-தேவகாந்தன்-   ஐயாவின் மரணத்துக்குப் பிறகு எனக்கு மிச்சமாகிப் போனவை அவரது நினைவும்,அவர் பாவித்த ஒரு பழைய சைக்கிளும்தான். முன்பே சைக்கிள் எடுத்து ஓடித்திரிய வீட்டிலே எனக்குக் கட்டுப்பாடிருந்தது. இப்போது அம்மா பெரும்பாலும் தன் சோகத்துள் இருந்த நிலையில் நான் கட்டறுத்தவனாய் திசையெங்கும் அலைந்து திரிந்தேன்.  இப்பவோ அப்பவோ ஒருபொழுதில் என் குடும்பத்தாருடன் காரிலும்,பஸ்ஸிலுமாய் நான் கலகலத்துச் சென்ற பாதைகளின் காடும்,வயலும்,வெளியும் பேசிய மௌனத்தின் சுவை என் அலைவின் தனிமையில் எனக்குச் சுகிப்பாயிற்று. மாலையின் மஞ்சள் வெளிச்சங்களில் மட்டுமில்லை,நிலாவின் மென்னொளி இரவுகளும்கூட என் அலைதல் காலமாயிற்று. கதைகளிலும்,கட்டுரைகளிலும் வாசித்து ரசித்த நிலக் காட்சிகளின் நிதர்சனம் மேலும்மேலுமாக இயற்கையின்மீதான என் ருசியினை ஏற்றிற்று. பள்ளிப் பாடங்கள் தவிர்ந்த புத்தக வாசிப்பும்,பள்ளிக்குச் செல்லாமலே மேற்கொண்ட ஊர் அலைவும் எனக்குள் ஒரு புதிய உலகத்தைத் திறந்தபோதும்,அதை சரியாகப் புரிந்துகொள்ள முடியாதவனாகத்தான் நான் இருந்தேனென்று நினைக்கிறேன். ஒரு இலக்கு நோக்கியல்லாமல் வெறும் அலைதலாக அது இருந்தது. அப்படியேதாவது பலன் அதிலிருக்குமாயிருந்தாலும் அதன் பேறு உடனடியாக அறுவடைக்குச் சாத்தியமாவதுமல்ல. பன்னிரண்டு வயதில் ஒரு செல்நெறியை நான் உணர்ந்து உள்வாங்கிவிட முடியாது. அதற்கான காலம் வரவேண்டியிருந்தது.

மழைநீர் எங்கள் ஊரில் பாய்ந்து சென்ற வழிகளே பாதைகளாயினவோ என்று பலமுறைகளில் நான் நினைத்திருக்கிறேன். மண்பாதைகளெல்லாம் காணிகளைவிட சிறிது தாழ்ந்திருந்தமையைக்கொண்டு இந்த என் அனுமானம் எழுந்திருக்க முடியும். சின்ன வயதில் மழைக்கால நீர் காணிகளிலிருந்து இறங்கி பாதைகளில் அடித்தோடுவதை ஓர் ஆறு காணும் பிரமிப்போடு நான் கண்டிருக்கிறேன். கோடையில் மணல் கேணிகளாகிவிடும் அப் பாதைகளில் என் காலளந்த தூரங்கள் அனுமானிக்க முடியாதவை.

இந்த விட்டேத்தியான அலைவு ஒன்று என்னொத்த வயதுடைய சிறுவர்களிலிருந்து என்னை விலக வைத்து ஒரு தனிமை விரும்பியாய் என்னை ஆக்கிற்றெனில்,இரண்டாவதாய் என் பள்ளிப் படிப்பையும்,ஒழுங்கையும் அது சீரழித்தது.

ஒரு காலத்தில் நடந்தும். வண்டியிலும்,வளர்ந்தவர்களுடன் சைக்கிளிலும் சென்று நான் பார்த்த சாவகச்சேரி நகரத்தை,அப்போது நானே என் அலைதலில் சென்று சேர்ந்ததின் முக்கியமான விளைவு ஒன்றேயாகவிருந்தது. வேம்படிச் சந்தியடியிலிருந்த மகாலட்சுமி புத்தகசாலையும்,கோட்டடியிலிருந்த சரஸ்வதி புத்தகசாலையும் அங்கே என் கண்ணில் பட்டன. பஸ்நிலையத்திலிருந்த சஞ்சிகைக் கடை அடுத்த முக்கியத்துவம் வாய்ந்த இடமாகவிருந்தது. கல்கண்டு அப்போது பதினைந்து சதம் விற்றதாய் ஞாபகம். இன்னொரு முக்கியமான அம்சம் இருபத்தைந்து சதத்துக்கு விற்ற காமரசம்,இன்ப லீலைபோன்ற பெயர்களில் பெண்களின் நிர்வாணப் பட அட்டைகளுடனிருந்த புத்தகங்கள். வாங்கிவிட விருப்பமிருந்தும் என் வயது அந்தத் தடையை தனக்குத் தானே விதித்துக்கொண்டது. ஒழுக்கரீதியிலாகவல்ல,கடைக்காரர் என்ன எண்ணுவாரோ என்ற பயத்தினால். கடைக்காரர் என்ன நினைத்தால் எனக்கென்ன என்று எண்ணுவதற்கு இன்னும் சிறிதுகாலம் போகவேண்டியிருந்தது.

