சிறுகதை: வழியறியும் பாதங்கள் - ஶ்ரீரஞ்சனி -

* ஓவியம் - AI
வானத்தைக் கருமேகங்கள் முற்றாக ஆக்கிரமித்திருந்தன. மார்கழி மாதத்துக் குளிர் ஊசி துளைப்பதுபோல அவளைத் துளைத்தது. மழை நீர் குட்டைகளாக அங்கும் இங்கும் தேங்கியிருந்தது. சேறும் சகதியாக இருந்த தரையில், காலடிகளை ஒவ்வொன்றாகத் தூக்கித்தூக்கி மெதுமெதுவாக அவள் வைத்தாள். “கவனமப்பா, வழுக்கும். விழுந்திடாதையும்,” அவளுக்குள் ஒலித்த நாதனின் குரல் அவளின் கண்களைத் திரையிடச் செய்தது.
அந்த மப்பும் மந்தாரமுமான சூழலில்கூட, பின்வளவில் நாதன் பயிரிட்டிருந்த தக்காளியும், கத்தரியும், பிஞ்சு மிளகாயும் காய்த்துப் பொலிந்திருந்தது அவளுக்குத் தெரிந்தது. அதேநேரத்தில், எப்போதுமே நேர்த்தியாகவிருக்கும் அந்தத் தோட்டம், களைகளால் நிரம்பி அவளைப் போலவே சோகத்தை அப்பிவைத்துக்கொண்டிருப்பது போலவும் அவளுக்குத் தோற்றமளித்தது. தண்ணீர் பாய்ச்சுவதும், களைபிடுங்குவதும், பசளையிடுவதுமென செப்ரெம்பர் வரைக்கும் தினமும் நாதனின் மாலைநேரங்கள் அதற்குள்தான் கழிந்திருந்தன. அவன் நேசித்த அந்தத் தோட்டத்தைச் சற்றுச் சீராக்குவோமென்ற நினைப்பில் களைகளை ஒவ்வொன்றாகப் பிடுங்கத் தொடங்கினாள். “குந்தியிருந்து பிடுங்காமல் ஒரு ஸ்ரூலிலை இருந்துகொண்டு செய்யுமன். முதுகு வலிக்கப்போகுது. அதோடை களையெண்டு நினைச்சுக் கீரையளையும் பிடுங்கிப்போடாதையும்,” மீளவும் அவன் அவளுடன் பேசினான். தோட்ட வேலைகள் என்று எதையும் அவள் இதுவரை செய்ததும் இல்லைத்தான். “நீர் விதைச்சா பெரிசா முளைக்கிறதில்லையப்பா, நான் செய்யிறன். நீர் போய் எனக்கொரு தேத்தண்ணி போட்டுக்கொண்டுவாரும்.” தூக்கிக் கட்டின சாரத்துடனும், முறுக்கேறிய மார்புடனும் வியர்க்க வியர்க்க நிற்கும் நாதனுக்குத் தேத்தண்ணியுடன் அவனுக்குப் பிடித்த கடலை வடையையோ அல்லது பகோடாவையோ சேர்த்து அவள் கொண்டுவருவதும், அவனின் கைகள் அழுக்காக இருந்தால் அந்தச் சிற்றுண்டிகளை அவளே அவனுக்கு ஊட்டிவிடுவதுமான காட்சி அவளின் மனதில் ஓடி மறைந்தது. கண்களை நிறைத்த கண்ணீரை தனது வலது முன்கையால் துடைத்துக்கொண்டவள், பூத்துச் செழித்திருக்கும் பயிர்களைப் பார்த்துப் பூரித்துப்போகும் அவனுடன் தானும் சேர்ந்து அகம் மகிழ்ந்துபோவதை நினைத்துக்கொண்டாள். “இண்டைக்கு எல்லாமே உங்கடை தோட்டத்திலை பிடுங்கினதுதான்,” எண்டுசொல்லியபடி அவள் பரிமாறும், மசித்த கீரைக்கறியையும், மாசிக்கருவாடு கலந்த கத்தரிக்காய் பால்கறியையும், தக்காளியுடன் தாளித்துச் செய்த வெந்தயக் குழம்பையும், பருப்புடன் அவன் ரசித்துச் சாப்பிடும்போது அவளுக்கு ஏற்படும் உவகைக்கு ஏதும் ஈடிருப்பதில்லை.

