சென்ற ஞாயிற்றுக் கிழமை 10-04-2011 உயிர்ப்பு நாடகப் பட்டறையின் 3வது கலை நிகழ்ச்சிக்குச் செல்வதற்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. ரொறன்ரோ, 1785 பின்ச் அவன்யூவில் உள்ள யோர்க்வூட் நூல்நிலைய அரங்கில் இந்த நிகழ்வு இடம் பெற்றது. மாலை 4:00 மணிக்கு ஆரம்பமான இந்த நிகழ்வைப் பற்றிய விவரங்களை சுல்பிகா அவர்கள் தொகுத்து வழங்கினார். சனிக்கிழமையும் இதுபோன்ற நிகழ்வு நடந்ததாகப் பார்வையாளர் சிலர் குறிப்பிட்டனர்சென்ற ஞாயிற்றுக் கிழமை 10-04-2011 உயிர்ப்பு நாடகப் பட்டறையின் 3வது கலை நிகழ்ச்சிக்குச் செல்வதற்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. ரொறன்ரோ, 1785 பின்ச் அவன்யூவில் உள்ள யோர்க்வூட் நூல்நிலைய அரங்கில் இந்த நிகழ்வு இடம் பெற்றது. மாலை 4:00 மணிக்கு ஆரம்பமான இந்த நிகழ்வைப் பற்றிய விவரங்களை சுல்பிகா அவர்கள் தொகுத்து வழங்கினார். சனிக்கிழமையும் இதுபோன்ற நிகழ்வு நடந்ததாகப் பார்வையாளர் சிலர் குறிப்பிட்டனர். ஈழத்திலே புகழ் பெற்ற கலைஞர்கள் பலர், பிறந்த நாட்டில் ஏற்பட்ட போர் சூழல் காரணமாகப் புலம் பெயர்ந்து கனடாவைப் புகுந்த நாடாக ஏற்றுக் கொண்டிருப்பதும், அவ்வப்போது தமது ஆத்ம திருப்திக்காகக் கலை நிகழ்ச்சிகளை மேடை ஏற்றிக் கொண்டிருப்பதும் பலரும் அறிந்ததே. அப்படியான ஆர்வமுள்ள கலைஞர்களில் சிலரின் முயற்சியால் உருவாக்கப்பட்ட நாடகப் பட்டறைகளில் ஒன்றுதான் ‘உயிர்ப்பு’ நாடகப் பட்டறை.

இந்த உயிர்ப்பு நாடகப் பட்டறையின் முதலாவது நிகழ்ச்சியாகப் ‘பூர்வீக மக்களின் குரல்’ என்ற நிகழ்ச்சி இடம் பெற்றது. இதில் இந்த மண்ணின் பூர்வீக மக்கள் சிலர் பங்குபற்றியிருந்தனர். அவர்களது இசைக் கருவியில் இசை எழுப்பி அதற்கேற்ப நடனமாடிப் பார்வையாளர்களை மகிழ்வித்தனர். எந்த மொழியில் அவர்கள் பாடினார்கள் என்று ஒரு பார்வையாளர் வினாவியபோது, அது ஒரு மொழி அல்ல வெறும் ஒலி மட்டும் ஏற்படுத்தினோம் என்று குறிப்பிட்டனர். காற்றின் மொழிதான் ஒலி, அது உங்களுக்கும், எங்களுக்கும், எல்லோருக்கும் சொந்தம் என்ற தத்துவத்தை எல்லோருக்கும் இலகுவில் புரிய வைத்தனர். கடைசியாக அவர்கள் ஏற்படுத்திய இசைக்குப் பார்வையாளர்களில் சிலரும் அவர்களுடன் சேர்ந்து நடனமாடி, அங்கேயிருந்த ஏனைய பார்வையாளர்களை மகிழ்வித்தனர். ஈழத்தமிழரின் மண்ணை இழந்த ஏக்கத்தைப் போலவே, அவர்கள் கனடிய பூர்வீகக் குடிகளாக இருந்தாலும் அவர்களின் குரலிலும் அந்த ஏக்கத்தைக் காணமுடிந்தது.

உயிர்ப்பு - 2011 அற்புதமான ஒரு கலை நிகழ்ச்சி


அந்த நிகழ்வைத் தொடர்ந்து வைரமுத்து திவ்யராஜனின் இயக்கத்தில் ‘போருழுத நிலம்’ என்ற  நாடகம் இடம் பெற்றது. ‘;உங்களிடம் கேட்பதெல்லாம் ஒரு துளி மனிதம் மட்டுமே’ என்ற கருத்து தெளிவாக எடுத்துச் சொல்லப்பட்டது. இதில் சத்யா தில்லைநாதன், கே. நவம், சகாப்தன், சேகர் தம்பிராஜா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். ஒவ்வொருவரின் அசைவிலும் அவர்களது கடின உழைப்புத் தெரிந்தது. ஒவ்வொருவரும் தாங்கள் பண்பட்ட நடிகர்கள் என்பதை மேடையில் நிரூபித்திருந்தனர். திவ்யராஜன், சங்கீதாவின் குரலில் வெளிவந்த பாடல்கள் கவிதா நாடகத்திற்கு மேலும் வலுச்சேர்த்திருந்தன. உடை அலங்காரமும், ஒலி, ஒளி அமைப்புக்களும் நிகழ்வுக்கு ஏற்ப சிறப்பாக அமைந்திருந்தன.
 
