அவுஸ்திரேலியா – மெல்பனில் எம்மத்தியில் வாழ்ந்த முன்னாள் ஆசிரியரும், மூத்த எழுத்தாளருமான திருமதி கனகமணி அம்பலவாண பிள்ளை ( மெல்பேர்ண் மணி ) அவர்கள் மறைந்துவிட்டார், என்ற துயரமான செய்தி அறிந்தவுடன், அன்னாரின் புதல்வி இசை ஆசிரியை திருமதி ரமா சிவராஜா அவர்களை தெடர்புகொண்டு அனுதாபமும், ஆறுதலும் தெரிவித்துவிட்டே, இந்த அஞ்சலிக்குறிப்பினை கனத்த மனதுடன் எழுதுகின்றேன்.

நான் உடல் நலம் குன்றியிருக்கும் சமகாலத்தில், தமது மகள், மருமகனுடன் என்னைப்பார்க்க வந்து ஆறுதல் சொன்னவர், இந்த இலக்கிய சகோதரி. அவர் பற்றி, இடம்பெற்ற ஒரு விரிவான ஆக்கம், கடந்த மார்ச் மாதம் நான் வெளியிட்ட யாதுமாகி ( இரண்டாம் பாகம் ) நூலிலும் வெளியாகியிருக்கிறது. முன்னர் ஊடகங்களில் அந்த ஆக்கம் வெளியானபோதும் அவர் அதனை வாசித்திருக்கிறார். மீண்டும் அந்தப்பதிவை எமது வாசகர்களுக்கு , ஒரு சில மாற்றங்களுடன் , வழங்குகின்றேன்.

தமிழ் எழுத்தாளர் விழா இயக்கத்தை 2001 ஆம் ஆண்டு ஆரம்பித்தபோதே, நூல்கள் தொடர்பான வாசிப்பு அனுபவப் பகிர்வு நிகழ்ச்சியையும் அதில் இணைத்துக்கொண்டோம். கடந்த பல வருட காலமாக இந்நிகழ்வு நடந்துவருகிறது.

எழுத்தாளர்கள் எவ்வளவுதான் எழுதினாலும் அவற்றை படிப்பதற்கு வாசகர்கள் இல்லையேல், எழுத்தாளர்கள் காணாமல் போய்விடுவார்கள். கலைஞர்களுக்கு ரசிகர்கள் எவ்வளவு முக்கியமோ, அவ்வாறே எழுத்தாளர்களுக்கும் வாசகர்கள் மிக மிக முக்கியம்.

2003 ஆம் ஆண்டு தமிழ் எழுத்தாளர் விழாவை நான் வதியும் மெல்பனில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்துகொண்டிருந்தபோது, எனது கண்ணில் கலியுகத்தின் சில பக்கங்கள் என்ற சமூக நாவல் தென்பட்டது. அதனை எழுதியிருந்தவர் மெல்பன் மணி. எனக்கு இந்த எழுத்தாளரின் பெயர் அப்போதுதான் முதல் முதலில் அறிமுகமானது.

எழுதியவர் பெண்தான் என்பதை அக்கதையின் படைப்பு மொழியிலிருந்து புரிந்துகொண்டேன். பின்னர் விசாரித்துப்பார்த்தேன். அவ்வாறுதான் அவுஸ்திரேலியா விக்ரோரியா மாநிலத்தில் மெல்பன் நகரில் கடந்த 1998 ஆம் ஆண்டு முதல் வதியும் திருமதி கனகமணி அம்பலவாணபிள்ளை அவர்கள் எனக்கு முதலில் அறிமுகமானார்.

2003 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 04 ஆம் திகதி மெல்பனில் பிரஸ்டன் நகர மண்டபத்தில் நடந்த விழாவில் , கவிஞர் அம்பியின் தலைமையில் நடந்த கருத்தரங்கில் மெல்பேர்ண் மணி, “ முதியோரும் புலம்பெயர் வாழ்வும் “ என்ற தலைப்பில் உரையாற்றினார். மெல்பேர்ண் மணி, சிறுகதை, கவிதை, நாவல் , கட்டுரை முதலான துறைகளில் எழுதிவந்தார்.

