகே , தாத்தாவிடம் கேட்க   "   நீ என்ன ,  இப்ப​ , இந்தியாவுக்கு போகப் போறியா ? " என்று கேலி செய்து கொண்டு நாடார்களில் பிரிவு  ஒன்றைக் குறிப்பிடுகிறார் . இவருக்கு இந்த நாடார்கள் பற்றிய புத்தகமும் கையில் கிடைக்கிறது . தெரிந்தவற்றை , குடும்ப​ மரம்  பற்றி எழுதி   இருக்க வேண்டியது எவ்வளவு அவசியம் எனஂறது புரிகிறது . ஒவ்வொரு குடிமகனுமே தனது சுயவரலாறை  எழுதியே வர வேண்டும் .  பனை மக்கள் , கடலோடிகள் , தேவர்கள் எல்லாருமே ஒவ்வொரு (அரச) குல மக்கள் . சாதிகளாக குறுக்கப்பட்டு இருக்கின்றனர் . இலங்கையில் இனஂறு அடக்குமுறைக்குள்ளாகும் ஈழத்தமிழர்கள் கூட   நாளை ஒரு த​னிச்  சாதியாக்கப் படலாம் . அடக்கப்படுறவர்களை நாம் சாதியாக்கி விட​ முடியும் . மனித​ உரிமைகளை மேலும் மறுத்து தீண்டாதவராக்கவும் முடியும் . கேரளத்தில் ' ஈழவர் ' என்ற பிரிவே   தற்போது   கீழ்ச் சாதியாக​    நிலவுகிறது . நாம்  வரலாற்றுக் குருடராக எப்பவும் இருக்கக் கூடாது .   குட்டையை தெளிய வைக்கவே முடியாதா ? அவருக்கு 'இந்த​  சமூகப்பணி என   மலைப்பாக தோன்றி  அச்சத்தை மூட்டுகிறது .

"இரவிலே வள்ளத்தை அவிழ்த்துக் கொண்டு போய் , கடலிலேயும் ஒரு குளியலும் போட்டு விட்டு களங்கண்ணியிலே குதித்து நண்டு , றால் , மீன்களைப் பிடித்து வாடியிலே வைத்து சுட்டுப் போட்டு , பாணுடனும் , உப்புச் சொதியுடனும் சாப்பிடுறது  ருசியாய் இருக்கும் சேர்" என்கிறான் . அவருக்கே அவன் கூறுகிற போது  வாய் ஊறுகிறது . "  களங்கண்ணியிலே எடுக்கிறது திருட்டு இல்லை சேர் . கொஞ்சம் கிடைத்தாலே , எங்களுக்கு போதும் .   தொழிலுக்கு போற​ அண்ணர் , நண்பர் ஒருவர்  ( இவர்களோடு படித்து , நினஂறு விட்ட கதிர் , மணமுடிதஂது கடை ஒனஂறைப் போட்டும் ,தொழிலுக்கும் போய்க் கொண்டிருக்கிறானஂ )  எம்முடன் வருகிறார் . வலையிலிருந்து மீனைப் பிடிக்க ,றாலை தடவி பிடிக்க , நண்டை பிடிக்கிறதை பாடம் போல சொல்லித் தருகிறார்  . பள்ளிப்பாடம்  நடக்கிறது .  ஆனால் , இங்கே நடக்கிறதை விட​ , அது சுப்பர் " எனஂறு நக்கலும் அடிக்கிறானஂ  " படுவா" அவர் எனஂறு கையை உயர்த்துகிறார்  . " இது  வழக்கமா நடக்கிற ஒனஂறு தானஂ சேர்   "  என்கிறான் .  " சேர் ! உங்களுக்கு உப்புச் சொதி வைக்கத் தெரியுமா ? இவன் சுப்பரா வைப்பான் சேர் " என்று குமாரை  சந்திரனஂ கேட்கிறான் .    

