மானுடப் பிரேமையின் பிறப்பிடம் பிரேம்ஜி! - க. நவம் -

‘பிம்பங்கள் வழியே’ எனும் அமைப்பின் ஏற்பாட்டிலான, ‘ஆளுமை பற்றிய ஓர் உரையாடல்’ என்ற தொடரில், இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கப் பொதுச்செயலாளர் அமரர் பிரேம்ஜி ஞானசுந்தரம் அவர்கள் பற்றிய இன்றைய இணையவழிக் கலந்துரையாடலில் கலந்துகொண்டிருக்கும் அனைவருக்கும் என் அன்பான வணக்கம்!
ஒரு தலைவன் தாம் சார்ந்த மக்களுக்கு நல்லதைச் சொல்பவனாக இருக்க வேண்டும்; சொன்ன நல்லதைச் செய்பவனாக இருக்கவும் வேண்டும். அவ்வாறு இல்லாதவன், ஒரு சிறந்த தலைவனாக இருக்கத் தகுதியற்றவன். நல்லனவற்றைச் சொன்னது மட்டுமன்றி, தாம் சொன்ன நல்லனவற்றை நடைமுறைப்படுத்தி, வாழ்ந்து காட்டிய ஒரு தலைமகனை நினைவு கூருவதற்கென்று நாங்கள் இங்கு ஒன்று கூடியிருக்கின்றோம்.
சராசரி மனிதர்கள் போலன்றி, மாறுபட்ட விதத்தில் சிந்திக்கவும் செயற்படவும் துணிச்சல் பெற்றவர்களால்தான், மனித முன்னேற்றம் சாத்தியமாகின்றது. அத்தகைய சிந்தனைத் தெளிவும், செயற் திறனும் கொண்டவராக வாழ்ந்துவந்த பிரேம்ஜி அவர்கள், சமூகம், இலக்கியம், அரசியல் ஆகிய முக்கிய தளங்களில் ஆற்றிய பணிகள் குறித்துக் கதைப்பதற்கு நிறைய விடயங்கள் உண்டு. ஆனால், இங்கு தரப்பட்ட நேரத்தை மனதிற்கொண்டு எனது கருத்துகளை “பிரேம்ஜியும் நானும்” என மிகச் சிக்கனமாகவும், “பிரேம்ஜியும் அவரது அரசியல் நிலைப்பாடும்” எனச் சற்றே விரிவாகவும் வகைப்படுத்தி உங்களோடு பகிர்ந்துகொள்ள நினைக்கின்றேன்.
பிரேம்ஜி என்றே பெரிதும் அறியப்பட்டு வந்தவரான ஞானசுந்தரம் அவர்களை நான் ஏற்கனவே அறிந்திருந்த போதிலும், 1975ஆம் ஆண்டு கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மண்டபத்தில் நடைபெற்ற தேசிய ஒருமைப்பாட்டு மாநாட்டின்போது தான் முதன் முதலாக நேரில் கண்டேன். நன்கு திட்டமிடப்பட்டு அன்றைய தினம் விளைவிக்கப்பட்ட தடையூறுகளைத் தாண்டிக்கடந்த மாநாட்டு ஏற்பாடுகள், துணிச்சலான செயற்பாடுகள், திடமும் தீட்ஷண்யமும் மிகுந்த உரையாடல்கள், இனத்துவ ஒருமைப்பாட்டை இலக்காகக்கொண்டு முன்யோசனையுடன் சமர்ப்பிக்கப்பட்ட 12 அம்சத் திட்டங்கள் போன்றன ஊடாக பிரேம்ஜி என்ற ஆளுமையின் பிரமாண்டத்தையும், அவர் ஒரு தனித்தன்மை வாய்ந்த தலைசிறந்த மனிதர் என்ற உண்மையையும் அன்று நான் நேரில் கண்டுகொண்டேன்.