இதுவரையில் 13 நூல்களையும் வரவாக்கியிருப்பவர். இவரது பூர்வீகம், வடக்கில் கொடிகாமத்திற்கு சமீபமான கரம்பகம் என்ற கிராமம். குடும்பத்தில் கனிஷ்ட புத்திரியான இவர், தனது ஆரம்பக்கல்வியை ஒட்டுவளி அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையிலும், சிரேஷ்ட கல்வியை உசன் இராமநாதன் வித்தியாலயத்திலும் தொடர்ந்து, பால பண்டிதர் பரீட்சையிலும் சித்தி பெற்றிருக்கிறார். தனது 19 வயதில் ஆசிரிய நியமனம் பெற்றவர். கோப்பாய் ஆசிரிய பயிற்சிக்கலாசாலையில் கற்றவர்.

கொடிகாமம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய மகா வித்தியாலயம் ஆகியனவற்றில் பணியாற்றி, 1989 இல் ஓய்வுபெற்றவர். மாணவர்களுக்காக நாடகங்கள், வில்லுப்பாட்டு எழுதி பயிற்சி அளித்தவர். இவரது கணவர் அம்பலவாணபிள்ளை ஊரில் கிராம சேவை அலுவலராக பணியாற்றியவர். கணவரின் வாழ்வு பெரும்பாலும் பொது மக்களுடன் கடந்திருக்கிறது. மனைவியின் வாழ்வு பெரும்பாலும் மாணவர் சமுதாயத்துடன் கடந்திருக்கிறது.

கணவர், 60 வயது மணிவிழாக்காலத்தில் திடீரென மறைந்துவிட்டார். அந்தத்துயரத்தையும் கடந்து வந்திருக்கும் மெல்பேர்ண் மணி, கலை, இலக்கிய, இசை, நடனம், நாடகம் முதலான துறைகளில் சிறுவயது முதலே ஆர்வம் காண்பித்து வந்திருப்பவர். தனது பிள்ளைகளையும் பேரப்பிள்ளைகளையும் கலை, இலக்கியத்துறையில் ஈடுபடச்செய்து வளர்த்துவிட்டிருப்பவர்.

மெல்பேர்ண் மணியின் ஒரு மகளான திருமதி ரமா சிவராஜா, மெல்பனில் பிரபல இசை ஆசிரியராக விளங்குகிறார். ஒரு மகன் அகணி சுரேஷ் கனடாவில் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் தலைவராக இயங்கினார்.

மெல்பேர்ண் மணியின் பேரப்பிள்ளைகள் இசைத்துறையில் அரங்கேற்றமும் கண்டுவிட்டனர்.

இவ்வாறு தனது சந்ததியினரை கலை, இலக்கியத்துறையில் ஈடுபடச்செய்திருக்கும் மெல்பேர்ண் மணி, தமது முதிய வயதிலும் கலை, இலக்கிய நிகழ்வுகளை தவறவிட்டதில்லை.

ஈழத்து இலக்கியம், பலதரப்பட்ட பரிமாணங்களுடன் வளர்ந்து வருகிறது. ஒரு காலத்தில், தமிழக இதழ்களில் வெளியான கதைகளைப் படித்துவிட்டு, நம்மவர்களும் மெரீனா பீச்சையும், மவுண்ட் ரோட்டையும் பகைப்புலமாக வைத்து எழுதிக்கொண்டிருந்தனர். பின்னர் மண்வாசனை, தமிழ்த்தேசியம், மறுமலர்ச்சி, தலித் இலக்கியம், முற்போக்கு, போர்க்கால இலக்கியம் என்பன பேசுபொருளாகி, எம்மவரின் அந்நியப் புலப்பெயர்வுடன் புலம்பெயர்ந்தோர் இலக்கியம் வரவாகியது.

