- ஜூன் 2003 இதழ் 42 பதிவுகள் இணைய இதழில் வெளியான நிகழ்வுக்குறிப்பு ஒரு பதிவுக்காக. -

தமயந்தியின் நிழற்படக் கண்காட்சி 24/05/03 இலிருந்து 15/06/03 வரை , நோர்வேயில் Sunnmorsposten, Roysegt 10 இல் நடைபெறவுள்ளதுதமயந்தியின் நிழற்படக் கண்காட்சி 24/05/03 இலிருந்து 15/06/03 வரை , நோர்வேயில் Sunnmorsposten, Roysegt 10 இல் நடைபெறவுள்ளது. காற்றின் தழுவலில் நித்தம் சிலிர்த்து அவ்வப்போது சூரியக் குளியலிலும் மறு பொழுது பனியின் போர்வையிலுமாய் - பொழுதொரு மேனியாய், பொழுதின் மேனியாய் - துண்டம் துண்டமாய் சிதறிக் கிடக்கும் நோர்வே. பொழுதுகளின் வார்த்தைகளற்ற உலகை எங்களோடு உறவாட விட்டிருக்கிறார் தமயந்தி. புரட்சி, போராட்டம், அரசியல், ஐனநாயகம், உரிமை என ஒரு புறமும், கலை, அழகு, கவிதை, அறிவியல் இலக்கியம் என இன்னொரு புறமுமாய் அல்லலாடி சிதைந்து - இழப்பு, சோகம், நிச்சயமின்மை, கழிவிரக்கம், பச்சாதாபம், பிரிவாற்றாமை எனத் தோய்ந்து சோர்ந்த போதிலெல்லாம் ”உயிரா போய்விட்டது” என மீண்டு, ”காணுமிடமெல்லாம் நம் வசமே” என நம்பிக்கையுடன் செயற்பட்டு வருகிறார். நானும் நான் சார்ந்ததுமே சமூகம், என் படுக்கை விரிப்பில் இருந்து தொடங்கி மீண்டும் கண்ணயர முனையும் வரையான காட்சிகளே எனது சூழல் என - நேற்றையவை எல்லாம் நெஞ்சில் ஏறி பரிகசிக்க, நாளை நடுத்தெருவுக்கான வாழ்வாய் அச்சுறுத்த - கணமும் கணத்தில் விளையும் கணமுமே வாழ்வின் நிஐம் என களிப்புறும் கலைஞன்.

எல்லா மனிதர்களுக்கும் இருக்கக்கூடிய சாவைப் பற்றிய பயம் - வாழ்வைப்பற்றிய பயம், இவை இரண்டையுமே துணிச்சலுடன் விரட்டிச் செல்வது அல்லது புறக்கணித்துச் செல்வது இவனது விளையாட்டு. அதுவே அவனது கலை - வாழ்வு எல்லாம். அயலவர் ஆயுதம் வந்தபோது தலை குனிந்து, உடன் இருந்தவர் கை ஓங்கியபோது அழுது புலம்பிய ஒரு காலத்தின் மடியில் - புரட்சியாளனாய், போராளியாய் தன் முஷ்டிகளை உயர்த்திக் கொண்டபோது - முதுகெலும்பும் உடைக்கப்பட்ட பிராணியாய் பல பொட்டுகள் பூந்து, ஜரோப்பிய  பற்றைக்குள் பதுங்கி, மொழியும் கழன்று ஊமையாகிப்போன தெருக்களின் ஓர் அகதிப் பாடகனின் மொழியும் இதுதான் - வாழ்வும் இதுதான் போலும்.

