பதிவுகள் முகப்பு

முள்ளிவாய்க்கால் நினைவு நாள் 2023

விவரங்கள்
- தகவல்: கோகுல ரூபன் -
நிகழ்வுகள்
12 மே 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

உடையார்குடிக் கல்வெட்டும், விளக்கமும், ஆதித்த கரிகாலன் படுகொலையும், கல்கியும் பற்றி...... - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
வ.ந.கிரிதரன் பக்கம்
11 மே 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

உடையார்குடிக் கல்வெட்டில் 'பாண்டியனைத் தலைகொண்ட கரிகால சோழனைக் கொன்று' என்று வருகின்றது. பாண்டியன் தலைகொண்ட கரிகால் சோழனை எதற்காகச் சோழர் உயர் அதிகாரிகள் கொல்ல வேண்டும்? அந்தக் கல்வெட்டின் மேற்படி வசனத்தைப் பார்க்கும் எவரும் தர்க்கரீதியாக ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்கள் பாண்டியனுக்குச் சார்பானவர்களாக இருக்கக் கூடுமென்ற முடிவுக்கு வரலாம். அப்படி வந்தால் அது தர்க்கபூர்வமானதாகவுமிருக்கும். அப்படி கல்கி வந்திருந்தபடியால் ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்களைப் பாண்டிய ஆபத்துதவிகளாக உருவாக்கியிருக்கக் கூடும்.

கல்கி பிராமணர் குலத்தில் பிறந்தவர் என்பதற்காக அவர் திட்டமிட்டே குற்றவாளிகள் என்பதை மறைத்தார் என்று கூறுவது  சரியானதல்ல. நாம் ஒருவரின் சாதியைக் கூறி அறிமுகப்படுத்துவது மனித உரிமை மீறல் என்னும் காலகட்டத்தில் வாழ்கின்றோம். அதன் காரணமாகவும் அவர் குற்றவாளிகளின் சாதியின் பெயரைக் குறிப்பிடாமல் தவிர்த்திருக்கக் கூடும். மக்களுக்கிடையில் சாதிரீதியிலான வேறுபாடுகளை அவ்விதம் குறிப்பிடுவது அதிகரிக்கும் என்று கல்கி கருதியிருக்கலாம்.  மேலும் பொன்னியின் செல்வனில் பல பாத்திரங்கள் பல்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள் வருகின்றார்கள். அவர்களையெல்லாம் சாதிப் பெயர் பாவித்துக் கல்கி அறிமுகப்படுத்தவில்லை. இந்நிலையில் எதற்காகச் சதிகாரர்களின் சாதிப்பெயரைக் கல்கி கூற வேண்டுமென்று எதிர்பார்க்கின்றீர்கள்?

கல்கி தேசியவாதி. காந்தியவாதி. இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை சென்ற ஒருவர். அவரது 'தியாகபூமி'யில் தீண்டாமைக்கெதிராகக் குரல் கொடுத்தவர். பெண் உரிமைக்காகக் குரல் கொடுத்தவர். தேசிய விடுதலைக்காகக் குரல் கொடுத்தவர். அவ்விதமான ஒருவரைச் சாதி வெறியராகக் காட்டுவது ஏற்றுக்கொள்ள முடியாதது.

மன்னன் மன்னன் என்னும் யு டியூப்பில் நன்கறியப்பட்ட அரசியல் ஆய்வாளார்  'பிராமணர்கள் திட்டமிட்டு மாற்றிய சோழ வரலாறு என்னும் காணொளியில் எதிரிகள் , துரோகிகள் பற்றி கூறும் விளக்கம் சிறுபிள்ளைத்தனமானது. துரோகிகள் என்றால் கூட இருந்து குழி பறிப்பது என்கின்றார். எதிரிகள் என்றால் எதிரி நாட்டில் அல்லவா  இருக்க வெண்டும் என்கின்றார். கூட இருப்பவன் எதிரிக்கு உளவாளியாக இருந்து செயற்படலாம் என்பதை ஏனோ மறந்து விட்டார்?  பாண்டியனுக்கு ஆதரவாகச் சோழர் மத்தியில் இருந்து செயற்பட்டாலும் அவர்கள் பாண்டிய ஆபத்துதவிகளாகக் கருதப்படலாம்.  இதை அவர் மறந்து விட்டார். இங்கு ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்கள் ஏதோ ஒரு காரணத்தால் சோழர்களை வெறுப்பவர்களாக இருந்திருக்கக் கூடும்.  உண்மையில் குற்றவாளிகள் நால்வரும் சகோதரர்கள் என்றுதான் உடையார்குடிக் கல்வெட்டு கூறுகின்றது.  ஒரு குடும்பத்தவர்கள் சோழரை வெறுப்பதற்கு ஏதாவது முக்கிய காரணம் இருந்திருக்கக் கூடும். ஏதோ ஒரு வகையில் சோழரால் பாதிக்கப்பட்டவர்களாக இருந்திருக்கக் கூடும். அதனால் பாண்டியனுடன் இணைந்து பாண்டியனுக்கு உளவாளிகளாகச் செயற்பட்டவர்களாக இருந்திருக்கக் கூடும்.  

மேலும் படிக்க ...

பகுப்புமுறைத் திறனாய்வினடிப்படையில் குரு அரவிந்தனின் சிறுகதைகள்

விவரங்கள்
- முகம்மது நூர்தீன் பாத்திமா றிஸாதா -
இலக்கியம்
10 மே 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- எழுத்தாளர் ‘குரு அரவிந்தன் வாசகர் வட்டம்’ நடத்திய  உலகளாவிய திறனாய்வுப் போட்டி - 2023இல்   முதற்பரிசு பெற்ற கட்டுரை. -


குரு அரவிந்தன் அவர்கள் சமகாலத்து புலமை பெற்ற எழுத்தாளர்களில் ஒருவர். தமிழ் இலக்கிய படைப்புக்களில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்தவர் என்பதோடு பல துறைகளிலும் சிறந்து விளங்குபவர். இவர் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை மாவிட்டபுரத்தை பிறப்பிடமாகக் கொண்டிருப்பினும் தற்போது புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்ந்து வருகிறார். 'அணையா தீபம்' என்ற சிறுகதையுடன் ஈழநாடு வார மலரில் எழுத்துலகில் புகுந்த இவர் சிறுகதை, கட்டுரை, நாவல், ஒலிப்புத்தகம், மேடை நாடகம், திரைக்கதை போன்ற பல துறைகளிலும் சிறந்து விளங்கி தமிழ் இலக்கிய உலகை அலங்கரித்து வருகிறார். அறிவியல் சார்ந்த படைப்புக்களையும் தந்துள்ளதோடு பல விருதுகளையும் வென்று குவித்த ஒரு ஜனரஞ்சக எழுத்தாளர் ஆவார்.