தற்காலத்தில் புகலிட இலக்கியம் பற்றி பேசிக்கொண்டிருக்கின்றோம். எனினும் புலம்பெயர்ந்து வாழும் பல எழுத்தாளர்கள் தொடர்ந்தும் தங்கள் தாயக மண்ணின் நினைவுகளுடன், நனவிடைதோயும் கதைகளையே எழுதிவருகின்றனர். இந்தப்பின்னணிகளுடன்தான் மெல்பேர்ண் மணி அவர்களின் கதைகளையும் அவதானிக்க முடிகிறது.

புகலிட வாழ்க்கை இயந்திரமயமானது. இரண்டகத்தன்மையும் கொண்டது. மூத்த தலைமுறையினர் தங்கள் வேரின் சால்பை தொடர்ந்தும் உச்சரித்துக்கொண்டிருக்கையில், புகலிடத்தில் பிறந்த புதிய தலைமுறையினர், பிறிதோர் திசையில் பயணிக்கின்றனர். இதனால், தலைமுறை இடைவெளியில் நேரும் சிக்கல்களையும் மெல்பேர்ண் மணி, தனது படைப்புகளில் சித்திரித்துள்ளார்.

மெல்பேர்ண் மணி வடபுலத்தின் தமிழ்க்கிராமத்திலிருந்து கடல் சூழ்ந்த கண்டமான அவுஸ்திரேலியாவிற்கு புலம்பெயர்ந்து வந்திருந்தாலும், தான் எழுதிய புகலிட இலக்கிய படைப்புகளில் தொடர்ந்தும் பிறந்த மண் குறித்த ஏக்கங்களையே பதிவுசெய்து வந்திருப்பவர்.

தமிழ்ச்சமூகத்தில் பெண்கள் தொழில்புரிந்தவாறு, குடும்பத்தலைவியாகி, பிள்ளைகளையும் பராமரித்து, ஆக்க இலக்கிய மற்றும் கலைத்துறையில் ஈடுபடுவதென்பது, சிரமசாத்தியம்தான்.

எனினும், மெல்பேர்ண் மணி தனது பாடசாலைப்பருவத்திலிருந்து – ஆசிரியப் பணி காலம் முதல், கலை, இலக்கிய தாகத்துடன் பயணித்தவர். தற்போது விடைபெற்றுள்ளார். அவரது மறைவினால், ஆழ்ந்த துயரத்திலிருக்கும் அன்னாரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள் இணைய இதழின்  முக்கிய நோக்கம் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை  பலவேறு நாடுகளிலும் வாழும் தமிழர்களுடன் பகிர்ந்துகொள்வதாகும். இது இலாப  நோக்கற்று இயங்கும் இதழ். படைப்புகளை அனுப்பும் எழுத்தாளர்கள் புகைப்படங்களை அல்லது ஓவியங்களை அனுப்பும்போது அவற்றுக்கான காப்புரிமைக்கு உரிமை உள்ளவர்களாக இருந்தால் மட்டுமே அவற்றை அனுப்பவும். தமிழ் மொழியை இணையத்தில் பரப்புவதும் இவ்விணைய இதழின் முக்கிய நோக்கமாகும். படைப்புகளை ngiri2704@rogers.com , editor@pathivukal.com ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.

Pathivugal Online Magazine''s  main aim is to share the creative works of Tamil writers with Tamils living in various countries. It operates on a not-for-profit basis. When writers submit their works—such as photographs or paintings—please send them only if you hold the copyright for those items. Spreading the Tamil language on the Internet is also a key objective of this online magazine. Please send your submissions to ngiri2704@rogers.com and editor@pathivukal.com.

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும்.  நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 
பதிவுகள் விளம்பரம்