இந்தப் பின்னணியில்தான் தமயந்தியின் புகைப்படங்களை நேசிக்க முடிகிறது. கலைஞன்-காட்சி, படைப்பு-படைப்பாளி, இவ்வகையான பிரிப்புகளோடு இவர் புகைப்படங்களைப் பார்க்க முடிவதில்லை. அனைத்திலும் ஓர் பங்காளியாகவே இவர் கலந்து விடுவதைக் காணமுடிகிறது. சாதாரணமாகப் பார்க்கிறபோது அழகியல் சார்ந்த நேர்த்தியாக சிறைப்படுத்தப்பட்ட காட்சியாக தோன்றுகின்ற ஒவ்வொரு புகைப்படத்துக்குள்ளும், உணர்ச்சி பூர்வமான கனத்த உள்ளீடு ஒன்று ஊசலாடி நர்த்தனம் கொள்வதை அடுத்தவர் அனுபவக் கூட்டுக்குள் நுழையத் தெரிந்தவர்கள் இலகுவாக கண்டு கொள்வர். கலை அழகைத் தேடுகிறது. உண்மையைத் தேடுகிறது. அர்த்தத்தைத் தேடுகிறது. அனுபவத்தைத் தேடுகிறது.  ஒரே காட்சி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான உணர்வலைகளை எழுப்பி விடலாம். அது அவரவர் அகநிலை சார்ந்த அனுபவங்களையும், அக்கணத்து மன உணர்வையும் பொறுத்த விடயம். தமயந்தியின் வார்த்தைகளற்ற உலகின் - கமரா கவிதையின் இசையை நுகரும்போது, பல சமயங்களில் நெஞ்சின் அலைகள் மேலெழுந்து, அனல் புயல் கக்க, கண்கள் வெடித்து ஊற்றெடுக்க புன்னகைக்கிறேன்.

இந்த உலகுக்கும் எனக்கும் இடையேயான உறவு உக்கிரம் கொண்டு உருவேற, ஓர் உணர்வுப் பிரவாகத்துள் தோய்கிறேன். அது பச்சாதாபமா, பரிகாசமா தெரியாது. ஒன்று மட்டும் நிதர்சனமாய்த் தெரிகிறது. காணுமிடமெல்லாம் நம் வசமே எனக் கொண்ட போதிலும், எதுவும் எமதில்லை எனக் கொண்ட இவ்வுலகின் அகதி. தமயந்தியின் படங்களினு¡டாக வரும் பனிக்காற்றின் சிறகாய் இருந்தாலென்ன - உறை நதியின் அலையாய் இருந்தாலென்ன - மலைகளின் முலைகளாய் இருந்தாலென்ன - மரங்களின் ஓகஸ்ராவாய் இருந்தாலென்ன-  அனைத்தின் அடியிலும் ஓலமிட்டு என் முகத்திலறைவது அகதி! அகதி!! அகதி!!! தமயந்தியின் புகைப்படங்கள் என் இதயக் கபாலங்களில் இப்படித்தான் சாளரங்களைத் திறக்கின்றன. காமரா - தானும் தான் காணும் காட்சிகளுக்குமிடையே தன்னையும் காட்சியையும் சேதப்படுத்தாமல் இரகசிய மெளனம் காத்து செயற்படுகிறது. தனது அகப்புற அனுபவ உணர்ச்சிகளில் தானியங்கி, காட்சிகளின் உயிரை மட்டுமே மெல்லக் கொய்து நம் தரிசனத்துக்கு வைத்துவிடுகிறது. அவரது கலை ஆளுமையின் அழகியல் நரம்புகள், அவர் ஏற்ற வடுக்களின் ரணங்களையும் சேர்த்தே வெளிப்படுத்துகின்றன.

வாழ்க்கை வழங்கும் அனுபவம்,  அனுபவம் வழங்கும் வாழ்க்கை - இவை புணரப் பிறந்த வாழ்வின் சாரமே இவர் புகைப்படங்கள். மனிதர்கள் அற்ற அவரின் பெரும்பாலான படங்கள் மனிதவாழ்வின் அவலத்தையும் ஆனந்தத்தையும் பேசுகின்றன. அதே சமயம் காலம் காலமாய் கட்டி வாழ்ந்த இந்த மக்கள் என்னோடு இயற்கையாய் இல்லை என்பதையும், ”நான் தனித்தே இருக்கிறேன்” என்பதை கூட்டுக்குரலாய் வெளிப்படுத்துகின்றன.

