திருப்பூர் சக்தி விருது 2024
திருப்பூர் சக்தி விருதுகளை ஆண்டுதோறும் சிறந்த பெண் படைப்பாளிகளுக்கு வழங்கி வருகிறோம். கலை இலக்கிய முயற்சிகளுக்காகவும், சமூக மேம்பாட்டுப்பணிக்காகவும் பல்வேறு துறைகளிலும் இவ்வாண்டும் இவ்விருது வழங்கப்பட உள்ளது. பெண் படைப்பாளிகள் கடந்த இரு ஆண்டுகளில் வந்த நூல்களின் இரு பிரதிகளை( எல்லா பிரிவு படைப்பாக்க நூல்களையும் ) அனுப்பலாம். பிற துறை சார்ந்தவர்கள் பற்றிய விபரக்குறிப்புகளையும் அனுப்பலாம். 31 மார்ச், 2024க்குள் அனுப்பித்தர வேண்டுகிறோம்.
( ஓசோ இல்லம், 94, எம்ஜிபுதூர் 3ம் வீதி , , பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிர் வீதி, , திருப்பூர் 641 604 / 99940 79600 )
திருப்பூர் சக்தி விருது குழு,( (கனவு / முத்தமிழ்ச்சங்கம் )
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.



இலங்கை வடபுலத்தில், தென்மராட்சியில் விநாயகர் – சின்னம்மா தம்பதியரின் புதல்வனாக 1933 ஆம் ஆண்டு பிறந்து, தனது மாணவப் பருவத்திலேயே இலக்கியப்பிரதிகள் எழுதத் தொடங்கி, பாடசாலை ஆசிரியராக , அதிபராக பணியாற்றி , பின்னாளில் தென்னாபிரிக்காவிலும் கல்விச்சேவையாற்றியிருக்கும் கவிஞர் வி. கந்தவனம் அவர்கள், கனடாவுக்கு புலம்பெயர்ந்த பின்னரும் இலக்கிய மற்றும் ஆன்மீகப்பணிகளில் ஈடுபட்டவர்.








'
தமிழ்மொழியில் தோன்றிய படைப்புகளில் ஆசிரியர்கள் மக்களின் சமுதாயப் பிரச்சினைகளையும், வாழ்வியல் நிலைகளையும் நேரில் கண்டும், தன் வாழ்வியல் நிகழ்ந்த நிகழ்வுகளையும் தம் சிறுகதைகளின் மூலம் வெளிப்படுத்துகின்றனர். அத்திறன் மிக்கவர்களில் திருப்பூர் கிருஷ்ணன் இலக்கியத் துறைகள் அனைத்திலும் ஈடுபாடு கொண்டு ஐநூறுக்கு மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். இவரின் சிறுகதைகளில் குடும்ப வாழ்வியல், சமுதாய வாழ்வியலை மையமாகக் கொண்டும், பெரும்பாலான சிறுகதைகளில் பெண் கதைமாந்தரை முதன்மைப்படுத்தி எழுதியுள்ளார். ‘சிவப்பாய்ச் சில மல்லிகைகள்’, ‘பட்டொளி வீசி’ ஆகியன இவரின் சிறுகதைத் தொகுப்புகளாகும். 1981 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ‘சிவப்பாய்ச் சில மல்லிகைகள்’ என்ற சிறுகதைத் தொகுப்பை ஆராய்வதே இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கமாகும்.
ஓர் இனக்குழு வேலூர் பகுதிக்கு இடம்பெயர்ந்து வருகிறது. அவர்கள் தாழ்த்தப்பட்ட சாதியை சார்ந்தவர்கள் என்பதால் அவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். அவர்கள் சாதி சார்ந்த அவர்களின் வேலை நிர்ணயிக்கப்படுகிறது. சமூகத்தால் தாங்கள் அடிமையாக இருந்து கொண்டும் சாதி ரீதியாக கொடுமைப்படுத்திய படுவதைக் கண்டு அந்த சமூகம் காலங்காலமாக மவுனமாக இருந்து கொண்டிருக்கிறது. அப்போதுதான் கல்வி என்பதற்கு பெரிய விடுதலையாக ஆயுதமாக இருக்கிறது என்பதும் தெரிகிறது.
எங்கள் கந்தவனத்தை இறைவன் அழைத்திட்டான்
கவிஞர் வி. கந்தவனம் அவர்கள் எம்மைவிட்டுப் பிரிந்தது எமக்கு, குறிப்பாகக் கனடிய மக்களுக்குப் பேரிழப்பாகும். காங்கேசந்துறையில் நடக்கும் இலக்கிய விழாக்களில், மாணவப்பருவத்தில் குறிப்பாகப் பட்டிமன்றம், கவியரங்கம் போன்றவற்றில் கவிஞரைச் சந்தித்திருக்கின்றேன். ஆனால் இங்கே கனடாவில் அதிபர் பொ. கனகசபாபதி வீட்டில்தான் இவரை முதலில் சந்தித்தேன். உதயன் சிறுகதைப் போட்டியில் தங்கப்பதக்கம் கிடைத்தபோது என்னை அழைத்து வாழ்த்தியிருந்தார். அதன்பின் எழுத்தாளர் இணையத்தின் செயலாளராக எனக்கு ஒரு பதவியையும் பெற்றுத் தந்தார். அதன் பின்தான் வரவேற்புரையோ அல்லது நன்றியுரையோ மேடையில் ஏறிச் சொல்ல எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது.