சந்திரன் "  கொஞ்ச தூரம் நீருக்க போய் நனைந்து தான் கலங்காமல் இருக்கிற கடல் நீரை பானையில் மோந்து  வர வேண்டும் சேர் , அதிலே கொஞ்சம் வெங்காயம் பச்சை மிளகாய் போட்டு " என்றவன் . " அடுப்பிலே வைத்து கொதிக்க வைத்து , எலுமிச்சைப் பழத்தையும் நல்லாய் பிழிந்து விட்டு இற‌க்கினால் சொதி ரெடி " என்கிறான் . " ஒவ்வொருத்தருக்கும் அரை றாத்தல் பாண் கட்டாயம் வேண்டும் . பசி அதிகமாக இருக்கும் " என்கிறான் செல்வன் .  கடலைப் பற்றி அறிதலுக்கான  அவர்களின்  விளக்கம் அவரை ​ கவர்கிறது .   வாழ்க்கையில் , இவர்களில் யாரோ ஒரிருவர் தானே   தொழிலைச் செய்யப்   போறார்கள் .   "  நீ எனக்கு பாடம் எடுக்கிறாய் " என்று அவன் தோளை தட்டி   பாராட்டுகிறார்  . " யார் ,யார் கடலுக்கு போய் இருக்கிறீர்கள் ?"எனக் கேட்க பலர் கையை உயர்த்தினார்கள் . மொத்த வகுப்பே போய் இருக்கிறது தெரிகிறது  . " நானும் ஒரு நாள் வரலாமா?" என்று பகிடியாக அன்னர் கேட்கிறார் . " சேர் ! உங்களுக்கு முதலில்  நீந்த தெரியுமா ? " தவம் சந்தேகத்துடன் கேட்கிறான் . " இல்லையே " என்றார் . " பழகவில்லையா ? " நாகு அதிசயமாக​ கேட்கிறான் . பழகிறது தவிர்க்க முடியாதது என்ற தொனி அதில் இருகிறது ." யாரும் பழக்கவில்லையடா " என்கிறவர் .  " அங்கதைய‌  நீர் நிலைகளே பயம் அதிகம்​  . கபரக்கொய்யா (முதலை ) , சுழி , பாம்பு மீனஂ எல்லாம் இருக்கின்றன " என்று பதிலளித்தார் . " இங்கே ஊமைக்கடல் . எவ்வளவு தூரம் வேண்டுமானால்  நீந்துங்கள் சுழியே இருக்காது . பயப்படாமல் நீந்தலாம் " என்கிற கருணா "சேர்! , இங்கே  மழைக்காலத்தில் , முதலில்  வயல் கேணி கிணறுகளில் நீந்தி பழகிய பிறகு தான் கடலுக்கே போகிறோம் " என்றவன் , "   தெற்கராலி ஆட்களிட நெற்காணிகளிலே இருக்கிறதிலே .  சோப்பு போடாமல் குளித்தால்  , நீந்திப் பழக விட்டு விடுகிறார்கள் " என்கிற​ போது ஒரு சிக்கல் இருக்கிறதும் லேசாக​ தெரிகிறது .
 