கடவுள் இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளின் மீது மனிதன் கொண்டுள்ள நம்பிக்கைகளின் தொகுப்பாகவும் சொற்கோவைகளால் ஆன இறைவழிபாட்டுத் துதிகளின் வெளிப்பாடாகவும் சடங்குகள் மற்றும் வழிபாட்டு முறைகள் போன்ற செயல்களின் அடிப்படையில் தமிழ்கூறு நல்லுகில் தனிப் பெரும் புகுழுடன் போற்றப்பட்டு வரும் முருக வழிபாடானது தொன்மைக் காலந்தொட்டு அண்மைக்காலம் வரை ஒண்தீந்தமிழ்க் குடிமக்களின் சமய வாழ்வில் இரண்டறக் கலந்து ஒன்றிவிட்ட ஒரு வழிபாட்டு முறையெனில் மிகையன்று முருகவிழாவும் வழிபாடுயும் எவ்வாறு எப்படி படிப்படியாக வளா்ந்ததென்தை இக்கட்டுரை ஆராய்கிறது.

மனிதன் தன் வாழ்நாளில் கடைப்பிடிக்க வேண்டிய மற்றும் கடைப்பிடிக்க கூடாத செயல்களை தொகுத்தும் பகுத்தும் உரைப்பதே பதினெண்கீழ்க்கணக்கு. இந்நூலில் அறத்தோடு அறிவியல் கருத்துகளும் பொதிந்து கிடந்துள்ளன என்று கூறின் மிகையாகாது. இயற்கையைக் கண்டு மனிதன் அஞ்சத் தொடங்கினான். இவ்வச்சத்தின் விளைவாக பண்டைத்தமிழன் ஐம்பூதங்களையும் வழிபட்டான். ஐம்பூத வழிபாட்டால் பருவத்தையும் நேரத்தையும் அளவிடுவதில் அதீத நாட்டம் கொண்டான். ஐம்பூதங்களில் முதன்மையானது நிலம். இயற்கையோடு இயைந்து வாழ்ந்த பண்டைத்தமிழனின் வாழ்வில் இன்றியமையா இடத்தினைப் பெற்ற நிலம் சார் சிந்தனைகளை இலக்கியங்கள் வழி வெளிக்கொணர்வதாக இவ்வாய்வுக் கட்டுரை அமைகின்றது.
“ மதிய உணவுக்கு வாருங்கள் “ சந்திரசேகரன் மறுமொழி அனுப்பினான் சந்திரமதியின் குறுஞ்செய்திக்கு...வழக்கமாய் தொலைபேசி செய்து வரட்டுமா , வீட்டிலதா இருக்க்கீங்களா என்று கேட்டுவிட்டு வருவாள் வெளிநாட்டிலிருந்து ஊருக்கு வந்தபின்... இந்த முறை குறுஞ்செய்தி என்பது ஆச்சர்யமாக இருந்தது . அதுவும் தமிழில் அனுப்பியிருந்தாள்.
சென்ற தை மாதம் முழுவதும் கனடாவில் தமிழ் மரபுத் திங்கள் கொண்டாடப்பட்டது. பல்லின மக்களும் தமிழர்களின் வரலாற்றை அறிந்து கொள்ள இது உதவியாக இருந்தது. அதைத் தொடர்ந்து இந்த பெப்ரவரி மாதம் பல்கலாச்சார நாடான கனடா முழுவதும் உள்ள மக்கள் கறுப்பின வரலாறு, அவர்களின் சமூகங்களின் பாரம்பரியம் மற்றும் அவர்களின் நாட்டிற்கான பங்களிப்புகளை மதிக்கும் கொண்டாட்டங்களில் பங்கேற்கின்றனர். ஒரு இனத்தின் வரலாறு ஆவணப்படுத்தப் படவில்லை என்றால், அந்த இனத்தின் மதிப்புமிக்க பாரம்பரியம் இல்லாமல் போய்விடும். அது இன்றைய உலகின் சிந்தனையில் ஒரு புறக்கணிக்கக்கூடிய காரணியாக மாறி, மெல்ல அழிந்து போய்விடக்கூடும்.