அந்த ரச லீலைகளைப் படித்துத்தான் நான் கெட,அல்லது வளரவேண்டிய அவசியமில்லாது காலக்கொடியின் ஒரு இடைக் கணுவாய் ஒரு அனுபவ வெடிப்பு இந்தக் காலத்திலேதான் எனக்குச் சித்திப்பாயிற்று.

எனது தந்தை இறந்த நாளிலிருந்தே விளைவேலி என்ற கிராமத்திலிருந்து ஒவ்வொரு நாளும் அந்த இரண்டு கட்டை இடைத்தூரத்தை நடந்தே மாலையில் வந்து,இரவிலே துணையாகப் படுத்துவிட்டு, காலையில் சென்றவர்கள் என் பெரியம்மாவும் பெரியையாவும். ஏறக்குறைய இரண்டு மூன்று ஆண்டுகளாக அவ்வாறு செய்தார்கள். கள்வர்,கயவர் பயம் இருந்த அந்தக் காலத்தில் அம்மாவுக்கு பெரிய ஆறுதலாக இருந்தது அந்தத் துணை. ஐயாவின் மரணம்வரை நன்மை தின்மைகளுக்குக்கூட அணுகாமலிருந்த சொந்தங்கள் அவை. அம்மா கடைசிவரை அவர்களது உதவியை மறவாதேயிருந்தாள். கூளங்கைப் பெரியையாவை எனக்கு ஆரம்பத்திலிருந்தே பிடிக்கவில்லை. அவர்பற்றி நான் ஏதாவது புறணி அவரில்லாத சமயங்களில் புறுபுறுக்கிறபோது,‘கொப்பர் செத்த நாளிலயிருந்து இழவு காக்கிற ஆக்கள் அதுகள்,நோக நொடிய ஒரு வார்த்தை சொல்லக்கூடாது’ என்று அப்போதெல்லாம் அம்மா என்னைக் கண்டித்திருக்கிறாள்.

எங்கள் வீட்டுக்கு பின்னால் ஒரு வீடும், எதிர்ப்பக்கத்தில் ஒரு ஒரு வீடும்தான் கூப்பிடு தொலைவிலுள்ள இரண்டு வீடுகள். எதிர்ப்பக்க வீட்டிலேயிருந்த ஐம்பது வயதளவான கணேசலிங்கத்துக்கு சிறிது காலத்துக்கு முன்னர்தான் இரண்டாம் கல்யாணமாகியிருந்தது. வசவிளான் என்ற ஊரில் பெண்ணெடுத்திருந்தார். பெண்ணுக்கு அம்மாவைவிட வயது குறைவு. அவள் அவ்வப்போது வந்து அம்மாவோடு அக்காவென்றே அழைத்துப் பேசியிருக்கிறாள். அவள் அழகில், பேச்சின் அசைவுகளில் ஒரு பெரிய இளமையும், நளினமும் தீட்டப்பட்டிருந்தது. நல்ல சிவந்த பெண். மெலிந்த,சுமாரான உயரமுள்ள உடம்பு.

கணேசலிங்கத்துக்கு ரயில்வேயில் கங்காணி வேலை. மாலையில் சென்று மறுநாள் பகலில்தான் வேலை முடிந்து வருவார். அந்தக் காலத்தில் எது காரணத்தாலோ ரயில் ரோட்டை கண்காணிப்பதற்கு ஆட்கள் தேவைப்பட்டிருக்கிறார்கள். அது என்னவென்பது இன்னும் எனக்குப் புரியாத புதிர்.
இரவு வேலையானதால் மனைவியின் தாயாரை வீட்;டிலே கூடவைத்திருந்தார் கணேசலிங்கம். சனியோ,ஞாயிறோ அவருக்கு ஓய்வாக இருக்கும். அந்த நாளில் அந்த மனிசன் முழுகுவது ஒரு திருவிழாபோல என்னைக் கவர்ந்திருந்தது. சனிக்கிழமைகளில் ஊரே களைகட்டினாலும் அவர் வீடு கொள்ளும் களை அவ்வளவு தனித்துவமாயிருக்கும்.

அந்தக் கிராமத்தில் எந்தக் கிராமமும்போலவேதான் சனிக்கிழமை முக்கியமான நாள். வாரத்தில் வேலை விடுமுறை நாள் கூலித் தொழிலாளருக்கு,பள்ளிக்கூடத்தைப்போல. அரசாங்க அலுவலகங்களில் பாதிநாள் வேலை.

