இலக்கியத்திற்கான நோபல் பரிசு (2001)  பெற்ற  நாவல் இலக்கியப் படைப்பாளி சிவா நேப்போல்"நான் கருப்பொருட்களைக் தேர்ந்துகொள்ள எனது உள்உணர்வுகளிலேயே நம்பிக்கை வைத்துள்ளதோடு என் உள்ளத்து உணர்வுகளுடனேயே எழுதுகின்றேன்" , "நானே எனது புத்தகங்களின் ஒட்டு மொத்தம்" எனவும் குறிப்பிடும் இவ்வருடத்திற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற இலக்கிய கர்த்தா திரு. வி. எஸ். நேப்போல் அவர்கள், (Trinidad)  ரினினாட் நாட்டிற்குப் பெருமை சேர்க்கும் வகையில் தனது இலக்கியப்படைப்பால் உயர்ந்து நிற்கின்றார். உலகில் காணப்படும் ஒரே ஒரு இந்துமத அரசாகக் காணப்படும்; நேபாள தேசத்தின் பரம்பரையில் உதித்தவர்தான் இன்று உலகளாவிய புகழ் படைத்த நாவல் படைப்பிலக்கிய மேதையாகக் கருதப்பட்டு உயர்விருதினைப் பெற்றுக்கொண்ட சிவா நேப்போல் அவர்கள். தனது பாட்டியார் இந்தியாவிலிருந்து வரும்போது பல இந்துமத நூல்களையும், சாத்திரங்களையும் கொண்டு வந்திருந்தார். அவர்கள் சமய அனுட்டானங்களைத் தொடர்ந்தார்கள் நாமும் பின்பற்றினோம் ஆனால் எமக்கு மொழியை யாரும் கற்றுத்தரவில்லை. இந்தி எழுத்துக்களை இளமையில் யாரோ சொல்லித்தந்ததாக ஞாபகம் ஆனால் தொடர்ந்து படிக்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. அத்தோடு எமது மொழியின் இடத்தில் ஆங்கிலம் திணிக்கப்பட்டதால் நாம் எமது மொழியை மறக்கவேண்டிய நிலை ஏற்பட்டது என்று தமது ஆதங்கத்தை நோபல் பரிசு பெறுவதற்காக ஸ்ரக்கோம் சென்றவேளை குறிப்பிட்டிருந்தார். எனது புத்தகங்களின் கூட்டு மொத்தம் நானே என்று கூறும் அவர் தனது தாயாரின் ஊர் நேபாளத்தில் உள்ள ஒரு கிராமம் என்கின்றார்.