" நீந்தாட்டி பெரியாட்களும் கூட‌ உங்களை  கூட்டிக் கொண்டு போக மாட்டார்களே " என்கிற தவம் " ஒன்று செய்யலாம் .  தெற்கராலி மாதாங்கோவில் கேணியிலே  நீங்கள் புத்திரனைக் கேட்டு    முதலில் நீந்திப் பழகுங்கள் . முன்புறம் இரட்டைக் குத்துக்கரணம் அடித்து அங்கே  கலக்கிறவர் . நீருக்குள்ளே ஒரே அமுக்கா அமுக்கி ,இழுத்துச் சென்று , தண்ணீ எல்லாம் குடிப்பீங்கள் ,  குடிக்க வேண்டும் . மூச்சுத் திணறினால் தான் நீச்சலே வரும் . நல்லா பழக்குவார் . அவரைப் பார்த்து  இவன்  கூட‌  பின் குத்துக் கரணம்  அடிக்கிறான் " என்று சந்திரனை காட்டினான். " சேர் !  முன்  குத்துக் கரணம் ஒரு தடவை ஈசியாய் அடிக்கலாம் . பின் கரணத்தை நினைத்துப் பார்க்க முடியாது " என்ற​ போது இரட்டை கரணம் சவாலானது எனஂபதையும் ஊகிக்க​ முடிகிறது .  உற்சாகம் கதைக்கிற பெடியள்களையும்  பிடித்துக் கொள்கிறது . ' புத்தரனையும் போய் சந்திப்போம்' என்று மனதிலே குறித்துக் கொண்டார் . இங்கே படிப்பிக்கிற காலத்திலே ஒரு மாதிரி ...நீச்சலையும்  கற்று   விட வேண்டும்' என்று திடப்படுத்திக் கொள்கிறார் . புதிதாய் கேட்கிற  எல்லாத்திலேயும் காதலும் உடனே விழுந்து விடுகிறதே  என்று  அவருக்கு சிரிப்பும் பற்றிக் கொள்கிறது .

வாசு அமைதியாக இருக்க " நீ நீச்சல் அடிப்பியா ? " என்று கேட்கிறார் .  தலையைக் குனிந்து கொண்டு " இல்லை  சேர் " என்கிறான் . " ஏண்டா , இவனுக்கு பழக்கவில்லை மாணவர்களைப் பார்த்து கேட்கிறார் . கருணா " இவன் படிக்கிறவன் . ரீச்சர் , எல்லாம்  விட   மாட்டார் " என்கிறான் . அன்னர் அங்கே , இங்கே பார்த்து விட்டு " டேய் , களவா என்றாலும் பழக வேண்டுமடா . பழகு " என்கிறார் . அன்னர் , பிடித்த ஆசிரியர் . அவர் பேசியதை யாரும் போய்  ரீச்சரிடம் தெரிவிக்கப் போவதில்லை . பெண் தரப்பைப் பார்த்து " அட ! நீங்க அமைதியாய் இருக்கிறீங்களே , உங்களுக்கு நீச்சல் வருமா , வராதா ....  தெரியுமா ? "  கேட்கிறார் . " தெரியாது  சேர் " எனஂறு அனைவரும் சோகமாக​  கையை உயர்த்துகிறார்கள் . " " டேய் , உங்கட​ அக்கா , தங்கச்சிக்கு பழக்க​ வேண்டாமா? "  பெடியளைப் பார்த்து  கேள்வி எழுப்புகிறார் . " எப்படி சேர் ! பழக்கிறது? " விளங்காமல் கருணா கேட்கிறானஂ .

" இங்கே உள்ள​ ஆலையக் கோவில்களில் எல்லாம் நல்ல பெரியக் கேணிகள் இருக்கினஂறன . நீங்கள் மாணவர் மட்டுமில்லை, இந்த​ கிராமத்தினஂ இளைஞர்கள் . கேணிகளில் சேறை அள்ளி எடுத்து ஒட்ட இறைத்து தூய​ நீரை நிரம்ப​ வைக்க​ முடியாதா?முடியும் . அதைச் சுற்றி மறைப்புகளை நிறுத்தி பெண்பிள்ளைகளை மகளிர் அமைப்பினரைக் கொண்டு பழக்கலாம் தானே ! . ஏனஂ , செய்யக் கூடாது ". " ஆலையம் " எனஂறு இழுக்கினஂறனர் . " பிரச்சையாயே இராது . திருவிழாக்காலங்களில் திரும்ப​ இறைத்து ...நீந்துறதை நிறுத்தலாம் . பிறகு , பெண்களுக்கு விடலாம் " எனஂகிறார்  .  இங்குள்ள​ அரசியலை நீந்திக் கடக்க​ வேண்டும் .