முழுக்கு நாள் என்ற அடையாளம் அதற்கு பொருத்தமாகவே வைக்கப்பட்டிருந்தது. அன்று எண்ணெய் ஒழுகாத ஆண்களின் உடம்புகளைக் காண்பது அரிதாகவிருக்கும். பெண்கள் முழுவதற்கான நாளாக வெள்ளிக்கிழமை ஒதுக்கப்பட்டிருந்தது. முழுகி விரித்த கூந்தலுடன் அவர்கள் அலைவது ஓர் அழகு. சனிக்கிழமைகள் ஆண்களுக்கான முழுக்கு நாளாகவிருப்பதால்,அன்று சாராயமோ கள்ளோ அருந்தாத கூலியாட்களைக் காண்பது அபூர்வம். ஓரளவில் சனிக்கிழமை ‘சனி’ பிடித்த நாளாகவே இருந்தது. மதியத்தில் தொடங்கிவிடும் வாய்த் தகராறு,மாலையில் கைச்சண்டையாக முடியும். கள்ளுக் கொட்டிலில் தொடங்கி,நின்று பேசும் சந்திகளில் தொடர்வனவாய் சில. சந்திகளில் தொடங்கி  வீடுவரை சென்று முடிவன சிலவென சண்டைகள் பல வகை. அந்த நாளில் சண்டையைத் தடுப்பவர்களினதும்,சண்டை பிடிப்பவர்களதும் சத்தத்தில் கிராமம் ஏக கூச்சலில் இருக்கும். வெளியாட்களோடு இல்லாவிட்டால் மனைவியோடாவது யாருக்கும் சண்டை வரும். பேசுவதைப் பேசு என்றுவிட்டு பெண்களும் பெரும்பாலும் இருந்துவிடுவதில்லை. யாரியாக நின்று வாய்காட்டிக்கொண்டிருப்பார்கள். நாலு அடி விழுந்தால் கோபவெறியில் இரண்டு அடிகளாவது திருப்பிவிடுகிற பெண்களும் அங்கேயுண்டு.

புருசனையிழந்த வள்ளிப்பிள்ளை அந்தக் கிராமத்தில் பெரிய வீராங்கனை. அவள் வரலாறு எழுதப்பெற்றிருந்தால் எங்கள் கிராமத்தின் முதல் வீராங்கனையாய் அவளும்,அந்தக் குடும்பமும் பெயர் பெற்றிருக்கும்.

வள்ளிப்பிள்ளைக்கு இரண்டு பெண்பிள்ளைகள். புருசன் இறந்து ஆறேழு வருசங்கள். கூலிவேலை செய்து குடும்பத்தைப் பார்த்தாள். இரண்டு பெண்பிள்ளைகளிலொன்று சொந்தமாய்த் தறி போட்டு வீட்டிலிருந்தே நெய்து ஏதோ சம்பாதிக்கொண்டிருந்தது.

அன்று ஒரு சனிக்கிழமை. அது முழுக்கு நாள் மட்டுமில்லை. சந்தை நாளும். சந்தை போகாதவர்கள் வீச்சு மீன் வாங்குவார்கள். ஆடு அடிக்கிறதும் உண்டு. அது ஒரு பெரிய வேள்வியின் ஆரவாரங்களைக் கொண்டிருக்கும். ஆடடிக்கும் பற்றைக்குள் பெண்களோ சிறுபிள்ளைகளோ போவதில்லை. அவர்கள் அடையக்கூடிய ஆகக்கூடுதலான சந்தோசம் அங்கெழும் சத்தம் சந்தடிகளிலேயே கிடைத்தது.

வள்ளிப்பிள்ளையின் வீடு ஒரு கல் றோடும்,ஒரு மணல் ஒழுங்கையும் இடைவெட்டிய சந்தி மூலையிலிருந்தது. அவளின் வேலி முன்பகுதி கிடுகினாலும்,பக்க வேலிகள் பனையோலையினாலும் அடைக்கப்பெற்றிருந்தன. கொட்டிலில் கள்ளடித்துவிட்டு வருபவர்கள் நின்று ‘ஞாயம் புறிக்கிற’ இடம் இரவானாலும்,பகலானாலும் அந்தச் சந்திதான்.

வள்ளிப்பிள்ளை அவ்வப்போது புறுபுறுத்திருக்கிறாள்,‘அக்கம் பக்கத்தில குடிமனையிருக்கெண்டு நினைச்சு கதைக்கிறாங்களில்லை, பொம்பிளப்பிள்ளையள் இருக்கிற வீடெண்டு ஒரு மட்டுமரியாதையில்லை, ஒரே தூசணமாய்க் கொட்டுறாங்கள்’ என்று. ‘என்ர காதில விழட்டும்,அப்ப காட்டுறன் நான் ஆரெண்டு’ என்ற எச்சரிக்கையை ஊர் முழுக்கத் தெரிந்திருந்தது. ஊரில் கண்டவரிடமெல்லாம் அவள் அதைச் சொல்லியிருக்கிறாள்.

