இந்த ஆண்டு ஜனவரி மாதம் புதுப்புனல் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ள நூல் ஒருமையைத் தேடி. திரு. மூஸா ராஜா அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய நூல் IN SEARCH OF ONENESS. இதன் தமிழ் மொழிபெயர்ப்பே இந்நூல் . மத நல்லிணக்கம், மனிதநேயம் மானுட மேம்பாட்டிற்கு மிக முக்கியம். இதை திரு.மூஸா ராஜாவின் இந்த நூல் அழுத்தமாக எடுத்துரைக்கிறது. அனுபவ ரீதியாக அவர் கண்டவற்றின் அடிப்படையில், அவருடைய ஆழ்ந்த வாசிப்பை ஆதாரமாகக் கொண்டு சக மனிதர்கள் பால் மிகுந்த அன்பும் அக்கறையுமாக எழுதப்பட்ட நூல் இது. இந்த நூலை வாங்க விரும்புவோர் தொடர்புகொள்ள: புதுப்புனல் பதிப்பகம்

தமிழிலிருந்து ஆங்கிலத்திற்குப் பல நூல்களை, நவீன தமிழ்க்கவிதைகள் பலவற்றை மொழிபெயர்த்துள்ள டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியனின் நெருங்கிய நண்பரான திரு. மூஸா ராஜா மிர்ஸா காலிபின் கவிதைகளை பாரசீக மொழியிலிருந்தும் உருது மொழியிலிருந்தும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். அந்த ஆங்கில நூலை தன் நண்பர் மொழிபெயர்க்கவேண்டுமென்று விரும்பினார் திரு.மூஸா ராஜா. திரு.கே.எஸ்.சுப்பிரமணியனின் வேலைப்பளு காரணமாக அந்த மொழிபெயர்ப்புப் பணியை என்னிடம் தந்தார் அவர். என் மொழிபெயர்ப்புகளை மேற்பார்வையிட்டார். சில திருத்தங்களைப் பரிந்துரை செய்தார்.

அதேபோல், IN SEARCH OF ONENESS என்ற தலைப்பில் குரானையும் பகவத் கீதையை யும் அவற்றிலுள்ள ஒற்றுமைகளையும் அகல்விரிவாக அலசியாராய்ந்து அவற்றைத் தனது வாழ்வனுபவங்களின் பின்னணியில் எடுத்துரைத்துள்ள இந்த நூலையும் தனது நண்பர் டாக்டர் கே.எஸ். மொழிபெயர்க்கவேண்டுமென்று விரும்பிக் கேட்டுக்கொண்ட போது டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியனின் கண்பார்வை சற்று பிரச்சனை கொடுத்துக் கொண்டிருந்ததால் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பெண் மொழிபெயர்ப்புப்பணியில் இறங்கியிருந்த என் தோழி தேவிகாவிடம் இந்த நூலை மொழிபெயர்க்கும் பணியைத் தந்தார். தேவிகா, பெயர்பெற்ற தெலுங்கு எழுத்தாளரான டாக்டர் வி.வி.பி ராமராவின் சிறுகதைத் தொகுப்பையும் வேறு சில சிறுவர் நூல்களையும் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.

தேவிகாவின் மொழிபெயர்ப்பை அத்தியாயம் அத்தியாயமாக நான் டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியனுக்கு வாசித்துக் காட்டுவேன். தேவையெனத் தோன்றும் சில திருத்தங்களைச் செய்வார் டாக்டர் கே.எஸ். பகவத் கீதைக்கு பாரதியார் எழுதிய தமிழ் விளக்கவுரைகளே இடம்பெறச் செய்தார் டாக்டர் கே.எஸ்.

