நிட்டின் கோக்லே, கவிஞர் ஜெயபாலன் பேட்டி, கலாநிதி அகிலன் கதிர்காமரின் கூற்று, மற்றும் இலங்கையின் பொருளாதார நெருக்கடி பற்றி... (13 -17) - ஜோதிகுமார் -

13
பேட்டியின் போது திரு.ரணில் விக்கிரமசிங்க அவர்கள் திருகோணமலை துறைமுக புனரமைப்பு திட்டத்தை முதன்முதலில், தானே 2003இல், பிரதமர் வாஜ்பாயுடன் கதைத்ததாகவும் பின்னர் சம்ப10ர் அனல்மின்திட்டம் குறித்தும் தாங்களே, முதன்முதலில் பிரேரித்ததாகவும், ஆனால் இந்தியா, எப்போதும் ஒப்பந்தத்துக்குள்ளாகவே(1987) விடயங்களை பார்க்க முற்படுகின்றது என்றும், தாங்களோ அதற்கும் வெளியே, வழிகளை தேடுவதாகவும் குறிப்பிட்டது ஏனையவற்றை போன்றே முக்கியத்துவம் வாய்ந்ததுதான்.
அதாவது, இக்கட்டுரையின் முற்பகுதியில் (12ம் பகுதி) குறிப்பிட்டவாறே, ‘விடயங்களை’ –முக்கியமாக ‘வட-கிழக்கு நலன்களை’ - இந்தியா முன் கவிழ்த்து விட்டு அல்லது இந்தியா முன் நகர்த்தி வைத்து விட்டு, வட-கிழக்கு மக்களும், இந்தியாவும் ஒருவரோடு ஒருவர் அடிபடுதலை ஊக்குவிக்கும் ஓர் அணுகுமுறை, இந்திய ஆய்வாளர்கள் குறிப்பிடுவது போல், உண்மையில், நடைமுறையில், காணக்கிட்டுகின்றதா என்பது ஓர்கேள்வியாகின்றது. இருந்தும், திரு.யதீந்திரா அவர்கள் மிக அண்மையில் கூறியுள்ளது, மேற்படி அணுகுமுறைகளை கருத்தில் கொண்டதால் எழுந்த ஒன்றா என்பதும் சரியாக தெரியவில்லை:
“இந்தியாவை விடுதலை புலிகள் அணுகிய முறைமை தவறென்பதையே வரலாறு நிரூபித்துவிட்டது. இந்தியாவை தவிர்த்து, புறந்தள்ளி, தங்களின் இலக்கை அடைய முடியுமென்றே பிரபாகரன் நம்பினார். ஒன்றை நம்புவது தவறல்ல. ஆனால் அது தோல்வியுற்ற பின்னர் அந்த நம்பிக்கையை நியாயப்படுத்த முற்படுவதும், அதனை சரியென்று நம்பி செயற்பட எத்தனிப்பதும்தான் தவறானது” (தினக்குரல்:02.10.2022).
இத்தகைய ஓர் பின்னணியிலேயே மேற்படி நிட்டின் கோக்லேயின் பேட்டியின்போது திரு.ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ‘இந்தோ-பசுபிக்’ கடற்பிரதேசம் குறித்து அதிக அக்கறை காட்ட முற்பட்டதும் என்றுமில்லாத முக்கியத்துவத்தை எட்டி பிடிக்கின்றது எனலாம்.

எழுத்தாளர் பொன் குலேந்திரன் அவர்களின் மறைவுச் செய்தியினை முகநூல் வாயிலாக அறிந்தேன். துயருற்றேன். உண்மையில் இவரை நான் நேரில் சந்தித்ததில்லை, ஆனால் தொலைபேசி வாயிலாகவும், மின்னஞ்சல் மூலமும் அண்மைக்காலம் வரையிலும் என்னுடன் தொடர்பிலிருந்தார். கடைசியாக இவரது குவியம் அமைப்பும் (குவியம் என்னும் பெயரில் மின்னிதழ் நடத்தி வந்தவர்) தமிழகத்திலுள்ள கொலுசு அமைப்பும் நடத்திய " 2022 ஆம் ஆண்டிற்கான குவியம் - கொலுசு சிறுகதைப்போட்டி'க்காக என்னுடன் தொடர்பு கொண்டிருந்தார். அதற்காக என் சிறு பங்களிப்பையும் அவருக்கு அனுப்பியிருந்தேன். 
வணக்கம், இவ்வாரம் வெள்ளிக்கிழமை (14/10/2022) லண்டன் நேரம் இரவு 8.15 இற்கு (இரவு பிரதான 8.00 மணிச் செய்திக்குப் பிறகு) அனைத்துலக உயிரோடைத்தமிழ் மக்கள்வானொலியில்(www.ilctamilradio.com) இலக்கியப்பூக்கள் 264 ஒலிபரப்பாகும்.


