1. சுயநலம்

- ’ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) -பிறந்தது முதலே ஒட்டிப்பிறந்ததாய்
அந்த அழுக்கு அரைப்பாண்ட்டை அணிந்திருக்கும் மனிதனுக்கு இருநூறுக்கு
மேல் வயதிருக்குமோ என்னவோ.
அந்த வயிறு இதற்குமேல் உள்ளொடுங்கியிருக்கவியலாது.
’பணம் வேண்டாம், டீ வாங்கித்தா’ என்ற குரல் வானத்தின்
எந்த உயரத்திலிருந்து என்னை வந்தடைந்தது?
நான் வாங்கித்தந்த முழுக்கோப்பை என்ற பெயரிலான காலே
அரைக்கோப்பை தண்ணித்தேனீர்
அந்த நடுங்கும் கைகளில் குலுங்கும் நெகிழிக்கோப்பையிலிருந்து
அந்த மனிதனின் உதடுகளுக்குள் நுழையும்
எத்தனத்தில்
என் கண்களில் நீராகிக் குத்துகிறது,
நிறையவே வலிக்கிறது…..


பிச்சையெடுக்கும் தாயுடன் நடந்துவரும் சிறுவன்
என்னைப் பொறுத்தருளட்டும்.
’அவனுடைய அவல எதிர்காலத்திற்கு நானும்தான் பொறுப்பேற்கவேண்டும்’
என்று திரும்பத்திரும்பச் சுட்டிக்காட்டும் இந்த மனசாட்சியை எந்த
முதுமக்கட்தாழியிலடைத்து எங்குபுதைக்க?
பத்து குடும்பங்கள் மேஸ்திரியால் கைவிடப்பட்டு பட்டினி கிடப்பதாய்
பேரோலத்தை முணுமுணுப்பாய் வெளியிடும் அந்தத் தாயிடம்
முதலில் என்னிடமிருந்த நூறு ரூபாயைத் தருகிறேன்.
பின், மனசாட்சி வறுத்தெடுக்க ஒரு ஐந்நூறு ரூபாயைத் தருகிறேன்,
கூனிக்குறுகிக் கும்பிட்டு தளர்ந்த நடையுடன் அப்பால் செல்லும் அந்தச்
சகோதரியின் முதுகு என் கண்களிலிருந்து மறைய மறைய வேகமாய் என்
கால்கள் தன்னிச்சையாகப் பின்தொடர்ந்து செல்ல, எஞ்சியிருந்த இன்னொரு
ஐந்நூறு ரூபாய்த்தாளையும் அவர் கைகளில் தருகிறேன்,
பத்து குடும்பங்களுக்கு ஒருவேளை சாப்பாட்டுக்காவது போதுமானதாகட்டும்
என்ற பிரார்த்தனையோடு….

 

இரவு எட்டுமணிக்கு கடைகளெல்லாம் அரைமூடியிருக்க
முப்பது ரூபாய் முழத்தை பத்து ரூபாய்க்குத் தருவதாய் களைத்த குரலில்
கூவுகிறார் பூக்காரம்மா.
அவருடைய பின்புறத்திலிருந்து மாயமாய் முளைத்த சிறுமி
ஒரு ராஜகுமாரியின் தோரணையுடன்
செருப்பு வாங்கித்தரச்சொல்லிக் கேட்கும்போது
நான் எப்படி மாட்டேன் என்று சொல்வது?
ஒரு பார்வையில் தனக்குவேண்டியதை எடுத்துக்கொண்டு
‘தாங்க்ஸ் அக்கா’ என்று சொல்லி சடுதியில் மறைந்துவிடுகிறாள் கம்பீரமாய்.
நாளை அவளது கால்களைப் பொசுக்கமுடியாமல்
நன்றாக ஏமாறும் கதிரோனைப் பார்த்து கண்சிமிட்டக்கூடும்.
அந்த ஏழைச்சிறுமி
இளவரசியாகட்டும் எதிர்கால சாம்ராஜ்யத்தில்;
ஏழையென்றெவருமில்லாமல்
புரந்துகாக்கட்டும் குடிகளை.