அன்றைய சனிக்கிழiமை சந்தைக்குப் போய் முருங்கைக்காய் விற்று வாங்கவேண்டிய சாமான்களை வாங்கிக்கொண்டு சந்தையிலிருந்து இரண்டு கட்டை தூரத்தை அந்த நட்டநடு மத்தியானத்தில் நடந்து வந்த களைப்போடு திண்ணையிலமர்ந்து ஆசுவாசப்பட்டுக்கொண்டிருந்தாள் அவள். அப்போது திடீரெண்டு நெய்துகொண்டிருந்த பெண் சிரித்தாள். வள்ளிப்பிள்ளைக்கு விளங்கவில்லை,அவள் ஏன் சிரிக்கிறாளென்று. ஆனாலும் அந்தமாதிரி காரணமில்லாமல் முன்பும் அவள் சிரித்திருக்கிறாள். கேட்டபோதும் மகள் சொல்லியிருக்கவில்லை. அன்று அதை அறிய அப்படியொரு வேகம் வந்திருந்தது அவளில். எழும்பி நெசவு தறியடிக்கு ஓடிவந்தாள். மகள் பார்த்த திசையை உன்னிக்க,சர்ர்ர்ரென சத்தம் எழுந்துகொண்டிருந்தது கேட்டது. அவளுக்கு விளங்கிவிட்டது. உடனேயே படலையைத் திறந்துகொண்டு வெளியே ஓடிவந்தாள்.

மாப்பிளைக் கந்தன் சாரத்தை தூக்கிப் பிடித்துக்கொண்டு வேலியில் ஒன்றுக்கு அடித்துக்கொண்டிருந்தான்.

வள்ளிப்பிள்ளையால் பொறுக்கமுடியவில்லை. ‘ஏன்ரா நாயே,என்ர வேலியேட கிடைச்சுது நீ மூத்திரம் பெய்யிறதுக்கு? இனிமேல்பட்டு கண்டனோ,கத்தியெடுத்து வந்து ஒரே வெட்டாய் வெட்டியெறிஞ்சிடுவன்’ என்று கத்தினாள்.

நியாயமிருந்தது அவள் கோபத்திலென்று கந்தன் பேசாமல் போயிருக்க வேண்டும். ஆனால் அவனோ வெறியில் நின்று,‘உனக்கென்னடி செய்யிது நான் ஒழுங்கையில மூத்திரம் பெய்தா? எதோ காணாததைக் கண்டதுமாதிரி நிண்டு துள்ளுறாய். உன்ர வீட்டுக்குள்ள வந்து நான் பெய்யேல்ல,பேசாமப் போ…போ’ என்று நாட்டாமை விட்டுக்கொண்டிருந்தான்.

வள்ளிப்பிள்ளையின் குணம் தெரிந்திருக்க அவனுக்கு வாய்ப்பில்;லை.

‘உனக்கு நாக்கும் நீளமடா’ என்றுவிட்டு உள்ளே ஓடியவள் அடுக்களைப் பக்கமிருந்த மீன்வெட்டும் கத்தியை எடுத்துக்கொண்டு பாய்ந்து வந்தாள்.
கந்தன் அதை எதிர்பார்க்கவில்லை. உயர்த்திக் கட்டியிருந்த சாரம் கீழே இறங்கியது,அவனது கள்ளின் போதைபோல. அப்படியொரு காளி சொரூபத்தை வாழ்நாளில் கண்டிருக்கமாட்டான் கந்தன். இறக்கின சாரத்தை தூக்கினான்,எடுத்தான் ஓட்டம். அவன் அந்தமாதிரி ஓடுகிறானேயென்று வள்ளிப்பிள்ளை விட்டுவிடவில்லை. கட்டிய சேலையை மன்னிப்பிடித்துக்கொண்டு கையில் ஏந்திய கத்தியோடு துரத்தத் தொடங்கினாள்.

கல் றோட்டில் நிண்டு சனம் வெடிக்கை பார்த்தது. கல் றோட்டில் திரும்பி கந்தன் வயலுக்குள் ஓடினான்.  வள்ளிப்பிள்ளை விடவில்லை. வயலின் பாதி தூரம் கடப்பதற்குள் இடைத்தூரம் குறைந்து வள்ளிப்பிள்ளையின் கைக்கெட்டிய தூரத்தில் இருந்தான் கந்தன். இந்தா இன்னும் சில கவடுகளில் அவள் கந்தனைப் பிடித்துவிட்டாளென்று தோன்றியது. கந்தனால் வள்ளிப்பிள்ளையின் ஓட்டத்துக்கு ஈடுகட்ட முடியவில்லை. அவன்,‘ஐயோ,காப்பாத்துங்கோ… என்னைக் காப்பாத்துங்கோ’ என்று கத்தியபடி பறந்தடித்து ஓடினான்.

கடைசியில் வயலுக்கு அடுத்த கரைப்பக்கமிருந்து வந்த சனங்கள்தான் வள்ளிப்பிள்ளையைத் தடுத்து கந்தனைக் காப்பாற்றிவிட்டனர்.
அது கொஞ்ச காலமாய் அவ்வப்போது சனங்களின் பேச்சில் பிரஸ்தாபமாகிக்கொண்டே இருந்தது.

வள்ளிப்பிள்ளை வீராங்கனையான கதை இதுதான்.