சலீம்மைத் தேடி சிற்ரரஞ்சன்,பாபு,இன்னும் இருவர் வந்திருந்தார்கள்."தோழர் இவர்கள் மாட்டுப் பிரச்சனையைக் கொண்டு வாரார்கள் . " எங்களை வந்து தீர்க்கட்டாம் " என்ற ரஞ்சஜனைப் பார்த்து "பிரச்சனையைக் கூறு" என்றவன், யோசித்து விட்டு."கேட்டடியிலே நின்று கதைக்க வேண்டாம், உள்ளே வாருங்கள் " கூட்டிச் சென்றான். வாடகையில் 'ராஜ' களையுடன் இருக்கிற அந்த பெரிய பழைய வீடு வந்தாரை வாழ வைக்கும் . வெளியிலுள்ள பூச்சுக்கள் கழன்று பெரிதாக விழுந்திருக்கவில்லை . உள்ளுக்க தான் அங்காங்கே விழுந்து கொஞ்சம் அலங்கோலமாக இருக்கிறது . அந்த காலத்தில், முருகைக்கற்களை வைத்து சுண்ணாம்புக் காறையால் கட்டிய தடித்த சுவர்களை உடையது . செல்லடிக்கெல்லாம் லேசிலே விழுந்து விடாது பயப்படாமல் நிற்க வல்லது . வக்கீலுக்குச் சொந்தமாக பழைய சங்கக் கடை இருந்த இதே போன்ற வீட்டை திருத்தி புது வீடாக்கி இருக்கிறார் . " பாரம் குறைந்த (முருகைக்) கல் வீடு ,உறுதிப் படைத்தது ! " .அவருக்கு தெரிந்திருக்கிறது . எங்களைப் போல வெங்காயம் என்றால் அதை தகர்த்து விட்டு புதியதாய்க் கட்டியிருப்போம் . இந்தியனாமி ,பாலத்தடியிலே இருந்த கிறிஸ்தவ சுடலையிருந்து அடித்த செல்லிலே பாதுகாப்பற்றதாக 'கொல கொல'த்திருக்கும் . ஆனால் நாம் ஓடியது அந்த வீட்டுக்குத் தான் . நாம் ( அம்மா , தங்கச்சி , அவர்கள் எல்லோரும் ) சுவரை ஒட்டியே இருந்தோம் . அந்த வீடு இன்றும் இருக்கிறது . ஆனால் நாம் இருந்தது ...இப்ப இல்லை . உள்ளுக்க ஒரு அழுகை இருக்கிறது . 



அப்பாவை இழந்து ஒரு வருடமாகி விட்டது. அதன் தாக்கம் இன்னும் எங்களை விட்டுப் போகவில்லை. அன்று நடந்த விபத்திலிருந்து அம்மா மீண்டு வந்ததே அதிசயம். அவளின் உடல்நிலை முழுமையாக குணமாகவில்லை பெரும்பொழுது படுக்கையிலேயே கழிகிறது.




சில மாதங்களுக்கு முன்னர், நியூசிலாந்திலிருந்து ஊடக நண்பர் சத்தார், மெய்நிகரில் என்னை பேட்டி கண்டபோது, “கல்கியின் பொன்னியின் செல்வனை நான் இதுவரையில் படித்ததில்லை “ என்று சொன்னதும், அவர் ஆச்சரியமுற்றார். அதன்பிறகு, எனது மனைவி மாலதி, “ பொன்னியின் செல்வனை படிக்காத நீங்களும் எழுத்தாளரா..? “ எனக்கேட்டார். “ ஆம், பொன்னியின் செல்வனைப் படிக்காதமையால்தான் நான் எழுத்தாளனாக இருக்கின்றேன். அந்தத் தொடர்கதையை கல்கியில் படித்தவர்கள் பல ஆயிரம்பேர் இருக்கலாம். அவர்கள் எல்லோரும் எழுத்தாளர்களாகிவிட்டார்களா.. ? “ எனக்கேட்டேன். “ இது குதர்க்க வாதம் “ என்றார் மனைவி.



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