குரு அரவிந்தன் அவர்களினுடைய சிறுகதை ஒன்றை முதன் முதலில் சிறுகதைகளுக்காக திறக்கப்பட்ட வாட்ஸ்அப் குழுமம் ஒன்றிலேயே காணக் கிடைத்தது. அன்றிலிருந்து குரு அரவிந்தன் அவர்களுடைய சிஷ்யாய் அவருடைய சிறுகதைகளை தேடித் தேடி வாசிப்பதில் நேரத்தை செலவிட்டேன். அவர் கதையை தொடங்கியிருக்கும் பாங்கும் அதன் முடிவில் வைத்திருக்கும் எதிர்பாரா திருப்பமும் என்னை மிகவும் ஈர்த்தது. அனேகமான கதைகள் மிகவும் சுவாரஷ்யமாகவும் விறுவிறுப்புடனும் நகர்த்திச் செல்லப்பட்டிருப்பதைக் கண்டு சில நேரங்களில் ஆசிரியரின் கதைகளில் வரும் கதாபாத்திரமாகவே என்னை நான் மாற்ற முயற்சித்திருக்கிறேன். அந்தளவுக்கு அவரின் படைப்புக்கள் எனக்குள் ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தின என்பதை மறுதலிக்க முடியாது. குரு அரவிந்தன் அவர்களினுடைய 'அப்பாவின் கண்ணம்மா' சிறுகதையானது என்னை மிகவும் ஈர்த்த ஒரு படைப்பாகும்.

அந்த வகையில் நான் எழுத விழைந்த இக்கட்டுரையின் பிரதான நோக்கம் குரு அரவிந்தன் அவர்களினுடைய  படைப்புக்களை பகுப்புமுறை அடிப்படையில் அலசுவதாகும். அதற்காக நான் சிறுகதைகளை தேர்ந்தெடுத்திருக்கிறேன். குரு அரவிந்தன் அவர்களினுடைய தமிழ்ப் புலமையை பகுப்பாய்வு செய்வதில் எவ்வித நியாயமுமில்லை. ஏனெனில் அதில் தவறுகளை காணவே முடியாத அளவுக்கு அவரின் கற்பனை மற்றும் சொல்லாடல் திறன் பரந்து விரிந்து இருப்பதாகும். இருந்தாலும் ஒவ்வொரு கதையின் மூலமும் அவர் வெளிப்படுத்தியிருக்கும் யதார்த்த மற்றும் கற்பனை விடயங்களை ஒரு ரசிகையாய் தானும் கற்றுக் கொள்ள முனைவதையிட்டு பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

மேலும் படிக்க ...

பதினைந்தாவது குறும்பட விருது விழா - சுப்ரபாரதிமணியன் -

விவரங்கள்
- சுப்ரபாரதி மணியன் -
சுப்ரபாரதிமணியன் பக்கம்
09 மே 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

30/4/23, காலை 10 மணி ஞாயிறன்று திருப்பூரில் நடைபெற்ற பதினைந்தாவது குறும்பட விருது விழாவில்  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த குறும்பட, ஆவணப்பட இயக்குனர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு மக்கள் மாமன்றத் தலைவர் சி. சுப்ரமணியன் தலைமைதாங்கினார்.  

 திருப்பூர் முத்தமிழ்ச் சங்கம் தலைவர் கே பி கே செல்வராஜ் விருதுகளை அளித்து சிறப்புரை ஆற்றும் போது “இன்றைய இளைஞர்களின் கலை வெளிப்பாட்டின் முக்கிய அம்சமாக  குறும்படங்கள் அமைந்துள்ளன. திரைப்பட முயற்சிகளுக்குச் செல்லவும் நுழைவாயிலாக சிலருக்கு அமைகின்றன. இலக்கியப் படைப்புகளை எடுத்துக் கொண்டு குறும்படங்களாகவும்., திரைப்படங்களாகவும் மாற்றும் ரச வித்தையில்  தேர்ச்சி கண்டவர்கள் பலர்  வெற்றி பெறுகிறார்கள். அதற்கு இலக்கிய வாசிப்பு என்பது மிகவும் அவசியமாகிறது “ என்றார்.

”ஆவணப்படங்களும் குறும்படங்களும் சந்திக்கும் புள்ளி  “ என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்க நிழ்ச்சியில் விருது பெற்ற ஆவணப்பட இயக்குனர் கோவை மயன், குறும்பட இயக்குனர் தாரபுரம் புகழ் , மேட்டுப்பாளையம் ஓவியர்  தூரிகை சின்னராஜ், எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் ஆகியோர் பங்கேற்று

“ஆவணப்படங்களின் நிஜத்தன்மையும், குறும்படங்களின் புனைவுத்தன்மையும் கொண்ட படைப்புலகம் தேவையாக இருக்கிறது ”  என்ற கருத்துக்களை முன்வைத்தனர்.

குறும்பட விருதுகளை புகழ், கிளமண்ட் விக்டர், திருமூர்த்தி, பெ. மணிவண்ணன்,மோகன் பிரசாத்  உட்பட 8 பேர் பெற்றனர். ஆவணப் படத்திற்கான விருது மயன் அவர்களுக்கு வழங்கப்பட்டது கொங்கு பகுதியைச் சார்ந்த 8 நாடகக் கலைஞர்களுக்கு பாராட்டு நடைபெற்றது.

மேலும் படிக்க ...

ஒரு கடிதம் - ஹிதுமதெ ஜீவிதெ' (Hitumate Jeevithe) - முருகபூபதி , அவுஸ்திரேலியா -

விவரங்கள்
Administrator
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
08 மே 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அன்புள்ள நண்பர் கிரிதரனுக்கு வணக்கம். தங்கள் பதிவுகளில், ஹிதுமதெ ஜீவிதெ' (Hitumate Jeevithe) என்றே அறியப்பட்டிருந்த நபர் பற்றி நீங்கள் எழுதியிருந்த குறிப்புகளை படித்தேன். உண்மைச் சம்பவங்களின் பின்னணியில் இலங்கையில் சில சிங்கள திரைப்படங்கள் முன்னர் வெளிவந்துள்ளன. ஹ◌ாரலக்‌ஷே ( நான்கு இலட்சம் ) தடயம ( வேட்டை ) உதுமானெனிய ( மேன்மைதங்கிய ) முதலானவை அவற்றில் முக்கியமானவை. இவற்றில் காமினி பொன்சேக்கா, ஜோ அபேவிக்கிரம, ரவீந்திர ரந்தெனிய, சுவர்ணா மல்லவராச்சி முதலான மிகச்சிறந்த சிங்கள நடிகர்கள் நடித்திருந்தனர். அந்த வரிசையில் நீங்கள் குறிப்பிட்டுள்ள படுகாகஹே டொன் சுமதிபாலா எமது இலங்கை சமூகத்தில் அனுதாபத்திற்குரிய மனிதன்.

அந்தச்சம்பவம் 1972 இல் நடப்பதற்கு முன்னர் 1971 இல் கதிர்காமத்திலும் ஒரு அழகுராணி ( பிரேமாவதி மனம்பேரி ) அவ்வாறு பாலியல் வன்முறைக்கு இலக்காகி கொல்லப்பட்டு புதைக்கப்பட்டாள். இவள் பற்றி கங்கை மகள் என்ற சிறுகதையும் எழுதியிருக்கின்றேன். இச்சிறுகதை சிங்களத்திலும் மொழிபெயர்க்கப்பட்டது. இரண்டு சம்பவங்களும் அடுத்தடுத்து இரண்டு வருடங்களில் நடந்திருப்பவை.