இந்தக் காலம் தொழில்நுட்ப வளர்ச்சி மிகுந்த காலம். காலத்திற்கு ஏற்ற வளர்ச்சியில் ஒரு மொழி பங்கு கொள்ளும் பொழுதுதான் அம்மொழி வளரும் என்று ஆய்வறிஞர்கள் கருதுகின்றனர். தமிழ் மொழி அவ்வாறே காலத்தைக் கடந்தும் வளர்ந்து வரும் மொழியாக அமைந்துள்ளது. தமிழ் மொழி வளர்ச்சியின் காலப் பரிமாணங்களில் பானையோடு, கல்வெட்டு, ஓலைச்சுவடி, செப்புப் பட்டயம், காகிதச் சுவடி, அச்சாக்கம், மின்னாக்கம், இணையம் ஆகியன அமைந்துள்ளன. அந்த வகையில் இணைய தளத்தில் தமிழ் மொழியின் தரவுகளைப் பதிவேற்றம் செய்வது காலத்தின் கட்டாயம் ஆகும். கல்விசார் வளங்களைப் பல்வேறு இணைய வளங்களில் பல்வேறு மொழிகள் பாதுகாத்து வருகின்றன. அவ்வாறு பாதுகாத்தல் வேண்டும் என்பதைக் கட்டற்ற தன்னார்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அப்படிப்பட்ட ஒரு கல்விசார் வளமாக விக்கிமூலம் அமைந்திருக்கின்றது. இத்திட்டத்தின் வழியாக மொழித்தரவுகளை மேம்படுத்தும் தன்னார்வலர்களுக்கு நிதியுதவி அளித்தும் போட்டிகள் நடத்தியும் ஊக்கப்படுத்தி வருகின்றார்கள் விக்கிமீடியா அறக்கட்டளையினர். இத்திட்டம் கட்டற்ற உரிமத்துடன் கல்விசார் ஆவணங்களைப் பாதுகாக்கும் திட்டமாக விளங்கி வருகின்றது. இது விக்கிமீடியா அறக்கட்டளையின் விக்கித் திட்டங்களுள் ஒன்று. இத்திட்டம் பற்றிய தகவல் இன்னும் பலரைச் சென்றடையவில்லை. விக்கிப்பீடியா சென்றளவில் கூட இத்திட்டம் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னுரை


நான் ஆப்பிரிக்காவில் 17 ஆண்டுகள் வேலை செய்திருக்கிறேன். அதில் 16 ஆண்டுகள் போட்ஸ்வானாவில். எனது வாழ்க்கையின் வசந்த காலம் அது. எனது இளமைக்காலமாக அமைந்தது மட்டுமல்லாது குறிப்பிடத்தக்க சேமிப்பு, நல்ல ஓய்வு நேரம், உயர்ந்த வாழ்க்கைத்தரம், நட்புறவான மக்கள், சட்டம் ஒழுங்கோடு கூடிய அரசியல் ஸ்திரத்தன்மை, மோசமில்லாத காலநிலை என்று நாம் வாழ்ந்த சூழலும் அதற்கு பெரும் பங்கு வகிக்கிறது. எமக்கே இந்த நிலைமை என்றால், ஐரோப்பியர் பற்றி சொல்லத் தேவையில்லை. அங்கு அவர்கள் முதல்தர குடிமக்கள் என்பதோடு வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்கத் தெரிந்தவர்கள் என்பதால் அவர்களுக்கு போட்ஸ்வானா ஒரு சொர்க்கபூமி. அவர்களைப் பற்றி உள்ளூர் வாசிகள் சுவாரசியமாக ஒன்று சொல்வார்கள். குறிப்பிட்ட காலம் வேலை செய்த பின் "ஊருக்கு போகப்போகிறேன், இனியும் உங்களோடு இருந்து மாரடிக்க என்னால் முடியாது" என்று கூறி விட்டு செல்லும் அவர்கள், இரண்டு மாதத்தில் பெட்டி படுக்கையுடன் திரும்ப வந்து நிற்பார்கள் . ஏன் எனக் கேட்டால், "இங்கு வாழ்ந்த எம்மால் அங்கே போய் வாழ முடியாது" என்பார்களாம்.