கட்டுரைச் சுட்டு

(67) - நினைவுகளின் சுவட்டில்

- வெங்கட் சாமிநாதன் ஒரு நாள் ராஜா வந்திருந்தார் ஹிராகுட்டிலிருந்து. எப்போதாவது வந்து என்னைப் பார்த்து, எப்படி இருக்கிறேன் என்று விசாரித்துவிட்டுப் போவார். இப்படி அவ்வப்போது வரும்போது ஒரு நாள் சொன்னார், நான் ஒருத்தரை அனுப்பரேன். இங்கே ஹிராகுட்டில் வேலை கிடைச்சிருக்கு. அவரோட அவர் மனைவியும் இரண்டு சின்ன குழந்தைகளும். அவருக்கு இப்போதைக்கு வீடு கிடைக்காது போல இருக்கு. கொஞ்ச நாள் ஆகும். நீ இங்கே அவங்களை வச்சுக்கோயேன். வீடு கிடைக்கற வரைக்கும். அவர் பேர் கிருஷ்ணமூர்த்தி. இங்கேயிருந்து ஹிராகுட்டுக்கு பஸ்ஸில் போய்ட்டு வரலாம். அங்கே வீடு கிடைக்கலாம். இல்லையானால், அவர் இங்கே எந்த டிவிஷனுக்காவது மாத்திக்கலாம். என்ன சொல்றே?” என்று கேட்டார். அவர் என்னைக் கேட்பானேன்? நான் இங்கே ஊர் பேர் தெரியாத போது என்னை பஸ் ஸ்டாண்டிலிருந்து வீட்டுக்கு அழைத்து வந்து ஒரு மாதம் எனனை அவர் வீட்டிலேயே சப்பாடும் போட்டு ஆதரித்தவர். “நீங்க எப்ப வேணும்னாலும் யாரை வேணும்னாலும் அனுப்பலாம் எவ்வளவு  நாள் வேணும்னாலும் இருக்கட்டும். என்னைக் கேட்கவே வேண்டாம். இவருக்கு இடம் கொடுன்னு ஒரு சீட்டு எழுதி அனுப்புகிறவர் கையில் கொடுத்தால் போதும்.” என்றேன். இல்லடா சாமா உன்னோட இன்னும் நாலு பேர் இருக்காளே, என்றார். அது பரவாயில்லே பாத்துக்கலாம் என்றேன். அவருக்கு மெனக்கெட்டு இதுக்காக ஹிராகுட்டிலிருந்து வந்த காரியம் நடந்தது. இதுக்காக அவர் இவ்வளவு சிரமம் எடுத்துக் கொள்கிறார் என்றால், நிஜமாகவே சிரமத்திலிருக்கும் மனிதராகத்தான் வருகிறவர் இருப்பார் என்பது நிச்சயம்.

 என்னுடன் இருந்த தேவசகாயத்திடம் பேசினேன். அவருக்கு கொஞ்ச தூரத்தில், கொஞ்ச தூரம் என்றால் சுமார் 100 அடி தள்ளீ இன்னொரு ப்ளாக்கில் ஒரு வீடு கிடைத்திருந்தது. அவர் அதை சும்மா பூட்டியே வைத்திருந்தார். காரணம் எங்களோடேயே இருக்கவேண்டும் என்ற எண்ணம். “கவலையே படவேண்டாம். சாமிநாதன். நான் இன்னும் ரண்டு பேரை என்னோடே கூட்டிட்டு போரேன். நிங்க ஒரு ரூமில் இருந்து கொண்டு பாக்கி வீட்டை அவங்களுக்குக் கொடுத்துடுங்க. குழந்தை குட்டியோட வராங்க”  நீங்களும் என் ரூமிலே பாதி நேரம் கழிக்கலாம். அதுவும் உங்க இடம் தான். இந்த இடத்திலே நீங்க ஒரு கால் வச்சிருக்கணும் கிறதுக்குத் தான் ஒரு ரூமிலே நீங்க இருக்கணும்னு சொன்னது. இல்லேன்னா நீங்களும் அங்கேயே வந்துடலாம்.” என்றார்.