எனது குழந்தைப் பருவத்தில் இருளாக இருந்தபகுதியே நான் எழுத்தாளனாக வந்தவேளை எனது கருப்பொருளாக அமைந்தன எனக்கூறும் நேப்போல் அவர்கள் நான் இளமைக் காலத்தில் கேள்விப்பட்ட முற்றுப்பெறாத அன்றித் தெளிவில்லாத சம்பவங்கள், கதைகள் என்பன எனது எழுத்தின் கருவூலங்களாகின. நான் வாழும் றினிடாட் (வுசinனையன) ஒரு புதிய குடியேற்ற நாடகாக விருத்தி பெற்றது. நான் 1932 ஆம் ஆண்டு பிறந்தபோது அங்கு மொத்தச் சனத்தொகை 400,000 ஆக இருந்தது. அதில் 150,000 இந்தி;யாவிலிருந்து வந்த இந்துக்களும் முஸ்லிம்களுமாவார்கள். இவர்கள் எல்லாரும் விவசாயகுடும்பங்களைச் சார்ந்தவர்களும், கங்கைச் சமவெளிப் பிரதேசத் திலிருந்து வந்து குடியேறியவர்களுமாகும். ஏனது இளமைப் பராயத்தில் பழங்குடி மக்கள் இங்குவந்து பழங்களையும் சில விதைகளையும் சேகரித்துச் செல்வார்கள் எனக் கேள்விப் பட்டிருக்கின்றேன். ஆனால் அவர்கள் எவற்றைச்சேகரித்தார்கள் அல்லது ஏன் வராது விட்டார்கள் என்பவற்றிற்கான விளக்கங்கள் கிடைக்கவும் இல்லை. அவை எனது மனத்தி;ல் இருளடைந்தவையாக, நாளடைவில் மறந்துபோய் விட்டது. இவை எல்லாம் என்னை எழுதத் தூண்டியவை மட்டுமன்றி இங்கு வந்து குடியேறிய மக்களின் அவலம் நிறைந்த வாழ்க்கை வரலாறுகள், வாழ்க்கை முறைகள் எல்லாம் எனது கருவூலங்கள். சிலவற்றை நான் நேரில் கண்டு அறிந்து கொள்வதற்காக இந்தியாவிற்கும் ஆபிரிக்காவிற்கும் பிரயாணம் செய்தேன். ஆதனால் அங்கு பல விடயங்ளை நேரில் பார்க்கக் கூடிய வாய்ப்புக்கள் எற்பட்டன. பாடசாலைக் கல்வி எனக்கு எந்த விளக்கங்களையும் தரவில்லை. நான் தரவுகளையும், வாய்ப்பாடுகளையும் பாடமாக்கியதும் தான். ஏல்லாமே நாமாகவே கற்றுக்கொள்ளவேண்டியிருந்தது. எல்லாமே பிரித்தறியவேண்டியதாகவே இருந்தது. நான் எனது பாட்டியின் வீட்டிலிருந்து பெற்றுக்கொண்டதைவிடே மேலாக நான் எதனையும் பெற்றது இல்லை. ஒரு திட்டமோ அல்லது சாராம்சமோ இல்லாத சாதாரண கல்வியே பாடசாலையில் எனக்குத் தரப்பட்டது.

எனக்கிருந்த மட்டுப்படுத்தப்பட்ட சமூக பகைப்புலம் இதர சமூகங்களுடன் சேர்வது நினைத்துப் பார்க்கவே முடியாத அளவிற்குக் கடினமானதாக இருந்தது. புத்தகங்கள் பற்றிய எண்ணமே எனது விருப்பாக இருந்தது. இவற்றைப் வாசிப்பது கடினமாக இருந்தது நான் அண்டர்சன்(Aderson)), எயிசொப்(Aeashop) ஆகியோரது புத்தகங்களை எனது இளமைனக் காலத்தில் வாசிப்பேன். ஆனால் அவர் தனது கல்லூரியின் இறுதிக்காலத்தில் மொலியர் (Moliere),  சிறானோ தி பேர்ஜெராக்( Cyrano de Bergerac) ) போன்றோரது நூல்களை விரும்பிப்படித்ததுண்டு. நான் ஆரம்பத்தில் ஒரு நாளுக்கு ஒரு கதை எழுதுவேன் எனவும் பலவிடயங்ளைத் தவிர்த்துக்கொள்வேன் எனவும் குறிப்பிடும் அவர் பின்னர் தனது கதைகள் நீண்டுசென்றதனையும், ஒருநாளிலோ அன்றி சிலநாட்களிலோ எழுதி முடிக்க முடியாதிருந்தமையையும் நினைவு கூருகின்றார்.

எனது தந்தையார் தனது சமூகப்பின்னணியை வைத்து எழுயவர் எனவும் தனக்கும் அவருக்கும் இருந்த சூழல் வேறுபட்டதெனவும் குறிப்பிடுகின்றார். நான் எழுதிய எல்லாப் புத்தகங்களுமே என்னை வியப்பில் ஆழ்த்தின நான் என்றும் தனது மன உணர்வுடன் மாத்திரம் நின்றேன் என்றும் அரசியல் சார்ந்து எழுதவில்லை எனவும் அதற்கு இவ்வருடம் மறைந்த இந்திய எழுத்தாளர் ஆர்.கே. நாராயணனைப் பின்பற்றியதாகவும் குறிப்பிடுகின்றார். தனது தந்தையும் இவ்விதமே எழுதினார் என்றாலும் அவரது காலம் இருண்டகாலமாதலால் அவருக்கு எந்த விருதுகளும் கிடைக்கவில்லை எனவும் குறிப்பிடுகின்றார்.

