நேர்காணல் பகுதி ஆறு (இறுதிப் பகுதி) : ஓவியர் வீரப்பன் சதானந்தனுடன் ஓர் உரையாடல்! - நேர்காணல் கண்டவர்: எழுத்தாளர் ஜோதிகுமார் -

கேள்வி: சென்றமுறை கதைக்கும் போது, தூரிகையானது நிறங்களில் எப்படி தோய்த்தெடுக்கப்படுகின்றதோ அதைவிட முக்கியமாக வாழ்வில் தோய்த்தெடுக்கப்பட வேண்டி இருக்கின்றது என கூறினீர்கள். அதாவது இவ்விரு அம்சங்களுமே ஒரு ஓவியத்தின் வெற்றியை அல்லது அதன் சாரத்தை தீர்மானிப்பதில் முக்கிய பங்காற்றுவதாக கூறினீர்கள். முக்கியமாக ஓவியத்தில் வெளிப்படும் கருப்பொருளானது ஓர் ஓவியரின் வாழ்க்கை யதார்த்தத்தை பிரதிபலித்தே ஆகும் என்பதனை பிக்காசோவின் ஓவியங்களை கொண்டு நீங்கள் வாதித்தீர்கள். இப்பின்னணியில் இளைய தலைமுறையினருக்கான உங்களின் செய்தி என்னபதில்: இளைய தலைமுறையினருக்கு அறிவுரை சொல்லும் அளவிற்கு தகுதியுடையவன் என்று என்னை நான் கருதி கொள்ளவில்லை. ஆனால் இதை சொல்லலாம். அதாவது இளைய தலைமுறையினர் ஆழ்ந்து, மிக ஆழ்ந்து கடந்த கால ஓவிய பிரமாண்டங்களை கற்க வேண்டும். அது கொன்ஸ்டாபிளாக இருக்கலாம். அல்லது மொனேயாக இருக்கலாம். அல்லது பிக்காசோவாக இருக்கலாம். இது ஒரு துறை. ஆழமான, கண்டிப்பான, மிக பரந்த பரப்பிது. கடும் உழைப்பையும், அர்ரப்பணிப்பையும் கோரக்கூடியது இது.
ரொரன்ரோ ஸ்கைடோம் வாசலில் ஒரே பரபரப்பாக இருந்தது. வானம் பார்த்த அந்தப் பிரமாண்டமான மண்டபத்தில் ஏ.ஆர். ரகுமானின் இன்னிசைவிருந்து இன்னும் சிறிது நேரத்தில் ஆரம்பமாக இருந்தது. விளக்கை நோக்கி விட்டில் பூச்சிகள் வருவது போல இன்னிசையால் ஈர்க்கப்பட்டவர்கள் பல திசைகளிலும் இருந்து அங்கே வந்து குவிந்து கொண்டிருந்தனர்.

பாரதியாரின் எழுத்துகள் தேடல் மிக்கவை. தெளிவு மிக்கவை. மானுடப் பருவத்தின் பல்வேறு படிகளிலும் , மானுட அறிவின் வளர்ச்சிக்கேற்ப புதிய அர்த்தங்களைத் தந்து விரிந்து செல்பவை. அவரது வாழ்வு குறுகியது. அக்குறுகிய வாழ்வினுள் அவர் எழுதினார். மானுட இருப்பு பற்றிச் சிந்தித்தார். சக மானுடர்கள்தம் வாழ்க்கை, அவற்றின் தரம், பிரச்சினைகள், துயரம் , தீர்வு என்றெல்லாம் சிந்தித்தார். அந்நியராதிக்கத்தில் அடிமைப்பட்டுக்கிடந்த பிறந்த நாட்டின் விடுதலைக்காகக் குரல் கொடுத்தார். தான் வாழ்ந்த மானுட சமூகத்தின் வர்க்க விடுதலைக்காக, வர்ண விடுதலைக்காகச் சிந்தித்தார். எழுதினார். அத்துடன் எழுத்துடன் நின்று விடாது சமூக, அரசியல் மட்டத்தில் செயற்பட்டார். பிறநாட்டுப் படைப்புகளையெல்லாம் வாசித்தார். அவற்றிலிருந்து அறிந்தவற்றைத் தன் சிந்தனைத் தேடலுக்குட்படுத்தினார். அத்தேடலினூடு தானடைந்த ஞானத்தைக் கட்டுரைகளாக்கினார். கவிதைகளாக்கினார்.
அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச் சங்கம் இலங்கை எழுத்தாளர்களுக்காக நடத்திய இலக்கியப்போட்டி முடிவுகள் வெளியாகியுள்ளன. கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக அவுஸ்திரேலியாவில் இயங்கிவரும் தமிழ் இலக்கிய கலைச்சங்கம், இலங்கை தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் நோக்கத்தில், கடந்த 2019 – 2020 ஆம் ஆண்டுகளில் இலங்கையில் வெளியான நூல்களில் சிறந்தவற்றை தேர்வுசெய்து, அவற்றை எழுதியவர்களுக்கு பரிசு வழங்கத் தீர்மானித்திருந்தது.
தினக்குரலின் பொங்கல் வெள்ளி இதழ் (14.01.2022) தனது தலைப்பு செய்தியாக, (கொட்டை எழுத்துக்களில்) பின்வரும் செய்தியை தீட்டியிருந்தது: “மோடிக்கான கடிதம் முற்றாக மாற்றம்” கடிதம் இறுதியாக்கப்பட்டு, தினங்கள் கழிந்த நிலையில், மேற்படி ‘கொட்டை எழுத்தை’, ‘தலைப்பு செய்தியாக’ வாசிக்கும் வாசகனில், மேற்படி செய்தி பயங்கர அதிர்வலைகளை ஏற்படுத்துவதாகவே இருக்கும். ஆனால், இதனைவிட அடுத்த அடியே, செய்தியாளரின் மரண அடி கொடுக்கும் அவாவினை பேசுவதாய் இருந்தது: “இதனை செய்தது தமிழரசு கட்சியே – சுமந்திரன்”





அவுஸ்திரேலியாவில் முப்பது வருடங்களுக்கும் மேலாக வதியும் எழுத்தாளர் முருகபூபதி அவர்கள் ஈழத்து இலக்கிய உலகில் நான்காவது தலைமுறையைச் சேர்ந்தவர். மல்லிகை ஜீவா அவர்களால் அரை நூற்றாண்டுக்கு முன்னர் அறிமுகம் செய்யப்பட்ட இலக்கியவாதி, ஊடகவியலாளர். சிறுகதை, நாவல் முதலான துறைகளில் இலங்கையில் இரண்டு தடவை தேசிய சாகித்திய விருதுகள் பெற்றவர். இதுவரையில் 25 நூல்களை எழுதியிருக்கும் முருகபூபதியின் மற்றும் ஒரு வரவுதான் நடந்தாய் வாழி களனி கங்கை. இதனை கொழும்பில் குமரன் புத்தக இல்லம் பதிப்பித்து வெளியிட்டுள்ளது.
நவீன தமிழ் இலக்கியத்தின் தொடக்கக் காலத்தில் பலர் கதைகளைச் சிறுகதையாக்க முயன்றனர். ஆங்கில இலக்கிய வாசிப்பு அவர்களைக் கதை கூறுதல் என்ற மேம்போக்கான மனநிலையிலிருந்து விடுவித்துப் படைப்பூக்க மனநிலைக்குக் கொண்டு செல்லவும் பரிசீலனை செய்யவும் விமர்சிக்கவும் தூண்டுகோலாக இருந்தது. கதை கூறும் முறை எந்தப் புள்ளியில் இலக்கியமாகப் பரிணமிக்கிறது என்ற தேடுதலும் கண்டடைதலும் பெரும் சவாலாக இருந்தது. 'மணிக்கொடி எழுத்தாளர்கள்' என்று பிறகு அடையாளம் காணப்பட்ட அல்லது தங்களை அவ்வாறு எண்ணிக்கொண்ட தொடக்கக் கால எழுத்தாளர்கள் இந்தத் தடுமாற்றத்தில் சிக்கிக் கொள்ளாமல் முயற்சிகளைச் செய்து கொண்டே இருந்தனர்.