அந்தக் குடும்பமும் வந்தது. இரண்டு குழந்தைகள். அவர் பேர் என். க்ருஷ்ணமூர்த்தி. திருச்சி பக்கத்தில் ராமசந்திரபுரம் என்று ஒரு ஊர் இருக்காமே. அந்த ஊர் திருமதி கிருஷ்ணமூர்த்திக்கு. நான் அடிக்கடி தேவசகாயம் ரூமுக்குப் போய்விடுவேன். அது எஙகளிடையே கெஸ்ட் ஹவுஸ் என்ற பெயர் பெற்றது. கிருஷ்ணமூர்த்தியும் சுமுகமாகப் பழகுகிறவராக இருந்தார். அவர் மனைவியும் குழந்தைகளும். குழந்தைகளும் கொஞ்சம் பழகிய பிறகு மிகவும் பாசத்துடன் என்னிடம் ஒட்டிக்கொண்டன. குழந்தைகளுடன் பொழுது போவது இனிமையாக இருந்தது.

கோடை காலம். காலை ஏழு மணிக்கே அலுவலகம் திறந்துவிடும். பின் மதியம் 1.30 மணி வரை. அவ்வளவு தான். 10.00 11.00 மணிக்கெல்லாம் வெயில் தகிக்க ஆரம்பித்து விடும். அலுவலகத்தில் கஸ்கஸ் தட்டிகள் ஜன்னலிலும் கதவு நிலைகளிலும் தொங்கும். அவ்வப்போது அதற்கு தண்ணீர் ஊற்றி ஈரம் சொட்டச் சொட்ட வைத்திருப்பார்கள். ஏஸி என்பதெல்லாம் அன்று நாங்கள் கேள்விப் படாத விஷயங்கள். எனவே பிற்பகல் அலுவலக வேலை முடிந்ததும், பக்கத்திலேயே இருக்கும் கடைத் தெரு ஹோட்டலுக்குப் போய் சாப்பிட்டு விட்டு அலுவலகத் திற்கே திரும்பி வந்து விடுவது மிகச் சிலர் வழக்கம். அந்த மிகச் சிலரில் நானும் ஒருவன். காலையில் கஸ்கஸ் தட்டி தண்ணீர் ஊற்றி ஊற்றி ஈரமாகவே இருக்கும். திரும்பி இரண்டு மணிக்கு அலுவலகம் வந்தால் 5.00 மணி வரை அலுவலக மேஜை மேல் படுத்து தூங்குவோம். இல்லை ஏதாவது படிப்போம். எல்லோரும் இப்படிச் செய்ய மாட்டார்கள். ஒவ்வொரு செக்‌ஷனிலும் ஒன்று அல்லது இரண்டு பேர்தான் இப்படி இருப்பார்கள். இது ஒன்றும் நாள் தவறாத பழக்கம் இல்லை. சிலசமயங்களில் ஏதோ காரணத்திற்காக வீட்டிற்கும் திரும்புவது உண்டு. வீட்டில் உஷ்ணம் வறுத்தெடுக்கும். வீட்டில் படுப்பதென்றால் க்யிற்றுக் கட்டிலின் மேல் ஈரவேட்டியைப் பரப்பி  மின் விசிறியின் வேகமாக வைத்து கட்டிலின் அடியில் படுப்பேன். இல்லையெனில் அறையில் தண்ணீரைக் கொட்டி கட்டில் மேல் படுத்துக்கொள்வேன். கட்டில் மேல் ஈரவேட்டியைப் பரப்பி கீழே படுப்பது தான் கொஞ்சம் சூட்டைத் தணிக்கும். ஆனால் வேட்டி வெகு சீக்கிரம் உலர்ந்து விடும். மறுபடியும் அதை நனைத்துக் கொண்டு வந்து பரப்ப வேண்டியிருக்கும். இதில் எது தேவலை?

