பணிப் பெண்களுக்கெதிரான வன்முறைகள்! - இராஜேஸ்வரி பாலசுப்பிரமயணியம் -

- அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் அண்மையில் அனைத்துலக பெண்கள் தினத்தை முன்னிட்டு நடத்திய இணையவழி காணொளி அரங்கில் நிகழ்த்தப்பட்ட உரை -
பெண்களுக்கெதிரான,பலதரப்பட்ட வன்முறைகள,பல காரணங்களால்; காலம் காலமாக,அகில உலகின் மூலை முடுக்கெல்லாம்; தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றன. இதை நான் எழுதிக் கொண்டிருக்கும்போது(17-3-2021) பிரித்தானிய தொலைக்காட்சியில் பிரதமருடனான கேள்வி நேரத்தில், எதிர்க்கட்சித் தலைவர் ;திரு.கியர் ஸ்ராமர், 'பாலின வன்முறையால் பாதிக்கப்படும்; பெண்களில் 1;.-5 விகிதமானவர்கள் மட்டுமே சட்டத்தை நாடி உதவி பெறும் நிலை இன்றிருக்கிறது' என்று கூறிக்கொண்டிருக்கிறார். மிகவும் பணக்காரநாடுகளில் ஒன்றான பிரித்தானியாவிலேயே பாலினக் கொடுமையை எதிர்நோக்கும் பெண்களின் நிலை இதுவென்றால், சாதி, சமய, பொருளாதார ஒடுக்குமுறையால் அவதிப்படும் ஏழைநாடுகளில் பெண்கள் அனுபவிக்கும் பாலினக்கொடுமைகளைக் கற்பனை செய்ய முடியாமலிருக்கிறது.
பெண்களின் துயர்நிலை அவள் பிறந்த வீடு, புகுந்தவீடு, படித்த இடம், பதவி வகிக்குமிடம், அரசியல் காரணங்கள், அகதிநிலை என்பவற்றுடன் மட்டுமல்லாமல், ஒரு பெண் தனது, வாழ்க்கையின் உணவுக்கும் உடைக்கும், அத்துடன் தனது ஏழ்மையான குடும்பத்தின் வாழ்க்கைக்கும் வழிதேடி பணிப் பெண்ணாக முன்பின் தெரியாத அன்னிய இடங்களுக்கு உழைக்கச் செல்லும்போதும் பன்முகத் தன்மையான வன்முறைகளுக்க முகம் கொடுக்கிறாள்.
பணிப் பெண்களுக்கான கொடுமைகள் அவள் வீட்டுவேலை செய்யும் இடத்தில், அவள் வேலை செய்யும் வீட்டாரால் மட்டும் கொடுபடுவதில்லை. அவர்களின் வீட்டுக்கு வருபவர்களாலும் நடக்கிறது. அந்தப் பாலினக் கொடுமையைப்;; பல பெண்கள் அனுபவித்திருக்கிறார்கள் என்பதை எனது சொக்கலேட் மாமா என்ற கதையொன்றில் பதிவிட்டிருக்கிறேன். (மனிதன் - ;பத்திரிகை-1992)
இன்றைய கால கட்டத்தில், ஆண்கள்,பெண்கள் என்று கிட்டத்தட்ட 232 கோடி மக்கள் பல்விடங்களுக்கும் சென்று அடிமட்ட ஊதிய வேலைகளான, சாரதி, தோட்டக்காரன், பணிப்பெண்கள் போன்ற பல்விதமான வேலைகளையும் அகில உலக ரீதியாகச் செய்கிறார்கள்.
குறிப்பாக, வெளிநாட்டு பணிப் பெண்களை மட்டுமல்லாமல் மற்ற வேலையாளர்களையும் மனித நேயமின்றி நடத்தும் மத்திய தரைக்கடல் நாடுகளில், மூன்றில் ஒருத்தர் பணிப் பெண்களாகத் துன்பப் படுகிறார்கள் (செல்வி.பிலேஸா வீரரத்தினா 2014. ஐ.பி.எஸ் அறிக்கை).