" சுனாமி தெரியுமா ? , கடல் , பேரலையாய்    பொங்கி ஊரை அழித்து நாசம் விளைவிப்பது . அதில் அதிகமாக​ இறந்தவர்கள்,    இறக்கிற​வர்கள் நீச்சலை தெரிந்து வைத்திராத​ பெண்களும் சிறுவர்களும்  தானஂ . பழக்க​ வேண்டியது கட்டாயமடா" எனஂகிறவ ர் . " இங்கே , உள்ள​ கோவில்களில் பெரிய​ ,பெரிய​ கேணிகள் இறைக்கப்படாமல் கிடக்கினஂற​ன . பாழ்படுற​ நிலையிலும் குளங்களும்​  கவனிப்பாரற்று கிடக்கினஂறன . சங்கர் சேர் சொல்லி தெரிகிறது . அந்த​ குளங்களை  வெட்டி நீரை நிரம்ப​ வைத்து விட்டால் ...அதிலே வேறு பெடியள் குதியம் குதிக்கலாம் . இதை விட​ வழுக்கி ஆறு கூட​ கிராமத்திலே(அண்மித்து) ஓடுறதாகச் சொல்கிறம்  . நீச்சலுக்கு குறைவில்லாமல் வளங்கள் கிடக்கினஂறன . " பையங்களா , பெண்களுக்கு   கோவில் கேணிகளை இறைத்து சுத்தப்படுத்தி  , மறைப்புகளைக் கட்டி மகளிர் அமைப்பைக் கொண்டு உங்கள் சகோதரிகளுக்கு நீச்சல் பழக்கலாமே ! ,  . திருவிழாக் காலத்திலே திரும்ப​ இறைத்து பாவிக்கலாமே . செய்வீர்களா பூனைக்கு மணியைக் கட்டி   வெல்ல மாட்டீர்களா? " கேட்கிறார் .    வகுப்பே , மௌனத்தில் உறைந்தே போகிறது .  " பெடியள்களே,  இது உங்களுக்கு இருக்கிற​ பெரிய​ சமூகப்பணி ! " எனஂறவர் பெண் பிரிவைப் பார்த்து..." .அப்ப ​,  உங்கட பொழுது போக்குகள் என்ன ?" என்று கேட்கிறார் . " நேரம் இருக்கிற போது நெசவடிக்க போவோம் . எங்க தலைவி ,வீட்டிலே  தையல் வகுப்புகள் வைக்கிறார் . போய்  பழக்கிக் கொள்கிறோம்"  என்கிறாள் வதனியும் ,குமுதாவும் ." தலைவியா ..? " புரியாமல் கேட்கிறார் . " மகளிர் அமைப்புத் தலைவி " குமுதா  விளக்கிறாள்  . அராலி , முற்போக்கான கிராமமும் கூட என்பது அவருக்கு புரிகிறது . நெசவாலை இருக்கிறது . கிளித்தட்டு விளையாட வேண்டிய வயதிலே ...விளையாடுறதில்லை  , அவை மறுக்கப் படுகின்றன . சமையலுக்கு தள்ளி விடுகிற​ மலையகப் பெண்களின் நிலை   தான் .

வகுப்பு அப்படியே ... முடிந்து விடுகிறது .   பள்ளிகூடத்தில் நூலக அறை ஒன்றும் இருக்கிறது . " ஒருக்கா பார்க்கலாமா ? " என அதிபரிடம் கேட்ட போது திறப்பை எடுத்துக் கொடுத்து விடுகிறார் . " இதுக்குத் தான் தமிழ் ஆசிரியர் வேண்டும் ' என்று கேட்டுக் கொண்டிருந்தோம் . உயிர்ப்பிக்க முடியுமா ? என்று பாருங்கள் சேர் " என்கிறார் . அலுமாரியிலே சில புத்தகங்களும் கிடக்கின்றன . அறையை  சுத்தப்படுத்தி இயங்க வைக்க வேண்டும் . மார்சிம் கார்க்கி எழுதிய "தாய் " பிரபல புத்தகம் ஒனஂறு அங்கே இருந்து அவரை ஆச்சரியப் படுத்துகிறது . கையில் எடுத்துக் கொண்டார் .