ஒரு நூலாசிரியரின் எழுத்துநடை, வார்த்தைப்பிரயோகங்கள் முதலியன அவருடைய படைப்பின் நோக்கத்தை வெளிப்படுத்திவிடும். உதாரணமாக, மத நல்லிணக்கம் பேசுவதாகப் பறையறிவிக்கப்படும் ஒரு நூலில் ஒரு மதத்தைப் பற்றி தடித்த வார்த்தைப் பிரயோகங்கள் இருந்தால் அல்லது சில வரலாற்றுண்மைகள் போகிற போக்கில் திரித்துக் கூறப்பட்டிருந்தால் – அந்த நூலின் நோக்கம் அம்பலமாகிவிடும். டாக்டர் மூஸா ராஜாவின் இந்த நூலைப் படிப்போருக்கு மானுடத்தின் பால் ஆசிரியருக்கு உள்ள உண்மையான அன்பும் அக்கறையும் கட்டாயம் புரியும். இந்த நூலைப் படிப்பது நம்மை மேம்படுத்திக்கொள்ள உதவும் என்றால் மிகையாகாது.

நூலில் இடம்பெறும் திரு.மூஸா ராஜாவின் விரிவான ‘முன்னுரை’யின் ஆரம்பப் பத்திகள் இரண்டு கீழே தரப்பட்டுள்ளன:

2001இல் நியூயார்க்கில், இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்டதன் பின்விளை வாக, உலகம் முழுவதும் முஸ்லிமகளுக்கு எதிரான உணர்வலைகள் எழுந்தன. அதன் உத்வேகம் இன்னமும் தணிய வில்லை. முந்தைய நிகழ்விற்குப் பிற்பட்ட காலத்தில், பெப்ரவரி- மார்ச் 2002 இல், குஜராத்தில் ஏற்பட இனப்படுகொலைகள், இந்திய சமுதாயத்தின் சில பிரிவுகளிடையே முஸ்லிம்களுக்கு எதிரான, மற்றும், இஸ்லாமிய கொள்கைகளுக்கு எதிரான உணர்வுகளை உண்டாக்கியது. 'முஸ்லிம் பிரச்சனை'க்கு ஒரு இறுதித் தீர்வினைக் காணவேண்டும் என்று இங்கு விவாதங்கள்கூட நடந்தன. 2002 ஆண்டு ஏதோ ஒரு சமயத்தில், அப்பொழுது, ராஜஸ்தானின் ஜெயின் விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த செல்வி. சுதாமஹீ ரெகுநாதன், கலக்கமுற்ற மனநிலையில் என்னை அணுகினார். ஜைனக் கோட்பாடான, அநேகன்ட்வாட்டில், நம்பிக்கை கொண்டவரான அவர், பல்வேறுபட்ட மதங்களிடையே நிலவிய தவறான கருத்து வேறுபாடுகளை, அதிலும் குறிப்பாக இந்தியாவின் உயர் குலத்தோர் இடையே நிலவும் வேறுபாடுகளை, அகற்ற தீவிரமாக முயலவேண்டும் என்று உணர்ந்தார். அவர், தில்லியில் உள்ள பலவேறுபட்ட பெருநிறுவனங்களின் உயர் அதிகாரிகள் மற்றும் பிற பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள் கொண்ட குழு விடையே நான் உரையாற்ற விருப்பப்படுவேனா, அவர்களிடம் இஸ்லாமைப் பற்றி பேச முடியுமா என்று அக்கறையோடு வினவினார். நான் தில்லியில் உள்ள நேஷனல் மியூசியம் கலையரங்கத்தில், இஸ்லாமைப் பற்றி தொடர்ச்சியாக மூன்று விரிவுரைகள் ஆற்றினேன். அவையோரில் பெரும்பாலோர் முஸ்லீம் அல்லாதவர்களாக அதிகம் ஹிந்துக்களாக இருந்தனர். எனவே, என்னுடைய விரிவுரைகள், இஸ்லாம் மற்றும் அதனை தோற்றுவித்தவர்களை, இந்தியா, இந்துமதம், வேதங்கள், உபநிஷதங்கள், பகவத் கீதை மற்றும் இந்தியாவின் மேன்மையான காவியங்கள் ஆகியவற்றை இந்தியச் சூழலிலேயே பொருத்திக்க்காட்ட வேண்டியிருந்தது. நான், இஸ்லாமைப் பற்றி இஸ்லாமிய மறைமெய்ஞ் ஞானியர்களின் பொருள்விளக்கங்கள் பற்றியும், இஸ்லாம் மத வாழ்வில் இஸ்லாமிய மறைமெய்ஞ் ஞானிகள் ஆற்றிய பங்கு பற்றியும் சிறிதளவு மேற்கோடிட்டுக் காட்டினேன். பின்னர் இந்த விரிவுரைகளை அடிப்படையாகக் கொண்டு ஒரு குறுந்தகட்டினை சுதாமஹிஜி, உருவாக்கியதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது.