யாழ்ப்பாணத்தில் நான் பழகக் கிடைத்த நண்பர்களில் புஷ்பராஜன் அபூர்வமானவர். அழகான இளைஞனாக - அமைதியும் தேட லும் வாசிப்பும் மிக்க இலக்கிய ரசிகனாக புஷ்பராஜனும் நானும் ஏ.ஜே.யுமாக யாழ் ரீகர் தியேட்டருக்கு முன்னால் உள்ள தேநீர்க்கடையில் உரையாடிக் கொண்ட நாட்கள் என் மன அடுக்கில் என்றும் தேங்கிக்கிடப்பவை.
பதிவுகள் இணைய இதழ் மற்றும் முகநூலில் தொடரும் எழுத்தாளர் மு.தளையசிங்கம் பற்றிய விவாதங்களில் ,தன் கருத்துகளை இங்கு பகிர்ந்துகொள்கின்றார் இலண்டனில் வசிக்கும் சமூக, அரசியற் செயற்பாட்டாளரான ராகவன்.
எங்கள் தெய்வத் தமிழ் மொழிக்; கல்வியை லண்டன் மாநகரில்,எங்கள் இளம்தமிழ்ச் சிறார்களுக்கு முன்னெடுக்கும் உங்களுக்கு எனது அன்பான வணக்கம். எங்கள் தமிழ் மொழி மிகவும் நீண்டகால வரலாற்றைக் கொண்ட முதுமொழி.இன்று உலகில் பேசப்படும் கிட்டத்தட்ட 7000 மொழிகளில் முதல் வழிவந்த மூத்த மொழி.மனித இனத்தின் மேன்மைக்குப் பற்பல நூல்களை உலகுக்குத் தந்த மொழி.'எம்மதமுமு; சம்மதமே' என்ற உயரிய தத்துவத்தைக் கொண்டது'.'யாதும் உரோ யாரும் கேளீர்' என்ற அற்புதமான நான்கு வரிகளில் உலகில் நான்கு திசைகளிலுமுள்ளவர்களையும் ஒன்றாய் அணைக்கும் மொழி எங்கள் மொழி.
- தற்போது முகநூலில், பதிவுகளில் இடம் பெறும் எழுத்தாளர் மு.தளையசிங்கம் பற்றிய விவாதங்களில் இடம் பெறும் கருத்துகளையிட்டு , எழுத்தாளர் நந்தினி சேவியர் தனது கருத்துகளை அனுப்பி வைத்துள்ளார். அவற்றையும் இங்கு பகிர்கின்றோம். - பதிவுகள் -

இலங்கைத் தமிழ் இலக்கிய வரலாற்றில் மு.தளையசிங்கத்துக்கு முக்கிய பங்குண்டு. எழுத்தாளராக, சமூக, அரசியற் செயற்பாட்டாளராகச் செயற்பட்டவர்களில் அவருமொருவர். டானியல், அ.ந.கந்தசாமி, மு.தளையசிங்கம் போன்றவர்கள் எழுத்தாளர்களாக இருந்த அதே சமயம் தாம் நம்பிய அரசியல் கோட்பாடுகளுக்காக மக்கள் மத்தியில் இறங்கிச் செயற்பட்டவர்களும் கூட. 
- வ.ந.கிரிதரனின் 'எழுத்தாளர் மு.தளையசிங்கம் பற்றிய கருத்தரங்கும், மல்லிகை ஆசிரியர் மீதான குற்றச்சாட்டும் பற்றி.' என்னும் கட்டுரைக்கு முகநூலில் கிடைத்த எதிர்வினைகள்! எதிர்வினைகளில் சிலவற்றில் பதிவுகள் இணைய இதழ் ஏற்கமுடியாத சொற்பதங்களுள்ளன. அவை தவிர்க்கப்பட்டுள்ளன. - பதிவுகள் -
அகிலன் வேலைக்கு அவசரமாகப் புறப்பட்டுக் கொண்டிருந்தான். அவன் மெல்பேர்ண் நகரத்திலுள்ள வைத்தியசாலையில் வைத்தியராகப் பணி புரிகின்றான். வழக்கமாக காலை ஆறுமணிக்கெல்லாம் கிழம்பிவிடுவான்.
- பதிவுகள் இணைய இதழில் வெளியான 'எழுத்தாளர் மு.தளையசிங்கம் பற்றிய கருத்தரங்கும், மல்லிகை ஆசிரியர் மீதான குற்றச்சாட்டும் பற்றி.. - வ.ந.கிரிதரன் -' என்னும் கட்டுரைக்கான எழுத்தாளர் முருகபூபதியின் எதிர்வினை - பதிவுகள் -

