அறிஞர் அண்ணாவின் இரண்டாவது எழுத்தாளர் மாநாட்டு உரை
செப்டம்பர் 15 அறிஞர் அண்ணா பிறந்த தினம்!

- அறிஞர் அண்ணாவின் இரண்டாவது எழுத்தாளர் மாநாட்டு உரை! கவிஞர் கண்ணதாசன் 'தாய்வீடு' இதழில் எழுதிய கட்டுரையில் பகிர்ந்துகொண்டது. இரண்டாவது எழுத்தாளர் மாநாட்டு உரை புதுக்கோட்டையில் நடைபெற்றபோது (14,15 – 12 – 1946)) அறிஞர் அண்ணா ஆற்றிய உரையினைக் கவிஞர் கண்ணதாசன் புதுக்கோட்டை க .நாராயணனின் “தாய்நாடு” இதழில் எழுதிய கட்டுரையில் பதிவு செய்திருக்கின்றார். இக்கட்டுரையினைக் கண்ணதாசன் வலைப்பதிவில் (http://kannadasan.wordpress.com) வாசித்தேன். உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். இவ்விதமான அறிஞர் அண்ணாவின் உரைகள் ஒரு காலத்தில் தமிழ் இளைஞர்களைப் பித்தம் கொள்ள வைத்திருந்தன. அவரது உரையினைக் கேட்பதற்கு இலட்சக்கணக்கில் மக்கள் கூட்டங்களில் திரண்டனர். அண்ணாவின் எழுத்துகள் - கடிதங்கள், கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள் & நாடகங்கள் அனைத்தையும் வாசிக்க \ அண்ணாவின் சொற்பொழிவுகள் -
அறிஞர் அண்ணாவின் உரை:
அருமைத் தோழர்களே! தலைவர் அமைச்சரைக் கூப்பிட்டுவிட்டு அமர்ந்தார். அமைச்சர் அண்டவனை அழைத்துவிட்டு அமர்ந்துவிட்டார். (கரகோஷம்) புது உலகம் அமைக்கவிருக்கும் வீரர்கள் ஆண்டவன் அருளை வேண்டி நிற்கச் சொல்கிறார்அமைச்சர். ஆண்டவன் அருள் எப்பொழுதும் இருக்கும் அமைச்சர் சொல்லிவர வேண்டியதில்லை. மேலும் நாமக்கல் கவிஞர் போன்ற பக்தர்கள் இருக்கும் இடத்தில் ஆண்டவன் அருளுக்குக் குறைவா என்ன? (கரகோஷம்) அமைச்சர், விரும்பும் ஆண்டவன் அருள் கிடைக்காவிட்டாலும் அமைச்சர் போன்ற ஆள்பவர் அருள் இருந்தால் எதைத்தான் சாதிக்கமுடியாது?
அணுகுண்டும் ஆளில்லா விமானமும் அங்கே, அன்னிய நாட்டிலே பிறக்கும் போது, கம்பராமாயணமும், கந்தபுராணமும் இங்கே ஏட்டிலே சிறக்கிறது. அங்கே நாடுகள் வளர்க்கின்றன நாகரிகத்தை, இங்கே ஏடுகள் வளர்க்கின்றன மூடத்தனத்தை (கரகோஷம்) ஆக்கவும் அளிக்கவும் சக்தி படைத்தவர்கள் எழுத்தாளர்கள். நாட்டுப் புறத்து இருக்கும் ஏழை மக்களுக்கு ராமாயணமும், மகாபாரதமும் சொல்லித் தெரியவேண்டிய விஷயங்களல்ல. இவை இரண்டும் வேண்டுமா? வேண்டாமா? என்பது பிரச்னையல்ல. சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டாம் என்றுதான் சொல்கிறேன்.

ஈழத்து இலக்கியத்தோப்பில் வைரம்பாய்ந்த தனி விருட்சமாக, ஆழ வேரோடி, பரந்தகன்ற கிளை விரித்து, குளிர்நிழல் பரப்பிநிற்கும் தனித்த ஆளுமைதான் கே.எஸ். சிவகுமாரன். இந்த பெரும் இலக்கிய வியக்திக்கு இணைசொல்ல இங்கே யாருமில்லை. நூறு கவிஞர்களைக் காட்ட முடியும்; நூறு நாவலாசிரியர்களைக் காட்ட முடியும்; நூறு கட்டுரையாளர்களைக் காட்ட முடியும். கே.எஸ். சிவகுமாரனுக்கு நிகரான பல்துறைசார்ந்த ஓர் எழுத்தாளனை ஈழத்து இலக்கியப்பரப்பின் கடந்த அறுபது ஆண்டுகால எல்லையில் காண்பதற்கில்லை. இந்த அறுபதாண்டுகாலத்தில் தொடர்ந்த வாசிப்பே அவரது சுவாசமாக இருந்திருக்கிறது. அந்த வாசிப்பின் வியாபகம் அசலானது. அயராத எழுத்துப்பணியே அவரின் மூச்சாக இருந்திருக்கிறது. இவரின் எழுத்துக்கள் 5,000 பக்கங்களில், முப்பத்தேழு நூல்களாக மலர்ந்திருக்கின்றன. ஆங்கிலத்திலும் தமிழிலுமாக இன்னும் நூல் வடிவம் பெறாத இவரின் எழுத்துக்கள், இன்னும் ஓர் ஆயிரம் பக்கங்களை மிக எளிதாகத் தாண்டிவிடும். இந்தளவு பல்துறை சார்ந்து, ஆங்கிலத்திலும் தமிழிலுமாக எழுத்தை ஓர் இயக்கமாக எண்ணிச் செயற்பட்ட வேறு ஒருவரை என்னால் சொல்ல முடியவில்லை.
அகவுலகில் ஜனித்த கவிதையை புறஉலகில் எழுத்து வடிவம் பெற்ற ஒரு கவிதையாக உருவாக்க வேண்டும் என்றால் அதற்கு மொழியின் மீது இயங்கும் செய்நேர்த்தி கவிஞனுக்குக் கைவரவேண்டும்.” என்பார் இந்திரன்.