மேலும் படிக்க ...

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் வாசிப்பு அனுபவப்பகிர்வு ( மெய்நிகர் நிகழ்ச்சி )

விவரங்கள்
- முருகபூபதி -
நிகழ்வுகள்
08 மே 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மெய்நிகர் இணைப்பு: Join Zoom Meeting
Meeting ID: 811 6686 6803  | Passcode: 519729

மெய்நிகர் இணைப்பு: Join Zoom Meeting

Meeting ID: 811 6686 6803  | Passcode: 519729

மேலும் படிக்க ...

அறிவியற் சிறுகதை: அழைப்பு! - அருண்.நல வேந்தன் – மலேசியா -

விவரங்கள்
ு! - அருண்.நல வேந்தன் – மலேசியா -
சிறுகதை
08 மே 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நாசா விண்வெளி ஆய்வகம்.குளிர்ந்த அறையின் கதவுகளை மிக வேகமாக திறந்து உள்ளே வந்தார் டாக்டர் ரொனால்ட்.

“மீண்டுமா..?”

டாக்டர் ஜேரிக்கு ஒன்றும் புரியவில்லை.

“எப்படி?”

“இதோ பாருங்கள்....”

கையில் இருந்த டேப்பில் காட்டுகிறார் உதவி ஆய்வாளர் டாக்டர் ரொனால்ட்.

FRB இல் தொடர்ந்து வரும் சமிக்ஞையின் குறியீடுகள்.

“வாவ்...இதை எதிர்ப்பாக்கவில்லை”

பத்து ஆண்டுகளில் இதுவே முதல் முறை. இத்தனை காலம் காத்திருந்தது வீண் போகல...! ரொனால்ட் .

கடந்த சில மாதங்கள் முன்பு , வானியலாளர்கள் அதிவிரைவு விண்வெளி சமிக்ஞை வானொலியில் (FRB) வழக்கத்திற்க்கு மாறாக சில சமிக்ஞையை கண்டுள்ளனர், அவை ஆரம்பத்தில் ஒரு முறை தோன்றிய சாதாரனமான வானொலி சமிக்ஞையாக காணப்பட்டன. FRB களில் தொடர்ந்து ஏற்படும் மாற்றம் விண்வெளி ஆய்வகத்துகே ஒரு பிரமிப்பைக் கொடுத்தது.

மேலும் படிக்க ...

ஹிதுமதெ ஜீவிதெ என்றழைக்கப்பட்ட படுகாகஹே டொன் சுமதிபாலா! - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
07 மே 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அண்மையில் இம்மனிதனைப்பற்றிய செய்திக்குறிப்பொன்றை வாசித்தேன். இவனது வாழ்க்கை என் கவனத்தை ஈர்த்தது. நமது தமிழ்ப்பட நாயகர்கள் பலர் திரைப்படங்களில் செய்ததைத்தான் இவன் தன் வாழ்க்கையில் செய்திருந்தான். அதனால் இவன் தன் வாழ்வின்  43 வருடங்களைச் சிறையில் கழித்திருந்தான். பின்னர் விடுதலையான இவன் நோய் வாய்ப்பட்டு இறந்திருந்தான். அது பற்றிய செய்தியினை ஜூலை 17, 2022 வெளியான டெய்லி நியூஸ் (இலங்கை) வெளியிட்டிருந்தது.

இவன் களுத்துறை மாவட்டத்தில் பிறந்தான். இவனது பெயர் படுகாகஹே டொன் சுமதிபாலா.  ஆனால் இவன்  'ஹிதுமதெ ஜீவிதெ' (Hitumate Jeevithe) என்றே அறியப்பட்டிருந்தான்.  இவனுக்கு ஒரே யொரு சகோதரி. அழகுமிக்க அச்சகோதரி 1972 புது வருட தினத்தில் நடைபெற்ற அழகுராணிப் போட்டியில் வெற்றி பெற்றிருந்தாள். ஆனால் அவனது சகோதரி அழகு ராணிப் போட்டியில் வெற்றி பெற்றபின் வீடு திரும்பவில்லை.  அவளுக்கு என்ன நடந்தது?  களுத்துறைக் காவல்துறை அதிகாரி  ஒருவன் இவனது சகோதரியைக் காரில் கடத்தி,  ஹொட்டலொன்றுக்குக் கொண்டு சென்று பாலியல் வன்முறைக்குள்ளாக்கிய பின் கொலை செய்திருக்கின்றான். இதனை அறிந்த ஹிதுமதெ ஜீவிதெ அந்தக் காவல் துறை அதிகாரியைக் கொன்றிருக்கின்றான். அதற்காக அவனுக்குத் தூக்குத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்திருக்கின்றார். சிறையிலிருந்தபோது இவன் ஐந்து தடவைகள்  தப்பிச் சென்றிருக்கின்றான். தனது சகோதரியின் மரணத்துடன் தொடர்புள்ளவர்களாகக் கருதப்பட்ட மேலும் ஐவரைக் கொலை செய்திருக்கின்றான்.

1978இல் இவனது மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. மரண தண்டனையை இலங்கை அரசு ஒழித்ததே அதற்குக் காரணம். பின்னர் பல வருடங்கள் சிறையிலிருந்த இவன் 2018இல் ஜனாதிபதியின் பொது மன்னிப்பால் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றான். விடுதலையானதிலிருந்து இவன் குளியாப்பிட்டியிலிருக்கும் பெளத்த ஆலயமொன்றில் தங்கி வாழ்ந்திருக்கின்றான்.

மேலும் படிக்க ...

சிறுகதை: முட்டுவேன் கொல்? தாக்குவேன் கொல்? - வ. ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ. ந.கிரிதரன் -
சிறுகதை
07 மே 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

-  7.5.2023 ஈழநாடு வாரமலரில் வெளியான சிறுகதை -

"முட்டுவேன் கொல்? தாக்குவேன் கொல்?
ஓரேன்! யானும் ஓர் பெற்றி மேலிட்டு
ஆஅ ஒல்லெனக் கூவுவேன் கொல்,
அலமரல் அசை வளி அலைப்ப, என்
உயவு நோய் அறியாது துஞ்சும் ஊர்க்கே?" - "குறுந்தொகை 28, ஔவையார் -

