சுப்ரபாரதிமணியனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் விமோசனம்: திருப்பூர் என்றதும் என் நினைவிற்கு முதலில் வருவது சுப்ரபாரதிமணியன். திருப்பூர் மட்டுமல்ல, ஒவ்வொரு ஊரையும் அங்கிருக்கும் படைப்பாளிகளாலேயே நினைவு கூர்கிறேன். இரண்டாவது அவருடைய விரிவான படைப்புலகம். பதினைந்து சிறுகதைத் தொகுப்புகள், ஏழுநாவல்கள், இரண்டு குறுநாவல் தொகுப்புகள், மூன்று கட்டுரைத் தொகுப்புகள், நாடகம், பயண அனுபவம், திரைப்படக் கட்டுரைகள், மொழி பெயர்ப்புகள் என முப்பது நூல்கள்.. பரந்து விரிந்திருக்கிறது அவருடைய படைப்புலகம். மூன்றாவது, படைப்பாளி 'தூய இலக்கியவாதி'யாக அரசியல் சார்பு, வேறு துறை ஈடுபாடு, களப்பணி போன்றவைகள் மீதான ஒவ்வாமை இல்லாமல் சுற்றுப்புறச்சூழல், குழந்தைத் தொழிலாளர் பிரச்சனை, தாய்வழிக்கல்வி போன்ற களப்பணி செயல்பாடுகள். நான்காவது அவருடைய சகாக்களான பலர் ஓய்ந்து விட்ட நிலையில் தொடர்ந்து இயங்காது ஐந்தாவது.. மூத்த எழுத்தாளர் ஒருவர்.. சிறந்த படைப்பாளியும் கூட அவருடைய நேர்காணல் ஒன்றில், இன்றைக்கு வரும் எழுத்துக்களை நான் படிப்பதேயில்லை. ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை" படிக்காமலேயே அபிப்ராயம் உதிர்க்கையில் சுப்ரபாரதிமணியன் இளைய படைப்பாளிகளின் எழுத்துக்களில் காட்டும் கவனம், அக்கறை.

'விமோசனம்' சுப்ரபாரதிமணியனின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைத் தொகுப்பு. பதினாறு சிறுகதைகள்... அவருடைய பதினைந்து தொகுதிகிள்ல 250 கதைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவை. திருப்பூர் கலை இலக்கியப் பேரவையைச் சார்ந்த திரு. வி.டி. சுப்ரமணியன் தொகுத்திருக்கிறார். காவ்யா வெளியிட்டிருக்கிறது.
 
"சமூக யதார்த்தம் தன் மனித ஆளுமையுடன் சேர்ந்து கலையாக உருவெடுக்கிறது. கலை வெற்றிடத்திலிருந்து பிறக்க முடியாது என்கிற காரணத்தினாலேயே, எந்த சமூகத்திலிருந்து பிறக்கிறதோ அந்த சமூகத்தின் பண்பாட்டுக் கூறுகளைக் கொண்டதாக அது இருக்கிறது. எனும் இந்திரனின் கூற்றை உறுதி செய்வது போல இந்தத் தொகுப்பிலுள்ள கதைகள் அமைந்திருக்கின்றன.
 
பிழைப்பு தேடிப்போகுமிடத்தில் அந்தச் சூழலுடன் பொருந்திப் போகவிடாமல் செய்கிற சிக்கல்கள் அதனால் எதிர் கொள்ள நேர்கிற வன்முறைகள் சொந்த நாட்டிலேயே அகதியாக மாறிப்போன துயரைப் பேசுகிறது 'எதிர்பதியம்' "உயிரைக் கையில் பிடிச்சிட்டு ஒடுறவனுக்கு இது ஒன்றும் பெரிய தூரமல்ல' வேற்றுமையில் ஒற்றுமை என்பதெல்லாம் வெற்று முழக்கமாய் கோஷமாய் நின்று விட்டதைச் சொல்கிறது. "நா மட்டுமா அகதி முனியப்பனும் அகதி தா" என முடியும் இறுதிவரை பலவகைப்பட்ட கலாச்சாரங்களை, பண்பாடுகளை அழித்து ஒற்றைத் தன்மையை கட்டமைக்க முயல்கையில் கடவுளர்களும் அகதிகளாகி விடுவதை எதிரொலிக்கிறது.
 
