ஆய்வு: நற்றிணையில் ஊர்ப் பெயர்கள்! - முனைவர்.ம.சியாமளா, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை (சுழற்சி – 2),குருநானக் கல்லூரி (தன்னாட்சி), சென்னை-42. -
முன்னுரை
ஆதி காலத்தில் மனிதர்கள் குகைகளிலும், காடுகளிலும் வசித்து வந்தனர். நாளடைவில் நாகரீக வளர்ச்சியின் காரணமாக ஆற்றங்கரைகளில் வீடுகளை அமைத்துக் கூட்டமாக வாழ்ந்தனர். காலப்போக்கில் ஏற்பட்ட மாற்றத்தினால் மக்கள் ஊர், சிற்றூர், பேரூர், நகரம், பட்டினம் என்ற அமைப்பு முறைகளைத் தோற்றுவித்தனர். இதனை அக்காலத்தில் எழுந்த நூல்களில் பதிவு செய்துள்ளனர். தமிழ்மொழிக்குச் செம்மொழி உயர்வினைத் தேடித்தந்த சங்க இலக்கியம் ஒரு தொன்மையான இலக்கியமாகும். சங்க இலக்கியத்தில் ஒன்றான எட்டுத்தொகையில் இடம்பெற்றுள்ள நற்றிணையில் காணப்படும் ஊர்ப் பெயர்கள் பற்றி இக்கட்டுரை அமைந்துள்ளது.
அரிசில்
அரிசிலங்குமரனார் என்னும் புலவர் நற்றிணையில் பாடல் பாடியுள்ளார். அரிசில் என்ற ஊர்ப்பெயர் இவ்வூரைச் சேர்ந்த புலவர் பெயருடன் இணைத்துக் கூறப்பட்ட நிலையில் சங்க இலக்கியங்களில் இப்பெயர் பெறப்பட்டது.
அரிசிலற் தென்றல் அன்ன இவள்
விரை யொலி கூந்தல் விட்டமை கவனே (நற்.141)
என்று அரிலங்குமரன் அரிசிலாற்றைப் பற்றி பாடியுள்ளார். அரிசில் தற்போது தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணத்தில் தென்கிழக்கே நாலரை மைல் தொலைவில் அரிசிலாற்றங்கரையில் அரிசில் கரைப்புத்தூர் என்ற ஓர் ஊர் உள்ளது.


'

இலங்கை மக்கள் நன்கறிந்த இந்திய எழுத்தாளர் கு. சின்னப்பபாரதி கடந்த 13 -ம் திகதி திங்கட்கிழமை மாலை (13 - 06 - 2022) சிந்திப்பதை நிறுத்திக்கொண்டார. இலங்கைப் படைப்பாளிகளையும் வாசகர்களையும் மிகவும் கவர்ந்தவர் சின்னப்பபாரதி. தமிழ் வாசகர்களை மாத்திரமன்றி சிங்கள வாசகர்களையும் கவர்ந்தவர். எழுத்தாளர் - மொழிபெயர்ப்பாளர் காலஞ்சென்ற உபாலி லீலாரத்தினாவின் மொழிபெயர்ப்பில் சிங்கள மொழியில் சின்னப்பபாரதியின் நாவல்கள் சில சிங்கள வாசகர்களுக்கு அறிமுகமாகின. அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுச் சாதனை படைத்தவை சின்னப்பாரதியின் நாவல்களாகும்.



பெற்றிடுவாள் அன்னை பெருதுவப்பார் அப்பா
இன்றைய சூழலில் அடித்தளமக்கள் மற்றும் விளிம்புநிலை மாந்தர்களின் வாழ்வனைத்தும் போராட்டத்தால் மட்டுமே மீட்டெடுக்க முடியுமென்ற அவலநிலையில்தான் இச்சமுதாயம் இருந்துகொண்டிருக்கிறது. அந்த வகையில் வாழ்வனைத்தும் அநீதிகளையும், தீண்டாமைகளையும் புறக்கணிப்புகளையும் மட்டுமே எதிர்கொள்ளும் மாற்றுப்பாலினத்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் இன்று ஓரளவேனும் புத்துயிர்ப்பு பெறத்தொடங்கியுள்ளனர் என்று சொன்னால் அம்மாற்றங்களுக்கு நவீனஇலக்கியங்கள் முக்கியக் காரணமாகத் திகழ்கின்றன எனலாம். பேடி, அரவாணி, திருநங்கை போன்ற பல்வேறு பெயர்களால் விமர்சனத்துக்குள்ளாகி வரும் மூன்றாம்பாலினர் தங்களுக்கான வாழ்வுரிமைகளை மீட்டெடுப்பதில் தற்போது பெரும் சிரத்தை எடுத்துவருகின்றனர். இதற்கு இலக்கிய வடிவில் அவர்களும், அவர்கள் மீது நல்லெண்ணம் கொண்ட படைப்பாளர்களும் உறுதுணையாக நிற்கின்றனர்.
நான் இருக்கிறேன் ; நீங்கள் இல்லை. பிரெஞ்சுத் தத்துவவாதி ஜீன் போல் சார்த்தரின் புகழ்பெற்ற, Being and Nothingness - ‘இருத்தலும் இன்மையும்’ நூற்பெயர், அர்த்தச் செறிவுடன் அடிக்கடி என் நினைவில் வருகிறது! நீங்கள் இல்லை ; ஆனால், மனவெளியில் உங்களுடன் என் உரையாடல் தொடர்கிறது...





இதே போன்று, கிளிம், மாஸ்கோவை விட்டகன்று, மாகாணத்தில் குடியேறிய பின் சந்திக்க நேரும் பாத்திரங்களில், மற்றுமொரு முக்கிய பாத்திரம் - வெலண்டைன். அதி அற்புதமான சித்திரிப்பு எனலாம். கலைந்த தலை, அலங்கோலமான உடை, உடல் முழுவதும் தூசி, தும்பு, புறாக்களின் எச்சங்கள் - முகம் வேறு பூசணியைப் போல் - கண்களும் பாவமற்று வெறும் கண்ணாடித் துண்டுகளை போல்… “உங்களுக்கு மலர்கள் பிடிக்குமா… ஓ… இங்கே, சுடுகாட்டில் இருக்குமே, அவ்வளவு நிரம்ப மலர்கள்…– கிளிம்மிடம், கூறிக் கொண்டிருப்பான் வெலண்டைன்.
மேற்கே சூரியன் மலையிலிருந்து இறங்கியவுடன் கிழக்கே பௌர்ணமிச் சந்திரன் கீழிருந்து மேல் எழுந்தது. பகல்முழுவதும் வெயிலில் காய்ந்த மரங்கள் சாய்ந்தரம் குளிர்ந்த காற்றுக்கு தலையசைத்து நின்றன. கருப்புக் காடைகள் சிறகுகளை விரித்து வட்டமிட்டு சுற்றிக் கொண்டு கூடுகளை அடைந்தன.