'டொராண்டோ மாநகரின் 'தோர்ன்கிளிவ் பார்க் டிரை'விலிருந்த தொடர்மாடிக்கட்டடங்களிலொன்றில்தான் கடந்த ஆறுவருடங்களாக அமுதா வசித்து வருகின்றாள். இலங்கையிலிருந்து முள்ளிவாய்க்காலில் யுத்தம் மெளனிக்கப்பட்டதற்குப்பின்னால் கனடா வந்த தமிழர்களில் அவளும் ஒருத்தி. அவளது நல்ல காலம் அவளுக்கு அவளது இருப்பிடத்துக்கு அண்மையில் எக்ளிண்டன் வீதியும், டொன்மில்ஸ் வீதியும் சந்திக்கும் சந்திக்கண்மையிலிருந்த 'புளூ ஷிப்' நிறுவனங்களிலொன்றான 'கலக்டிகா'வில் வேலை கிடைத்திருந்தது. உலகின் பல பாகங்களில் கிளைகளைக்கொண்ட பெரியதொரு தொழிற்சாலை. கணனிக்குரிய  'பவர் சப்ளை', 'மெமரி கார்ட்' போன்ற பல பொருட்களைத்தயாரிக்கும் நிறுவனம். ஆயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் மூன்று 'ஷிவ்ட்டு'களில் வேலை செய்துகொண்டிருந்தார்கள். அமுதா வேலை செய்வது மாலை நேர 'ஷிவ்ட்'. மூன்று மணிக்குத் தொடங்கும் வேலை இரவு பதினொரு மணிக்கு முடிவடையும். வேலை முடிந்ததும் டொன் மில்ஸ் வழியாகச் செல்லும் நம்பர் 25 பஸ்ஸில் தோர்ன்கிளிவ்  பார்க் சென்று அவளது இருப்பிடத்துக்கு அண்மையிலிறங்கிச் செல்வது அவளது வழக்கம்.

மேலும் படிக்க ...

புத்தனுக்குக் கவிதைத் தூது - செ.சுதர்சன் -

விவரங்கள்
- செ.சுதர்சன் -
கவிதை
05 மே 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மன்னவர் குலத்தே தோன்றி;
மனங்களை ஆட்சி செய்யும்;
பன்னரும் ஞான வானே!
பரமனே! புத்தா! போற்றி!
உன்னரும் உருவை எண்ணி;
ஊறிடும் கவிதை மாலை,
என்னரும் சொல்லால் கோர்த்து;
எடுத்தொரு தூது விட்டேன்...!

பூரணை தன்னில் பூத்து;
புவனியை உய்க்க வந்த
ஆரணப் பொருளே! எங்கள்
அருந்தவ முனியே! கேளும்..!
காரணம் இன்றி எங்கள்
காணிகள் பறித்தார்; உம் பேர்
பாராயணங்கள் பண்ணி;
பலப்பல சிலைகள் வைத்தார்!

மேலும் படிக்க ...

பண்டைத் தமிழர்களின் ஆலய, துறைமுக, கோ நகரங்கள் , இந்துக்களின் கட்டடக்கலை மற்றும் நகர அமைப்பும் அதில் சாதியின் பாதிப்பும்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
கட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு
05 மே 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- எழுநா இதழில் வெளியான கட்டுரை -

பகுதி 1 : பண்டைத் தமிழர்களின் ஆலய, துறைமுக, கோ நகரங்கள்

பண்டைய தமிழர்கள் தரைவழியாகவும் கடல்வழியாகவும் பாரதத்தின் ஏனைய நகரங்களுடன் மட்டுமல்ல கடல்கடந்தும் ஏனைய நாடுகளுடனெல்லாம் வணிகம் செய்து சிறப்புற்று விளங்கியதை வரலாறு கூறும். யவனர்கள், அரேபியர்களெல்லாம் கடல்கடந்து தமிழகம் வந்து வர்த்தகம் செய்ததை வரலாற்றறிஞர்களின் பிரயாணக் குறிப்புகள், பண்டையத் தமிழ் இலக்கியங்களில் காணப்படும் தகவல்கள், அகழ்வாராய்ச்சிகள் மற்றும் வரலாற்றுச் சின்னங்களெல்லாம் புலப்படுத்தும். கிழக்கிந்தியத் தீவுகள் கூட்டத்தை உள்ளடக்கிய சாவகம் (இன்றைய இந்தோனேஷியா), ஈழம், காழகம் (பர்மா) போன்ற நாடுகளுடனெல்லாம் தமிழர்களின் வர்த்தகம் கொடி கட்டிப் பறந்தது.

யவனர்கள், அரேபியர்களெல்லாம் தமிழகத்துடன் வியாபாரம் செய்து வந்தார்கள். இவர்களைப் பற்றி ‘பயனற வறியா யவனர் இருக்கையும் / கலந்தரு திருவிற் புலம் பெயர் மாக்கள் / கலந்தினி துறையும் இலங்குநீர் வரைப்பும்’ எனவும், ‘மொழி பெயர் தேத்தோர் ஒழியா விளக்கம்’ எனவும் சிலம்பும், ‘மொழிபல பெருகிய பழிநீர் தேஎத்துப் / புலம்பெயர் மாக்கள் கலந்தினி துறையும் / முட்டாச் சிறப்பிற் பட்டினம்’ எனப் பட்டினப்பாலையும் கூறும். கிரேக்கர்களும், ரோமர்களும் யவனர்களென சிறப்புப் பெயர் பெற்றிருந்தார்களென மயிலை சீனி. வேங்கடசாமி கூறுவார். வணிகத்தின் பொருட்டுத் தமிழகம் வந்த யவனர்கள் வணிகத்தில் மட்டுமின்றி வேறு சில தொழில்களைச் செய்ததையும் அறிய முடிகிறது. மதுரையின் கொற்கைத் துறைமுகம் தமிழ் வாணிபத்தில் சிறந்து விளங்கியது. கோட்டை மதில்களுடன் விளங்கிய மதுரையின் கோட்டை வாயில்களை யவன வீரர்கள் காத்து நின்றதை ‘கடிமதில் வாயில் காவலிற் சிறந்து / அடல்வாள் யவனர்க்கு அயிராது புக்கு’ எனச் சிலம்பும், ‘மந்திகை வளைஇய மறிந்துவீங்கு செறிவுடை / மெய்ப்பை புக்கு வெருவருந் தோற்றத்து / வலிபுணரி யாக்கை வன்கண் யவனர்’ என முல்லைப் பாட்டும் கூறும். இதுதவிர யவனர்கள் தச்சுத் தொழிலிலும்  சிறந்து விளங்கியதை மணிமேகலையின் ‘யவனத் தச்சர்’ பற்றிக் கூறும் வரிகள் தெரிவிக்கும். புதுச்சேரிக்கு அண்மையில் அரிக்கமேடு என்னும் பகுதியில் நிகழ்ந்த அகழ்வாரய்ச்சிகள் யவனர்கள் கண்ணாடி மணிகளைச் செய்வதில் சிறந்து விளங்கியதை எடுத்துக் காட்டும்.

மேலும் படிக்க ...