அன்னக்கிளி வீட்டில்கூட ஒவ்வொரு சனியென்று இல்லாவிட்டாலும் சண்டை நடக்கும். தாய்க்கிழவி கத்துவது ஊரெங்கும் கேட்கும். ஆனாலும் யாரும் விழுந்தடித்துக்கொண்டு விலக்கப் போய்விடமாட்டார்கள். அப்படியான சந்தர்ப்பங்களில் கணேசலிங்கத்தின் வாய் கொட்டும் தூசணங்களுக்கு சமூகம் பயந்திருந்தது. பச்சை பச்சையாய்,நாக்கைப் பிடுங்குகிற மாதிரி கேட்பார். பெண்ணாயிருந்தால் சேலையும்,ஆணாயிருந்தால் இடுப்பு வேட்டியும் உரிந்தேபோகும்.

புருசன் கத்தி சத்தம்போடுகிற நாட்களில் அன்னக்கிளியும் எதிர்த்துப் பேசிக்கொண்டேயிருப்பாள். வாய்ச் சண்டை கைச்சண்டையாகாமல் அடங்கிய நாட்களும் உண்டு. முந்திய சனிக்கிழமை ஏற்பட்ட சண்டையில் அன்னக்கிளியின் வீறிடல் அவளுக்கு அடி விழுந்துவிட்டதை நிச்சயப்படுத்தியது.
நான் வாட்டத்தோடு எல்;லாம் கேட்டுக்கொண்டிருந்தேன்.

நான் கவனித்திருக்கிறேன்,பெரும்பாலும் கூரை வீடுகளையே கொண்டிருந்த அக்கிராமத்தில் சனிக்கிழமைகளிலேயே வீடேதேனும் தீப்பிடித்து எரிந்ததை. இத்தகைய காரணங்களால் சனிக்கிழமைகள் என் நெஞ்சில் பல்வேறு சித்திரங்களை ஆழமாய்க் கீறிவிட்டிருக்கின்றன. அவை பெரும்பாலும் பரபரப்பையும்,கிளுகிளுப்பையும் கொண்டிருந்த நிலையில்,அன்னக்கிளியின் வீட்டுச் சண்டைதான் என் மனத்தில் சோகத்தைப் விதைத்தது.
ஒரு ஞாயிற்றுக் கிழமை மாலை அன்னக்கிளியின் வீட்டுக்கு முன்னால் திடீரென்று காரொன்று வந்து நின்றது. அது அபூர்வம் கிராமத்தில். செத்தவீடு,கடும் சுகவீனமான விசயங்களைச் சொல்வதற்குத் தவிர வேறெதற்குமாக அந்த அபூர்வங்கள் அங்கே நடப்பதில்லை. கார் வந்த சிறிதுநேரத்தில் அன்னக்கிளியின் தாயார் கதறியபடி என் தாயாரிடம் ஓடிவந்தாள். தன்னுடைய தமக்கை மகன் பாம்பு கடித்து இறந்துவிட்டதாகவும்,தான் உடனடியாக ஊர் போவதால் மகளுக்குத் துணையாக என்னை அங்கே இரவுக்கு அனுப்பமுடியுமாவென்றும் கேட்டாள். அதுமாதிரி சமயங்களில் யாரும் மறுப்புச் சொல்லிவிடுவதில்லை. அம்மாவும் சரியென்றாள்.

கிழவி சென்ற பின்னால் என்னை அம்மா அழைத்து விசயத்;தைச் சொன்னாள். எனக்கு சந்தோசம் தாங்கமுடியவில்லை. ஏனென்று தெரியாமலே அந்த சந்தோசம் விளைந்திருந்தது. எனக்கு அப்போது பதின்மூன்று அல்லது பதின்னான்கு வயதுதான்.

இருட்டு விழுந்த நேரத்துக்கு அம்மாவே என்னை அங்கு கூட்டிச் சென்றாள். நானும் இரண்டு புத்தகங்களையும் எடுத்துக்கொண்டு கூடிச் சென்றேன். அடுப்படியின் இருட்டுக்குள்ளிருந்த அன்னக்கிளியோடு அம்மா பேசிக்கொண்டு நின்றாள் சிறிதுநேரம்.

வீடு சென்ற நான் திண்ணையில் விளக்குக்கு முன்னால் அமர்ந்து புத்தகத்தைத் திறந்து வைத்தேன். பார்வை கீழே பதிந்தது.

அன்னக்கிளியை நானும் கிளியக்கா என்றே சொன்னேன். ஆனாலும் கிளியக்காவென்று நேரில் என்றும் அழைத்ததில்லை. கள்ளத்தின் ஊற்றெல்லாம் என்னில் எவ்வளவு நுண்மையாய் பாய்ந்திருக்கிறது!

அம்மா சென்றபோது கூடிச்சென்ற அன்னக்கிளி படலையைச் சாத்தி கட்டிவிட்டு வந்தாள். இன்னும் திண்ணைக்கு வரவில்லை. அடுக்களையில் சட்டி பானைச் சத்தம் கேட்டது. பேணிச் சத்தங்கள் கேட்டன. பிறகு கேத்தில் இரைந்த சத்தம் கேட்டது. சிறிதுநேரத்தில் அன்னக்கிளி ஒரு கைபிடிக் கோப்பையில் தேத்தண்ணீர் கொண்டுவந்து வைத்துவிட்டுப் போனாள். அவளது உடம்பு சேலையால் சுற்றப்பட்டிருந்தது.