எனது நீண்ட கால நண்பரும் புகழ்பெற்ற இலக்கியத் திறனாய்வாளருமான கே.எஸ்.சிவகுமாரன் அவர்கள் சுகவீனமுற்று கொழும்பில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி எனது செவிக்கு எட்டியதும், அவரது கைத்தொலைபேசிக்கு அழைப்பெடுத்து அவரது சுகம் விசாரித்தேன். மறுமுனையிலிருந்து எனது குரலை அடையாளம் கண்டுகொண்ட அவர், என்னை “ சேர் “ என விளித்து, “தொடர்ந்தும் பேசமுடியவில்லை” என்றார்.
I first met Sivakumaran in the field of literature when he did expertly review my English book, 'The Pearly Island &. Other Poems' in Colombo, in 1974. At that time he was working in regular contact with Drs. K. Kailasapathy and K. Sivathamby and Daily News Editor Mervyn de Silva (who himself wrote a review of that book in his columns later). 
5
சென்ற அரசு அகன்ற பின், பொறுப்புகளை ஏற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசை “புதிய போத்தலில் பழைய கள்ளு” என்று எதிர்பாளர்களால் வர்ணணைக்கு உட்படுத்தப்பட்டாலும், “நகர்வுகளில்” அவர் இன்னமும் புதிய கள்ளாகவே தென்படுவதை விமர்சகர்கள் சுட்டிகாட்டாமல் இல்லை. இது காலம் வரை, இலங்கையின் நெருக்கடிக்கு, உண்மையான காரணம், இலங்கை தனது கடன் முறிகளை திறந்த சந்தையில் விற்றமையே என்பது குறித்து, அவர் இதுவரை வாய்திறவாமல் இருப்பதே அவரது சாமர்த்தியத்தை காட்டுவதாய் இருக்கிறது எனலாம். 51-57 கோடி பில்லியன் டாலரை வெளிநாட்டு கடனாய் (வெளிநாட்டு மொத்த கடன்களில் 47%) இருக்க தலையாய காரணமாய் அமைவது இக்கடன் முறிகளை விற்றதுவே - இதுவே, இலங்கையின் தற்போதைய நெருக்கடிகளுக்கு மூலகாரணம் என்பது குறித்து இதுவரை அவர் ஒரு வார்த்தையும் கூறினார் இல்லை. இருந்தும், “சீன கடன்பொறி”, அல்லது “இந்திய கடன்பொறி” என்ற கதை மேலெழும்பும் போதெல்லாம் மௌனம் காப்பது, அல்லது அவற்றை கண்டும் காணாதது போல் இருப்பது இவரது உயரிய பண்புகளில் ஒன்றாகின்றது. பிராந்திய-உலக வல்லரசுகளை மோதவிட்டு, அதில் வர கூடிய லாப-நட்டங்களை வளைத்து போட்டுக்கொள்ளும் ஓர் அணுகுமுறையானது ஏற்கனவே இலங்கைக்கு அறிமுகமான, புளிப்புத்தட்டிப்போன ஓர் நடைமுறைதான். எனினும், ரணில் விக்கிரமசிங்க அவர்களின் அமெரிக்க சார்பும், பெருந்தேசிய உணர்வும் இந்நடைமுறைக்கு புது மெருகு சேர்ப்பவையே என்று கூறினால் அது மிகையாகாது.
முன்னுரை

