'ஒரு பாய்மரப்பறவை' வாசிப்பு அனுபவம்: - பவானி சற்குணசெல்வம் -


நூல்: 'ஒரு பாய்மரப் பறவை' | ஆசிரியர்: பொ. கருணாகரமூர்த்தி ,ஜேர்மனி | பதிப்பகம்: காலச்சுவடு, இந்தியா 2024
வாழ்க்கை வாழ்வதற்கே!. ஒவ்வொருவரும் தத்தமது வாழ்வை வாழ்ந்து முடிக்கத்தான் வேண்டும். ஆனால் அதை எழுதுவது என்பது அவ்வளவு சுலபமான விடயமல்ல. எழுதுதல் என்பது ஒரு படைப்புத்திறன் மிக்க கலை வடிவம் ஆகும். இது வாழ்க்கையின் அனுபவங்களை ஆழ்ந்து உணர்ந்து, அதனைச் சிறந்த மொழியில் வெளிப்படுத்தி, அதன் மூலம் வாசகர்களையும் பாதிக்கும் ஒரு ஆற்றல் வாய்ந்த செயல். எழுத்தாளர் கருணாகரமூர்த்தி அவர்கள் இந்தக் கலையை வரமாகப் பெற்றவர் என்பது இந்தப் புத்தகத்திலிருந்து புலனாகிறது.
எழுத்தாளர் இந்தக் கதைகளினூடாக வாழ்க்கையின் அனுபவங்களையும், எண்ணங்களையும், உணர்வுகளையும் வார்த்தைகளாக வடித்து, அதனை ஒரு கலை வடிவமாக மாற்றுவதை நான் ஒவ்வொரு கதைகளிலும் காணக்கூடியதாக இருக்கிறது. இவர் தனது கதைகளில் வெறுமனே தகவல்களைப் பதிவு செய்யாமல், சொற்களின் மூலம் ஒருவரின் வாழ்வை வாசகர்களுக்குப் புரியவைத்தும், அந்த அனுபவங்களைச் சிறப்பாகப் பிரதிபலிக்கும் வகையில் கலாச்சாரப் பிறழ்வுகளின் மத்தியிலும் நகர்த்திச் செல்லும் பாங்கு அற்புதம்.
கதைகள் சிறப்படைய நல்ல முறையில் பாத்திரங்கள் அமைய வேண்டும். கதையின் உயிரோட்டம் பாத்திரங்களே
ஆகும். பாத்திரங்கள் மூலம்தான் கதாசிரியர் வாசகனைக் கவருகிறார். இந்தக் கதைகளில் வருகின்ற தனித்தனி மனிதனின் பண்புகளையும், செயல்பாடுகளையும் கதாசிரியர் தனது செம்மையான பாத்திரப் படைப்பு மூலம் வெளிக்கொண்டு வருகிறார். பாத்திரங்கள்தான் கதையை நடத்திச் செல்கின்றன. இவர் தனது ஒவ்வொரு கதையிலும் பாத்திரங்களின் வாழ்க்கையை முழுமையாகவோ, அல்லது அதில் சுவையான ஒரு பகுதியையோ விளக்கமாக எடுத்து உரைக்கும் விதம் தனித்துவமானது.இவரின் முதல் இரு கதைகளையும் வாசிக்கும்போது நான் முற்றிலுமாக ஒரு புனைகதையினை வாசிக்கிறேன் என்ற உணர்விலிருந்து பிரிக்கப்பட்டு, எழுதப்பட்டிருக்கும் ஒரு வரலாற்றைப் படிக்கிறேன் என்ற உணர்வினால் ஆட்கொள்ளப்பட்டிருந்தேன்.




