ஆய்வு: சிறுபாணாற்றுப்படையில் கடையேழுவள்ளல்கள்முன்னுரை:
தமிழர்பண்பாட்டின் கருவூலமாகத் திகழ்வது எட்டுத்தொகையும் பத்துப்பாட்டுமாகும் பத்துப்பாட்டில் அமைந்துள்ள ஆற்றுப்படை நூல்களுல் ஒன்று சிறுபாணாற்றுப்படை. இதன் ஆசிரியர் நல்லூர் நத்தத்தனார் இந்நூலின் கடையேழு வள்ளல்களைப் பற்றிய வரலாறு பதிவு செய்யப் பட்டுள்ளது. பேகன் பாரி காரி ஓரி ஆய் அதியமான் நள்ளி எனும் இவ்வள்ளல்களின் வரலாறு கொடைத்திறத்தைக் குறித்து ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

மயிலுக்குப் போர்வை தந்த பேகன்:
பேகன் என்பவன் ஆவியர் குடியின்கண் பிறந்தவன். பெரிய மலை நாட்டை உடையவன் அப்பேகன் மலை வளம் உலா வரும்போது பருவத்தே பெய்த மழையால் வளம் மிகுந்த பக்கத்தே வாழும் காட்டு மயில் இயல்பாக அகவியது. ஆனால் அது குளிரால் நடுங்கியது என்று எண்ணி தான் அணிந்திருந்த நுட்பமான வேலைப்பாடுகளுடைய விலை உயர்ந்த போர்வையை அதற்குப் போர்த்தி அதன் குளிரை நீக்கினான் இதனை

“கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய     அருந்திறல் அணங்கின் ஆவியர் பெருமகன்
பெருங்கல் நாடன் பேகனும்” (சிறுபாண் 85-87)

எனும் பாடல் வரி விளக்குகிறது.

முல்லைக் கொடி படர தேர் தந்த பாரி:
பறம்பு மலையின் குறுநில மன்னன் பாரிபற்றி புறநானூறு அகநானூறு நற்றிணை குறுந்தொகை போன்ற தொகை நூல்கள் மட்டுமின்றி சிறுபாணாற்றுப்படையும் சிறப்புற எடுத்தியம்புகிறது.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்
வாடிய வள்ளல் பெருமான் போல
கருணை உள்ளம் கொண்டவன் பாரி

வற்றாத அருவியையுடைய பறம்பு மலையின் அருகில் சிறிய மலர்களை உடைய முல்லைக்கொடி படருவதற்கு கொம்பின்றித் தவிப்பதைக் கண்டு தான் ஏறி வந்த பெருந் தேரினையே முல்லைககொடி படர நிறுத்திச் சென்றான் அவ்வள்ளல்

பாரியின் இச்செயலை நினைக்கும் தோறும் வியப்பு மேலோங்குகிறது.ஏனெனில் இன்று மனிதனுக்கு மனிதன் உதவுவதே கடனாகச் செய்யும் நிலையில் தாவரத்தையும் ஓர்உயிர்போல் மதித்த  பாரியின் உயர்ந்த குணம் என்றென்றும் நினைக்கத்தக்க ஒன்றாகும்

குதிரையுடன் நாடு தந்த திருமுடிக்காரி
மலைய மான் நாட்டை ஆண்டவன் திருமுடிக்காரி என்னும் குறுநில மன்னன் தன்னை நாடிவந்தவர்க்கு இல்லை என்று கூறாது வாரி வழங்கும் வள்ளல்.இவன் தனது குதிரையையும் தன் நாட்டையும் அனைவரும் வியக்கும்படி வறியவற்கு கொடையாக நல்கினான் இதனை

“வால் உளைப் புரவியொடு வையகம் மருள
ஈர நல் மொழி இரவலர்க்கு ஈந்த
ஆழல் திகழ்ந்த இமைக்கும் அஞ்சுவரு நெடுவேல்
கழல் தொடித் தடக்கைக்காரியும்” (சிறுபாண் 92-95)

எனும் பாடல் வரி விளக்குகிறது.

நாட்டைப் பரிசாக வழங்கிய ஓரி
ஓரி ஆதன் ஓரி என்றும் வல்வில் ஓரி என்றும் அழைக்கப்பட்டான்.இவன் எய்த அம்பு ஓரே சமயத்தில் பல உயிர்களை மாய்க்கும் ஆற்றல் கொண்டது என்பதை புறநானூறு வாயிலாக அறியலாம்.அத்தகைய ஓரி சுரபுன்னை மரங்கள் நிறைந்த நாட்டைக் கூத்தா;களுக்குப் பரிசாக வழங்கினான்.இதனை

குறும்பொறை,நல்நாடு கோடியர்க்கு ஈந்த
காரிக் குதிரைக் காரியொடு மலைந்த
ஓரிக்குதிரை, ஓரியம் என ஆங்கு”    சிறுபாண் 109-117

என்ற வரிகள் விளக்குகிறது

சிவபெருமானுக்கு கலிங்கம் நல்கிய ஆய் அண்டிரன்
ஆய் அண்டிரன் ஆய்குடி என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவன் இவன் நாகம் தந்த நீலமணி பொதித்த விலையுயர்ந்த ஆடையை மர நிழலில் அமர்ந்துள்ள கல்லால் செய்யப்பட்ட லிங்கத்திற்கு கொடையாக வழங்கினான் இதனை

“நீல நாகம் நல்கிய கலிங்கம்
ஆல் அமர் செல்வதற்கு அமர்ந்தனன் கொடுத்த
சாவம் தாங்கிய சாந்து புலர்திணி தோள்
ஆர்வ நன் மொழி ஆயும்” (சிறுபாண் 96-99)

என்ற வரிகள் விளக்குகிறது.