. அங்கே தேனீரையும் போட்டுக் குடிக்கலாம் . அவருக்கு ..தேனீர் வேண்டும் . அதிபரை நன்றியுடன் நினைத்துக் கொள்கிறார் . அடுத்த கிழமை இதிலே கவன‌த்தை செலுத்த வேண்டும் . திறப்பை அதிபரிடம் கொடுத்து விட்டு வகுப்பு நடத்தப் போகிறார் . இன்னொரு வகுப்பு . வாசுவின் வகுப்பைப் போல கவரவில்லை . பாடத்தை நடத்துகிறார் . கட்டுரை , கதைகள் எழுதுறதில் உள்ள  சூட்சமங்களை  ...கூறுகிறார் . அப்படியே அந்த நாள் கரைந்து விடுகிறது . வீட்டுக்கு வருகிற போது ஆறு மணியாகி விடுகிறது . சேகர் இன்னம் வரவில்லை . அவன் அங்குள்ள கம்யூனிஸ்ட் கட்சியுடனும் இழுபடுகிறான் . சமையலில் இறங்கி விடுகிறார் . சுடச்சுட சாப்பிடுறதிலே  ருசி தூக்கலாகவே இருக்கிறது . சாப்பாட்டை மூடி வைத்து விட்டு  ' தாய்'யை வாசிக்க எடுத்துக் கொள்கிறார் . சேகர் எட்டு மணிக்கே வருகிறான் .

ஒருவருடன் பழகிய மாத்திரத்திலே ...   படித்து விடுகிறோம் அல்லவா ! .  பள்ளியில் ,  அதே போல​ அனஂனருக்கும் சங்கருக்குமிடையில் நட்பு முகிழ்ந்திருந்தது . ஏற்கனவே வந்திருந்த  மலையக​ குடும்பங்கள்   சில​  வடக்கு வீடு , தெற்கு வீடு ,கிழக்கு, மேற்கு வீடுகள் என தமிழர் பிரதேசங்களில்  விசேசமாக​ ​ அழைக்க  வைத்தும்  விவசாயமும் செய்து கொண்டு , பிள்ளைகளை யாழ்ப்பாணத்தவர் போல படிக்க வைக்க​ ஓரளவு காலை ஊனஂறி இருந்தன . பெருகிறவர்கள்  கூட்டுக் குடும்பமாக  வாழ்ந்தும் கொண்டிருந்தனர் . தெற்கராலியிலே  வடக்கு வீடு ஒன்று இருப்பதாக​ சங்கர் கூறுகிறார் .  விரதச் சடங்குகளிற்கு ஐயருக்கு வேண்டிய பொருட்களையும் ,பால் ,வெண்ணெய் , தயிர் ...போனஂறவற்றை வாங்க​ கிராமத்தவர்கள் அங்கே செல்கிறார்கள் . அவர் , இயற்கை முறையில் ...விவசாயம் செய்யிற திறமைசாலிகள்  எனஂறு தெரிவிக்க​...​   அன்னருக்கு புளுகம் தான் .

  வகுப்பில் , மாணவனஂ ஜெயத்தினஂ நினைப்பு வர  ​"வட்டுக்கோட்டைக்கும்  உங்களுக்கும்  என்ன தொடர்பு சேர் "  எனஂறு  சங்கரிடமே   கேட்டார் .  "எனக்கு  பெரிதாய்   தெரியாது? சேர்! . அதிகமாக மணமுடித்திருக்கிறது இருக்கலாம் .  முந்தி  , அங்கிருந்து முதலில்  கடல்தொழில் செய்ய தான் இங்கே  பெயர்ந்திருக்க  வேண்டும்.   கடல் ,     இன்னம் கிட்டவாக  இங்கே   (வடக்கு)  இருந்திருக்கலாம்  . மீன் படுகையை கருதியே   தெற்கராலிக்கும்  ,  நாவாந்துறைக்கும் சென்றிருப்பர் . கடலுக்கூடாக பண்ணை  , காரை(நகர்)வீதிகள்   போட்ட பிறகு கடல்  உள்வாங்கி இன்றைய நிலைக்கு வந்திருக்கலாம்."