இன்று , ஜூலை 27, மருத்துவர் இராஜசுந்தரம் வெலிக்கடைச் சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட நாள். இலங்கையின் வரலாற்றில், குறிப்பாக இலங்கைத் தமிழர் வரலாற்றில், இன்னும் குறிப்பாகக் கூறுவதானால் இலங்கைத் தமிழரின் ஆயுதப்போராட்ட வரலாற்றில் மருத்துவர் இராஜசுந்தரத்துக்கு முக்கியமான, நிலையானதோரிடமுண்டு. அவரது பங்களிப்பின் முக்கியத்துவம் பன்முகப்பட்டது. 'கட்டடக்கலைஞர்' எஸ்.ஏ.டேவிட்டின் கனவான 'காந்தியச் சமூகம்' என்னும் மானுட விடுதலைக்கான தீர்வுத் திட்டத்தினை வட,கிழக்கில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதில் முக்கியமான பங்களிப்பு அவருடையது. அப்பங்களிப்பு மூலம் அக்காலகட்டத்தில் இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மலையகத்தமிழர்களுக்குப் புனர்வாழ்வு அளிக்கும் திட்டத்தினை வெற்றிகரமாகச் செயற்படுத்து வதில் முழுமூச்சுடன் உழைத்தவர் அவர். இவ்விதமானதொரு சூழலில் இலங்கைத் தமிழர் விடுதலைப்போராட்டம் ஆயுதப்போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டது. அச்சூழலில் தவிர்க்கமுடியாதவாறு காந்தியம் அமைப்பும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டது. எல்லைப்புறங்களில் நடைபெற்ற குடியேற்றங்கள் மேலும் விரிவு படாமலிருக்கவும், எதிர்காலக் குடியேற்றங்களைத் தடை செய்யும் நோக்கிலும் காந்திய அமைப்பு வடகிழக்கின் எல்லைப்பிரதேசங்களில் அதிகமான குடியேற்றத்திட்டங்களை உருவாக்கியது. இச்சமயத்தில் காந்திய அமைப்பினுள் சந்ததியாரின் வருகை அவ்வமைப்பினைத் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் ஆரம்பகாலச் செயற்பாடுகளில் ஈடுபட வைத்துவிட்டது. பின்னர் காந்திய ஸ்தாபகர் 'டேவிட் ஐயா' , மருத்துவர் இராஜசுந்தரம் போன்றோர் கைது செய்யப்பட்டுச் சிறைகளில் அடைக்கப்பட்டார்கள். காந்தியச் செயற்பாடுகளில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டு பல்வேறு சித்திரவதைகளுக்குட்படுத்தப்பட்டனர். கனடாவில் வாழ்ந்து மறைந்த சண்முகலிங்கம் அவர்களும் அவர்களிலொருவர். அவரைச் சந்திக்கும் போதெல்லாம் அவரது அனுபவங்களைப் பதிவு செய்யும்படி கூறுவேன். அவரும் பதிலுக்குப் பதிவு செய்யப்போவதாகக் கூறுவார். இறுதியில் பதிவு செய்யாமலேயே மறைந்து விட்டார்.



ஈழத்து இலக்கியப் பரப்பில் சிறுகதை எழுத்தாளர்கள் அதிகம். கவிதையென எழுதிக் குவிப்போர் ஏராளம். நாவல் எழுதுவோர் மிகக் குறைவு எனலாம். அன்றும் இன்றும் இதே நிலை தான். அன்று கிராமத்தை அடிப்படையாக வைத்து நாவல் எழுதுவோர் மிகக் குறைவாக இருந்த காலகட்டத்தில், ஒருவர் கிராமத்தைக் களமாகக்கொண்டு நாவல் எழுதினார். குரும்பசிட்டி என்னும் கிராமத்தில் பிறந்து வளர்ந்த அவர், கிராம மக்களின் வாழ்க்கையை, அவர்தம் உணர்வுகளைப் பிரதிபலிப்பதாக நாவலை எழுதினார். 'நடமாடும் நூல்நிலையம்' எனப் போற்றப்பட்ட 'இரசிகமணி' கனக செந்திநாதன் எழுதிய 'விதியின் கை' என்ற இந்நாவல் 05 - 07 - 1953 திகதியிலிருந்து 'ஈழகேசரி'ப் பத்திரிகையில் தொடராக வெளிவந்தது. அக்காலத்தில் ஈழத்தில் பிரபல சிறுகதை எழுத்தாளர்களாக விளங்கிய இலங்கையர்கோன், சி. வைத்திலிங்கம், சம்பந்தன், சோ. சிவபாதசுந்தரம், அ. செ. மு., வரதர், சு. வே., அ. ந. கந்தசாமி ஆகியோரும் நாவல் எழுதவில்லை. (*
