- சுப்ரபாரதிமணியன் -கல்வியாளர்கள் ச.சீ. இராஜகோபால், வசந்தி தேவி, , விஜய் அசோகன் (சுவீடன்), மருத்துவர் முத்துச்சாமி, சுப்ரபாரதிமணீயன், வெ.குமணன், சு,மூர்த்தி, உட்பட பலரின் கல்வி சார்ந்த கட்டுரைகள், குழந்தைகளின் படைப்புகளுக்கானத் தனிப்பகுதி என சிறப்பம்சங்கள் கொண்ட மலர் இது .

இந்த மலரின் குறிப்பிடத்தக்க அம்சம் பல கல்வியாளர்கள் எழுதிய சிறப்புககட்டுரைகள்.  தமிழ் கல்வி பற்றியும் தமிழ் கல்வியின் இன்றைய நிலை எழுப்பும் கேள்விகள் பற்றியும் அந்தக் கட்டுரைகள் பேசுகின்றன என்பது தான் முக்கியம். அந்த வகையில் திருப்பூர் பாண்டியன் நகர் தாய்த்தமிழ்ப் பள்ளியின் தாளாளரும் மருத்துவருமான சு. முத்துசாமி அவர்களின் முதல் கட்டுரை கவனத்திற்குரியது. மருத்துவர் ஆக இருப்பதால் பலதரப்பட்ட மக்களிடமும் பேசும் வாய்ப்பு அமைந்தது. மக்கள் தங்கள் சக்திக்கு மீறி இரவு பகலாக உழைத்து தங்கள் குழந்தைகளை ஆங்கில வழிக் கல்வியில் படிக்க வைக்கும் சூழல் இருப்பதையும் ஆனால் அதில் கல்வி தரம் இல்லை என்றும் அறிந்து கொண்டேன் என்கிறார். தமிழ் வழியில் படித்த கல்வியும் தமிழ் பற்றும் ஆர்வமும் ஏன் தமிழ் வழியில் கற்பிக்கும் ஒரு பள்ளியை ஆரம்பிக்க கூடாது என்ற எண்ணத்தை அவரிடம் தோற்றுவித்திருக்கிறது. இருபது ஆண்டுகளுக்கு முன்னால் அந்த சமயத்தில் தமிழ்நாடு முழுக்க வெவ்வேறு ஊர்களில் அந்தந்த ஊர்களில் உள்ள  தமிழ் ஆர்வலர்களின் முயற்சியால் சுமார் 50 தாய்த்தமிழ்ப்  பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஆனால் இன்றைய நிலையில் அதில் பாதிக்கு மேலான பள்ளிகள் மூடப்பட்டுவிட்டன. பொருளாதார சிக்கல்களும் பள்ளிக் கல்வித்துறை சார்ந்த அழுத்தங்களும் காரணம். அந்த அனுபவங்களை மருத்துவர் முத்துசாமி கட்டுரையில் வெளிப்படுத்தியிருக்கிறார். இன்றைக்கு திருப்பூர் பாண்டியன் நகர் தாய்த்தமிழ்ப் பள்ளி இருக்கும் சூழலையும் சிக்கல்களையும் அவர் கோடிட்டு இருக்கிறார்

.தமிழ்ப்பள்ளிகளில் வருங்கால தமிழகத்தின் நாற்றங்கால்கள் என்று கோபி குமணன் கட்டுரையை ஆரம்பிக்கிறார் .உலகம் முழுக்க தாய் மொழியில் கல்வி கற்று அறிவார்ந்த சமூகமாக உயர்ந்து நிற்கும் போது இங்கு மட்டும் அந்நிய மொழியில் அனைத்து பாடங்களும் கற்பிக்கப்படுவது மிகப்பெரிய கொடுமை. இயல்பாக தன் சொந்தக் காலில் நடை பழக வேண்டிய குழந்தை அந்தப் பருவத்திலேயே ஊன்றுகோலுக்குத் தள்ளப்பட்டு ஆங்கிலத்தை படிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதை அவரின் கட்டுரை தெளிவுபடுத்துகிறது.

அதற்கு அடுத்த கட்டுரை சுப்ரபாரதிமணியன் எழுதி உள்ளது ஆகும். ஒருபுறம் ஆங்கிலக் கல்வியின் வன்முறை சாதாரண மக்களை கல்வி இடமிருந்து அன்னியமாக்கி விட்டது. இன்னொருபுறம் தமிழ்ப்பள்ளிகள் பலவீனமாகி விட்ட சூழ்நிலை. இந்தச் சூழலில் இடம்பெயர்ந்த வந்து இங்கு இருக்கும் மக்களின் குழந்தைகள் தாங்கள் ஏன் தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற கேள்வியை எழுப்புகிறார்கள். அவர்களின் பெற்றோர்களும் அப்படித்தான்.. பிழைக்க வந்த இடத்தில் அந்த மாநில மொழியை கற்றுக் கொள்ளாமல் புறக்கணிக்கும் இடம்பெயர்ந்த மக்களின் புறக்கணிப்பைக் குறிப்பிடுகிறது . அந்தவகையில் புறக்கணிக்கப்பட்ட அவர்களின் குழந்தைகள் குழந்தைத் தொழிலாளர்களாகும்  அபாயத்தை இந்த கட்டுரை சொல்கிறது