குழந்தைகள் என்னிடம் ரொம்ப பாசத்துடன் இருந்ததால், நான் அலுவலகத்திலிருந்து வந்ததும். சட்டையைக் கழற்றி உடம்பை வியர்வை போக, தண்ணீர் விட்டுக் குளிர்வித்துக்கொள்ளக் கூட விடாது. உடனே என்னிடம் ஓடி வந்து கட்டிக்கொள்ளும். அவற்றை விலக்கிகொண்டு குளியலறைக்குப் போவது பெரும் பாடாக இருக்கும். எனக்கும். குழந்தைகளை வலுகட்டாயமாக இழுத்துக்கொண்டு செல்லும் நிர்ப்பந்தத்துக் குள்ளாகும் திருமதி கிருஷ்ணமூர்த்திக்கும். எனக்கு பாவமாக இருக்கும்.

கிருஷ்ணமூர்த்தியை கடைத்தெருவில் எனக்குத் தெரிந்த பலசரக்குக் கடை, ஹோட்டல், துணிக்கடைகெல்லாம் அழைத்துச்சென்று அறிமுகம் செய்துவைத்தேன். அவ்வப்போது கடனில் ஏதும் வாங்கிக்கொள்ள சௌகரியமாக. வீடு இன்னொரு விதத்தில் கலகலப்பாக மாறியது.

அவ்வப்போது சனி ஞாயிற்றுக் கிழமைகளில் மாத்திரமல்ல, மற்ற நாட்களில் கூட சம்பல்பூர போவது எனக்குக் கிடைத்த மாற்றமாக இருந்தது. சம்பல் பூர் போவது அலுவலக நாட்களில் கூட ஒன்றும் பெரிய சிரம சாத்தியமான காரியம் இல்லை. பஸ் கிடைத்தால் 10 மைல் தூரத்தை அரை மணி நேரத்தில் கடந்து சம்பல்பூர் சேர்ந்து விடலாம். ஆறு மணீக்குத் தான் படம் ஆரம்பிக்கும். மிக நல்ல படங்கள் பார்க்க முடிந்தது. ஷிகஸ்த் என்று ஒரு படம். அசோக் குமாரும் மீனா குமாரியோ அல்லது நூதனோ நடித்தது. மிகவும் மனதைக் கலக்கிய படம். இப்போது கதையெல்லாம் நினைவில் இல்லை. இப்போது எல்லோர் மனத்திலும் பதிந்துள்ள பர்சாத், ராஜ் கபூரை பெரிய ஸ்டாராகவும் சினிமா தயாரிப்பாளராகவும் ஒரு சினிமா பெருந்தலையாக்கிய படம். உத்தம் குமார் என்னும் அக்கால வங்காளத் திரைப்படத்தின் சூப்ப்ர் ஸ்டார், பின் சுசித்ரா சென் படங்கள் நிறைய பார்க்க முடிந்தது. பெரும்பாலான ஹிந்தி தமிழ் படங்களின் தரத்துக்கு மேலான, படங்களாகவே வங்காளி மொழியில் வருவன இருந்தன. ஆனால் ஹிந்தி படங்கள் வங்காளப் படங்களின் சராசரித் தரத்திற்கு வெகு கீழே இருந்த போதிலும், ஜோகன், மஹல், ஷிகஸ்த் போன்றவை இப்போதும் ஐம்பது அறுபது வருடங்களுக்குப் பின்னும் அவற்றை நினைக்கும் போது மனதில் ஒரு வேதனைக் கீற்று கீறிச்செல்வது போல ஒரு உணர்வு. அவ்வளவு தூரம் ஆழமாக அந்தப் படங்களின் பாதிப்பு அந்த வயதில் இருந்திருக்கிறது.