தமிழ் மொழிச் செயற்பாட்டகம் இன்று இலண்டனில் நடாத்திய எழுத்தாளர் மு,தளையசிங்கம் பற்றிய Zoom வழி இணையவெளிக் கருத்தரங்கில் நான் கலந்துகொள்ளவில்லை, ஆனால் இக்கருத்தரங்கில் இளம் எழுத்தாளர் அனோஜன் பாலகிருஷ்ணன் கூறிய கருத்தொன்றினைப் பற்றி, எழுத்தாளர் ஷோபா சக்தி முகநூற் பதிவொன்றினை இட்டிருந்ததை வாசிக்கும் சந்தர்ப்பமேற்பட்டது. அப்பதிவில் ஷோபாசக்தி பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்:
கண்டி-கொழும்பு பெருவீதியில் பயணித்திருக்கக் கூடியவர்களுக்கு, கேகாலை தென்பட்டிருக்க முடியுமாயினும், நகரத்திலிருந்து உள்ளே சுமார் பதினைந்து கிமீ தொலைவிலிருந்த அரநாயக்க கிராமம் அந்தச் சாத்தியமும் அற்றிருந்தது. அதுவே ஒரு சிற்றரசாயிருந்த சரித்திரத்தைக் கொண்டிருந்தது. மண்படையும், அதன் மேல் கல் படையும், அதற்கு மேலே இன்னொரு மண்படையுமாய் அந்த மேட்டுப் பூமியின் நிலவியல் அமைந்திருந்ததில், சமாந்தரத்தில் அமைந்திருக்காத வீடுகளைக் கொண்டிருந்தது அது. அது ஒரு கூம்பு வடிவ அடுக்கு வீட்டுத் திட்ட குடியிருப்புப்போல தூரத்திய பார்வைக்குத் தென்பட்டது. நடுப்பகுதியிலிருந்த ஒரு வீட்டிலிருந்து பார்த்தால் பின்னாலிருந்த வீடுகள் மேலேயாய்த் தெரிய, முன்புறத்திலுள்ள வீடுகள் பள்ளத்தில் கிடப்பனவாய்த் தோன்றின. அவற்றின் கூரைகளும், முற்றத்தில் நடமாடும் மனிதர்களின் உருவங்களும்கூட துல்லியமாக காட்சிப்பட்டன. மேலேயுள்ள வீடுகளுக்குச் செல்ல அதற்கென அமைந்த வட்டப் பாதையிருந்தது. அப்பாதையில் அரை மணி நேரத்தில் செல்லும் ஒரு தூரத்தை, குறுக்கு வழியில் பத்தே நிமிஷங்களில் அடைந்துவிட முடியும். மழை பெய்யாத காலங்களில்தான் அது சாத்தியமாயிருந்தது. எங்கேயிருந்து வருகிறதெனத் தெரியாதபடி மழைகாலம் சகல இடங்களிலும் சிற்றாறுகளைத் தோற்றுவித்து, சேற்றுக் குட்டைகளை உண்டாக்கி குறுக்குப் பாதைகளை அழித்துவிடும். அப்போது அவை செந்நிற ஓடைகளாய் ஓடிக்கொண்டிருக்கும். அரநாயக்கவிலிருந்து அசுபினி நீர்வீழ்ச்சியைக் காணமுடியும். அது அரநாயக்க விரித்த காட்சிப் புலத்தின் இன்னொரு அழகு.



ஆய்வுச்சுருக்கம்
இலங்கை வடபுலத்தில் உரும்பராயில் 1928 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 09 ஆம் திகதி பிறந்திருக்கும் கணேசலிங்கன் அவர்கள் தமது 93 ஆவது அகவையை இன்று நகர்ந்துள்ளார். உரும்பராய் கிராமத்தில் செல்லையா – இராசம்மா தம்பதியருக்கு இரண்டாவது புதல்வனாகப்பிறந்த கணேசலிங்கன், தனது ஆரம்பக்கல்வியை உரும்பராயில் ஒரு கிறீஸ்தவ பாடசாலையிலும் அதனையடுத்து சந்திரோதய வித்தியாசாலையில் ஆறாம் தரம் வரையிலும் கற்றபின்னர், யாழ். பரமேஸ்வரா கல்லூரியில் மேற்கல்வியை தொடர்ந்தார். கணேசலிங்கன் அன்று கற்ற பரமேஸ்வராக்கல்லூரிதான் பின்னாளில் 1974 இல் யாழ். பல்கலைக்கழக வளாகமாக உருமாறியது. இந்தப்பல்கலைக்கழகத்தில் 1976 ஆம் ஆண்டு நாவல் நூற்றாண்டு ஆய்வரங்கு நடந்தபோது, கணேசலிங்கனின் நாவல்களும் திறனாய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.