. கல்வியாளர் வசந்தி தேவி அவர்கள் குழந்தைகள் பள்ளிகள் அவசியம் ஏன் வேண்டும் என்பதை விரும்புகிறார்  .இன்றைக்கு அரசு பள்ளிகள் மூடப்பட்டு வந்து கொண்டிருக்கின்றன .ராஜஸ்தான் மாநிலத்தில் 15 ஆயிரம் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அங்கு கல்வியின் நிலை மிகவும் மோசமாக உள்ளது குறிப்பாக பெண் பிள்ளைகளின் கல்வி. அதே போன்ற நிலை தமிழ்நாட்டிலும் ஏற்பட்டுவிடும் அபாயம் இருப்பதை வசந்திதேவி அவர்களின் கட்டுரை கொள்கிறது .உலக நாடுகளில் தாய்மொழிக்கல்வி எப்படி இருக்கிறது என்பதை ஸ்வீடன் நாட்டில் உள்ள முனைவர் விஜய் அசோகன் அவர்கள் சரியாக எடுத்துக் காட்டுகிறார் .நோர்வே நாட்டில் தமிழ் மொழிப் பாடத்தில் பெறும் மதிப்பெண் நார்வே நாட்டின் மருத்துவ கல்வி நுழைவிற்கு உதவும் அதிசயத்தை சொல்கிறார். ஸ்விடனில்  பிறந்து வளரும் பிறமொழி குழந்தைகளுக்கு அவரவர் தாய் மொழியில் பேசி கற்று தாய்மொழியில் அறிவு பெற்று  குழந்தைகள் சிறக்க ஸ்வீடன் கல்வித்துறை செயலாற்றி வருவதை வழக்கமாகக் கூறுகிறார்.

இதுபோல் பல்வேறு உலக நாடுகள் தாய்மொழிக் கல்வியில் அக்கறை கொண்டிருப்பதை சொல்கிறது. சீனா நாடு இந்தியா போன்று பல்வேறு மாநிலங்களுக்கும் பல்வேறு மொழிகளுக்கும் உத்தரவாதமும் பகிர்வும் தரும் நாடாகும். ஆனால் அனைத்து மொழிகளும் ஒரே குடும்பத்தையும் எழுத்து நடையும் கொண்டவை இருப்பினும் அனைத்து மாநிலங்களிலும் அவரவர் மொழியில் பள்ளியில் 5 ஆண்டுகள் கல்விபயில வாய்ப்பு உள்ளது.. மாற்றுமொழிக் கல்வியும் நடைமுறையில் உள்ளது .

தாய்மொழிக் கல்வியின் முக்கியத்துவத்தை முன்வைத்து  கல்வி மேம்பாட்டு  அமைப்பின் முக்கிய நிர்வாகியான சு. மூர்த்தி எழுப்பும் சில கேள்விகள் மிக முக்கியமானவை .இன்றைய அறிவியல் தகவல் தொழில்நுட்ப யுகத்தில் ஊடகங்கள் மிகப்பெரிய செல்வாக்கு செலுத்தி வருகின்றன .அதன் செல்வாக்கு சரியாக முறைப்படுத்த வேண்டும். அறிவின் காட்சிகளாகப் பயன்படுத்த வேண்டிய கல்லூரிகள் பல வழிகளில் கழிசடை கூடங்களாக உருமாறி காட்டப்படுகின்றன. இன்றைக்கு ஊடகங்களைத்  தவிர வேறு எந்த சக்திக்கும் நமது சிந்தனைகளை கட்டமைப்பதில் பெரும் பங்கு இருப்பதாக தெரியவில்லை .எனவே ஊடகங்களில் உண்மையும் அன்பும் அகிம்சையும் பருப்பொருளாக மாறவேண்டும். எதிர்கால சமூகம் பண்பாடுடைய ஆரோக்கியமான சமூகமாக உருவாவதில் ஊடகங்களின் பங்கும் எழுத்தாளர்களின் பங்கும் மிக முக்கியம் என்பதை அவரின் கட்டுரை சொல்கிறது.

இந்த மலரில் முக்கிய அம்சங்களாக குழந்தைகளின் ஓவியங்களும் சிறு சிறுகதைகளும் அவர்களின்  படைப்புகளும் அமைந்திருப்பதும். அவை நேர்த்தியாக கலை பண்புடன் அமைக்ப்பட்டிருக்கும் நேர்த்தியும்  முக்கியமாகும். அதேபோல் தாய்த்தமிழ்ப் பள்ளியில் இருக்கும் மாணவர்களுடன் இணைந்து பணிபுரிந்த நான்கு   ஆசிரியைகள் எழுதியக் கட்டுரைகள் . எல்லாம் சிறு சில அனுபவங்கள். அந்த அனுபவங்கள் எல்லாம் வெகு யதார்த்தமாக இருக்கின்றன . மாணவர்களின் உலகை  வெளிப்படுத்தும் விதமாக அந்த படைப்புகள் ஆசிரியர்கள் ஆசிரியரிடம் இருந்து வந்திருக்கின்றன.