எனது பார்வை புத்தகத்திலிருந்து மிதந்து அடிக்கடி மேலே வரத்தொடங்கியது. இருட்டில் அன்னக்கிளி இருக்குமிடம் தெரியவில்லை. தேநீரைக் குடித்து முடித்தேன். இன்னும்தான் அவள் என் கண்ணில் படவில்லை. என் தேடலைப் புரிந்திருப்பாளோ? குடித்த தேநீர்க் கோப்பையை எடுக்க வந்தவளின் முகத்தில் ஒருவித சிரிப்பு படர்ந்திருந்தது.

நான் மறுபடி புத்தகத்தின்மீது குனிந்தேன்.

ஒருபோது நிமிர்ந்த என் பார்வையில் திண்ணையில் சுவரில் சாய்ந்து கால் நீட்டியிருந்த அன்னக்கிளியின் உருவம் விழுந்தது. புன்னகை மறந்திருந்தாள். ஆயினும் பார்வை என்மீதே பதிந்திருந்தது. கவனித்தபோது தெரிந்தது அவளது கண்ணிலிருந்து நீர் வடிந்துகொண்டிருந்தது. நான் பதறி நிமிர்ந்தேன்.  ‘ஏன் அழுகுறியள்? அழாதயுங்கோ’ என்றேன்.

பேசாமலிருந்தவள்,சிறிதுநேரத்தில் சொன்னாள்: ‘என்ர வாழ்க்கையை நினைச்சா என்னண்டு ராசா,அழாமலிருக்கிறது? ஒவ்வொரு நாளும் சண்டைதான் அந்தாளோட. எடுத்ததுக்கெல்லாம் அடி. அதுவும் பூவரசம் கம்பு முறிச்சுவந்து மாட்டை அடிக்கிறமாதிரி அடிக்கிறான். அண்டை அயலும் இல்லை,கத்தினா ஓடிவந்து உதவிசெய்யிறதுக்கு. தனிச்ச மனிசியாயிருந்து அல்லாடுறன். அழுகிறதத் தவிர வேற என்னத்த நான் செய்யேலும்?’
எனக்கு மிகவும் துக்கமாகப் போய்விட்டது. நான்,‘நேற்றும் சண்டை நடந்துது. அடிச்சவரே அப்பேக்கயும்?’

‘நீ கண்டனியோ?’

‘காணேல்ல. சத்தம் கேட்டுது.’

‘இஞ்ச பார்,கை மேலெல்லாம் ஒரே தழும்பு. நேத்து ஆச்சி எண்ணய் போட்டுவிட்டுது. இப்ப கொஞ்சம் வீக்கமெல்லாம் குறைஞ்சிருக்கு’ என்றபடி எட்டி கைத்தழும்புகளைக் காட்டினாள். ‘முதுகிலதான் நாலைஞ்சு தழும்பு பெரிசு.’

அவளதைக் காட்டவில்லை.

சிறிதுநேரத்தில் நான் கேட்டேன்,‘ஏன் நெடுக சண்டை உங்களுக்க வருகுது?’ என்று.

‘என்னத்தயெண்டு சொல்ல,ராசா? சோறு குழைஞ்சா,கறிக்கு உப்புக் குறைஞ்சா இல்லாட்டி கூடினா,வேலிக்கரையில போய் நிண்டா…எல்லாத்துக்கும் அந்தாளுக்கு கோவம்வருகுது. நானென்ன செய்ய?’

நானும் அவள் வருத்தமளவு பட்டேன். கொஞ்சநேரமாகக் கேட்டாள்,முதுகில எனக்கு எண்ணய் போடேலாமக் கிடக்கு,ராசா,படுக்கேக்க கொஞ்சம் போட்டுவிடுறியே?’ என்று.

‘போட்டுவிடுறன்.’

அவள் எழுந்து அடுக்களைக்குப் போய்விட்டாள். நான் என் பாசாங்கைத் தொடரந்தேன். புத்தக இதழ்கள் ஒவ்வொன்றாக விரிந்துகொண்டிருந்தன. மனத்துள் வேறு ஒரு படம் ஓடிக்கொண்டிருந்தது.

படுக்கிற நேரமானபோது ஒரு பாயைக் கொண்டுவந்து திண்ணையில் போட்டாள் அன்னக்கிளி. பின் இரண்டு தலையணைகளைக் கொண்டுவந்து போட்டாள். முதுகுக்கு ஒரு சேலையை விரித்துவிட்டாள். நிமிர்ந்தபோது கண்டேன்,பாவாடையைக் குறுக்காகக் கட்டியிருந்த அவளின் நெடுமிய தோற்றம்.

‘நாளைக்கு பள்ளிக்குடமெல்லே,வா,வந்து வெள்ளணப் படு’ என்றுவிட்டு,எண்ணெய்ப் போத்தலெடுக்க அப்பால் சென்றாள். நான் புத்தகத்தை மூடிவிட்டு படுக்கத் தயாரானேன்.