- சூரியனைக் கண்டும் நிமிர்ந்தபடி புன்னகைக்கும் பனி உறை மலைகள்

- உள்ளங்கை வெப்பத்தில்  உருகக்கூடிய மென்மையாகினும், சங்கிலியே (சிறை விலங்கு) ஆயினும் கெட்டியாக பற்றிக்கொண்ட பனி.

- உலரப் போய் கொடியில் தூக்கு மாட்டிக்கொண்டு உறைந்துபோன ஆடைகள்

- எத்துணை நம்பிக்கையுடன் நீண்டு பயணித்து பூத்த பூவின் தண்டில் தொடர முடியாது உதிரப்போகும் இறுதி இலையில் தரித்திருக்கும் நத்தை.

- முக்கி எழுந்து, மொட்டுடைத்து பூத்துமாகிவிட்டது. சிலந்தி தன் சிறையை விரித்த போதும் சூரியன் தொடர்ந்தும் விடிவிற்காய் தன் படையணிகளை அனுப்பிக் கொண்டே இருக்கிறான்.

- “கொன்சென்றேசன் காம்ப்“ இல் போடப்பட்டனவாய் எல்லாம் பனியின் ஆகிருதியில் அடங்கி மெளனித்துக் கிடக்கிறது. ஆயினும் வாழ்வுக்கு வேண்டி ஒற்றை வள்ளம் கடல் வயலுள் நுழைகிறது.

- பாழடைந்த வீட்டின் உக்கிய கதவாயினும் ஒரு வாசலேனும் திறந்திருக்கிறது. போதும்.

- ஆடுகளை கூட்டுக்குள் விட்டுத் தீனி போடும் கைகள். கூட்டுக்குள் இருந்து வாங்கி உண்பதில் அவர்கள் ஆனந்தம். நாளை உணவுக்கும் அவை உயிரைக் கொடுக்கும். பீரங்கியோடு, நோர்வே தேசியக்கொடி அருகே ஒரு கறுப்பு நாய் காவல் காக்கிறது....? இப்படி இவர் புகைப்படங்களை உள்வாங்கும்போது நமது சமூக, பண்பாட்டு, போராட்ட வடுக்களின் விமர்சன முகங்கள் நமக்கு தோற்றம் தருகின்றன. இழந்ததை ஈடுகட்டும் வகையில் ஒழுங்கு செய்யப்படாத ஒரு மூலசக்தி இப் புகைப்படங்களின் பின்னே மறைந்து செல்வதை உணரமுடியும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள் இணைய இதழின்  முக்கிய நோக்கம் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை  பலவேறு நாடுகளிலும் வாழும் தமிழர்களுடன் பகிர்ந்துகொள்வதாகும். படைப்புகளை அனுப்பும் எழுத்தாளர்கள் புகைப்படங்களை அல்லது ஓவியங்களை அனுப்பும்போது அவற்றுக்கான காப்புரிமைக்கு உரிமை உள்ளவர்களாக இருந்தால் மட்டுமே அவற்றை அனுப்பவும். தமிழ் மொழியை இணையத்தில் பரப்புவதும் இவ்விணைய இதழின் முக்கிய நோக்கமாகும். படைப்புகளை ngiri2704@rogers.com , editor@pathivukal.com ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.

Pathivugal Online Magazine''s  main aim is to share the creative works of Tamil writers with Tamils living in various countries. When writers submit their works—such as photographs or paintings—please send them only if you hold the copyright for those items. Spreading the Tamil language on the Internet is also a key objective of this online magazine. Please send your submissions to ngiri2704@rogers.com and editor@pathivukal.com.

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும்.  நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 
பதிவுகள் விளம்பரம்