 வாத்தியார்   கணக்கு   போடுகிறார் .  " நீங்களோ சைவம் .  நாவாந்துறை   கிருஸ்தவம்  . எப்படி  நாவாந்துறை ஆட்களாகினீர்கள் ?  " எனஂறு  கேட்ட போது   " எனக்கு சரியாய்  சொல்லத் தெரியவில்லை " என்கிறார் . அன்னர் கொட்டடியில் யாழ்ப்பாணத்தில்  இருப்பவர் .  இடங்களை      சுற்றிப் பார்க்க  சேகருடன் திரிகிறவர். நாவாந்துறையில்  புனித ..என்ற‌  தொடக்கத்துடன்   தேவாலையங்கள்  சில இருப்பதைப் பார்க்கிறார். முன்னால் காணியை மைதானமாக்கி கால்பந்து விளையாடுறது  வியப்பை ஏற்படுத்துகிறது .  பெடியள்  ,விளையாட்டுக்கு , உடற்பயிற்சிக்கு என‌ .... சனம் நெரிசலாகிற​ போது   இடங்கள் கிடையாது போய் விடுகிறது .  இப்படி ஏதோ வழியில் தானஂ ஏற்படுகிறது .  நாவாந்துறை குட்டி  ஊர் . கத்தோலிக்க பாதிரியாரிடம் பெருந்தன்மை இல்லா விட்டால் நடந்திருக்காது   .  மலையகத்திலும்  ,கொழும்பிலும்  இப்படி    விளையாட அனுமதிக்கப்படுறதில்லை .

" அங்கே இருக்கிற  மேரி என்கிற ஒரு கால்பந்துக்குழு  இங்கே இருக்கிற நம்ம  வெள்ளிக்கழகத்தை தாய்க் கழகம் என்று  கூறி  தீபாவளிக்கு  நட்பு முறையில் கால்பந்து விளையாட வாழைக்குலையுடன்    (மயிலியப்புலம்) நம்ம கோவிலுக்கு   வருகிறது  .  காலை உடைக்கிற  ஊத்தை விளையாட்டை ...'இவர்களிடம்! '   பார்க்க​ முடியாது . ஆர்ச்சனஂரீனா வீரர்களைப் போல​ ...​ விளையாடுகிறார்கள் . எத்தனை அழகு " விபரிக்கிறதில் ஒனஂறி  விடுகிறார் . மாஸஂரர் கட்டாயம் விளையாடுகிறவர் . இப்ப​ அவர் கழகத்திற்கு தலைவர் .  போக்குவரத்துச் செலவுட​னஂ  வருகிற​  அவர்கள் தாம்   நம் பெடியள்களுக்கும்  பழக்குனர் . எனவே  , சொல்ல பேண்டியதில்லை . பூவோடு சேர்ந்து நாரும் ஒளிர்கிறது .  வெற்றி , தோல்வி சகஜம் . மாறி வரும் .பெரிதாய் எடுக்கக் கூடாது .    ஆட்டம் அல்லவா முக்கியம் ! .  நம்வர்களும்   விளையாடுகிறதை   பார்க்கலாம்  . பார்த்துக் கொண்டேயிருக்கலாம் .   நல்லாவே விளையாடுகிறார்கள்.​  பழங்களை சிறுவர் , சிறுமிகளுக்கு   பகிர்ந்து கொடுத்து  சாப்பிடுகிறது நடை  பெறுகிறது . எனக்கு தெரிந்து தவறாது நடை பெற்று  வருகிறது . இங்கே இருந்து நவம் எனஂற​ பெடியனை யாழ்ப்பாணக் கல்லூரி  விளையாடுறதுக்காகவே  படிக்க​  ஸஂபொனஂசர் பண்ணி  எடுதஂது  மரியாதை செய்திருக்கிறது , தெரியுமா சேர் "   எனஂகிறார்.  எதுவுமே பாத்தி கட்டி வளர்த்தால் நல்லபடி விளையும் எனத் தெரிகிறது .