‘இந்தா இதப் போட்டுட்டுப் போ’ என்று அன்னக்கிளி சொல்ல,சென்று போத்தலை வாங்கினேன். ‘பாத்துப் போடு. எல்லா இடத்திலயும் பிரட்டியிடாத. பேந்து நொளு நொளுவெண்டிருக்கும் படுக்கேக்க’ என்றுவிட்டு,கைவிளக்கு வெளிச்சம் படக்கூடியமாதிரி நிலத்தில் அமர்ந்து முன்புறக் கட்டை அவிழ்த்து பாவாடையை இளக்கினாள்.

முதுகைப் பார்த்தேன். மூன்று இழுவைகள் தோல் பிளந்து வெடித்துக் கிடந்தன. முதுகில் விழுந்திருந்த ஒரு தழும்பு நாரிக்குச் சரிந்து வயிறுவரை சென்றிருந்தது. நான் போத்தலிலிருந்த கோழியிறகை எடுத்து மெதுவாக தழும்பின்மேல் தடவத் தொடங்கினேன். எவ்வளவு நேரம் அப்படித் தடவவேண்டுமென்று எனக்குத் தெரியவில்லை. தடவுவது அவளுக்குச் சுகமாய் இருந்திருக்குமா,எனக்குத் தெரியாது. ஆனால் அது எனக்கு மனத்தில் சுகம் விளைத்தது. இப்போது கையை உயர்த்தி பக்கத்துக்குப் பூச இடம்விட்டாள் அவள். நான் எல்லா இடமும் பிரண்டுவிடாத அவதானத்துடன் மயிலிறகில் எண்ணெயைத் தோய்த்து மெதுமெதுவாய் பூசினேன். அப்போது எனக்குத் தெரிந்தது அவளது வெண்மார்புக் கோளம். நான் பார்வையைக் குவிக்கவில்லை. ஆனாலும் பரந்த பார்வையில் அது பட்டுக்கொண்டே இருந்தது.

அன்னக்கிளி சட்டெனத் திரும்பி ஒருமுறை என் முகத்தை நோக்கினாள். நான் முன்பக்கத்தைக் கவனித்துப் பார்க்கிறேனா என அறிய முனைந்தாளோ? நான் தழும்பிலேயே பார்வையைப் பதித்திருந்தேன் தீர்க்கமாய்.

அன்னக்கிளி போத்தலை வாங்கி மூடிவைத்துவிட்டு சேலையால் முன்புபோல மூடிக்கொண்டு வந்தாள்.

நான் படுத்தேன். அவளும் பக்கத்தில் பாயில் பாதி,நிலத்தில் பாதியாய் சரிந்து படுத்தாள்.

‘இண்டைக்கு புகை போடேல்ல,ராசா. நுளம்பு கொஞ்சம் கூடவாயிருக்கும். இந்தா இதால மேலைப் போத்துக்கொண்டு படு’ என முந்தானையை எடுத்து என்மேல் எறிந்தாள்.

முகத்தில் விழுந்த முந்தானையால் என்னுள் பரவசம் ஏறிக்கொண்டிருந்தது. நிலத்தில படுக்காம பாயில படுங்கோ எனச் சொல்ல எனக்கு வாய் துடித்தது. அடக்கிக்கொண்டேன். என்ன நினைப்பாளோ?

தூங்கின மாதிரியும் தூங்காதமாதிரியும் ஒரு இரட்டுறை நிலை. எனக்கு அது கனவுபோலவும் இருந்தது. அன்னக்கிளி என்னை இறுக்கமாய் தழுவிக்கொண்டு படுத்திருக்கிறாள். அவ்வப்போது நிமிர்ந்து பார்த்து என் முகத்தில் கொஞ்சுகிறாள். வலக் கையை கீழே வயிற்றில்,தொடையிலென்று பரத்திச் சென்று என் உணர்ச்சியின் அளவை அறிய முயற்சிக்கிறாள். நான் விழிக்கிறேன் கனவுக்கு முற்றுப்புள்ளி விழுகிறது.

மறுநாள் கணேசலிங்கம் வேலைக்குச் செல்லும்போது அம்மாவுடன் வந்து கதைத்துவிட்டுப் போனார். ‘பறவாயில்லை, அண்ணை, ஆச்சி வருமட்டுக்கும் ராசாவை படுக்க அனுப்புறன். இஞ்ச படுக்கிறத, அங்க படுக்கிறதில அவருக்கு என்ன கஸ்ரம். எனக்கும் இஞ்ச ஆள்துணை இருக்குத்தான’ என்றாள் அம்மா அவர் போகும்போது.