இதுவரையும் பார்த்த நகரங்களில் எது அழகானது என்று கேட்டால் பாம்பேர்க் என்பேன். இது பவேரியா மாநிலத்தில் உள்ள ஜெர்மனியின் புராதன நகர். இந்த நகரம் ஏழு குன்றுகளின் மேல் அமைந்திருக்கிறது. இரண்டு ஆறுகள், அழகான தேவாலயம் , கோட்டை , பெரிய மாளிகையும் அதனருகே தோட்டம் புகையூட்டப்பட்ட பியர், பல உணவகங்கள் எல்லாம் பொடி நடையில் சென்று பார்க்கும் தொலைவில் அமைந்துள்ளது. பல காலமாக முழு நகரமும் யுனெஸ்கோவால் பாதுகாக்கப்படுகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழைய மரத்தால் அமைக்கப்பட்ட மீனவர் குடியிருப்புகள் என்ற கட்டிடங்கள் ஆற்றின் அருகே இங்கு பாதுகாப்பாக உள்ளது. இங்கும் நான்கு கோபுரத்துடன் அமைந்துள்ள தேவாலயம் முக்கியமான கட்டிடம் . ஆயிரம் வருடங்கள் பழமையான இந்த நகரம் அக்காலத்தில் ரோமன் பேரரசர் (Holy Roman Emperor Hentry11) தலைநகராகச் சில காலம் இருந்தது.
“என்ன நீங்கள்… … அப்படியெல்லாம் நீங்கள் யோசிக்க கூட வேண்டாம்… யார் மீதுதான் எனக்கு கோபம் வர முடியும்…? என் மீது வேண்டுமனால், நான் கோபம் அடையலாம்…!”
பேராசிரியர் எம்.எஸ்.எம்.அனஸ் அவர்களின் “மெய்யியலின் பெருங்கனவு சோக்ரடீஸ்” (2023) நூல் ‘அடையாளம்’ (Adaiyaalam India) பதிப்பக வெளியீடாக 256 பக்கங்களில் மிக நேர்த்தியாக வெளிவந்துள்ளது. 'சோக்ரடீஸ் சிந்தனைகளை தமிழ்ப் பண்பாட்டு மரபில் இணைத்த பெரியார் ஈ.வே.ராமசாமிக்கும் கலைஞர் மு.கருணாநிதிக்கும்' இந்நூல் சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. சோக்ரடீஸ் ஐ முன்வைத்து மெய்யியல் என்னும் பெருங்கனவை நூலாசிரியர் காட்சிப்படுத்தியுள்ளார். Philosophy என்பது தமிழில் மெய்யியல், தத்துவம் எனப்படுகின்றது. ஈழத்து தமிழ்ச்சூழலில் மெய்யியல் என்ற சொல்லே உபயோகத்தில் உள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் தத்துவம் என்ற சொல்லே பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றது. ‘க்ரியாவின் தமிழ் அகராதி’ Philosophy என்பதை ‘தத்துவம்’ என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளது. சாமிநாத சர்மா. ரி.எம்.பி. மகாதேவன் போன்றவர்கள் தந்துள்ள நூல்களுக்கு இந்திய தத்துவம், கிரேக்க தத்துவம், மேற்கத்திய தத்துவம் என்றே பெயரிடப்பட்டுள்ளன. மெய்யியல் பேராசிரியர் சோ.கிருஷ்ணராஜா தன்னுடைய ‘விமரிசன முறையியல்’ (1989) நூலின் இந்திய பதிப்பிற்கான (1992) முன்னுரையில் பின்வருமாறு எழுதியுள்ளார். “விமரிசன முறையியல் என்ற பெயரில் இரண்டாம் பதிப்பாகத் தமிழகத்திலிருந்து வெளிவரும் இந்நூலின் பூர்வநாமம் “விமரிசன மெய்யியல்” என்பதாகும். மெய்யியல் என்பதற்கு முறையியல் என்றதொரு விளக்கம் உண்டென்பதாலும், தமிழக வாசகர்களுக்கு மெய்யியல் என்ற பதப்பிரயோகம் அதிக பரிச்சயமற்றதென்பதாலும் பெயர் மாற்றம் செய்யவேண்டியதாயிற்று.” பேராசிரியர் அனஸ் இன் “மெய்யியல் - கிரேக்கம் முதல் தற்காலம் வரை” (2006) என்ற நூலின் இரண்டாம் பதிப்பு (2013) இந்தியாவில் (அடையாளம் பதிப்பகம்) வெளியானபோது, பெயர் மாற்றம் செய்யப்படவில்லை. “மெய்யியலின் பெருங்கனவு சோக்ரடீஸ்” என்பதே இந்நூலினதும் நாமமாக இருக்கின்றது. தத்துவம் எனும் போது அது வெற்றுப்பேச்சு, விதண்டாவாதம் அல்லது வறட்டுச் சிந்தனை அல்லது விளங்கா வியாக்கியானம் என்பதாகவே கவனக்குவிப்புப் பெறுகின்றது. Philosophy என்பது வறட்டுச் சிந்தனைகளின் தொகுப்பல்ல; அது வாழ்க்கை நெறிகளின் பகுப்பும் தொகுப்பும் ஆகும். சோக்ரடீஸ் இன் மெய்யியல் இதனையே உணர்த்தியுள்ளது.
