'தம்மிஷ்ட்டர்' ஜே.ஆர்.ஜெயவர்த்தனே.மகிந்த ராஜபக்சஇலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து இன்று வரையிலான காலகட்டத்தில், இலங்கையின் ஆட்சிக்கட்டிலில் இருந்தவர்களில் மிகவும் கீழ்த்தரமான அல்லது மோசமான தலைவர்களாக நான் கருதும் இருவர்:

1. ஜே.ஆர்.ஜெயவர்த்தனே
2. மகிந்த ராஜபக்ச


ஏன் ஜே,ஆர்?

1. ஜே.ஆர். ஐம்பதுகளின் இறுதியில் கண்டிக்குப்பாத யாத்திரை சென்று பண்டா-செல்வா ஒப்பந்தத்தைக்கிழிக்கக் காரணமாகவிருந்தவர்.

2. 1977இல் பிரதமராகப் பதவியேற்றதும், நடைபெற்ற இனக்கலவரத்தின் போது 'போர் என்றால் போர். சமாதானம் என்றால் சமாதானம்' என்று முழங்கிக் கலவரத்தைப்பற்றியெரிய வைத்தவர்.

3. 'தர்மிஷ்ட்டர்' என்று தன்னை அழைத்துக்கொள்வதை விரும்பும் இவர் தம்மிஷ்ட்டராகி, சகல நிறைவேற்று அதிகாரங்களையும் கொண்ட ஜனாதிபதியாகத்தன்னைப்பிரகடனப்படுத்தி, தன் ஆட்சிக்காலத்தை அதிகரித்தவர்.

4. சிறிலங்காவின் முதலாவது ஜனாதிபதித்தேர்தலில் வெற்றி பெற்ற ஜே.ஆர். தன் இரண்டாவது ஆட்சிக்காலத்தில் தன் கட்சியைச்சேர்ந்த அமைச்சர்கள் பலரின் ஆதரவுடன் ( குறிப்பாக சிறில் மத்தியூ வெளிப்படையாகவே தமிழர்களுக்கெதிராக இனவாதத்தை நிகழ்த்தி வந்தார்) தமிழர்களுக்கெதிராக மிகப்பெரிய இனக்கலவரத்தை 1983இல் ஏற்படுத்தி, இலங்கை அரசுக்கெதிரான தமிழர்களின் ஆயுதப்போராட்டம் சர்வதேசப்பரிமாணங்கள் பெற்று வெடிக்கக்காரணமாகவிருந்தவர்.

5. தன் முதலாவது ஆட்சிக்காலத்தில் இலங்கையில் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை அமுல்படுத்தி, அடுத்த முப்பதாண்டு காலகட்டத்தில் , ஆயிரக்கணக்கில் தமிழர்கள் படுகொலை செய்யப்படவும், சிறைகளில் கைதிகளாக வாடவும், ஆயிரக்கணக்கில் தமிழர்கள், சிங்களவர்கள் (ஜே.வி.பி.க்கெதிரான அடக்குமுறைகளில்)  காணாமல் போகவும் காரணமாகவிருந்தவர் ஜே.ஆர்.

6. காமினி திசாநாயக்க போன்றோர் அவரது அரசில் அமைச்சர்களாக இருந்த வேளையில் யாழ் நகரம் எரியூண்டு போகவும், குறிப்பாக யாழ் பொது சன நூலகம் எரிபடவும் காரணமாக இருந்தவர் ஜே.ஆர்.7. 83 கலவரத்தைச்சாக்காக வைத்து, தென்னிலங்கையின் இடதுசாரி அமைப்புகளை, குறிப்பாக ஜே.வி.பி.யினரைத்தடை செய்தவர் ஜே.ஆர்.

8. 83 கலவரத்தைத்தொடர்ந்து வன்னியில் காந்தியப்பண்ணைகளில் குடியேறியிருந்த அகதிகளின் குடியிருப்புகளை நிர்மூலமாக்கியவர்..

9. பயங்கரவாதத்தடைச்சட்டத்தை அமுல்படுத்திய கையோடு, தமிழ் இளைஞர்கள் பலரைக்கைது செய்து , சித்திரவதைகளுக்குள்ளாக்கிப் படையினரால் படுகொலை செய்யப்பட்டதற்குப் பொறுப்புக் கூற வேண்டியவர் ஜே.ஆர்.

ஜே.ஆர். ஆட்சிக்காலத்தில் இவ்விதம் நடைபெற்ற தமிழர்களுக்கெதிரான அடக்குமுறைகள்தாம் ஈழத்தமிழர்களை மிகப்பெரிய அளவில் ஆயுதப்போராட்டத்தை நோக்கித்தள்ளின. அவரைப்போல்  மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று ஆட்சியில் இருக்கும் காலத்தில்  இவ்விதம் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை ஏனைய தலைவர்கள் செய்வதற்கு முனைய மாட்டார்கள். ஆனால் ஜே.ஆர். தமிழர்கள் தனி நாடு கேட்டு, கூட்டணியினரைப்பாராளுமன்றத்துக்கு அனுப்பிய காரணத்தினால், தமிழர்களின் தனி நாட்டுப்போராட்டத்தை நசுக்க வேண்டுமென்ற காரணத்தினால், மிகப்பெரிய அளவில் இனக்கலவரங்களை, படையினரின் அடக்குமுறைகளை, பயங்கரவாதச்சட்டத்தினைத் தமிழர்கள் மேல் பிரயோகித்தார்.