நான் பகவத் கீதையில் இருந்தும், சூபி நூல்களில் இருந்தும் அவற்றின் அடிப்படை நம்பிக்கைகள், தத்துவம் மற்றும் இஸ்லாமின் இறைநிலை உள்ளுணர்வு ஆகிய வற்றைப் பற்றி தங்குதடையின்றி மேற்கோள் காட்டி உரையாற்றியதால், அவர் பின்னர் மற்றொரு மக்கள் குழுவிற்கு பகவத் கீதையைப் பற்றி விரிவுரை தர முடியுமா என்று என்னை அணுகினார். நான் அத்தகைய உரை நிகழ்த்துவதற்கு விருப்பமில்லாதவனாக இருந்தேன். ஏனென்றால், கீதையைப் பற்றிய எனது ஞானமானது அறிவார்ந்த மற்றும் புலமை வாய்ந்த மக்களிடையே எடுத்துக் கூறுவதற்கு ஏற்ற அளவில் இல்லை என்று தீர்மானமாக எண்ணினேன். இன்றும் என் எண்ணம் அவ்வாறே இருப்பினும், அவர் எவ்வாறோ என்னை வற்புறுத்தி இணங்கச் செய்துவிட்டார்.

நான் 'பகவத் கீதையும் நானும்' என்ற தலைப்பில் கீதையைப் பற்றி ஒரு உரை நிகழ்த்தினேன். நான் இந்தத் தலைப்பினைத் தேர்ந்தெடுத்தது, இந்தப் பனுவலுடன் எனக்கு ஏற்பட்ட தனிப்பட்ட அனுபவங்களின் அடிப்படையிலும், இதன் கொள்கை களை தங்களது தனிப்பட்ட வாழ்க்கையில் ஒருங்கிணைத்துக் கொண்ட வர்களுடன் ஏற்பட்ட அனுபவங்களின் அடிப்படையிலும், கீதை யைப் பற்றி நான் உரை நிகழ்த்தப் போகிறேன் என்பதைத் தெளிவுபடுத்தும் நோக்கத்துடனே இந்தத் தலைப்பு, நான் அந்த மகத்தான நூலை ஆழ்ந்து கற்கவில்லை என்ற ஒரு விமர்சனத் திலிருந்து தப்பித்துக்கொள்வதற்கு எனக்கு மிகவும் உதவியாக இருந்தது.

இந்த உரையைக் கேட்ட பல நண்பர்கள், ஒரு மணி நேர உரையில் முழுமையாகக் கூறமுடியாத அந்த அனுபவங்களின் முழு விவரங்களை விரிவாகக் கூறும் வகையில் இந்த உரையை நான் விரிவாக்கவேண்டும் என்று விரும்பினர். இவ்வாறாக இந்த நூலானது கருக்கொண்டது.