நாம் அறியாதே பல விஷயங்கள் நடந்துவிடுகின்றன. நாம் அதற்குப் பொறுப்பாளியாகிவிடுகிறோம். இத்தகைய ஒரு காயம் நாம் ஏற்படுத்தினோமா, அந்த எண்ணத்தில் தான் அந்தச் செயல்கள் இருந்தனவா என்று யோசிக்கும் போது ஏன் இப்படியெல்லாம் என்றும் மனதில் ஒரு கலவரம்.

கிருஷ்ணமூர்த்தி குடும்பம் குழந்தைகள் எனக்கும் சரி, அவ்வப்போது என் வீட்டுக்கு வந்து போகும் கெஸ்ட் ஹவுஸ் நண்பர்களுக்கும் சரி, மிக அன்பான மனதுக்கு இதமான நேரங்கள் அவை. இருப்பினும் அது வெகு சீக்கிரம் எப்படியோ முனை திரும்பி எதிர்பாராத பாதைக்குயில் சென்று விட்டன நிகழ்வுகள். சுமார் ஆறு ஏழு மாத காலம் கடந்திருக்கும். ராஜாவும் அவ்வப்போது ஹிராகுட்டிலுருந்து வந்து போய்க்கொண்டிருப்பார். ஒரு நாள் கிருஷ்ணமூர்த்தி தன் குடும்பத்தை ராமச்சந்திர புரத்துக்கு கொண்டுவிட்டு வரப்போவதாகவும் திரும்பி வந்து  ஹிராகுட்டில் எங்காவது தங்குவது சௌகரியமாக இருக்கும்ம் என்று சொன்னார். குழந்தைகளைப் பிரிவது மனதுக்கு கஷ்டமாக இருந்தாலும் இப்படித்தான் எல்லாப்பிரிவுகளும் இருக்கும். என்றும் யாரும் எப்போதும் உடன் இருந்துவிடப் போவதில்லை. நானே கூட பிரிய நேரிடலாம். அப்போதும் அது நானே வர வழைத்துக்கொண்ட வேதனையான பிரிவாகத் தானே இருக்கும்? நான் என் தங்கை தம்பிகளைப் பிரியவில்லையா என்ன? என் பெற்றோர்கள், பாட்டி எல்லாரும் என்னைப் பிரிந்து வாழ வில்லையா என்ன? அவர்களை சம்பல்பூர் வரை சென்று ரயில் ஏற்றிவிட்டு வந்தேன்.  பின் ஒரு நாள் புர்லா வந்த ராஜா திடுக்கிட வைக்கும் கேள்வி ஒன்றைக் கேட்டார். ”ஏண்டா சாமா, கிருஷ்ணமூர்த்தி சாமான் வாங்கின கடை பாக்கியை நீ கட்டினாயாமே? எதற்கு?” என்று கேட்டார். “ஆமாம் நான் தான் அவரை அந்தக் கடைக்கு அறிமுகம் செய்து வைத்தேன். என்னை நம்பித்தான் அந்தக் கடைகாரன் கடனுக்கு சாமான் கொடுத்தான். ”பாக்கி வைத்திருக்கிறார் உங்க தோஸ்த். பணம் வருமா? என்று கேட்டான். “வரும். என்னை நம்பு வரவில்லையென்றால் நான் கொடுக்கிறேன் என்று சொன்னேன். அடுத்த மாதம் நானே கொடுத்துவிட்டேன். அவர்களுக்கு என்ன கஷ்டமோ என்னவோ பிறகு சாவகாசமாக நான் அவர்களி டமிருந்து பணம் வாங்கிக்கொள்ளலாம் ஆனால் கடைக் காரனுக்கு காத்திருக்கவேண்டுமென்று என்ன முடை?. ஏன் என்ன ஆச்சு? என்றேன்
.
“என்னமோடா, எனக்கு ஒண்ணும் சொல்லத் தோணலை. அவர் என்னத்துக்கு கொடுக்கணும். இனிமே நாம் இங்கே இருக்கறது சரியில்லை” என்று அவர்களுக்குப் பட்டிருக்கிறது. அதனால் தான் குடும்பத்தை ஊருக்கு அனுப்பி விட்டு அவர் மாத்திரம் ஹிராகுட்டுக்கு வருவதாக் முடிவுக்கு வந்திருக்கிறார்கள். அவர்களிடம் கடைக்காரன் ஒன்றும் சொல்லவில்லை நீ இதை டயரியில் எழுதி வச்சிருக்கே. அதைப் படிச்சிருக்கா.” என்றார்.