ஒரு கலவரம் நாட்டின் தலைவிதியையே மாற்றி அமைத்தது. அடுத்த இருபத்தாறு ஆண்டுகள் நாட்டைக் கொடிய போர்ச்சூழலுக்குள் தள்ளிவிட்டது. நாட்டின் அனைத்து மக்களும் அப்போரின் வெம்மைக்குள் வாடினார்கள். கூடிய அழிவினைத் தமிழர்கள் அடைந்தனர். அந்த இனக்கலவரம் மட்டும் நடைபெறாமலிருந்தால் என்று நான் சிந்திப்பதுண்டு. ஆனால் அந்த இனக்கலவரம் உருவாகக் காரணமாக இருந்த அரசு ஜே.ஆர். ஜெயவர்த்தனேயின் அரசு. 77இல் பதவிக்கு வந்தது தொடக்கம் 1983 வரையில் தமிழ் மக்கள் மேல் கொடிய அடக்குமுறைகளைப் பிரயோகித்தது. 77இல் பதவிக்கு வந்ததுமே நாட்டில் இனக்கலவரமொன்றை அவரது அரசு உருவாக்கியது. அதற்கு முக்கிய காரணங்கள் தமிழர்கள் தமிழீழத்துக்கு வாக்களித்ததும், எதிர்க்கட்சித்தலைவராகத் தமிழர் ஒருவர் வந்ததுமே. அக்காலகட்டத்தில் 'போர் என்றால் போர். சமாதானமென்றால் சமாதானம்' என்னும் அவரது உரை தொடங்கிய கலவரத்தை மேலும் பற்றியெரிய வைத்தது. அவரது ஆட்சிக்காலத்தில் பயங்கரவாத்தடைச்சட்டம் அமுலுக்கு வந்தது. படையினரின் மனித உரிமை மீறல்கள் அதிக அளவில் இடம் பெற்றன. 
- 2015 முதலே ஆங்கிலத்தில் புனைவுகள் எழுதிவரும் ஜெயந்தி சங்கர் 1995 முதல் இலக்கியவுலகில் தொடர்ந்து இயங்கி வருபவர். தற்போது ஆங்கிலத்தில் தனது முதல் நாவலை எழுதி முடித்து நூலாக்கத்திற்காகக் காத்திருக்கும் இவர் தனது ஆங்கிலச்சிறுகதைகளை தானே இந்நூலில் மொழியாக்கம் செய்துள்ளார். இவை Dangling Gandhi என்ற இவரது ஆங்கிலச் சிறுகதைத் தொகுப்பில் உள்ள ஒரு சிறுகதையின் தமிழ் வடிவம். Dangling Gandhi என்ற இவரது ஆங்கில நூல் இரண்டு முக்கிய அனைத்துலக விருதுகளையும் இந்தியாவில் சில விருதுகளையும் வென்றுள்ளது. இவரது ஆக்கங்கள் வேற்றுமொழியில், குறிப்பாக ஆங்கிலம், ரஷ்யம், இந்தி, ஃப்ரெஞ்சில் மொழிபெயர்ப்பு கண்டு வருகின்றன. தமிழ் நூல்களுக்கு ஆனந்தவிகடன் நம்பிக்கை விருது உள்ளிட்ட பல்வேறு பரிசுகளும் முக்கிய விருதுகளும் வாங்கியுள்ள இவரது ஒவ்வொரு நூலுமே ஏதோவொரு வகையில் முக்கியத்துவம் வாய்ந்தது. அண்மைக்காலமாக ஓவிய முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார். -
- குரு அரவிந்தன் வாசகர் வட்டம் நடத்திய சிறுகதை, நாவல் திறனாய்வுப் போட்டி – 2021 இல் 14 நாடுகளில் இருந்து வந்த நூற்றுக்கு மேற்பட்ட திறனாய்வுக் கட்டுரைகளில் இருந்து தெரிவாகி முதலாவது பரிசு பெற்ற திறனாய்வுக்கட்டுரை. -
- 18.7.21 'மெய்நிகர்' - திருப்பூர் கனவு இலக்கியப் பேரவை நிகழ்வுக்கான பதிவு -

அவுஸ்திரேலியாவில் தமிழ் – கலை – இலக்கிய ஊடகத்துறையில் பெண்களின் வகிபாகம் என்ற கட்டுரையை நான் எழுதத் தொடங்கியபோது, இங்கு எம்மத்தியில் வாழும் மூத்தவர் திருமதி ஞானம் இரத்தினம் அவர்களும் முதலில் நினைவுக்கு
ஓராயம் அமைப்பு இலங்கையின் வடகிழக்கில் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது. அவற்றிலொன்று விவசாயம் மற்றும் சூழல் சார்ந்த திட்டம். இத்திட்டத்தின் கீழ் பல்வேறு இடங்களில் மரங்களை நட்டு வருகின்றார்கள். அவை பற்றிய விபரங்களைச் சுருக்கமாக இங்கு பார்ப்போம். 1971-1977 காலப்பகுதியில் யாழ் இந்துக்கல்லூரியில், சமகால வகுப்புகளில் கல்வி கற்று வெளியேறி அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, ஐக்கிய அரபு இராச்சியம், இந்தியா, இலங்கை, தென்னாபிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் வசித்துவரும் மாணவர்களில் சிலர் இணைந்து உருவாக்கிய, சமூக அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கும், பதிவு செய்யப்பட்ட, இலாப நோக்கற்று இயங்கும் அமைப்பே ஓராயம் அமைப்பு. இவ்வமைப்பு புலத்து மக்களோடு இணைந்து செயற்படும் வகையில் கல்வி, விவசாயம், நீர்வளப்பாதுகாப்பு, சுகவாழ்வு, சூழற்பாதுகாப்பு, இளையோர் தொழிற்கல்வி ஆகிய துறைகளில் ஆறு உபகுழுக்களை அமைத்து இயங்கத்தொடங்கியுள்ளது. இதற்காக இவர்கள் இணையத்தளமொன்றினையும் உருவாக்கியுள்ளார்கள்.