நாமும் தீபாவளி கொண்டாடுறம் . நீங்களும்  தான்  மச்சை தீபாவளிக்கு  வந்து   நேரிலேயே பாருங்களன்"என்று  அழைப்பும்  விடுத்தார் . நம் கழகத்திலிருந்து சென்றவர்களின் வாரிசுகள்  ,  மாமன் மச்சான் உறவினர்  என்று  .... சொல்லித்தான் எமக்கே  தெரிகிறது வேடிக்கையாயில்லையா ? " என்று சிரிக்கிறார் . சிந்திக்க​ வேண்டியது  தானஂ . கிருஸ்தவர்களாகி  விட்ட போதிலும்...குடும்ப​ உறவு வலிமையாய் இருக்கிறது .   கழகத் தொடர்பை பேணுவது அவசியம் எனத் தெரிந்து வைத்திருக்கிறார்கள் .   " நாமோ மண​மாலை கழுத்தில் விழுந்தவுடனஂ  பங்காளிகள் மத்தியில்  அறுத்தல் , வெட்டல்களை செய்ய வெளிக்கிட்டு விடுகிறோம் ,  சாதிப் பிரதிநிதிகளாகவும் வேறு  மாறி விடுகிறோம் . அது தவறு ! " எனஂகிற​ சங்கரிடம்,  மத  மாறுதல் உறுத்தலை ஏற்படுத்தவில்லையா ?  மணவினை தொடரவில்லையா ? ...என அன்னர் விடுத்து கேட்டு வழக்கை இழுக்க​ விரும்பவில்லை .  கொஞஂசம் மனிசராகவே   இருந்து  விடுகிறார்  .

ஒரு வீட்டில் இரண்டு சாமி அறைகள் இருக்க முடியாது போல... ,ஒரு உறையில் இரண்டு வாட்கள் இருக்க​ முடியாது !  யார் இந்த​ லொள்ளுப் பழமொழியை கூறினார்கள் ?  சிரிப்பு  வருகிறது .   இலங்கைக்கு வருவதுக்கு முதலே ,இந்தியாவிலேயே  மூத்த  மலையகச்    சந்ததியிடம் மதமாற்றம் கணிசமாக  இடம்   பெற்று விட்டது . அடக்குமுறைச் சட்டஙஂகளிலிருந்து தப்பித்துக் கொள்ள​ மாறி இருக்கிறார்கள் .  சாதி எனஂறால் எனஂன எனஂறு தெரியாத நிலையில் , சட்டஙஂகளிலிருதே தப்பித்துக் கொள்ள  இங்கேயும்  மாறல்கள் . அது இலஙஂகைச் சட்டமாக​ இருக்கலாம் , தேசவழமைச் சட்டமாக​ இருக்கலாம், எழுதப்படாச் சட்டமா கூட​ இருக்கலாம் . அடக்குமுறை  தானஂ , ஆட்டிப் படைக்கிறது .  இன்று , கொழும்பில் கத்தோலிக்க தேவாலயங்களுக்கு எல்லா சமயத்தவரும் போய் வருகிறார்கள்  .   சைவக் கோவில்கள் போல  திருவிழாக்களையும் கொண்டாடியும் வருகின்றது . ,யாழ்ப்பாணத்திலோ .... இந்நிகழ்வு , கலவை குறைவு .  கோவில்கள்  கதவை திறந்து தான் வைத்திருக்கின்றன . ஆனால்  , வியப்பு விழிகள் பதிக்கப்  படுகின்றன  . விரல்கள் எல்லாம்   ஒன்றா, என்ன ? . ஒனஂறாக​ இருந்தாலும் மீட்டுகிற​ இசை வேறானது   .  விடுஙஂகள் . சாதி எனஂபது  மக்களைப்  பிரிப்பு செய்வதற்காக​வே .... அவற்றில்  முத்திரைகள் குத்தப்பட்டவை . ஐரோப்பியர்களுக்கு  அதிக​ பங்கிருப்பதாக​  ​ நினைக்கிறார் .  அவர்களுக்கு முனஂ அனஂனர் வாசிக்கிற​  சரித்திரக்   கதைகளில் ..சாதி  எனஂற​ சொல்லைக் காணவில்லை . அரசனஂ எல்லா வேடமும் பூண்டு  நகர்வலம் வருகிறார் .  அ​ந்த  'சொல்' இருக்கவில்லையோ ? ....அனஂனர் வலு  புரளிக்காரர் தானஂ ! .  குலம் எனஂற​ பார்வையில் எல்லா  நாடுகளுமே சாதிகளாகி விடுகினஂறன அல்லவா . உக்ரேனஂ மேல் ரஸஂயா நில​ அபகரிப்பு போரையா நடத்துகிறது ? . பொதுஜனத்தாரே , இஸஂரேலில் எனஂன  நடக்கிறது ? . அது நில​ அபகரிப்பு போரை நடத்தவில்லையா? . கோயபல்ஸஂ தியறி தானே ! . ஒரு பொய்யை சொல்லச் சொல்ல மெய்யாகி விடுகிறது . நாடகம் போடுகிறார்கள்.