என் ஒரு வார செலவுக்கான பணத்தைத் தந்து
எனக்கான பாவமன்னிப்பைப் பெறமுடியுமா தெரியவில்லை.
இந்த ஊரடங்கு காலத்தில்
அலாவுதீனின் அற்புதவிளக்கு
எங்கேனும் மலிவுவிலைக்குக் கிடைத்தால்
எத்தனை நன்றாயிருக்கும்……



2. இருத்தலியல்

வருடக்கணக்காக அந்தக் காரை ஓட்டிக்கொண்டிருந்தான் அவன்.
மறுபடியும் மறுபடியும் அதை தலைமுதல் கால்வரை துடைத்து மெருகேற்றுவான்.
அதன் கண்ணாடிப் பளபளப்பில் தன் முகம்
அதி கம்பீரமாகத் தெரிவதாகத் தோன்றும் அவனுக்கு.
நகரின் வீதிகளில் வழுக்கிக்கொண்டுசெல்லும்போது
கார் தேராக மாறி அவனை அரியணையில் அமர்த்தும்.
அப்போதெல்லாம் மாதம் மும்மாரி பொழியும்
அவன் திருநாட்டில்
உணவு உடை உறையுள் இல்லாத யாருமே இருக்கமாட்டார்கள்.
அப்படியே போர்வீரர்களும் போருக்கான தேவையும்.
இனிவரக்கூடிய எதிரிகளை வீழ்த்தும் வியூகங்கள் கார்ச்சக்கரங்களில்
பொறிக்கப்பட்டிருக்கக்கூடும் என்று ஒரு நாள் அவன் கனவில் சித்தர் சுவடி
வாசித்தார்.
தூங்குவதற்கு முன் அவன் பார்த்த தொலைக்காட்சி மெகாத்தொடரில்
ஒரு பெண்சித்தர் பாத்திரம் இடம்பெற்றிருந்தது காரணமா, தெரியவில்லை..
முதலாளி ஷாப்பிங் மாலுக்குள் சுற்றிக்கொண்டிருக்க
காரின் பின்னிருக்கையில் அரைவிழிப்போடு குட்டித்தூக்கம் போடுபவன்
இல்லாள் மடியில் கிடப்பதாக நெகிழ்ந்துபோவான்.
காரின் கதவுகளை யாரேனும் அதிரத் திறந்தாலோ அறைந்து மூடினாலோ
யாருமறியாமல் அவர்களுக்கு அவன் அளிக்கும் சாபங்கள்
அவர்களைச் சுற்றிச் சூழ்ந்து என்னென்ன இன்னல்களை ஏற்படுத்தினவோ – யாருக்குத் தெரியும்.
தெரியும் அவனுக்கு காரின் பெட்ரோல் பசி.
ஒருபோதும் காரைப் பட்டினி கிடக்க விடமாட்டான்.
காரின் கலங்கிய கண்களை, கடும்பசியால் வாடிய வதனத்தைக் காணப்பொறாத அவன்
முதலாளி தர மறந்துவிடும் சமயங்களில் தன் கைக்காசை போட்டு அல்லது
கடன் வாங்கியாவது காரில் பெட்ரோல் நிரப்பிடுவான். பிறகே பணம்
வாங்கிக்கொள்வான்.
காரின் மீது சூரியக்கதிரொளி படரும் நேரத்தையும், சூரியக்கதிரின்
நீளத்தையும், அடர்த்தியையும் பார்த்தாலே சரியான நேரம் தெரிந்துவிடும்
அவனுக்கு.
அதன் வெளியுறுப்புகளும் மறைவுறுப்புகளும் அவனுக்கு அத்துப்படி.
ஒரு கட்டத்தில் அதைத் தனதாகவே பாவிக்கத் தொடங்கினான்.
முதலாளிக்கு பதவி உயர்வோடு மும்பைக்கு மாற்றலாக,
மூன்றுமாதச் சம்பளத்தொகையோடு வீடுதிரும்பிய வனின் கனவில்
‘என்னை ஏன் உன்னோடு கூட்டிச்செல்லவில்லை?’ என்று திரும்பத்திரும்பக் கேட்டபடி
அவன் காலடியில் கேவிக்கொண்டிருந்தது கார்.