ஜே.ஆர்.ஆரசியலிலும் மிகப்பெரிய குள்ளநரி. ராஜிவ் காந்தி இலங்கைக்கு இந்தியபடையினரை அனுப்பியபொழுது , வேறு வழியற்று அனுமதித்தவர். அதன் பின்னர் இந்தியாவையும், விடுதலைப்புலிகளையும் மோதவிட்டு , ராஜிவ் காந்தியைப்பழி வாங்கினார். அக்காலகட்டத்தில் அவர் கூறியது இன்னும் ஞாபகத்திலுள்ளது. 'எனக்கு நாற்பது வருட அரசியல் அனுபவம் உள்ளது. அவருக்கு , ராஜிவ் காந்திக்கு நான்கு வருட அனுபவமேயுண்டு. நான் சிறந்த குத்துச்சண்டை வீரன். முகத்தில் குத்துவதுபோல் , வயிற்றில் குத்துவதில் வல்லவன்'

இவ்விதம் காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

இவ்வளவுதூரம் தமிழர்களுக்கெதிராக அடக்குமுறைகளைக்கட்டவிழ்த்து விட்ட ஜே.ஆர். ஜெயவர்த்தனே மீது எந்தவொரு தாக்குதலையும் தமிழர்தம் ஆயுதப்போராட்ட அமைப்புகளும் சரி, சிங்கள அமைப்புகளும் சரி (ஜே.வி.பி. போன்ற) புரிந்ததாகத்தெரியவில்லை. ஆச்சரியம்தான்.

ஜே.ஆர்.ஜெயவர்த்தனேயைப்பற்றி பல வேடிக்கைக்கதைகளுள்ளன. அவற்றில் இன்னும் நினைவிலுள்ளது ஜே.ஆர். அங்கொடை மனநல வைத்தியசாலைக்குச்சென்ற கதைதான்.

ஒரு முறை ஜனாதிபதியான ஜே.ஆர். அங்கொடை வைத்தியசாலைக்குச் சென்றிருக்கின்றார். அவ்விதம் சென்றவரை அங்கிருந்த மனநிலை பாதிக்கப்பட்ட நோயாளிகள் வரவேற்றிருக்கின்றார்கள். அப்பொழுது அவர்களிலொருவர் ஜே.ஆரிடம் "நீங்கள் யார்?" என்று கேட்டிருக்கின்றார்.

அதற்கு ஜே.ஆர் கூறிய பதில்: நான் இந்த நாட்டின், சர்வ வல்லமை பொருந்திய ஜனாதிபதி.

அதைக்கேட்டதும் அந்தக்கைதி விழுந்து , விழுந்து சிரித்தாராம். அவ்விதம் சிரித்து விட்டு, ஜே.ஆரின் காதினில் மெதுவாகக்கூறினாராம்" "இதை வேறு யாருக்கும் கூறி விடாதே. பிறகு உனக்கும் என் நிலைதான். நானும் முதலில் இங்கு வந்தபோது இவ்விதம் தான் கூறினேன். உடனேயே என்னைப்பிடித்து உள்ளே போட்டு விட்டார்கள்."


ஏன் மகிந்த ராஜபக்ச?

மகிந்த ராஜபக்சமுள்ளிவாய்க்காலில் யுத்தத்தினை முடிவுக்குக்கொண்டு வருவதற்காக ஜனாதிபதியான அவரும், பாதுகாப்பு அமைச்சரான அவரது தம்பி கோத்தபாயாவும் புரிந்த தமிழ் மக்களுக்கெதிரான மனித உரிமை மீறல்களும், யுத்தக்குற்றங்களும், யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் உருவாக்கிய தடுப்பு முகாம்களும், தமிழ்ப்பெண்கள் மீது அவரது கட்டுப்பாட்டின் கீழிருந்த படையினர் மேற்கொண்ட பாலியல் வன்முறைகளும், சரணடைந்த போராளிகளைப்படுகொலை செய்த யுத்தக்குற்றங்களும்,  போதுமானவை சுதந்திரமடைந்த சிறிலங்காவின் மிகவும் மோசமான தலைவர்களின் வரிசையில் அவரைக்கொண்டுவந்து சேர்ப்பதற்கு.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள் இணைய இதழின்  முக்கிய நோக்கம் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை  பலவேறு நாடுகளிலும் வாழும் தமிழர்களுடன் பகிர்ந்துகொள்வதாகும். படைப்புகளை அனுப்பும் எழுத்தாளர்கள் புகைப்படங்களை அல்லது ஓவியங்களை அனுப்பும்போது அவற்றுக்கான காப்புரிமைக்கு உரிமை உள்ளவர்களாக இருந்தால் மட்டுமே அவற்றை அனுப்பவும். தமிழ் மொழியை இணையத்தில் பரப்புவதும் இவ்விணைய இதழின் முக்கிய நோக்கமாகும். படைப்புகளை ngiri2704@rogers.com , editor@pathivukal.com ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.

Pathivugal Online Magazine''s  main aim is to share the creative works of Tamil writers with Tamils living in various countries. When writers submit their works—such as photographs or paintings—please send them only if you hold the copyright for those items. Spreading the Tamil language on the Internet is also a key objective of this online magazine. Please send your submissions to ngiri2704@rogers.com and editor@pathivukal.com.

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும்.  நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 
பதிவுகள் விளம்பரம்