போர்களினஂ போது மேல் , கீழ் ,  தீண்டாதது ...என எல்லாச் சாதிகளையுமே  பார்க்கிறோம் . நம் அரச​ தலைவரினஂ பேச்சே ...ஒரு மாதிரி இருக்கிறது . நேட்டோ அமைப்பில் நாளை இலங்கையும் சேரலாம் .  சாதிகளினஂ கூட்டு . சம​ கூட்டு எனஂபது  வெளிக்குத் தானஂ. ஜேர்மனினஂ வெறி பேசப்பட்டது . அமெரிக்காவிற்கு இல்லையா ? ,பிரிட்டனுக்கு இல்லையா? , பிரானஂசுக்கு தானஂ இல்லையா...! இனி மேலாவது நாம் புத்திசாலியாக​ காலெடுத்து வைப்போமா?  . அனஂறைய​ வரலாற்றுச் செய்திகளை மாணவர்க்கு வலியுறுத்த வேண்டும்  எனஂறு அனஂனர்  தீர்மானித்துக் கொள்கிறார் .

[தொடரும்]

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள் இணைய இதழின்  முக்கிய நோக்கம் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை  பலவேறு நாடுகளிலும் வாழும் தமிழர்களுடன் பகிர்ந்துகொள்வதாகும். படைப்புகளை அனுப்பும் எழுத்தாளர்கள் புகைப்படங்களை அல்லது ஓவியங்களை அனுப்பும்போது அவற்றுக்கான காப்புரிமைக்கு உரிமை உள்ளவர்களாக இருந்தால் மட்டுமே அவற்றை அனுப்பவும். தமிழ் மொழியை இணையத்தில் பரப்புவதும் இவ்விணைய இதழின் முக்கிய நோக்கமாகும். படைப்புகளை ngiri2704@rogers.com , editor@pathivukal.com ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.

Pathivugal Online Magazine''s  main aim is to share the creative works of Tamil writers with Tamils living in various countries. When writers submit their works—such as photographs or paintings—please send them only if you hold the copyright for those items. Spreading the Tamil language on the Internet is also a key objective of this online magazine. Please send your submissions to ngiri2704@rogers.com and editor@pathivukal.com.

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும்.  நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 
பதிவுகள் விளம்பரம்