குலேபகாவலி (1955) திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் இப்பாடலைப்பாடியுள்ளவர்கள் ஜிக்கி & ஏ.எம்.ராஜா. இப்பாடலை எழுதியவர் எழுத்தாளர் விந்தன். கூண்டுக்கிளிக்காக எழுதிய பாடலிது. இப்பாடலுக்கு இசையமைத்தவர் கே.வி.மகாதேவன். ஆனால் இப்பாடல் இடம் பெற்றதோ குலேபகாவலி திரைப்படத்தில். அதன் இசையமைப்பாளர் விஸ்வநாதன் & ராமமூர்த்தி இரட்டையர்கள். அதனால் இப்பாடலின் இசையையும் அவர்கள் பெயரில் போட்டுவிட்டார் தயாரிப்பாளரான ஆர்.ஆர்.பிக்ஸ்சர்ஸின் உரிமையாளரான டி.ஆர்.ராமண்ணா. அதுபோல் இப்பாடலை எழுதிய விந்தனின் பெயரும் மறைக்கப்பட்டு குலேபகாவலி பாடலுக்குப் பாடல்களை எழுதிய தஞ்சை ராமையாதாஸின் பெயரிலேயே இப்பாடலும் வெளியானது.
வடலி' பதிப்பக வெளியீடாக வெளியான எழுத்தாளர் தேவகாந்தனின் நாவல் 'கலிங்கு'. தற்போது 'பதிவுகள்' இணைய இதழில் தொடராக வெளியாகின்றது. இதற்காக தேவகாந்தனுக்கும், வடலி பதிப்பகத்துக்கும் நன்றி. உலகளாவியரீதியில் 'கலிங்கு' நாவலையெடுத்துச் செல்வதில் 'பதிவுகள்' மகிழ்ச்சியடைகின்றது. 'கலிங்கு' நாவலை வாங்க விரும்பினால் வடலியுடன் தொடர்பு கொள்ளுங்கள். வடலியின் இணையத்தள முகவரி:
இறுதி யுத்தம் தொடங்கிவிட்டிருந்தது தெரிந்தது. எங்கிருந்து தொடங்கியது? எங்கிருந்தோ. வடக்கே பளையிலிருந்து, கிழக்கே மணலாற்றிலிருந்து, தெற்கே மாங்குளத்திலும், மேற்கே மன்னாரிலிருந்தும்கூட தொடங்கலாமென்பது ஊகமாக இருந்தது. அந்தக் கணிப்பீடுகளை உதறிக்கொண்டு அந்த நான்கு முனைகளிலிருந்துமே யுத்தம் தொடங்கியிருக்கலாம். கணிப்பீடுகளைப் பொய்யாக்குவதுதானே யுத்தத்தின் ஒரு உத்தி? முள்ளியவளை ஒதியமலை தனிக்கல்லடி மக்களுக்கு நான்கு திசைகளிலிருந்துமே யுத்தம் தொடங்கியதாய்த்தான் தெரிந்தது. நான்கு புறங்களிலிருந்தும் திசைகள் அவ்வப்போது குலுங்கிக்கொண்டிருந்தன. மக்களைப் பொறுத்தவரை வீட்டையும், வீட்டிலுள்ள பொருட்களையும், வளர்ப்பு மிருகங்களையும்கூட விட்டுவிட்டு ஓடுங்கள் என்ற ஒரே செய்தியையே அது கொண்டிருக்கிறது. அது அவரவரின், அவரவர்களது குடும்பங்களின் உயிர் காப்பின் முன்நிபந்தனையாகும்.