நுட்பம் (1980/1981) - மொறட்டுவைப் பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்க வெளியீடு! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
04 மே 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நான் மொறட்டுவைப் பல்கலைக் கழகத்தில் கட்டடக்கலை படித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் 80/81ற்கான தமிழ்ச் சங்கத்தில் இதழாசிரியர் குழுத்தலைவராக இருந்திருக்கின்றேன். அப்போது வெளியான 'நுட்பம்' சஞ்சிகைக்கான  இணைய இணைப்பிது. ஆர்வமுள்ளவர்கள் வாசிக்கலாம். அட்டைப்படத்தை வடிவமைத்தவர் நண்பர் சிவசாமி குணசிங்கம் (கட்டடக்கலைஞர், ஆஸ்திரேலியா). உற்றுப்பார்த்தீர்களென்றால் 1980இல் 1981 தெரியும். இவ்விதமான வித்தைகள் செய்வதில் வல்லவர் குணசிங்கம்.

https://drive.google.com/file/d/176wFekyBaWU-8KszyzSSzNWZvjbopoI8/view?usp=sharing

மேலும் படிக்க ...

எழுத்தாளர் முனியப்பதாசன் எழுதிய தொடர்கதை - 'காற்றே நீ கேட்டிலையோ? ' - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
04 மே 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இலங்கைத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த எழுத்தாளர்களில் ஒருவர் முனியப்பதாசன். இவர் பற்றி எழுதியவர்கள் இவரது சிறுகதைகள் பற்றியே குறிப்பிட்டுள்ளார்கள். யாருமே இவர் தொடர்கதை எதுவும் எழுதியதாகக் குறிப்பிட்டதில்லை. ஆனால் இவர் தொடர்கதையொன்றும் எழுதியுள்ளார். அது கடல் தொழிலாளர்களை மையமாகக் கொண்டு படைக்கப்பட்ட தொடர்கதை. அது ஈழநாடு பத்திரிகையில் தொடராக வெளியான தொடர்கதை. அதன் பெயர் - காற்றே நீ கேட்டிலையோ? தொடர்கதை முழுமையடையவில்லை. நான்கு அத்தியாயங்களையே என் தேடலில் காண முடிந்தது. இருந்தாலும் இது முக்கியமானதோர் அவதானிப்பு. இதுவரையில் யாருமே முனியப்பதாசனின் இத்தொடர்கதை பற்றிக் கூறாததால் இப்பதிவு  முக்கியத்துவம் மிக்கது. ஆவணச்சிறப்பும் மிக்கது. இத்தொடர்கதை ஈழநாடு பத்திரிகையின் 6.10.1966 பதிப்பில் ஆரம்பமாகி , ,28.10.1966 பதிப்பு வரையில் , மொத்தம் நான்கு அத்தியாயங்கள் வெளியாகியுள்ளது.

ஈழநாடு (வியாழக்கிழமை) - 6.10.1966 -  காற்றே நீ கேட்டிலையோ? - முனியப்பதாசன் - அத்தியாயம் ஒன்று - https://noolaham.net/project/404/40379/40379.pdf
ஈழநாடு (வியாழக்கிழமை) - 13.10.1966 -  காற்றே நீ கேட்டிலையோ? - முனியப்பதாசன் - அத்தியாயம் இரண்டு - https://noolaham.net/project/404/40386/40386.pdf
ஈழநாடு (வெள்ளிக்கிழமை) - 21.10.1966 -  காற்றே நீ கேட்டிலையோ? - முனியப்பதாசன் - அத்தியாயம் மூன்று - https://noolaham.net/project/404/40393/40393.pdf
ஈழநாடு (வெள்ளிக்கிழமை) - 28.10.1966 -  காற்றே நீ கேட்டிலையோ? - முனியப்பதாசன் , அத்தியாயம் நான்கு - https://noolaham.net/project/404/40399/40399.pdf

எழுத்தாளர் முனியப்பதாசன் பற்றி...

எழுத்தாளர் முனியப்பதாசனின் எழுத்துப்பிரவேசம் 1964இல் கலைச்செல்வி சஞ்சிகை நடத்திய சிறுகதைப்போட்டியில் இவரது 'வெறியும் பலியும்' சிறுகதை முதற்பரிசு பெற்றதுடன் ஆரம்பமாகியது. கடற் தொழிலாளர் சமூகத்தைப் பின்னணியாகக் கொண்டு படைக்கப்பட்ட சிறுகதை. கலைச்செல்வியின் ஆசிரியரும், பதிப்பாளருமான சிற்பி சரவணபவன் எழுத்தாளர்கள் பலரை உருவாக்கியுள்ளார். அவர்களில் இவருமொருவர். இவரது இயற்பெயர் தாமோதரம்பிள்ளை சண்முகநாதன். யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர். யாழ் இந்துக் கல்லூரியின் அருகிலிருந்த ஒழுங்கைப்பகுதியில் வாழ்ந்ததாக அறிகின்றேன். இவரது கதைகள் ஈழநாடு, சுதந்திரன், கலைச்செல்வி, விவேகி போன்ற பத்திரிகை, சஞ்சிகைகளில் வெளியாகின. ஈழநாடு ஆசிரியர் ஹரன் இவரது எழுத்தின்பால் பெரு மதிப்பு மிக்கவரென்றும், அவரே இவரது சிறுகதையொன்றை ஆனந்தவிகடனுக்குக் கொண்டு சென்று கொடுத்ததாகவும், அது விகடனில் முத்திரைக்கதையாக வெளியாகியதாகவும் மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க ...

மேலாண்மை பொன்னுச்சாமியின் சிறுகதைகளில் உழைக்கும் பெண்கள்! - முனைவா் த. அமுதா ,கௌவர விரிவுரையாளா், முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரி(த), வேலூா் -2 -

விவரங்கள்
- முனைவா் த. அமுதா ,கௌவர விரிவுரையாளா், முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரி(த), வேலூா் -2 -
ஆய்வு
04 மே 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

          -  எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி -

முன்னுரை
இலக்கியம் என்பது மனிதனைப் பற்றியும் இயற்கையைப் பற்றியும் வெளியாகும் வெறும் சொல் மட்டும் இல்லை. மனித வாழ்வு எத்தனை அளவெல்லாம் விரிவடைய முடியுமோ அதனை விளக்கிக் காட்டும் மெய்யுரை. அழகான மனோநிலைகள். அரிதரிதான உணர்ச்சிகள், மகத்தான கனவுகள், ஆழ்ந்தகன்ற சித்தாந்தம், அறிவரிய இலட்சியம் போன்றவைகளை உள்ளடக்கிய அமுதசுரபியே இலக்கியம். இலக்கியத்தைப் படைக்க விரும்பும் படைப்பாளிகள் சமூகத்தில் காணலாகும் ஏற்றத்தாழ்வுகள், குறைநிறைகள், வாழ்க்கைப் போக்குகள் ஆகிய பலவற்றையும் கண்டு அவற்றைத் தமது சொந்தப்பட்டறிவோடு இணைத்துக் கூறுவர். இவ்வகையில், மிகச் சிறந்து விளங்கியவர் மேலாண்மை பொன்னுச்சாமி ஆவார். இவர் எழுதிய சிறுகதைகளில் பெண்களின் அவல நிலைகளை எடுத்துக்காட்டுகிறார். இவர் பொருளாதாரத்தின் பங்களிப்புதான் பெண்ணுரிமையின் முதல் படிக்கட்டு. எந்தெந்தச்சமூகங்களில் பெண்கள் உழைப்பதற்கு ஊக்கப்படுத்தப்படுகிறார்களோ அந்தச் சமூகங்களின் பொருாதாரம் விரைவாக வளரும்.  சமூக நீதியின் முதல் விதை அப்போதுதான் முளைக்கும் என்று சொல்லுகின்றார். இவர் தமது சிறுகதை இலக்கியங்களில் காலந்தோறும் உழைக்கும் பெண்களை படம் பிடித்து காட்டுவதை விளக்குவதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.