முண்டாசுக் கவிஞனேநீ மூச்சுவிட்டால் கவிதைவரும்


தீவாந்தரம் நாவலின் வடிவத்தைக் கூர்ந்து பார்க்கிறபோது என் நாவல் 1098 ஞாபகத்திற்கு வந்தது. ஒரு சிறுமி சார்ந்த கைதும் நடவடிக்கையும் பின்னால் அது சார்ந்த நீதிமன்ற விசாரணைகளும் பிறகு முடிவான தீர்ப்புகளும் அந்தச் சிறுமியின் வாழ்வு போக்குகளும் கொண்டதாக அந்த நாவலின் வடிவம் இருக்கும். அதுபோன்ற ஒரு வடிவத்தைத் தீவாந்தரம் நாவலில் கண்டேன். இதில் வ உ சி அவர்களின் கைது நடவடிக்கை, அதன்பிறகு அவர் சார்ந்த விசாரணைகள், இறுதியாக அவர் மீது எடுக்கப்பட்ட இறுதி நடவடிக்கைகள், தீர்ப்பின் விளக்கங்கள் என்று நாவலின் போக்கு அமைந்து, என் நாவலின் வடிவ அம்சங்களைத் தீவாந்தரம் ஞாபகத்தில் கொண்டு வந்து நிறுத்தியது.
தப்பித்தலுடன் தொடர்பான ஒரு செயற்பாடே தற்கொலை எனலாம். தற்கொலை என்பது அந்த நேரத்திலான ஒரு முடிவாக இருப்பது மிகவும் அரிதாகும். பத்துப் பேரில் எட்டு பேர் தற்கொலை செய்துகொள்வதற்கான எண்ணம் இருக்கிறது என்பதைக் காட்டும் அறிகுறிகளைச் சிலருக்கோ அல்லது பலருக்கோ காட்டியிருப்பார்கள் என்கிறது ஆய்வு.மேலெழுந்தவாரியாகப் பார்த்தால்,தற்கொலை என்பது மனக்கிளர்ச்சியிலான ஒரு செயலாகத் தோன்றலாம், ஆனால் அது எழுந்தமானமானதொரு நிகழ்வல்ல, அது ஒரு செயல்முறை என்கின்றனர் ஆய்வாளர்கள். 
முள்ளும் மலரும் திரைப்படம் 1978 ஆம் ஆண்டு வெளிவந்தது. ஆயினும் 1980 மட்டில் தான் எனக்கு அந்தப் படத்தைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிட்டியது. தெல்லிப்பழை துர்க்கா தியேட்டருக்கு அப்பொழுதுதான் முள்ளும் மலரும் வந்திருக்க வேண்டும். அந்தக் காலத்தில் மனதை ஒரு உலுப்பு உலுப்பி உறங்கவிடாமல் செய்த திரைப்படம் இது. இல்லாவிட்டால் துர்க்கா சினிமாத் தியேட்டரின் அருகேயிருந்த நூல்நிலையத்திற்கு ஒரு பைத்தியக்காரன் போல அடிக்கடி சென்றிருப்பேனா? நூல்நிலையத்தையும் தியேட்டரையும் பிரித்து நிற்கும் வேலிக்குள்ளால் பாய்ந்து வரும் பாடல்களையும், திரைக்கதையை நினைவூட்டும் இசைவெள்ளத்தையும் காது குடுத்துக் கேட்பதில் ஒரு அலாதி இன்பம் பிறக்கும். அடிக்கடி வேலிக்கருகே நின்றால் பைத்தியம் பிடித்துவிட்டதென ஆக்கள் நினைத்துவிடுவார்கள் என்பதற்காக இடையிடையே லைபிறறிக்குள் சென்று பேப்பரைப் புரட்டுவேன். ஆனால் மனம் திஜேட்டருக்குள் குதித்து நிற்கும். உறி அடிக்கும் காட்சி, விஞ் இயங்கும் காட்சி, உறக்கத்தில் இருக்கும் வள்ளிக்கு காளி மருதாணி இடும் காட்சி என இசைவெள்ளம் என்னை மீளவும் வெளியே கொண்டுவந்துவிடும். அது நடிகர்களின் தனித்தன்மை வாய்ந்த குரல், அவர்களின் தோற்றத்தை என் மனக்கண் முன் கொண்டுவந்துவிடும்.


கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல குறைவான அடிகளைக் கொண்டு விளங்கினாலும் முல்லைப் பாட்டில் இல்லாத செய்திகளே இல்லை எனலாம். சங்க காலத்தில் வணிகத் தொழிலில் ஈடுபட்டிருந்தவர்களும் புலமையில் சிறந்து விளங்கினார்கள் என்பதை முல்லைப்பாட்டின் வழி காணலாம். “முல்லை சான்ற கற்பு” என்று கற்புடன் தொடர்புபடுத்திப் பேசப்படும் இத்திணையின் உரிப்பொருள் ‘இருத்தல்’ ஆகும். போர்க் காரணமாகவோ பொருள் தேடும் பொருட்டோ பிரிந்து சென்ற தலைவன் கார்காலத் தொடக்கத்திற்குள் வந்து விடுவதாகக் கூறி பிரிவான். அத்தலைவன் வரும் வரை ஆற்றியிருத்தல் தலைவியின் கடமையாகும். இதுவே முல்லைத் திணையின் சிறப்பாகப் போற்றப்படுகிறது.
