(தொடர் கட்டுரை) ஜெயமோகனின் வெள்ளையானை நகர்த்தும் அரசியல் (4 & 5) - ஜோதிகுமார் -
4.
ஏய்டன் என்பவன் அயர்லாந்தில் இருந்து வந்த ஒரு ஆங்கில அதிகாரியாக இருந்தாலும், ஒரு ஆங்கிலேய ராணுவ பள்ளியில் படித்து வளர்ந்திருந்தாலும், ஷெல்லியின் எழுத்துக்களை அவன் உருப்போட்டிருப்பதால், அது, அவனை சமயங்களில் அலைக்கழித்து சமூக நீதிக்கான மன உலைச்சல்களை, சலனங்களை அவனில் ஏற்படுத்துவதாய் நாவல் சித்தரிக்கின்றது. ஷெல்லியின் மானுட நோக்கானது அல்லது அவனது சமூக நீதிக்கான குரல் எவ்வளவு வலிமை பொருந்தியது என்பதெல்லாம் ஏற்கனவே வரலாற்றில் பதியப்பட்டுள்ள சங்கதிகள்தாம். ஷெல்லி மாத்திரம் என்றில்லாமல் ஷெல்லிதாசன் என அறியப்பட்ட பாரதி முதல் இன்னும் இருக்ககூடிய அனந்த எழுத்தாளர்கள், மானுட நேயத்தின் பார்வையால் தூண்டப்பெற்று ஓரணியாய் நின்றதும், நிற்பதும் கூட வரலாறுதான். இதன் தொடர்ச்சி இன்றும் எம்மிடை அவதானிக்கக் கூடியதுதான். இவ்வெழுத்துக்கள் மனிதனை அப்படி என்னதான் செய்கின்றன? இவ்வெழுத்துக்களின் தேவைப்பாடுதான் என்ன?
ஒரு முறை ஜெயகாந்தன் ஒரு கதையைக் கூற நேரிட்டது:
ஒரு கிராமத்து திருடன். நீண்ட நாள் சிறை வாசத்தின் பின், ஊரார் அவனைத் தீண்டாத நிலையில் இருத்திய போது ஒரு பாதிரி, அவனைத் தன் வாசஸ்தலத்திற்கு இட்டு வந்து அவனை அன்பால் திருத்தும் பொருட்டு அவருடன் தங்கவைத்து கொள்கின்றார். நடு இரவில் கண் விழிக்கும் அவன் தன் பழக்க தோசத்தாலோ என்னவோ மாதா கோயிலின் இரண்டு விளக்குகளில் ஒன்றைச் சுருட்டி எடுத்துக் கொண்டு கிளம்பி விடுகின்றான். இருந்தும் ஊர் எல்லையில் காவலாளர்களிடம் பிடிபட்டு போகின்றான். விளக்கைப் பார்த்துவிட்டு அவனை அவர்கள் மாதா கோயிலுக்கே திருப்பி அழைத்து வருகின்றார்கள். இவர்களைக் கண்ட மதகுரு, ‘நண்பரே வாருங்கள்’ ஏன் மற்ற விளக்கையும் எடுத்துக் கொள்ளாமல் மறந்து போய் விட்டிருந்தீர்கள்…இந்தாருங்கள், எடுத்து செல்லுங்கள் என்று மற்ற விளக்கையும் அவனிடம் கொடுத்து விடுகின்றார். மதகுருவின் இந்நடவடிக்கை அவனில் ஒரு மாற்றத்தைக் கொணர்ந்து சேர்ப்பதாய் கதை.
இதைக் கூறும் ஜெயகாந்தன் “இப்படித்தான் - நூல்கள், புத்தகங்கள் எம்மைப் பாதிக்கின்றன. எங்கோ, தொலைதூரத்தில் எழுதப்பட்ட இந்த சிறுகதை எனது மனதிலும் மாற்றத்தை ஏற்படுத்தியது. யாரோ ஒரு நண்பர் ஒருமுறை சில தென்னங்கன்றுகளை எனக்குத் தத்திருந்தார். அவை கிடு கிடு வென வளர்ந்து ஒவ்வொரு மரத்திலும் குலை குலையாக காய்களை ஏந்தியிருந்தன. இளநீர் குடிக்க ஆசை இருந்தும் அண்ணாந்து பாரப்பதோடு நான் சரி. மரமேற தெரியாது. யாரையாவது கொண்டு தேங்காய்களைப் பறிக்கலாம் என்றாலும் யாருமே அகப்படவில்லை.