பாதுகாப்பு தருவதாக சொல்லப்படும் குடும்ப அமைப்பிற்கு பெண் தரும் விலையை 'நாதம்' சிறுகதையில் பார்க்கலாம். பெண்ணின் இயல்பான சின்னஞ்சிறு ஆசைகளுக்குக் கூட அதில் இடமில்லாமல் போய் விடுகிறது. மழையில் நனைவது, ஆலங்கட்டிகளைப் பொறுக்கித்தின்பமும் அவளுக்குப் பிடித்தமானதாயிருக்கலாம். ஆனால் அதனால் பாதிக்கப்படுவது குழந்தைகளும் கணவனும் எனும்போது மழையை ஜன்னல் வழியாக பார்த்து சந்தோசப்படுவதோடு நிறுத்திக் கொள்கிறாள். காய்ச்சலில் அவள் அவதிப்படுவதைவிட அதனால் தடைபடும் குடும்பப் பொறுப்புகள், கடமைகள் முன்னுரிமை பெறுகின்றன.
 
இந்தக் கதையில் இன்னொரு கோணமும் கூட இருக்கிறது. குடும்ப அமைப்பில் பெண் வேலைக்குப் போவதென்பது பொருளாதார பலத்திற்காகத்தான். அது முதன்மை வருமானமல்ல, கூடுதல் வருமானம் பொருளாதார அவசியமில்லையென்றால் பெண் வேலைக்குச் செல்ல வேண்டாம். குடும்பம், குழந்தைகளை பராமரிப்பது போதும். வீட்டு வேலை, அலுவலக வேலை இரண்டையும் செய்வது பெண்ணுக்கு கூடுதல் சுமை. வேலைக்குப் போவது பெண் விடுதலையின் ஓர் அம்சமல்ல. அது ஆணுக்குத்தான் லாபம் என்றெல்லாம் சொல்லப்படுகிறது. இருந்தாலுமே கூட குடும்பத்தில் பெண் தன் சுயத்தைக் கரைத்துக் கொள்கிறாள். வேலையென்பது அவளுக்கு சுய கௌரவத்தை, தன்னம்பிக்கையை, அடையாளத்தை மீட்டுத் தருகிறது.
 
காசநோய் வந்தது போல் உருக்கின உடம்புடன் குடும்பக் கஷ்டங்களை இரவு வேளைகளில் கணவனிடம் அழுது புலம்புபவளிடம் வேலைக்குச் சென்றபின் ஏற்படும் மாற்றம்...
 
"அப்படி சாந்தியை பிரகாசத்துடன் பார்த்து எத்தனை வருஷங்கள் இருக்கும் என நினைத்துப் பார்த்தான். கல்யாணத்திற்கு முன்பானக் காலத்தில்தான் இந்தப் பிரகாசத்துடன் இருந்திருப்பாள் என நினைப்பு வந்தது"
 
அவளின் நாளொன்றின் பத்து மணி நேரத்தை முந்நூற்று ஐம்பது ரூபாய்க்காக உறிஞ்சும் வேலையில் கொஞ்சமே கிடைக்கும் அந்தத்துளி மகிழ்ச்சியைக் கூட ஆண் மனம் பொறுத்துக் கொள்ளாததை, அவளின் சின்ன சந்தோசமான வானொலியில் கர்நாடக சங்கீதத்தை இரவு நேரங்களில் கேட்பதும் வானொலியை நிறுத்த மறந்து தூங்கிப் போகும் சமயம் கணவன் கொள்ளும் எரிச்சல், நிறுத்த மறந்ததை சுட்டிக்காட்டி அவளுக்குள் குற்ற உணர்ச்சியை ஏற்படுத்துவது, வேலைக்குச் சென்ற பிறகு அவள் முகத்தில் தெரியும் பிரகாசம் அவனிடம் ஏற்படுத்தும் பொறாமையென ஆண் மனதை கதைப்போக்கில் சிறுகச் சிறுக நுட்பமாக வெளிப்படுத்துவது போலவே பெண் மனதையும் வெளிப்படுத்துகிறது.
 
தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த பெண் உணர்வு சார்ந்த இன்னொரு கதை 'ஒவ்வொரு இராஜகுமாரிக்குள்ளும் தலைப்பே சிறப்பாக அமைந்து விட்டது. பெண் என்பவள் மகள் மட்டுமல்ல மனைவி மட்டுமல்ல தாய் மட்டுமல்ல தனித்த உயிர் அவளுக்கென்று தனியாக ஒரு மனம் இருக்கிறதென்பதையும் அவளுக்கென்று சுய விருப்பு வெறுப்பு இருப்பதையும் 'ஒவ்வொரு இராஜகுமாரிக்குள்ளும்' என்கிற தலைப்பே சொல்லி விடுகிறது.
 