மனிதனின் மெய்யில் தோன்றும் சில உணர்வுகளை அவரவர்களின் செயல்பாடுகள் மூலமாகவும் குறிப்புகள் மூலம் அறியலாம்.பேச்சுமொழித் தோற்றத்திற்கு முன்பே மனிதன் தன் உள்ளத்து உணர்ச்சிகளை உடலைசைவுகளால் வெளிப்படுத்தினான். உள்ளத்து உணர்ச்சிகளின் வெளிப்பாடாக உடலின் மேல் தோன்றும் புறக்குறிகள் மெய்ப்பாடுகள் என அழைக்கப்பெறுகின்றன. மெய்யின் படுதல் மெய்ப்பாடு, அதாவது, உணர்ச்சி மெய்யில்(புற உடலில்) வெளிப்படுதல் மெய்ப்பாடு எனப்படும். உண்மைத் தோற்றம் உண்மை நிகழ்ச்சி, உண்மை நிலை என்றெல்லாம் பொருள் விளக்கம் பெறுகிறது. மெய்ப்பாடுகள் என்பவை மிகவும் நுண்மையானவை.அத்தகைய மெய்பப்பாடுகளை குறுந்தொகையில் மூலம் காணலாம்.


காஷ்மீர் பயணத்தைத் தொடங்கும் முன், நாங்கள் மிகப் பல முறை யோசித்தோம். பயண முகவரிடம் எங்களுடைய சந்தேகங்களை வெளிப்படுத்தினோம். அவர் கூறிய பதில் நமக்குக் கொஞ்சம் நிம்மதியைத் தந்தது:
தாரை என்ற சொல்லுக்குக் ’கண்ணின் மணி’ என்று பொருள் தருகிறது திவாகரம்.தாரை, கிட்கிந்தை நாட்டின் வானரகுல அரசன் வாலியின் மனைவி.சுக்ரீவனுக்குத் துணையாக இராமன் வந்துள்ளதையும், உன் உயிரை எடுப்பதற்காகவே அவன் வந்துள்ளான் என்று நம்மீது அன்புடையவர்கள் கூறினர் என்று சொன்னாள். இளையபெருமாள் கோபத்துடன் வருவதைக்கண்டு, தவறு செய்த வானரர்களைக் கடிந்து பேசிவிட்டு, தானே நேராக இலட்சுமணனிடன் சென்று இதமாகப்பேசி, அவன் கோபத்தைத் தணித்து, சுக்ரீவன் மீது பிழை இல்லை என்று புரியவைத்து, ஒரு ராசமாதாவாக நடந்துகொண்டாள். தாரையின் அழகு, புத்திசாலித்தனம்,அமைதி,தவறு செய்தவரிடத்து கண்டிக்கும் மனநிலை, வானர குலத்தைக்காக்க அவள் செய்யும் முயற்சி, வாலி இறந்ததால் கைம்மைத் தோற்றம் என்று பன்முகத்தன்மை கொண்ட தாரை குறித்துக் கம்பராமாயணம் கூறியுள்ள கருத்துக்களை இக்கட்டுரையில் ஆராய்வோம்.

- இலங்கைத் தமிழ் நாடக வரலாற்றில் அ.ந.கந்தசாமியின் 'மதமாற்றம்' ஒரு மைல் கல். மதம் என்னும் கருத்தியலை அங்கதச் சுவையுடன் சாடும் வேறெந்த நாவலும் இலங்கையில் மேடையேறியதாக நான் அறியவில்லை. அப்படி இருந்தால் , அறிந்தவர்கள் அதனை இங்கு பகிர்ந்துகொள்ளலாம்.



சுண்ணாம்புத்திண்ணையில் கால்கள் சுகமாய் நேராய்க்கிடக்கின்றன.காலங்களைக்கடந்துவந்த அனுபவங்கள் ஆச்சியின் பாதங்களில் தெரிகின்றன.அந்தப்பாதங்களில் விடைபெறுகின்ற வெயில் கொஞ்சிவிட்டுப்போகுது. உடலில் கொழுப்பென ஒன்றையும் காணமுடியாமல் பாலைவனப்பாறைகளாய் உடல் சதிராடுது. ஆச்சிக்கு எந்த ஆசைகளும் கிடையாது.











ஊரின் வாசம்

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