பெண்ணியம்
17 ஆம் நூற்றாண்டில்தான் பெண்ணியம் என்ற சொல் முதன் முதலில் பயன்படுத்தப்பட்டது. அப்போது அது என்ன பொருளில் வழங்கியதோ அதனின்றும் இப்போது அது முற்றும் மாறுபட்டதாகவே அமைந்துள்ளதை பெண்ணியம் என்ற சொல் பெண் விடுதலை, பெண்ணடிமை, பெண் கல்வியின்மை, பெண்ணுரிமை முதலிய பல பொருள் தருவதாக இன்று பொருள் கொள்ளப்படுகிறது. பெண்களை அடிமைத்தனத்திலிருந்து மீட்டு அவா்களுக்குக் கல்வியின் மூலம் விழிப்புணர்வு ஊட்டி சமூகத்தில் ஆண்களுக்கு இணையான மதிப்பினைப் பெற்றுத் தருவ பெண்ணியமாகும்.

மேலும் படிக்க ...

குறிஞ்சிப்பாட்டு சுட்டும் 'பிறங்குமலை மீமிசைக்கடவுள் முருகப்பெருமான்' - - முனைவர் மு.சுதா, பேராசிரியர், தமிழ்த்துறை, அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி-3 -

விவரங்கள்
- முனைவர் மு.சுதா, பேராசிரியர், தமிழ்த்துறை, அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி-3 -
ஆய்வு
04 மே 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

தமிழ்க்கடவுளாம் முருகப்பெருமான் பற்றிய குறிப்புகளைத் தொல்காப்பியம் சங்கஇலக்கியம் போன்ற பழந்தமிழ் இலக்கண இலக்கியங்களில் காணமுடிகின்றன. வரலாற்றுக் காலத்திற்கு முன்னரேயே முருகவழிபாடு இருந்தமையைத் திறனாய்வாளர்கள் சுட்டுகின்றனர். ”சேயோன் மேய மைவரை உலகமும்”(தொல்.பொருள்.அகத்.நூ-5) எனத் தொல்காப்பியம் மலை சார்ந்த பகுதியான குறிஞ்சி நிலத்திற்குரிய கடவுளாக முருகனைச் சுட்டுகிறது. குறிஞ்சி நிலத்திற்குரிய தெய்வமாகப் போற்றப்பட்டு வழிபடப்பட்டு மக்களின் வாழ்வியலோடு பின்னிப்பிணைந்த முருகக்கடவுள் பற்றிய செய்திகளைச் சங்க இலக்கியங்கள் முழுவதும் காணமுடிகின்றன.

“உருவப் பல்தேர் இளையோன் சிறுவன்
முருகற் சீற்றத்து உருகெழு குருசில்”(பொருந.131-132)

எனவும்,

“முருகன் நற்போர் நெடுவேள் ஆவி”(அகம்.1)

என்றும்,

“அணங்குடை முருகன் கோட்டத்து“(புறம்.299)

எனவும் பல இலக்கியச் சான்றுகளைச் சுட்டிச் செல்லலாம். வெறியாட்டு என்ற நிகழ்வு முருகவழிபாடாகச் சுட்டப்படுவதையும் அகநூல்களில் காணமுடியும். இவ்வாறு மலையும் மலைசார்ந்த நிலப்பகுதியான குறிஞ்சி நிலத்தின் கடவுளாகப் போற்றப்படும் முருகனைக் குறித்த செய்திகள் பத்துப்பாட்டுள் ஒன்றாகிய குறிஞ்சிப்பாட்டில் இடம் பெற்றிருப்பதை எடுத்துரைக்கும் முகமாக இக்கட்டுரை அமைகின்றது.

மேலும் படிக்க ...

நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
கட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு
03 மே 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அபத்தம் (இணைய இதழ்) வைகாசி 2023 இதழில் வெளியான கட்டுரை.

               'வீழும் நீர்' என்றழைக்கப்படும் (Fallingwater) வீடு. ஓவியம் - AI -

நவீனக் கட்டடக்கலையின் முக்கிய சிந்தனைகள் சிலவற்றினை சாதாரண வாசகருக்கும் அறியச்செய்வதே இக்கட்டுரையின் பிரதான நோக்கம். நவீனக் கட்டடக்கலையின் முக்கிய கோட்பாடுகளாக  "லூயிஸ் சல்லிவனின் (Louis Sullivan) செயற்பயனைத் தொடரும் வடிவம் (Form follows function),  ஃப்ராங்க் லாயிட் ரைட் அவர்களின் சேதனக் கட்டடக்கலை (Organic Architecture),  கட்டடக்கலைஞர் லட்விக்  மீஸ் வான் டெர் ரோவின் (Ludwig Mies Van der Rohe)  ''குறைவில் நிறைய (Less is more) '   போன்ற கோட்பாடுகளையும் மற்றும்   லெ கொபூசியேவின்  (Le Corbusier) நவீனக்கட்டடக்கலைக் கருதுகோள்கள் போன்றவற்றையும் குறிப்பிடலாம்.  இவை நவீனக் கட்டடக்கலைக்கு வளம் சேர்த்த சிந்தனைகள். இவற்றைப்பற்றிய சுருக்கமான விளக்கங்களைத்  தமிழில் தருவதே இக்கட்டுரையின் பிரதான நோக்கம்.

லூயிஸ் சல்லிவன் (Louis Sullivan)

1. லூயிஸ் சல்லிவனின் (Louis Sullivan) செயற்பயனைத் தொடரும் வடிவம் (Form follows function)

ஒரு கட்டடத்தின் அல்லது பொருளொன்றின் வடிவமானது அக்கட்டடம் அல்லது அப்பொருள் எக்காரணத்துக்காகப் பாவிக்கப்படுகின்றதோ அக்காரணத்துக்கேற்ப பொருத்தமான வடிவமொன்றினைப்பெறும். அதாவது அக்கட்டடம் அல்லது அப்பொருளின் செயற்பயனுக்கேற்ப அவற்றின் வடிவமுமிருக்கும். இதனைத்தான் வடிவம் செயற்பயனைத்தொடர்தல் (Form follows function) என்னும் கூற்று வெளிப்படுத்துகின்றது. இக்கருதுகோள் அல்லது சிந்தனை் அல்லது விதி இருபதாம் நூற்றாண்டின் நவீனத்துவக் கட்டடக்கலையின் அல்லது தொழிற்சாலைகளில் உருவாக்கப்படும் பொருளொன்றின் வடிவமைப்பில் முக்கியமானதொரு கருதுகோளாகும்.