ஆஸ்பத்திரியிலிருந்து “டிஸ்சார்ஜ்” ஆகி, வீட்டுக்குப் புறப்படும்போது, எனக்குப் பக்கத் துணையாக ஒருஜோடி ஊன்றுகோல் தரப்பட்டது.
யன்னல் காட்சிகள் ரசிப்பதற்கு மிகவும் அழகானவை என்பதை எங்க புதிய வீட்டு யன்னலை முதல் நாள் திறந்து பார்த்த போதுதான் எனக்குத் தெரிந்தது. வீட்டை விட்டு வெளியே செல்லாமல் இயற்கையை தினமும் ரசிக்க வேண்டும் என்றால், யன்னல்கள் காட்சிகள் அற்புதமானவை. வெளி உலகைப் பார்ப்பதற்கு எப்பொழுதும், முக்கியமாக எங்களைப் போன்ற பெண்களுக்கு உதவியாக இந்த யன்னல்கள்தான் இருந்திருக்கின்றன.

ஒரு ஐரோப்பிய தமிழ் வானொலியில் இருந்து கொரனா வைரஸ் தொற்றுத் தொடர்பாகவும் தடுப்பு முறைகள் தொடர்பாகவும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துரைக்குமாறு அழைப்பு வந்தது. ஐரோப்பா வாழ் தமிழர்களிடையே கொரனா வைரஸ் விழிப்புணர்வை உருவாக்குவது உயிர்களைக் காக்கும் என நம்பி நானும் கலந்து கொண்டு நிரூபிக்கப் பட்ட விஞ்ஞான மருத்துவத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டேன். சில வாரங்களின் பின்னர் தமிழகத்தில் சின்னக் கலைவாணர் நடிகர் விவேக் மாரடைப்பினால் காலமானார். தடுப்பூசியை முதல் நாள் போட்டுக் கொண்டதால் விவேக் காலமானார் என சமூக வலை ஊடகங்களில் "இணையவெளி டாக்டர்கள்" நோய் நிர்ணயம் செய்ய ஆரம்பித்தார்கள். இந்தச் சந்தர்ப்பத்தில் நானும் அதே ஐரோப்பிய வானொலியை செவி மடுத்த போது கோவிட் தடுப்பூசிகள் பற்றி விஞ்ஞான, மருத்துவத் தரவுகளுக்கு மாறான கற்பனைகளை ஒலி பரப்பிக் கொண்டிருந்தார்கள். இப்படியான ஒரு "சிறு பிள்ளை வேளாண்மை" நிகழ்ச்சியில் என் பெயரை இணைத்துக் கொண்டமைக்காக என்னை நானே நொந்து கொண்டு இதற்கு என்ன பரிகாரம் செய்யலாம் என யோசித்த படி இதை எழுதுகிறேன்.
உலகிலே பிறக்கின்ற மனிதரெலாம் உயர்வு நிலையினை அடைந்து விடுவதுமில்லை. இலட்சியம் பற்றிச் சிந்திக்கும் நிலை பலரிடம் காணப்படுவதும் இல்லை. பிறந்தோம் வாழுகிறோம் என்னும் பாங்கில் இருப்பவர்கள்தான் பல பேர்களாக இருக்கிறார்கள். வாழும் காலத்தில் ஏற்படும் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள இயலாமல் பிரச்சினைகள் வழியில் சென்று அதனுடன் ஒத்துப்போய் இருப்பவர்களும் இருக்கிறார்கள். அதேவேளை நமக்கு ஏன் இந்தப் போராட்டம். வருகின்ற பிரச்சினைகளை புறந்தள்ளி விட்டு விட்டு தானாக ஒதுங்கி நமக்கேன் இந்தச் சிக்கல் ? ஒதுங்குவதுதான் மேலென எண்ணி இருப்பவர்களும் இருக்கிறார்கள். என்னதான் பிரச்சினைகள் வந்தாலும் அவற்றை எதிர்கொண்டு அவற்றுக்குத் தீர்வு கண்டு அந்தப் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வினைக் காணும் முயற்சியில் ஈடுபட்டு முற்போக்காளர்களாக சமூகச் சிந்தனையாளர்களாக இருப்பவர்களும் இருக்கிறார்கள்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