கதை தொடக்கத்திலிருந்து கடைசி சில பாராக்கள் நீங்கலாக சிறுவனின் பார்வையில் கறியெடுப்பது சமைப்பது அதன் மீதானஅவன் ஈர்ப்பு அதை வெளிப்படுத்தும் சில நிகழ்வுகள் என வரும் விவரிப்புகள் வெகு ரசமானவை. கறியெடுப்பது என்பதன் பின்னணியிலிருக்கும் அந்தக் குடும்பத்தின் பொருளாதாரச்சூழல், மதம் சார்ந்த நம்பிக்கைகள், கிராமத்து பண்பாடு, கலாச்சாரம்... கிராமத்துக் கதையென்றால் சுப்ரபாரதிமணியனின் பேனாவுக்குத் தனி உற்சாகம் வந்து விடுகிறது. அந்த உற்சாகத்திலும் கிராமத்தின் சாதிய முகத்தைக் காட்டத் தவறவில்லை "வள்ளுவன் வேத வாக்கு சொல்கிறவன் என்றாலும் கீழ் ஜாதிதானே" (வாக்கு) சாதி என்று வந்துவிட்டால் நகரமும் விதி விலக்கு கிடையாது. கொஞ்சம் அடக்கி வாசிப்பார்கள். "சாந்தி வேலை தேடி வந்தபோது அவளிடம் ஜாதியைப் பற்றி விசாரித்தார்களாம். கூட்டிப் பெருக்கத்தானே" (நாதம்)
 
இங்கு திருமணம் என்பதில் மாப்பிள்ளை பெண்ணின் விருப்பம் என்பது கடைசி பட்சமாகி விடுகிறது. அதிலும் பெண்ணின் விருப்பம் கண்டு கொள்ளப்படுவதேயில்லை. ஜாதி, ஜாதகம், வேலை, அந்தஸ்து, பணம் என்று எத்தனை. இதில் வெளிப்பட வாய்ப்பே இல்லாமல் போன பெண் மனம் தன்னை திடுமென்று வெளிப்படுத்துகையில்... பாரதத்தில் கூட பாஞ்சாலி கர்ணன் மீது தனக்கு ஆசையிருந்ததைச் சொல்லுவாள். அப்படியொரு திருப்பம் இந்தக் கதையின் இறுதியில். இந்தக் கதையை உயரத்திற்கு கொண்டு போய் விடுகிறது.
 
இத்தகைய திருமணங்களில் இப்போது உடைவு ஏற்பட்டிருப்பதை வாழ்வின் இறுதியில் இருக்கும் முதியவரின் கசந்த வார்த்தைகள் வெளிப்படுத்துகிறது. "பனியன் பேக்டரிக்குப் போகும் பையன்களைக் கேட்க வேண்டாம். லேபிள் வைக்க அயர்ன் செய்ய கட்டிங்குக்கு என்று பனியன் கம்பெனிகளில் சரிசமமாய்ப் பெண்கள் வேறு உலவுகிறார்கள். சுலபமாய், ஜாதி என்பது பற்றி இல்லாமல் தொழில் ரீதியாக உறவுகளைத் தீர்மானித்துக் கொள்கிறார்கள்" (இன்னும் மீதமிருக்கிற பொழுதுகளில்)
 
சுற்றுப்புறச் சூழல் சீர்குலைவை ஈரம் கதை பேசுகிறது. வணிக நகரமாக திருப்பூர் மாறியதில் அது இழந்தவற்றை சுப்ரபாரதிமணியன் தொடர்ந்து பேசி வந்திருக்கிறார். டாலர் கனவுகளில் மிதப்பவர்களை தொந்தரவு செய்யும் இது போன்ற குரல்களை கேளாச் செவியினராய் பாவனை செய்தவர்கள் இனியும் புறக்கணிக்க முடியாது என்பதற்கு சில சமிக்ஞைகள் வெளிப்படுகின்றன. நீதிமன்றத்தின் எச்சரிக்கைக்கு பின்பு திருப்பூரில் தகர்க்கப்பட்ட சாயப்பட்டறைகள் சேலம், நாமக்கல் புறநகர்ப் பகுதிகளுக்கு இடப் பெயர்பு கொள்வதை நாளிதழ்கள் வெளிச்சமிடுகின்றன.
 