ஓளவைக்கு நெல்லிக்கனி தந்த அதிகமான்
காஞ்சியை ஆண்டவன் தொண்டைமான் அதிகமான் நெடுமான் அஞ்சி ஆவான். ஒருநாள் பெரிய மலையில் கருநெல்லி மரத்தில் கனிந்திருந்த ஒரே ஒரு இனிய நெல்லிக்கனியைத் தன் உயிரையும் பொருட்படுத்தாது பறித்து வந்தான் அமிழ்தினும் இனிய அக்கனியை தான் உண்டு நீண்ட நாள் வாழ விரும்பாமல் தமிழ் மூதாட்டி ஔவைக்குக் கொடுத்து உண்ணச் செய்தான் தன் வாழ்நாளையே ஔவைக்குக் கொடுத்த வள்ளளாகத் திகழ்ந்தான்  அதிகன்

“கமழ் பூஞ்சாரல் கவினிய  நெல்லி
ஆமிழ்து விளை தீம் கனி ஔவைக்கு ஈந்த
உரவுச் சினம் கனலும் ஒளி திகழ் நெடுவேல்
அரவக் கடல் தானை அதிகனும்”(சிறுபாண் 100-103)

நாட்டு மக்களுக்கு வாரி வழங்கிய நள்ளி
தன்னிடம் உள்ள பொருளை மறைக்காமல் தன் மீது அன்பு காட்டும் உறியவர்கள் மகிழும்படி அனைத்து செல்வங்களையும் வழங்குபவன் நள்ளி.இவன் போர்முனையில் வெற்றி பெறும் ஆற்றலுள்ளவன்.நீண்ட கைகளையுடையவன் இடைவிடாத மழைத்துளி எப்பொழுதும் வீசிக் கொண்டிருக்கும்.இத்தகைய சிறப்பு வாய்ந்த குளிர்ந்த மலை நாட்டின் தலைவன் நள்ளியாவான் இதனை

“…………………….. கரவாது
நட்டோர்உவப்ப நடைப்பரிகாரம்
முட்டாது கொடுத்த முணை விளங்கு தடக்கை
துளி மழை பொழியும் வளிதுஞ்ச நெடுங்கோட்டு
நளிமலை நாடன் நள்ளியும் “(சிறுபாண் 104-107)

கடையேழு வள்ளல்களை விஞ்சிய நல்லியக்கோடன்
நல்லியக்கோடன் தன்னைப்புகழ்ந்து பாடும் பொருநர்க்கும் புலவர்க்கும் அருமறை பயின்ற அந்தணர்களுக்கும் வாரி வழங்கும் வள்ளல் தன்மை உடையவன். இமயம்போன்ற அவனுடைய உயர்ந்த மாளிகையின் கதவு இவர்களுக்காக எப்பொழுதும் திறந்தே இருக்கும். இதனை

“பொருநர்க்காயினும் புலவர்வர்க்காயினும்
அருமறை நாவின் அந்தணர்க்காயினும்
கடவுள் மால் வரை கண் விடுத்தன்ன
அடையா வாயிலவன் அருங்கடைகுறுகி”    (சிறுபாண் 203-206)

என்ற அடிகளால் அறியலாம்.

முடிவுரை:
ஆற்றுப்படை நூல்களில் சிறுபாணாற்றுப்படையில் சிறுபாணன் பரிசில் பெறாதோனை பரிசில் பெற வழிப்படுத்துவதாக அமைகிறது. அவ்வாறு சிறுபாண் தனக்குப் பரிசில் கொடுத்த மன்னன் நல்லியக்கோடனைப் புகழ்ந்து கூறும் போது கடையேழு வள்ளல்களுக்குப் பின்பு ஒய்மான் நல்லியக்கோடன் வள்ளலாய்த்திகழ்வதாக சிறப்பாக எடுத்துரைக்கிறது.

 



உசாத்துணை நூல்: சிறுபானாற்றுப்படை

 

*கட்டுரையாளர்: - திரு.சி.திருவேங்கடம், உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர் 641 028.-


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள் இணைய இதழின்  முக்கிய நோக்கம் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை  பலவேறு நாடுகளிலும் வாழும் தமிழர்களுடன் பகிர்ந்துகொள்வதாகும். இது இலாப  நோக்கற்று இயங்கும் இதழ். படைப்புகளை அனுப்பும் எழுத்தாளர்கள் புகைப்படங்களை அல்லது ஓவியங்களை அனுப்பும்போது அவற்றுக்கான காப்புரிமைக்கு உரிமை உள்ளவர்களாக இருந்தால் மட்டுமே அவற்றை அனுப்பவும். தமிழ் மொழியை இணையத்தில் பரப்புவதும் இவ்விணைய இதழின் முக்கிய நோக்கமாகும். படைப்புகளை ngiri2704@rogers.com , editor@pathivukal.com ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.

Pathivugal Online Magazine''s  main aim is to share the creative works of Tamil writers with Tamils living in various countries. It operates on a not-for-profit basis. When writers submit their works—such as photographs or paintings—please send them only if you hold the copyright for those items. Spreading the Tamil language on the Internet is also a key objective of this online magazine. Please send your submissions to ngiri2704@rogers.com and editor@pathivukal.com.

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும்.  நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 
பதிவுகள் விளம்பரம்