இக்கோட்பாட்டின் காரணகர்த்தா புகழ்பெற்ற அமெரிக்கக் கட்டடக்கலைஞர்களில் ஒருவரான கட்டடக்கலைஞர் லூயிஸ் சல்லிவன் ( Louis Sullivan) ஆவார். ஆயினும் பொதுவாக இக்கோட்பாட்டின் காரணகர்த்தாவாகத் தவறாகச் சிற்பி ஹொரதியொ கிறீனோ , Horatio Greenough (1805 – 1852) , குறிப்பிடப்பட்டாலும் அது தவறானது. சிற்பி ஹொரதியொ கிறீனோவை இவ்விதம் குறிப்பிடுவதற்குக் காரணம் அவரது கட்டுரைகளின் தொகுதியொன்று 'வடிவமும், செயற்பயனும்: கலை மீதான ஹொரதியோ கிறீனோவின் குறிப்புகள்' (Form and Function: Remarks on Art by Horatio Greenough.) என்னும் பெயரில் வெளிவந்ததாகும். ஆயினும் வடிவமானது எப்பொழுதுமே செயற்பயனைத் தொடரும் என்னும் கூற்றினை முதன் முதலில் பாவித்தவராகக் கட்டடக்கலைஞர் லூயிஸ் சல்லிவனைத்தான் குறிப்பிட வேண்டும்.

மேலும் படிக்க ...

பனிவிழும் பனைவனம் நூல் வெளியீடும் , பாலேந்திராவின் 'அரங்கக் கட்டுரைகள்' நூல் அறிமுக நிகழ்வும் & வாழும் தமிழ் கண்காட்சியும்

விவரங்கள்
- தகவல்: 'காலம்' செல்வம் -
நிகழ்வுகள்
02 மே 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- தெளிவாகப் பார்க்க, படத்தை ஒருமுறை அழுத்தவும்.-

நூல் அறிமுக நிகழ்வும், வாழும் தமிழ் புத்தகக் கண்காட்சியும்! - தகவல் - பிறேம் -

விவரங்கள்
- தகவல் - பிறேம் -
நிகழ்வுகள்
02 மே 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- தெளிவாகப் பார்க்க, படத்தை ஒருமுறை அழுத்தவும்.-

உழைப்பாளர் தினக்கவிதை - 'காடு வெளைஞ்சென்ன மச்சான் நமக்கு கையுங் காலுந்தானே மிச்சம். - கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் -

விவரங்கள்
- ஊர்க்குருவி -
கலை
01 மே 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

உழைப்பாளர் தினத்தில் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் 'சும்மா கெடந்த நெலத்தக் கொத்தி' பாடலைப் பகிர்ந்துகொள்கின்றேன் - https://www.youtube.com/watch?v=TyYEYFTuec0

பாமர மக்களின் பேச்சுத்தமிழில் உயிரோட்டத்துடன் எழுதப்பட்டுள்ள கவிதை. எஸ்.எம். சுப்பையா நாயுடுவின் இசையில், பானுமதி , டி.எம்.எஸ் குரலில் , எம்.ஜி.ஆர் & பானுமதி நடிப்பில் ஒலிக்கும் பாடல். கேள்வியும், பதிலுமாக ஒலிக்கும் பாடலின் கருத்து உலகில் உழைப்பாளர் நிலையினை எடுத்துக் கூறுவதுடன் நின்று விடாது அவர்களுக்கு எதிர்காலத்தில் மிகுந்த நம்பிக்கையூட்டுவதாக அமைந்துள்ளது. அதுவே இப்பாடலின் சிறப்பு.

அவள் கூறுகின்றாள் 'காடு வெளைஞ்சென்ன மச்சான் நமக்கு கையுங் காலுந்தானே மிச்சம்' என்கின்றான். அதற்குப் பதிலளிக்கும் அவனோ 'இப்போ காடு வெளையட்டும் பொண்ணே நமக்கு காலமிருக்குது பின்னே காலமிருக்குது பின்னேவ் என்று நம்பிக்கையூட்டுகின்றான்.  அத்துடன் மேலும்

மேலும் படிக்க ...

உழைப்பவர் உயர்வை உரைத்திடும் தினம் ! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண், அவுஸ்திரேலியா -

விவரங்கள்
- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண், அவுஸ்திரேலியா -
கவிதை
01 மே 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மே1  - உழைப்பாளர் தினம்!


உழைத்துமே உயர்ந்திடு வோமே!
உதிரமே உழைப்பவர் பலமே!
உலகமே ஏத்திடு தினமே!
உயர்வுடை மே தினமே!

உண்ணும் உணவும் உழைப்பே!
ஓடும் காரும் உழைப்பே!
விண்ணில் பறக்கும் யாவும்
எண்ணி லடங்கா உழைப்பே!  

விருந்தும் மருந்தும் உழைப்பே!
விளக்கின் வரவும் உழைப்பே!
அருந்தும் அனைத்தும் உழைப்பே!
அனைவரும் மதிப்போம் உழைப்பை!  

வானுயர் கட்டடங்கள் உழைப்பே!
வான்வெளிப் பயணங்கள் உழைப்பே!  
நீள்கடல் ஆராய்ச்சி உழைப்பே!
நிம்மதி தருவதும் உழைப்பே!  

மேலும் படிக்க ...

கதிரையதிகாரம் - துவாரகன் -

விவரங்கள்
- துவாரகன் -
கவிதை
01 மே 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அதிகாரம் என்ன செய்யும்?
மண்டியிட வைக்கும்
மானிடத்தைக் கொல்லும்
அதிகாரம் என்ன செய்யும்?
குதிக்கால் உயர்த்திப் பேசும்
சுட்டுவிரல் காட்டி அடக்கும்
சாட்டையின் கைமாற்றம்
நுகத்தடியில் மாட்டப்படும்

மேலும் படிக்க ...

அஞ்சலிக்குறிப்பு: சிறுகதை இலக்கியத்தில் அழகியலை ஆராதித்த குப்பிழான் ஐ. சண்முகன் - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
28 ஏப்ரல் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அண்மைக்காலமாக , காலை விடியும்போது இன்று என்ன செய்தி வரப்போகிறதோ? என்ற யோசனையுடன்தான் துயில் எழுகின்றேன். இந்த யோசனை கொவிட் பெருந்தொற்று பரவிய காலத்திலிருந்து தொடருகின்றது. அடுத்தடுத்து எமது கலை, இலக்கிய குடும்பத்திலிருந்து பலரும் விடைபெற்றுக்கொண்டிருக்கும்போது இயல்பாகவே மரண பயமும் வருகின்றது.

கடந்த 24 ஆம் திகதி காலை விடிந்தபோது, சிட்னியில் வதியும் எழுத்தாளரும் வானொலி ஊடகவியலாளருமான இலக்கிய நண்பர் கானா. பிரபாவிடமிருந்து வந்த குறுஞ்செய்தியில், எழுத்தாளர் குப்பிழான் ஐ. சண்முகன் முதல் நாள் 23 ஆம் திகதி மறைந்துவிட்டார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. என்ன நடந்தது? என நான் தொலைபேசி ஊடாக கேட்பதற்கு முன்பே, அவர் என்னைத் தொடர்புகொண்டு இந்த துயரச் செய்தியை மேலும் ஊர்ஜிதப்படுத்திச் சொன்னார்.