நான் இன்னும் வாழ்கின்றேன். 



பண்டைத் தமிழர்கள் மரபுகளைப் போற்றிக் காப்பவர்களாகவும், தம் முன்னோர் கற்றுக் கொடுத்த பழக்க வழக்கங்களைப் பின்பற்றுபவர்களாகவும் இருந்தனர். இத்தகையச் சிறப்புகளுக்கு எல்லாம் அவர்களின் மரபே காரணமாக அமைந்தது. பழக்கம், வழக்கம், மரபு எனும் மூன்றும் ஒன்றைவிட்டு ஒன்று பிரிக்க இயலாதவை. எளிதில் மாற்ற முடியாதவை. எனவே “பழக்கம் என்பது தனி மனிதனைச் சார்ந்தது என்றும், வழக்கம் என்பது சமுதாயத்தைச் சார்ந்ததென்றும், மரபு என்பது சமுதாயம் விதிக்கும் கட்டுப்பாடு எனவும் கூறலாம்”1 அவ்வகையில் பழக்கம் வழக்கமாகி நிலைபெற்ற மடல் ஏறுதல் குறித்த தரவுகளைத் தொகுத்துரைப்பதாக இக்கட்டுரை அமைகிறது.


கடந்த வாரம் இலங்கை மலையகத்திலிருந்து எழுத்தாளர் மாத்தளை வடிவேலன் அவர்கள் என்னைத் தொடர்புகொண்டு, சிட்னியில் வதியும் மூத்த இசைக்கலைஞர் திருமதி அருந்ததி ஶ்ரீரங்கநாதனின் தொலைபேசி இலக்கத்தை பெற்றுத்தர முடியுமா..? எனக்கேட்டார். அவரது சில பாடல்களை அருந்ததி ஶ்ரீரங்கநாதன் ஏற்கனவே இலங்கை வானொலிக்காக இசையமைத்து பாடியிருக்கிறார். அவற்றின் ஒலிநாடாக்கள் தொடர்பாக பேசுவதற்குத்தான் வடிவேலன் அருந்ததியின் தொடர்புகளைக் கேட்டிருந்தார்.



சமூகச் செயற்பாட்டாளர் பாக்கியநாதன் முருகேசு அவர்கள் காந்தியம் அமைப்பின் ஆரம்பத்திலிருந்து மருத்துவர் ராஜசுந்தரம், கட்டடக்கலைஞரும், நகரத்திட்டமிடல் நிபுணருமான எஸ்.ஏ.டேவிட் (டேவிட் ஐயா) ஆகியோருடன் செயற்பட்டு வந்தவர். தற்போது முகநூலில் தன் சுயசரிதையினை எழுதி வருகின்றார். அதன் அங்கங்கள் 23, 24 காந்தியம் அமைப்பின் தோற்றம் பற்றிக்குறிப்பிடுவதால் முக்கியத்துவம் மிக்கன. அவை முக்கிய் ஆவணங்களும் கூட. அவற்றின் ஆவணச்சிறப்பின் காரணமாக பகிர்ந்து கொள்கின்றேன்.
பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