3. நடுநிலையாளர்கள்

வேண்டிய செய்திச்சேனல்களுக்கு ஒரு பொத்தானை சிறகுத்தட்டு தட்டி
வெகுஎளிதாகப் போய்ச்சேர்ந்துவிடுகிறோம்..
அங்கே நமக்குவேண்டிய செய்திகளையே திரும்பத்திரும்பக் கேட்டு
விகசித்துப்போகிறோம்
துக்கித்துப்போகிறோம்
ஆத்திரமடைகிறோம்
அக்கிரமம் அநியாயம் அட்டூழியம் என்று
புருவங்களை நெரித்து உதடுகளைக் கடித்து
உறுமுகிறோம்;
நமக்கு ‘வேண்டப்பட்ட’ சேனலில் நமக்குப் பிடிக்காத அரசு தூற்றப்படுவதைப்
போற்றிப்பாடுகிறோம்.
நமக்கு வேண்டாத அரசைப் பாராட்டும் சேனல் பாரபட்சமானதென்று
பட்டம் கட்டிவிடுகிறோம்.
கட்டங்களிலான காய்கள் ஒன்றையொன்று வெட்டக் குறிபார்ப்பதுதானே
இயல்பு என்று
தத்துவம் பேசுகிறோம் சமயங்களில்.
தாயம் விழுந்தால்தானே வெட்ட என்று
அங்கலாய்த்துத் தீரவில்லை நமக்கு.
வெட்ட வெட்டத் துளிர்க்கும் தருக்களாய்
சில சேனல்கள் உண்மையை மட்டும் உரைத்துக்கொண்டிருப்பதை
சகித்துக்கொள்ள முடியாமல்
சிலர் அவசர அவசரமாய் அதை மாற்றுவதை ஆட்சேபிப்பதாய்
அவ்வப்போது சில ரிமோட்கள் அறவே பழுதாகிவிடுகின்றன!


4. பத்தரைமாற்று முத்திரைக்கவி

அடிக்கடி காணக்கிடைக்கின்றன அவருடைய புகைப்படங்கள்
அங்கிங்கெனாதபடி.
அனைத்திலும் யாரோவொரு பிரமுகருடன் தனக்கிருக்கும்
பரிச்சயத்தை நெருக்கத்தைப் பறைசாற்றுவதாய்
புன்னகைத்தவாறு.
நேற்றைய இன்றைய நாளைய அரசியல்வாதிகள்,
நடிகர்கள்;
நியூஜிலாந்து அயர்லாந்து மெக்ஸிகோ மாலத்தீவு என
ஒன்று பாக்கியில்லாமல்
அயல்நாடுகளைச் சேர்ந்த படைப்பாளிகள்….
வழுவழு பக்கங்களாலேயே உயர்தரமானதாக்கப்பட்ட
அறுவை இலக்கிய ஆங்கில இதழ்;
முடிவற்று வெறுப்புமிழ்வதே புரட்சியென
உருவேற்றிக்கொண்டிருக்கும்
மாதமொருமுறை இதழ் _
எல்லாவற்றிலும் அவர்
சிலவற்றில் கோபமாய்
சிலவற்றில் சோகமாய்
சிலவற்றில் சாந்தமாய்
சிலவற்றில் ஆவேசமாய்
சிலவற்றில்
தலையை சிலுப்பிக்கொண்டு
சிலவற்றில்
(அட்டை)மலையை உலுக்கிக்கொண்டு
பத்தரைமாற்று முத்திரைக்கவியின் படங்கள்
எத்தனையெத்தனையோ……
எதிலுமேயில்லை
சத்தமில்லாமல் மொத்தமாய்
அவரைப் பிரிந்துவிட்ட கவிதை.