இறுதியாக சில வருடங்களுக்கு முன்னர் வடமராட்சிக்கு சென்றிருந்தபோது, இலக்கிய நண்பர் தெணியானுடன், குப்பிழான் ஐ. சண்முகனை பார்க்கச்சென்று நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தேன். இருவரும் இல்லாத வடமராட்சிக்குத்தான் இனிவரும் காலங்களில் வரப்போகின்றேன் என்பதை நினைக்கும்போது சோகம் மனதை அழுத்துகிறது. தனது பெயரின் தொடக்கத்தில் குப்பிழான் என்ற பூர்வீக ஊரின் பெயரை சண்முகன் பதிவுசெய்துகொண்டிருந்தாலும், அவரது வாழ்க்கை பெரும்பாலும் கழிந்தது, கரணவாயில்தான்.

1970 களில் நான் இலக்கியப்பிரவேசம் செய்த காலப்பகுதியில் அவர் கொழும்பு மலே வீதியில் அமைந்திருந்த அரசாங்க பரீட்சைத் திணைக்களத்தில் எழுதுவினைஞராக பணியாற்றிக்கொண்டிருந்தார். அதே வீதியில் அமைந்திருந்த இலங்கை ஆசிரியர் சங்க பணிமனையில் நான் சிறிது காலம் வேலை செய்துகொண்டிருந்தபோது குப்பிழான் சண்முகனை அடிக்கடி சென்று பார்ப்பேன்.

மேலும் படிக்க ...

பொன்னியின் செல்வன் 2: 'சின்னஞ்சிறு நிலவே என்னைவிட்டு ஏனடி நீங்கினையோ?'

விவரங்கள்
- ஊர்க்குருவி -
கலை
28 ஏப்ரல் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்
பொன்னியின் செல்வன் 2 திரைப்படப்பாடலொன்று ஹரிச்சந்திரன் குரலில், இளங்கோ கிருஷ்ணனின் எழுத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையில் , ரவிவர்மனின் ஒளிப்பதிவில் ஒலிக்கும் பாடல். இளங்கோ கிருஷ்ணன் போன்ற தமிழ்த் திரையுலகின் புதிய தமிழ்க் கவிஞர்கள் சங்கக்கவிஞர்களைப் போல் செறிவுமிகு தமிழ்ச் சொற்களைக் கையாள்வது மகிழ்ச்சியளிப்பது.  பாடலைக் கேட்க

கவிதை: பாடல்களைத் தொலைத்தவள். - தமயந்தி (தமயந்தி சைமன்) -

விவரங்கள்
- தமயந்தி (தமயந்தி சைமன்) -
முகநூல் குறிப்புகள்
28 ஏப்ரல் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- முகநூற் பக்கங்களில் வெளியாகும் பயனுள்ள குறிப்புகள் அவற்றின் பயன் கருதிப் பதிவுகளின் இப்பக்கத்தில் வெளியாகும். -  பதிவுகள்.காம் -


தனது குழந்தைகளுக்கான
ஏராளமான இனிய பாடல்களை
நாலாதிசைக் கரைகளின்
மணற்பரப்பெங்கும் எழுதிவைத்த அவள்
அவ்வப்போது வந்து தொட்டுத்தடவி
புவுத்திரம் பார்த்துச் செல்வாள்.

ஆழியரவிந்த மைகொண்டு எழுதிய பாடல்கள்.
அத்தனை எழுத்தும்
கொத்தடங்கா முத்துக்களால்
ஆழிப்பட்டு நூல் திரித்து  
கோத்துக் கட்டிய பாடல்கள்

சொல்லுக்குச் சொல்
நாவடத்தில் குழைத்த
மீனாம்பல் திரவியம் பூசிய பாடல்கள்.

மேலும் படிக்க ...

குப்பிழான் சண்முகம் மனிதனாகவும், எழுத்தாளனாகவும் - Zoom வழியான அஞ்சலி நிகழ்வு! - பெளசர் -

விவரங்கள்
- பெளசர் -
நிகழ்வுகள்
28 ஏப்ரல் 2023
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. சிறுகதை : போகம் - கடல்புத்திரன் -
  2. அவுஸ்திரேலியா படைப்பாளிகளின் கதைத் தொகுதி 'தைலம்'! புகலிட வாழ்வியலை சித்திரிக்கும் கதைகள்! - சியாமளா யோகேஸ்வரன் - குவின்ஸ்லாந்து -
  3. சமுத்திரன் கூறியதும் கூற மறந்ததும் கூறியவற்றில் குறிப்பிடத் தவறியதும் 'சமுத்திரன் எழுத்துகள் தொகுதி -03 - கலை இலக்கியம் சமூகம் அரசியல் -விமர்சனப் பார்வை' நூல் குறித்த ஒரு பார்வையும் சில குறிப்புக்களும்! - வாகீசன் -
  4. சந்திரா இரவீந்திரனின் 'மாமி சொன்ன கதைகள்'! - வ.ந.கிரிதரன் -
  5. லண்டன் 'விம்பம்' ஏற்பாட்டில், 'சமூகம் இயல் பதிப்பக' வெளியீடாக சமுத்திரனின் (பேராசிரியர் என்.சண்முகரத்தினம்) நான்கு நூல்களின் அறிமுகமும் , கலந்துரையாடலும்! - எம்.பெளசர் -
  6. இலாப நோக்கற்று இயங்கும் ஓராயம் அமையம்! - வ.ந.கி-
  7. அஞ்சலி: எழுத்தாளர் குப்பிழான் ஐ.சண்முகன் மறைவு! - வ.ந.கிரிதரன் -
  8. சிறுகதை: ஜள்ளெ - முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோவை. -
  9. முதல் சந்திப்பு: பல்துறை ஆற்றல் மிக்க கலா வித்தகி ஆனந்தராணி பாலேந்திரா! - முருகபூபதி -
  10. நான் நினைவில் வைத்துக்கொள்கிறேன் கோமகன்! - நெற்கொழுதாசன் -
  11. சிறுகதை: இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்.... - கிறிஸ்டி நல்லரெத்தினம் -
  12. குரு அரவிந்தன் வாசகர் வட்டம் சிறுகதைத் திறனாய்வுப் போட்டி-2023, முடிவுகள்! - சுலோச்சனா அருண் -
  13. நினைவு கூர்வோம்: புரட்சிப்பெண் பிறேமாவதி மனம்பெரி! - வ.ந.கி -
  14. கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் - எழுத்தாளர் அரங்கம் எட்டு!
பக்கம் 71 / 125
  • முதல்
  • முந்தைய
  • 66
  • 67
  • 68
  • 69
  • 70
  • 71
  • 72
  • 73
  • 74
  • 75
  • அடுத்த
  • கடைசி