நமது தமிழக கல்வியாளர்களின் மிக முக்கியமான ஒரு அரிய மனிதர்

ச.சி  ராஜகோபால் அவர்களின் கட்டுரையில் பிப்ரவரி 21ஆம் நாள் எவ்வாறு உலக தாய்மொழி நாடாக அறிவிக்கப்பட்டது அதன் பின்னணியிலான தாக்கத்தை, தாய்மொழி எழுச்சி பற்றி விரிவாகச் சொல்கிறார். தாய் மொழியே பயிற்று மொழி என்பது உலகம் தழுவிய நடைமுறை. மொழிவழி மாநிலமாக அமைந்த தமிழ் நாட்டில் தமிழ் ஒன்றே பயிற்றுமொழி ஆக  வேண்டும் பயிற்று மொழியாக இருக்கவேண்டும் என்பதை அவர் வலியுறுத்துகிறார்.

அதேசமயம் ஆங்கில மொழி மீதான மூடநம்பிக்கையை ஒழிப்பதற்காக புதிதாக உருவாக்கப்பட்ட பகுத்தறிவு இயக்கங்களில் தாய்த்தமிழ்ப் பள்ளிகள்பங்கு என்பது பற்றி ஒரு கட்டுரை பேசுகிறது. தாய் மொழி கல்வி பற்றி ஜவகர்லால் நேரு, மகாத்மா காந்தி மற்றும்  இந்தியாவின் முதல் மகாத்மா ஜோதிராவ் பூலே போன்றோரின் கருத்துகளும் இங்கு தொகுப்பு தொகுக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில் தாய்மொழி கல்வி பற்றிய பல்வேறு சிந்தனைகளைகளின்  தொகுப்பாக இந்த மலர் இருக்கிறது பள்ளி மலர் என்ற அளவில் அதனின் பலவீனங்களை கொள்ளாமல் தாய்மொழிக்கல்விக்கான இன்றைய சூழலின் தேவையை இந்தப் படைப்புகள் திரும்பத் திரும்ப வலியுறுத்துகின்றன. இந்த விலை 200 ரூபாய். பாண்டியன் தாய்த் தமிழ்ப் பள்ளியில் கல்வி வளர்ச்சியில்   ஆர்வம் உடையவர்கள் இந்த மலரை வாங்கி பயன்பெறலாம்

திருப்பூர் தாய்த்தமிழ்ப்பள்ளி இருபதாம் ஆண்டு மலர்

கல்வியாளர்கள் ச.சீ. இராஜகோபால், வசந்தி தேவி, , விஜய் அசோகன் (சுவீடன்), மருத்துவர் முத்துச்சாமி, சுப்ரபாரதிமணீயன், வெ.குமணன், சு,மூர்த்தி, உட்பட பலரின் கல்வி சார்ந்த கட்டுரைகள், குழந்தைகளின் படைப்புகளுக்கானத தனிப்பகுதி .

நன்கொடை : ரூ 200  . திருப்பூர் தாய்த்தமிழ்ப்பள்ளியின் கலவிப்பணிக்கு உதவ மலரின் பிரதிகளை வாங்குங்கள்
02444, 9442531032, 98946 44366
மின்னஞ்சல் : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
முகவரி: :மருத்துவர் முத்துசாமி, கண்ணன் மருத்துவமனை, சக்தி நகைக்கடை எதிரில் , மேட்டுப்பாளையம் பேருந்து நிறுத்தம் , பெருமாநல்லூர் சாலை, திருப்பூர் 641 6

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள் இணைய இதழின்  முக்கிய நோக்கம் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை  பலவேறு நாடுகளிலும் வாழும் தமிழர்களுடன் பகிர்ந்துகொள்வதாகும். படைப்புகளை அனுப்பும் எழுத்தாளர்கள் புகைப்படங்களை அல்லது ஓவியங்களை அனுப்பும்போது அவற்றுக்கான காப்புரிமைக்கு உரிமை உள்ளவர்களாக இருந்தால் மட்டுமே அவற்றை அனுப்பவும். தமிழ் மொழியை இணையத்தில் பரப்புவதும் இவ்விணைய இதழின் முக்கிய நோக்கமாகும். படைப்புகளை ngiri2704@rogers.com , editor@pathivukal.com ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.

Pathivugal Online Magazine''s  main aim is to share the creative works of Tamil writers with Tamils living in various countries. When writers submit their works—such as photographs or paintings—please send them only if you hold the copyright for those items. Spreading the Tamil language on the Internet is also a key objective of this online magazine. Please send your submissions to ngiri2704@rogers.com and editor@pathivukal.com.

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும்.  நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 
பதிவுகள் விளம்பரம்