5. இறக்கைகளை இனங்காணல்

தெரியும், பட்டாம்பூச்சி என்பது உங்களுக்கு ஒரு பொதுப்பெயர்.
எனக்கு அது தனிப்பெயர்.
என் வண்ணங்களை நீங்கள் பொதுவாக்கினாலும்
எனக்கு அவை தனியானவைதான்.
என் ஊதாநிறம் எப்படி இன்னொரு பட்டாம்பூச்சியின் ஊதாநிறமாகும்.
ஒத்திருத்தலும் ஒன்றாதலும் ஒன்றா?
நான் பட்டாம்பூச்சி. பட்டாம்பூச்சிகள் அல்ல.
பட்டாம்பூச்சிகள் என்று அடையாளமழிப்பதில் உள்ள
வஞ்சப்புகழ்ச்சியை நான் அறிவேன்.
‘லதா’ என்பதற்கும் ‘லதாக்கள்’ என்பதற்கும் உள்ள வித்தியாசத்தை
நீங்கள் அறியாதவரல்ல.
என் வாசகசாலையும் சர்வகலாசாலையும் உங்களுக்குத் தெரியாதென்பதால்
அவை இல்லையென்றாகிவிடாது.
ஒரு விரிபரப்பைக் கடக்கும் கால்கள் உண்மையில்
அந்த விரிபரப்பின் ஒரு பகுதியையே கடக்கின்றன பெரும்பாலும்.
ஆலும் வேலும் பல்லுக்குறுதி என்று சம்பந்தமில்லாமல் ஒரு
பழமொழியை உதிர்ப்பதற்கு முன்பு பட்டாம்பூச்சிக்குப் பல்லிருக்கிறதா
என்று தெரிந்துகொள்வது நலம்.
பட்டாம் பூச்சியாகிய எனக்கு வண்ணத்துப்பூச்சி என்ற பெயரும் இருக்கிறது
என்று எனக்குத் தெரியும்.
ஆனால் ’வண்ணாத்தி’ என்று ஒரு கவி அன்பொழுகப் பாடியபோது
துணிவெளுப்பவளை என்றல்லவா தவறாக எண்ணிவிட்டேன்.
’சலவைத்தொழிலில் எதுவும் இழிவில்லை
என் மொழியறிவுப்போதாமையைத்தான் பழிக்கிறேன்’
என்று சுயவிமர்சனம் செய்யும் பட்டுப்பூச்சியாகிய என்
இறக்கைகள் சன்னமாக இருந்தால்தான் என்ன?
எனக்குப் பறக்கமுடிகிறதே – அதைவிட வேறென்னவேண்டும்?
அவரவர் பட்டாம்பூச்சிகளுக்கு அவரவரிடம் செல்லப்பெயர்களும் உண்டு.
நானாகிய என் பட்டாம்பூச்சியின் செல்லப்பெயர்(கள்)
அநாமிகா ரிஷி.
சொல்லும்போதே சரேலென விரியும் என் சிறகுகள்
அதோ உயரே!

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள் இணைய இதழின்  முக்கிய நோக்கம் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை  பலவேறு நாடுகளிலும் வாழும் தமிழர்களுடன் பகிர்ந்துகொள்வதாகும். படைப்புகளை அனுப்பும் எழுத்தாளர்கள் புகைப்படங்களை அல்லது ஓவியங்களை அனுப்பும்போது அவற்றுக்கான காப்புரிமைக்கு உரிமை உள்ளவர்களாக இருந்தால் மட்டுமே அவற்றை அனுப்பவும். தமிழ் மொழியை இணையத்தில் பரப்புவதும் இவ்விணைய இதழின் முக்கிய நோக்கமாகும். படைப்புகளை ngiri2704@rogers.com , editor@pathivukal.com ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.

Pathivugal Online Magazine''s  main aim is to share the creative works of Tamil writers with Tamils living in various countries. When writers submit their works—such as photographs or paintings—please send them only if you hold the copyright for those items. Spreading the Tamil language on the Internet is also a key objective of this online magazine. Please send your submissions to ngiri2704@rogers.com and editor@pathivukal.com.

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும்.  நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 
பதிவுகள் விளம்பரம்