அடுத்து சுமதியின் பிரதி இயக்கத்தில் ‘அணங்கு’ என்ற நாடகம் இடம் பெற்றது. இதிகாசங்களின் முடிவை மாற்றி அமைத்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையில் உருவான இந்த நாடகம் பலரையும் கவர்ந்ததில் வியப்பில்லை. இந்த நாடகத்தில் தர்சினி வரப்பிரகாசம், யாழினி ஜோதிலிங்கம், மயோ மனோ, ஜலஜா யோகராஜ், நிவேதா ரவி, சமீரா சுல்பிகா, மயூரி யோகராஜ், அன்ரன் மானுவேல் ஆகியோர் பங்கு பற்றியிருந்தனர். மாற்றுக் கருத்தும், வௌ;வேறு கோணங்களில் நின்று வெளிப்படும் சிந்தனைகளும் ஆணாதிக்கத்திற்கு விடப்படும் சவால்களாக அமைந்திருந்தன. கண்ணகி, சீதை, மணிமேகலை போன்ற பாத்திரங்களின் மாற்றுக் கருத்தை ஏற்றுக் கொள்வதும் விடுவதும் அவரவர் விருப்பமாகையால், சொல்ல வந்த கருத்து ஒரு சிலரின் மனதைத் தொட்டு மாற்றங்களை ஏற்படுத்தினாலும் அதன் வெற்றி பிரதி இயக்குனர் சுமதிக்கும், தங்கள் பண்பட்ட நடிப்பால் பார்வையாளர்களைக் கவர்ந்த நடிகர்களையுமே சேரும். தர்சினி, அன்ரன் ஆகியோரின் இறுதி நடனம், நிறைவான பயிற்சி பெற்ற நடனமாக மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. சிலர் ஏற்கனவே இந்த நாடகத்தைப் பார்த்து விட்டதாகச் சொன்னாலும், மொத்தத்pல் பார்வையாளர்களை நேரம் போனதே தெரியாமல் கட்டிப்போட்ட ஒரு நிகழ்வாக இது அமைந்திருந்தது.

இறுதி நிகழ்வாக ‘காலப்பயணம்’ என்ற நாடகம் இடம் பெற்றது. பிரதி இயக்கம் சக்கரவர்த்தி. வரலாற்றுப் புத்தகத்தில் இருந்து கிழித்தெடுக்கப்பட்ட பக்கமாக 2011 ஆண்டுகளுக்கு முன்நோக்கிய பயணமாக இந்த நாடகம் அமைந்திருந்தது. இதில் பிரசாத் சிவா, தர்ஷன் சிவா, ரமேஷ், மித்ரன், திருமாவளவன் ஆகியோர் நடித்திருந்தனர். இடைவேளைக்குப் பின் நடந்ததாலோ என்னவோ பார்வையாளர்கள் சிலர் அதிக கவனம் செலுத்தாது இருந்தனர். யேசுவை சிலுவையில் அறைந்த சம்பவத்தைக் கருப் பொருளாகக் கொண்டு, தவறான பாதையில் வழி நடத்தப்படும் எந்த மதமும் மக்களை நல்வழிப்படுத்தாது என்பதை எடுத்துச் சொல்லும் நாடகமாக இது அமைந்திருந்தது. தொன்மாக்கள் (Ancestors) நடன அமைப்பை தர்சினி வரப்பிரகாசமும், போர் செய்யும் ஆணுடலுக்கான நடன அமைப்பை சுதர்ஸன் துரையப்பாவும் செய்திருந்தனர். இந்த நடனங்களில் இளைஞர்களும் யுவதிகளும் நிறையவே பங்குபற்றியிருந்தனர்.

அற்புதமான ஒரு கலை நிகழ்ச்சி

மொத்தத்pல் மாற்றுக் கருத்துக்களைச் சொல்ல வந்த நாடகங்களாகவே இவை அமைந்திருந்தன. சொல்லப்பட்ட இந்தக் கருத்துக்களை ஏற்றுக் கொள்வதும் விடுவதும் பார்வையாளர்களைப் பொறுத்தது. ஆனாலும் ஒரு நாடகத்தை மேடை ஏற்றுவது என்பது எவ்வளவு கடினமானது என்பதை அறிந்தவன் என்ற வகையில், இந்த நிகழ்வை நடத்தியவர்களின் கடின உழைப்பைக் கட்டாயம் பாராட்டியே ஆகவேண்டும்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள் இணைய இதழின்  முக்கிய நோக்கம் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை  பலவேறு நாடுகளிலும் வாழும் தமிழர்களுடன் பகிர்ந்துகொள்வதாகும். படைப்புகளை அனுப்பும் எழுத்தாளர்கள் புகைப்படங்களை அல்லது ஓவியங்களை அனுப்பும்போது அவற்றுக்கான காப்புரிமைக்கு உரிமை உள்ளவர்களாக இருந்தால் மட்டுமே அவற்றை அனுப்பவும். தமிழ் மொழியை இணையத்தில் பரப்புவதும் இவ்விணைய இதழின் முக்கிய நோக்கமாகும். படைப்புகளை ngiri2704@rogers.com , editor@pathivukal.com ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.

Pathivugal Online Magazine''s  main aim is to share the creative works of Tamil writers with Tamils living in various countries. When writers submit their works—such as photographs or paintings—please send them only if you hold the copyright for those items. Spreading the Tamil language on the Internet is also a key objective of this online magazine. Please send your submissions to ngiri2704@rogers.com and editor@pathivukal.com.

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும்.  நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 
பதிவுகள் விளம்பரம்