திறமை (Talent) பற்றி அவர்குறிப்பிடும் போது பிரபல எழுத்தாளர்கள் Proust அவர்களின்  Against Sainte-Beuve  என்ற கட்டுரையில் அவர்குறிப்பிட்டவற்றை எடுத்துக் காட்டுகின்றார் “எங்களிடம் திறமை இருந்தால் நாம் மிக அழகானவற்றை எழுதலாம்”  என்றும் “திறமை ஒரு வகையான ஞாபக சக்தி அது ஈற்றில் தெளிவற்ற இசையை மிகத் தெளிவாகக் கேட்கக் கூடியவகையில் குறிப்பிடுவதற்கு மிக நெருக்கமாகக்கொண்டு வருகின்றது”. எனவும் "திறமை என்பது அதிஷ்டமும் கடின உழைப்புமே" என்றும் கூறுவதைக் காட்டி தனது எழுத்தாற்றலுக்குக் கடின உழைப்பும் தனது இளமைக்காலத்தில் இருள்சூழ்தவைகளாகக் காணப்பட்ட பகுதிகளுமே காரணம் என்றும் குறிப்பிடுகின்றார்.

திரு. சிவா நேப்போல் அவர்கள் எழுதிய நாவல்கள், கதைகள் அனைத்துமே சமுதாயப் பார்வையும் அதன் உண்மைப் பின்னணியையும் கொண்டமைந்தவை. கற்பனா வாதமோ, இல்லாதவற்றை உண்டென உரைக்கும் தன்மையோ அவரது கருப்பொருட்களாக அமையாதமை அவரது எழுத்தாற்றலுக்குக் கிடைத்த வெற்றிக்கு முக்கிய காரணமாகும். அவரது எழுத்துக்கள் யதார்த்தமானவை. இலகு நடை பயின்று வருபவை. சாதாரணர்கள் நுகர்ந்து அனுபவிக்கக்கூடிய ஆங்கில நடையினைக் கொண்டநூல்கள் நேரில் கண்டு அனுபவித்தவற்றிற்கே முக்கியத்துவம் கொடுக்கும் இலக்கியவாதியாக அவர் திகழ்கின்றார். இலக்கியப் படைப்பாளிகள் அவரது எழுத்துக்களைக் கூர்ந்து கவனித்தல் பயன் தரும்.

எழுத்தாளர்களுள் தலைசிறந்து விளங்கியவர் கடந்த ஆண்டு மறைந்த இந்திய எழுத்துலக மேதை ஆர்.கே. நாராயணன் அவர்கள். ஆனால் அவர்களுக்கு நோபல் பரிசு கிடைக்கவில்லையே என்னும்  ஆதங்கம் பல வாசகர்களிடையே விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. திரு. நாராயணனின் எழுத்துக்கள் நோபல் பரிசுக்குழவினருக்கு எட்டாமல் போனது கசப்பான ஒரு உண்மையே.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள் இணைய இதழின்  முக்கிய நோக்கம் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை  பலவேறு நாடுகளிலும் வாழும் தமிழர்களுடன் பகிர்ந்துகொள்வதாகும். படைப்புகளை அனுப்பும் எழுத்தாளர்கள் புகைப்படங்களை அல்லது ஓவியங்களை அனுப்பும்போது அவற்றுக்கான காப்புரிமைக்கு உரிமை உள்ளவர்களாக இருந்தால் மட்டுமே அவற்றை அனுப்பவும். தமிழ் மொழியை இணையத்தில் பரப்புவதும் இவ்விணைய இதழின் முக்கிய நோக்கமாகும். படைப்புகளை ngiri2704@rogers.com , editor@pathivukal.com ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.

Pathivugal Online Magazine''s  main aim is to share the creative works of Tamil writers with Tamils living in various countries. When writers submit their works—such as photographs or paintings—please send them only if you hold the copyright for those items. Spreading the Tamil language on the Internet is also a key objective of this online magazine. Please send your submissions to ngiri2704@rogers.com and editor@pathivukal.com.

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும்.  நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 
பதிவுகள் விளம்பரம்