ஜனவரி 19 எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தின் பிறந்தநாள். அவருக்கு எனது தாமதமான இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். அவரைப்பற்றி விகடனின் பேசலாம் யு டியூப் சானலில் எழுத்தாளர் ஜெயமோகனின் 'சங்கச் சித்திரங்கள் எப்படி எழுதினேன்?' என்னும் பெயரில் வெளியான நேர்காணற் காணொளி கண்டேன். அதில் ஜெயமோகன் அ.முத்துலிங்கம் பற்றிப் பின்வருமாறு கூறியிருந்தார்:


கொரோனோ பெருந்தொற்று உலகடங்கிலும் உக்கிரத்தாண்டவம் ஆடத் தொடங்கிய காலப்பகுதியில், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் திகதி தேனீ இணைய இதழின் ஆசிரியர் ஜெமினி கெங்காதரனையும் அது ஜெர்மனியில் காவுகொண்டுவிட்டது. புங்குடுதீவில் 1965 ஆம் ஆண்டு கணேஷ் – மங்கையற்கரசி தம்பதியரின் புதல்வனாகப்பிறந்த ஜெமினி கெங்காதரன் யாழ். இந்துக்கல்லூரியின் முன்னாள் மாணவர். 1980 களில் அய்ரோப்பாவுக்கு புலம்பெயர்ந்த அவர், 1989 ஆம் ஆண்டு தொடக்கத்தில் நண்பர்களுடன் இணைந்து தேனீ என்ற சிற்றிதழை ஆரம்பித்தார். கலை, இலக்கிய, அரசியல், சமூக அக்கறை சார்ந்த படைப்புகளுக்கு குறிப்பிட்ட இதழ் களம் வழங்கியது. அதனையடுத்து அக்கினி என்ற இதழையும் சிறிதுகாலம் நடத்தினார். அதன்பின்னர் தேனீ இணைய இதழை தொடங்கி தினமும் பல வருடங்களாகப் பதிவேற்றினார். தேனீ இணைய இதழை தனிமனிதராக அர்ப்பணிப்போடு வெளியிட்டு, மாற்றுச்சிந்தனைகளுக்கும் சிறந்த களம் வழங்கினார். கலை, இலக்கியம் மற்றும் அரசியல் ஆய்வுத் தொடர்களுக்கும் பயனுள்ள நேர்காணல்களுக்கும் மொழிபெயர்ப்புகளுக்கும் களம் வழங்கி, வாசகர்களிடம் சேர்ப்பித்தவர். அதற்காக எந்த ஊதியமும் பெறாமல் கருத்துக்களையும் எதிர்வினைகளையும் விமர்சனங்களையும் மாத்திரமே ஏற்றுக்கொண்டவர். தேனீயில் வெளிவரும் ஆக்கங்களுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பு என்றவுணர்வுடன் ஊடக தர்மத்தை பின்பற்றி, பாரதூரமான விமர்சனங்கள் வரும்போது அவற்றை உரியவர்களுக்கே அனுப்பி அவர்களின் கவனத்திற்குட்படுத்தி ஊடக தர்மத்தின் கண்ணியத்தையும் காப்பாற்றினார்.
பாயில் சரிகிற இரவுகளில், ‘அப்பனே முருகா!’ என்று ஆசுவாசத்துடன் படுக்கிற காலமொன்று இருந்ததை பரஞ்சோதி கண்டிருக்கிறாள். அது வெகுகாலத்துக்கு முந்தி. அம்மாச்சிபோல் அந்தளவு ஆசுவாசமாகத் தூங்கச் சரிந்த வேறெவரையும் தன் வாழ்நாளில் அவள் கண்டதில்லை. ‘அப்பனே, சன்னதியானே!’ என்று அவள் முனகிச் சரியும்போது, அந்த ஒலியலைகளால் உலகமே நிறைந்து பனைவெளிக் காற்றும், தள்ளியிருந்த விரிகடல் அலையும்கூட அடங்கித் தோன்றும். அக்கணத்திலிருந்து விடியும் முன் வரும் எக் கணத்திலும், எருது வாகனமேறி யமதர்மன் வந்துவீசக்கூடிய பாசக் கயிற்றில் மிக இலகுவாக தன் உயிரைக் கழற்றிக் கொளுவிவிடும் நிறைவாழ்வின் பூரணம் அவளில் இருந்தது. விடிந்தெழுந்தால்தான் அன்றைய கடமைகள் பாரமாகும். அன்றைய நாளின் பூர்த்தி, அன்றைய வாழ்வின் பூர்த்தியாய் ஆசை, அவா, அவதி யாவுமறுத்து விரிந்திருந்த காலம் அது.