அன்றும் அம்மா என்னைக் கூட்டிப்போய் விட்டுவந்தாள். முதல்நாள் போல் அன்னக்கிளி அன்று சேலையால் போர்த்திக்கொண்டு நிற்கவில்லை. சட்டைபோட்டு ஒழுங்காக சேலையணிந்திருந்தாள். சோகம் குறைந்தும் தென்பட்டாள். ‘உதில இருக்கிற வீட்டிலயிருந்து இதில ஓடிவாறத விட்டிட்டு அம்மாவக் கூட்டிக்கொண்டு வருகுதே இந்த ஆம்பிளைப்பிள்ள’ என்று என்னை கேலியும் செய்தாள். நான் சிரித்தபடி திண்ணைக்குப் போய்விட்டேன்.
அன்று படிப்பு முடிந்து நான் படுத்திருந்த நேரத்தில் பக்கத்தில் வந்து படுத்த அன்னக்கிளி ஒரு சேலையை என்மீது போட்டு போர்த்திப்படுக்கச் சொன்னாள். சேலையை நான் விரித்துப் போர்த்தினேன். பூச்சிமுட்டை வாசம் வந்து முகத்தில் அறைந்தது. அப்படியே என்னை அது அந்தரத்தில் தூக்கியது.

முகத்தைச் சேலையால் மூடினேன். உடுத்திருந்த சேலையை அவிழ்த்து என்மேல் போட்டுவிட்டு அன்னக்கிளி அருகே படுத்திருக்கும் உள்ளுணர்வு என் நித்திரையைக் கலைத்துக்கொண்டிருந்தது. ‘மோத்த மூடிக்கொண்டு படுக்கக்குடா’தென்று முகத்திலிருந்து சேலையை ஒதுக்கிவிட்டாள். நான் கண்களை மூடியபடி படுத்திருந்தேன். கண்ணில் ஏதாவது அசைவு தோன்றியிருந்தாலும்,தூர தணிந்து எரிந்துகொண்டிருந்த விளக்கினால் எதையும் காட்சியாக்கியிருக்க முடியாது.

சிறிதுநேரத்தில் முதல்நாள் கண்ட கனவு அதே பரிமாணத்தில் என்னிடத்தில் தோன்றியது. ஆனால் அன்றைக்கு அவள் என் உணர்ச்சியின் அளவு தெரிய முயன்றபோது நான் குப்புறக் கவிழ்ந்து படுத்துவிட்டேன். திட்டமிடாமலெனினும் அது ஒரு திட்டத்தில்போல் அமைந்தது. நான் அவளது பக்கமாய்ச் சரிந்து கவிழ்ந்ததில் அவளை இப்போது நான் நெருக்கிக்கொண்டு படுத்திருந்தேன். அவளது அணைப்பின் சுகம் முழுiமையாய் என்னை ஆக்கிரமித்திருந்தது. அவளின் மார்புகள் என்னை அழுந்திக்கொண்டிருந்தன. அன்னக்கிளியின் கை என் தலையைத் திருப்பி முன்புறமாக்கியது.
நான் தடையுடைத்தேன்.

அவள் வழி காட்டினாள்.

தாயார் வசாவிளானிலிருந்து திரும்பும்வரையான மூன்று நான்கு நாட்கள் எனக்கு சொர்க்கமாகவேயிருந்தன.

அடுத்த வாரத்திலொரு நாள் கணேசலிங்கம் வீட்டிலே சண்டை நடந்தது. புதன்கிழமையளவில்தான் எனக்குத் தெரிந்தது, தாயும் மகளும் வீட்டைவிட்டுப் போய்விட்டார்களென்ற விசயம். என் ஆசாள் போன துக்கம் என்னிடத்தில் நீண்ட நாள் இருந்தது.

இன்று அது அனுபவமில்லை,அறிவு மட்டுமே. ஒரு குழந்தையின் வளர்ச்சியில் சமூகத்தின் பங்கினது முக்கியத்துவம் இப்போது தெரிகிறது. அறிவே சில சமயங்களில் அனுபவத்துக்காக ஏங்குகிறது. அப்போதும் அந்த அனுபவம் அறிவாகவே மாறுகிறது. இவ்வாறு அனுபவம் அறிவாகவும், அறிவு அனுபவமாகவும் மாறிமாறியான இந்தச் சுழல் என்னில் நீண்டகாலத்துக்குத் தொடர்ந்திருந்தது. கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்கிற அளவுக்கு இந்தச் சுழல் என்னில் நீண்டுசெல்லவில்லை என்பது ஒரு ஆறுதல்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள் இணைய இதழின்  முக்கிய நோக்கம் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை  பலவேறு நாடுகளிலும் வாழும் தமிழர்களுடன் பகிர்ந்துகொள்வதாகும். படைப்புகளை அனுப்பும் எழுத்தாளர்கள் புகைப்படங்களை அல்லது ஓவியங்களை அனுப்பும்போது அவற்றுக்கான காப்புரிமைக்கு உரிமை உள்ளவர்களாக இருந்தால் மட்டுமே அவற்றை அனுப்பவும். தமிழ் மொழியை இணையத்தில் பரப்புவதும் இவ்விணைய இதழின் முக்கிய நோக்கமாகும். படைப்புகளை ngiri2704@rogers.com , editor@pathivukal.com ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.

Pathivugal Online Magazine''s  main aim is to share the creative works of Tamil writers with Tamils living in various countries. When writers submit their works—such as photographs or paintings—please send them only if you hold the copyright for those items. Spreading the Tamil language on the Internet is also a key objective of this online magazine. Please send your submissions to ngiri2704@rogers.com and editor@pathivukal.com.

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும்.  நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 
பதிவுகள் விளம்பரம்