மகாகவி பாரதியின் தமிழ் வாழ்த்து திருமதி சரண்யா மனோசங்கரின் குரலில் தேன் மதுரமாய் அந்த மண்டபத்தை நிரப்புகிறது! இது மகாகவியின் நினைவு நூற்றாண்டு என்பதை நினைவுபடுத்துகிறது.
எமது கனடா கவிஞர் கழகமானது ஒவ்வொரு மாதத்தின் கடைசிக் கிழமையிலும் தமிழறிஞர்கள், படைப்பாளிகள் மற்றும் கலைஞர்களை அழைத்து மெய்நிகர் வழியாகச் சிறப்புரைகளையும், கலந்துரையாடல் களையும் நடத்தி வருகின்றது. அதன்படி, சென்ற செப்ரெம்பர் மாதம் இருபத்தைந்தாம் திகதி சனிக்கிழமை எமது கழகத்தின் இணைய வழிக் கலந்துரையாடல் காலை 10 மணி தொடக்கம் 12 மணிவரை இடம் பெற்றது. இந்த நிகழ்வில் பிரபல எழுத்தாளரும், கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் தலைவருமான குரு அரவிந்தன் அவர்களின் ‘சிறுகதை எழுதுவது எப்படி?’ என்ற பயிற்சிப்பட்டறை இடம் பெற்றது. முதலில் கழகத்தின் தலைவர் திரு. கந்த ஸ்ரீ பஞ்சநாதன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். அதைத் தொடர்ந்து பொருளாளர் திரு. குமரகுரு. கணபதிப்பிள்ளை அவர்கள் எழுத்தாளர் குரு அரவிந்தனை அறிமுகம் செய்து வைத்தார்.



உள்ளார்ந்த கலை , இலக்கிய ஆற்றல்களை கொண்டிருப்பவர்கள், தமது தாயகம் விட்டு, வேறு எந்தத் தேசங்களுக்கு புலம்பெயர்ந்து செல்ல நேரிட்டாலும், தமது ஆற்றல்களை வெளிப்படுத்தியே வருவார்கள். அதற்கு எமது புகலிட தமிழ் கலை, இலக்கிய உலகில் சிறந்த உதாரணமாகத் திகழ்பவர்களில் குறிப்பிடத்தகுந்த ஒருவர் எழுத்தாளரும் நாடகக் கலைஞருமான யாழ். பாஸ்கர். இவர் இந்தத் துறைகளில் தடம் பதித்து, வளர்ந்து ஆஸ்திரேலியா நாட்டில் இதழ் ஆசிரியராகவும் மலர்ந்தவர். யாழ்ப்பாணம் கொட்டடியைச்சேர்ந்த இவர், தனது ஆரம்பக்கல்வியை கொட்டடி நமசிவாயா பாடசாலையிலும், நவாந்துறை றோமன் கத்தோலிக்க தமிழ்ப்பாடசாலையிலும் பயின்று, பின்னர் யாழ். பரமேஸ்வராக் கல்லூரியில் இணைந்தார்.



அண்மையில் நண்பர் எல்லாளன் தந்திருந்த நூல்களிலொன்று 'சமாதானத்திற்கான ஶ்ரீலங்கா சார்புக் கனேடியர்கள்' அமைப்பு வெளியிட்டிருந்த மலையகத்தைச் சேர்ந்த ஊடகவியலாளரும், முன்னாட் விடுதலைப் போராளியுமான வரதன் கிருஷ்ணா எழுதிய 'வெந்து தணியாத பூமி' என்னும் சிறு நூல். இந் நூலை வாசித்தபோது ஒன்று புரிந்தது. இது தொட்டிருக்கும் விடயம் தற்போதுள்ள சூழலில் மிகவும் முக்கியமானதொன்று. இது ஆற்றியிருக்கும் பணியும் முக்கியமானது. காலத்தின் தேவை.

திருமணமாகி மதுரை வந்த நாள்முதல் அடிக்கடி இரவு ஒன்பதுமணிக்கு, எங்கள் பெட்ரூமிலிருந்து அம்மாவிடம், வீடியோ காலில்தான் பேசுவேன். அம்மா தனது பெட்ரூமிலயிருந்து பேசுவாங்க. சிலநாட்களில் சமையல்காரப் பையன் எடுத்துப் பேசுவான். தவிர, நேரம் கிடைக்கும்போதெல்லாம் அத்தானும் பேசத் தவறுவதில்லை.
2012 ஏப்ரல் 12ம் தேதி வியாழக் கிழமை காலை 10 மணியளவில் வவுனியா பூங்காப் பகுதி தடை முகாமிலிருந்து விடுவிக்கப்பட்ட முப்பத்தொரு பெண்களில் சங்கவி ஒருத்தியாக இருந்தாள். அவர்களில் நான்கு பேர் குழந்தைகளோடு இருந்தார்கள்.



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