இந்தியாவில் உள்ள இந்துக்களும் முஸ்லிம்களும் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றாக வாழ்ந்த போதிலும், மத நூல்களைப் பற்றிய பரஸ்பர அறிவு, வெகுவாக இல்லை. அப்ப டியே இருந்தாலும் அது பொதுவாக மேலோட்டமான அறிவாகவே இருக்கிறது என்பது மிகவும் துரதிருஷ்டவச மானது.1 இந்தியா வைப் பற்றி அல்-பெருனியின் நூலான, கிதாப்-அல்-ஹிந்திற்கு பின்னர் மேலும் இந்திய மதங்களைப் பற்றி அவர் அர்ப்பணம் செய்த பதினான்கு அத்தியாயங்களுக்குப் பின்னர், எந்த முஸ்லீம் எழுத்தாளரும் சம்ஸ்க்ருதத்தை கற்கவோ அல்லது இந்துமத நூல்களை அதன் மூல வடிவில் படிக்கவோ இல்லை. அதைப்போலவே, இஸ்லாமைப் பற்றியும், மற்றும் இஸ்லாமிய நூல்களான குரான் மற்றும் குறிப்பாக ஹதீத்துகளை பற்றியும் அதிகாரபூர்வமாக, நம்பத்தகுந்த வகையில் எழுத வல்ல ஒரு இந்து எழுத்தாளரை நான் இன்றுவரை சந்திக்கவில்லை. ஐரோப்பிய அறிஞர்கள், இஸ்லாம் மற்றும் அதன் நூல்கள், இந்துமதம் மற்றும் அதன் நூல்கள் இரண்டிற்குமே கணிசமான கவனத்தை அர்ப்பணித்துள்ளனர். அவர்கள் நன்கு ஆராயப்பட்ட மற்றும் ஆழ்ந்த புலமை வாய்ந்த நூல்களை நூறு ஆண்டுகளுக் கும் மேலான காலங்களில் உருவாக்கியுள்ளனர். சிலசமயங்களில், ஆயினும், எட்வர்ட் சைட் எந்த எண்ணத்தில் அதை அர்த்தம் கொண்டாரோ அந்த வகையில் அவர்களுடைய பார்வை கீழ்த் திசை மொழிப்புலமையாளர்களைப் போலிருந்தது. அவ்வாறாக இருந்தபோதும், சமீபகாலத்தில், இந்தப் போக்கு மாறிவருவதை நான் கவனித்திருக்கிறேன். இங்கு என்னுடைய முயற்சி, இந்திய மதங்களின் இரண்டு மேன்மையான நூல்களைச் சார்ந்துள்ள தவறான கருத்துவேறுபாடு களைக் களைவதும் தெளிவுபடுத்து வதுமே ஆகும். (பகவத் கீதை மற்றும் குரான்). இந்த நூல்களின் மற்றும் அவை தொடர்பான இலக்கியங்களின் எனது ஆழ்ந்த ஆராய்ச்சியானது, பண்டைய வரலாற்று சிறப்புடைய நாகரீகங் களின் மோதல் என்று சாமுவேல் ஹன்டிங்டன்னின் வகைப் படுத்துவதைவிட, அவைகள் ஒன்றுக்கொன்று நெருக்கமாக உள்ளன, ஆன்மிக வடிவம் மற்றும் மொழி ஆகிய இரண்டிலும், அவைகள் பிரிவினை உணர்வைவிட ஒற்றுமையுணர்வையே ஊக்குவிக்கின்றன என்று எனக்கு வெளிப்படுத்தியது.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள் இணைய இதழின்  முக்கிய நோக்கம் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை  பலவேறு நாடுகளிலும் வாழும் தமிழர்களுடன் பகிர்ந்துகொள்வதாகும். படைப்புகளை அனுப்பும் எழுத்தாளர்கள் புகைப்படங்களை அல்லது ஓவியங்களை அனுப்பும்போது அவற்றுக்கான காப்புரிமைக்கு உரிமை உள்ளவர்களாக இருந்தால் மட்டுமே அவற்றை அனுப்பவும். தமிழ் மொழியை இணையத்தில் பரப்புவதும் இவ்விணைய இதழின் முக்கிய நோக்கமாகும். படைப்புகளை ngiri2704@rogers.com , editor@pathivukal.com ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.

Pathivugal Online Magazine''s  main aim is to share the creative works of Tamil writers with Tamils living in various countries. When writers submit their works—such as photographs or paintings—please send them only if you hold the copyright for those items. Spreading the Tamil language on the Internet is also a key objective of this online magazine. Please send your submissions to ngiri2704@rogers.com and editor@pathivukal.com.

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும்.  நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 
பதிவுகள் விளம்பரம்