நனவிடை தோய்தல் (16): நினைத்தாலே இனிக்கும் நினைவுகள் - அந்தநாள் ஞாபகம்! - இந்து.லிங்கேஸ் -

* ஓவியம் AI
எமக்கு பத்து வயதிருக்கும். மாலைப்பொழுதின் இதமான சுகத்தில் தேகம் திளைக்க கடைச்சுவாமி கோயில் ஒழுங்கைக்குள் நாலுபேர் கூடி ரோட்டில கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தோம்.அக்காலம் 69 களாக இருக்கலாம். கூடுகின்ற கூட்டத்தை பொறுத்து முதலில ரோட்டிலதான் ஆட்டம் ஆரம்பிக்கும்.அதற்கு விக்கெற் இருக்காது.மாறாக,ஒரு மட்டையை எடுத்து அதற்கு ஏதாவது பொறுப்பு வைத்து எதிராய் ஒரு கல்லை வைத்து அங்கிருந்து போலிங் போட 'பற்ஸ்மான்' போலை மிஸ் பண்ணாமல் தடுப்பதுவே ஆட்டத்தின் விதிமுறை.3 தடவை தவறவிட்டால் அவர் ஆட்டமிழப்பார். தவிர,முண்டு வைத்திருந்த மட்டையில் பந்து பட்டாலும் ஆட்டமிழப்பது உறுதி.அதேநேரம் பந்தை கூடிய தூரத்திற்கு அடிக்கவும் கூடாது. அப்படியே மெதுவாக ஆட்டம் ஆரம்பிக்க, எங்களின் குரல்களை கேட்டதும் பக்கத்து வீடுகளிலிருந்து அடுத்தவர்களும் வந்து இணைவார்கள். இணைபவர்கள் இளசுகள் மட்டுமல்ல, பெரியவர்களும்தான்.
ஆரம்பத்தில் நான்குபேராக இருந்த கூட்டம் கிட்டத்தட்ட பத்து பன்னிரண்டு என நிரம்பும்.மாலைப் பொழுதுக்கு முதலில் இந்த மயக்கம் போதுமானதாக இருக்கும். வளவுக்குள் நின்ற பாண்டி மாங்காயின் கிளைகளும், கொப்புக்களும் ரோட்டுப்பக்கமும் வளர்ந்து காய்த்துத் தொங்கும்.பக்கத்து மதில்களில் அணில்களும் பாய்ந்து பாய்ந்து எங்களைப் பார்த்து கண்சிமிட்டுவதும் பொழுதுக்கு உகந்த அழகுதான்!
சிலர் மேயவிட்ட ஆடு,மாடுகளை அவிழ்த்துக்கொண்டு ஒழுங்கையால் வீடு திரும்புவதும் கண்களுக்கு விருந்தாகும். பின்னேரப்பால் தேத்தணிக்கு பால்காரரும் வந்திறங்கி,வீடு வீடாய் பெல் அடிப்பதும் நித்தம் நாம் காணும் காட்சிப்படிமங்களில் ஒன்று. ஒரு நாளுக்கு இந்த ஒழுங்கையால் ஒன்று அல்லது இரண்டு கார்களைத்தான் நாம் கண்டதுண்டு.அயலில் இருந்த பேரம்பலத்தாரின் கார் ஒன்று.அவர் நல்ல பணக்காரர்.மாடிவீடு.'ஒஸ்ரின் கேம்பிரிட்ச்'கார் என்று சொகுசாய் வாழ்ந்தவர். 'தானுண்டு,தன்பாடுண்டு' என வியாபாரத்திலேயே கண்ணும்,கருத்துமாக இருந்த மனிசன். ஒருவார்த்தை கூட அயலெண்டுவந்து, கதைச்சுப்பறைந்து கொண்டாட மாட்டார். கண்டால் மட்டும் ஒரு சிரிப்பு.அவ்வளவும்தான்.



அவுஸ்திரேலியா – மெல்பனில் நீண்டகாலம் மருத்துவராக இயங்கிவரும் சியாமளா நடேசன் அவர்களினால் உருவாக்கப்பட்டுள்ள , புற்றுநோய் சிகிச்சைக்கு உதவும் அறக்கட்டளையின் வருடாந்தக் கூட்டம் கடந்த ஆண்டு ( 2024 ) இறுதியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் குறிப்பிட்ட அறக்கட்டளையின் இயக்குநர்கள் மற்றும் நலன் விரும்பிகள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் முன்மொழியப்பட்ட தீர்மானங்களுக்கமைய, கடந்த வருடத்திற்கான செயற்பாட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. அறிக்கையின் விபரங்கள் பின்வருமாறு:

“வாய்விட்டுச்சிரித்தால் நோய்விட்டுப்போகும்.“ என்பார்கள்.





நோய் – மருந்து. மருந்து - நோய் என்ற இந்த இரண்டும் மனித வாழ்வில் நீங்காத இடத்தை பிடிக்க கூடியதாக உள்ளதை நாம் பார்க்க முடிகிறது. நோய் நீங்குவதற்கு மருந்து உண்பதும் உண்ட மருந்தினால் உண்டாகக்கூடிய பக்க விளைவு குறித்தும் இன்று நாம் அதிகம் கவனம் செலுத்துகிற ஒரு சூழலை பார்க்க முடிகிறது. இத்தகைய பின்புலத்தில் தமிழ் மருத்துவம் குறிப்பாக, பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் இருந்த மருத்துவத்தின் செயல்பாடு அச்செயல்பாடு இன்றைய காலகட்டத்தில் உள்ள மக்களுக்கு எந்த வகையில் பொருத்தம் உடையதாக இருக்கிறது? என்பது குறித்த செய்தியை நாம் திருக்குறளின் பின்புலத்தில் பார்க்கிறோம். அவற்றைக் குறித்த ஒரு பார்வையை இந்த கட்டுரை முன்வைக்கிறது.




கட்டடக்கலையின் முக்கிய அம்சமே வடிவமைப்புத்தான். கட்டடச் சூழலை வடிவமைப்பதே கட்டடக்கலை என்று சுருக்கமாகக் கூறலாம். ஒரு நகரானது கட்டடங்களால் நிறைந்துள்ளது. கட்டடங்கள் நிறைந்த அச்சூழலை உருவாக்குவதே கட்டடக்கலை. கட்டடக்கலை எவ்விதம் கட்டடங்களை உருவாக்குகின்றது? இங்குதான் வடிவமைப்பு முக்கியமாகின்றது. கட்டடக்கலையானது வெறும் கட்டடங்களைக் கட்டுவது மட்டுமல்ல. அக்கட்டடங்களைக் கட்டுவதற்கு முன், வடிவமைப்பதற்கு முன் பல விடயங்களைக் கவனத்திலெடுக்க வேண்டும்.
மாசாத்துவான் மா பெரும் வணிகன்
“நான் அம்ஜித்கான் பேசுகிறேன்”.