சூழலியலாளர்களை மனித குல முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டைப் போடுபவர்களாக பார்ப்பவர்கள் விஞ்ஞானிகள் தங்களால் கைவிடப்பட்ட ஜப்பான் மக்களை காற்றில் கதிர் வீச்சு கலந்து விட்டது சுவாசிக்க வேண்டாம். தண்ணீரில் கலந்து விட்டது குடிக்க வேண்டாம் என்று சொன்னதை நினைத்துப் பார்க்க வேண்டும். நாம் தான் மறதிக்காரர்களாயிற்றே. வாழ்வைவிட பிழைப்பு முக்கியமாகி விட்டதே "வெடிக்க விரும்பும் வெடி குண்டைப்போல் தகதகத்து நிற்கும் அணை நீரின் ரசாயணக் கழிவுகளில் மினுங்கும் வர்ணங்களில் எவையும் வீழ்ந்து விடும். ரசாயணப் பூச்சிகளின் ரீங்காரத்துக்குள் எல்லாக் கதறல்களும் அடக்கம்." பட்டீஸ்வரன் முரசன் மட்டுமல்ல முனிஸ்வரனும் கூட.
 
பிழைப்பை மட்டுமே முன்னிலைப்படுத்தும் பிழையான வாழ்வில் குழந்தைகளை வளர்ப்பது, அவர்களைப் படிக்க வைப்பது என்பதெல்லாம் பிராய்லர் கோழி வளர்ப்பதுபோல அவர்கள் மூலம் திரும்பக் கிடைக்கும் வருமானத்தைக் கணக்குப் பண்ணி காய் நகர்த்துவதில் குழந்தைகள் படும் அவஸ்தையை 'மகா வாக்கியம்' எதிரொலிக்கிறது. இந்த அழுகிய மனங்களின் விளைச்சல் அழுகலாய்த்தானே இருக்கும். தமிழ் மரபில் வழிப்பறி பாலைத் திணைக்குரியதாய் இருந்தது. இன்று குழந்தைக் கடத்தல், வழிப்பறி போன்றவைகளில் ஈடுபடுபவர்கள் படித்த இளைஞர்களாயிருக்கிறார்கள்.
 
கோட்பாடுகளை உடும்புப் பிடியாக பிடித்துக் கொள்ளாமல் வாழ்க்கையிலிருந்து படைப்புகளைத் தந்திருக்கிறார் சுப்ரபாரதிமணியன். பதினாறு கதைகளில் ஒன்றான 'விமோசனம்' தொகுப்பின் எல்லாக் கதைகளுக்கும் பொருந்திப் போகிறது. தேசியம், சர்வதேசியம் பேசிக் கொண்டு சொந்த மக்களை அகதிகளாக அலைய விடுவதும், வல்லரசு கனவு காணச் சொல்லும் நாட்டில் கழிப்பறை கூட இல்லாத கொடுமையையும், சிறைக்கூடமான பள்ளிக் கூடங்களையும், மாறிவிட்ட மதிப்பீடுகள் காரணமாய் உறவுகளுக்கிடையே ஊடாடும் நெருக்கடிகளையும் சொல்லும் இந்தக் கதைகள் இவற்றிலிருந்து விமோசனம் பிறக்காதா என்கிற விழைவை, ஏக்கத்தை, கவலையை வெளிப்படுத்துகின்றன விமர்சிக்கின்றன. கவனத்தைக் கோருகின்றன.

சுப்ரபாரதிமணியனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் விமோசனம்: ரூ. 90/- காவ்யா, சென்னை)

அனுப்பியவர்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள் இணைய இதழின்  முக்கிய நோக்கம் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை  பலவேறு நாடுகளிலும் வாழும் தமிழர்களுடன் பகிர்ந்துகொள்வதாகும். படைப்புகளை அனுப்பும் எழுத்தாளர்கள் புகைப்படங்களை அல்லது ஓவியங்களை அனுப்பும்போது அவற்றுக்கான காப்புரிமைக்கு உரிமை உள்ளவர்களாக இருந்தால் மட்டுமே அவற்றை அனுப்பவும். தமிழ் மொழியை இணையத்தில் பரப்புவதும் இவ்விணைய இதழின் முக்கிய நோக்கமாகும். படைப்புகளை ngiri2704@rogers.com , editor@pathivukal.com ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.

Pathivugal Online Magazine''s  main aim is to share the creative works of Tamil writers with Tamils living in various countries. When writers submit their works—such as photographs or paintings—please send them only if you hold the copyright for those items. Spreading the Tamil language on the Internet is also a key objective of this online magazine. Please send your submissions to ngiri2704@rogers.com and editor@pathivukal.com.

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும்.  நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 
பதிவுகள் விளம்பரம்