எனக்கு அதிர்ச்சி யாக இருந்தது. இன்னொருத்தர் டயரியை யாராவது படிப்பார்களா? அதுவும் படித்தது கிருஷ்ணமூர்த்தியா அவர் மனைவியா? ரொம்ப பண்புள்ளவர்களாகத் தெரிந்தார்களே. ஒரு வேளை இது தப்பு என்று தெரியவில்லையோ என்னவோ. குடும்பத்தில் யாருக்கும் வரும் கடிதத்தை எல்லோருமே படிக்கிறதில்லையா?” என்னவோ மனம் சமாதானம் சொல்லிப் பார்த்துக்கொண்டேன். ஆனால் எல்லாம் நொண்டிச் சமாதானமாக எனக்கே பட்டது.

ஆனால் கிருஷ்ணமூர்த்தி தம்பதிகள் என்னிடம் எந்தவித அன்னிய பாவனையோ அல்லது வெறுப்போ காட்டியவர்கள் இல்லை. சம்பல்பூர் ரோட் ஸ்டேஷனில் விட்டு வரும் வரை குழந்தைகள் அவர்கள் எல்லோருமே மிகவும் அன்போடு தான் இருந்தார்கள். ஊருக்குப் போய் ராமசந்திரபுரத்திலிருந்து. கிருஷ்ண மூர்த்தி எனக்கு கடிதமும் எழுதினார்.

ஆனால் அன்றிலிருந்து நான் டயரி எழுதுவது என்ற எண்ணத்தையே விட்டுவிட்டேன். அந்த வருஷம் தான் யாரோ டயரி ஒன்றை பரிசளிக்கப் போக, அந்த வயதில் எனக்கு இதெல்லாம் ஒரு புதுமையான அனுபவமாக இருக்க எழுதத் தொடங்கினேன். அதன் விளைவு இப்படி இருக்குமென்றால்… விட்டு விட்டேன். 1952-ம் வருடம். இது 2011- வருடம். டயரி என்ற நினைப்பே எழுந்ததில்லை. எதெது நினைவில் தங்குகிறதோ தங்கட்டும்.

அப்படி நினைவில் தங்கியவை தான் நினைவுகளின் சுவட்டில் என இங்கு பதிவாகின்றன.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள் இணைய இதழின்  முக்கிய நோக்கம் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை  பலவேறு நாடுகளிலும் வாழும் தமிழர்களுடன் பகிர்ந்துகொள்வதாகும். படைப்புகளை அனுப்பும் எழுத்தாளர்கள் புகைப்படங்களை அல்லது ஓவியங்களை அனுப்பும்போது அவற்றுக்கான காப்புரிமைக்கு உரிமை உள்ளவர்களாக இருந்தால் மட்டுமே அவற்றை அனுப்பவும். தமிழ் மொழியை இணையத்தில் பரப்புவதும் இவ்விணைய இதழின் முக்கிய நோக்கமாகும். படைப்புகளை ngiri2704@rogers.com , editor@pathivukal.com ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.

Pathivugal Online Magazine''s  main aim is to share the creative works of Tamil writers with Tamils living in various countries. When writers submit their works—such as photographs or paintings—please send them only if you hold the copyright for those items. Spreading the Tamil language on the Internet is also a key objective of this online magazine. Please send your submissions to ngiri2704@rogers.com and editor@pathivukal.com.

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும்.  நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 
பதிவுகள் விளம்பரம்