மீண்டும் ஸ்டீபன் ஹார்பர் பிரதமர்! முதல் முறையாகக் கனேடிய பாராளுமன்றத்திற்குத் தமிழர் தெரிவு.


இன்று , மே 2011, நடைபெற்ற கனடியப் பாராளுமன்றத் தேர்தலில் ஸ்டீபன் ஹார்பரின் தலைமையிலான பழமைவாதக் கட்சி இம்முறை கனடியப் பாராளுமன்றத்தில் 160ற்கும் அதிகமான தொகுதிகளைப் பெற்றுப் பெரும்பான்மையினைப் பெறுகின்றது. அதே சமயம் இதுவரையில் பலம் பொருந்திய முதலிரு கட்சிகளிலொன்றாக விளங்கிய மைக்கல் இக்னைட்டிவ் தலைமையிலான 'லிபரல்' கட்சி மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. மூன்றாம் இடத்திலிருந்த ஜக் லெயிட்டன் தலைமையிலான புதிய ஜனநாயகக் கட்சியினர் இம்முறை 100ற்கும் அதிகமான ஆசனங்களைப் பெற்று பலம் பொருந்திய எதிர்கட்சியினராக உருவெடுத்துள்ளனர். புதிய ஜனநாயகக் கட்சியின் சார்பில் ஸ்கார்பரோ - ரூச் தொகுதியில் போட்டியிட்ட ராதிகா சிற்சபேசன் இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் 15,482 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் முதன் முறையாகக் கனடியப் பாராளுமன்றத்திற்குத் தெரிவாகும் இலங்கையர், இலங்கைத் தமிழரென்னும் பெருமையினைப் பெறுகின்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பழமைவாதக் கட்சி வேட்பாளரான 'மார்லின் ஹல்யட்' 11,243 வாக்குகளையும், 'லிபரல்' கட்சி வேட்பாளரான ராணா சார்கர் 10,021 வாக்குகளையும் பெற்றுள்ளனர். விரிவான கனடியத் தேர்தல் முடிவுகள் ... இங்கே

From UN News Centre
மனித உரிமைகள் சம்பந்தமாக சர்வதேச தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்காக ஏற்பாடு செய்திருந்த இளைஞர்களின் நிகழ்ச்சியொன்றில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கடந்தமாதம் எனக்குக் கிடைத்தது. இந்த நிகழ்ச்சிக்காக இலங்கையர்களோடு பிரான்ஸ், பிலிப்பைன்ஸ், மியன்மார், நேபாளம், இந்தியா மற்றும் மொங்கோலியா போன்ற வெளிநாடுகளிலிருந்தும் இளைஞர்கள் வந்து கலந்துகொண்டிருந்தார்கள். நாங்கள் குழுக்களாகவும் தனித்தனியாகவும் பிரிந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதேசங்களில் கணக்கெடுப்புக்களில் ஈடுபட்டோம். எனது வாழ்நாளில் ஒருபோதும் பாதம் பதித்திராத மன்னார் பிரதேசத்தோடு அதன் சுற்றுப் புறக் கிராமங்கள் சிலவற்றில் கணக்கெடுப்புக்களில் ஈடுபடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. கொழும்பிலிருந்து கண்டிக்குச் சென்று ஒரு கிழமையின் பின்னர் மீண்டும் சந்திக்கும் எதிர்பார்ப்போடு கண்டியில் வைத்து நாங்கள் பிரிந்து சென்றோம். பதின்மூன்றாம் திகதி முற்பகலில் கண்டியிலிருந்து புறப்பட்ட நாங்கள் மிகிந்தலை, மடுப்பள்ளியைத் தரிசித்தபடி மன்னாரை அண்மிக்கும் போது மாலையாகி விட்டிருந்தது. அடுத்த நாள் காலை நெற்களஞ்சியப் பிரதேசங்களை நோக்கிப் புறப்பட்டோம். அன்றிலிருந்துதான் நெற்களஞ்சியப் பிரதேசங்களில் ஐந்துநாட்கள் ஆரம்பமாகிறது.
http://www.washingtonpost.com
இலங்கையின் இறுதிக்கட்டப் போரின் போது கைது செய்யப்பட்டுக் காணாமல் போன அனைவர் குறித்தும் இலங்கை அரசாங்கம் பொறுப்புக் கூறவேண்டும் என்று சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் கூறியுள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பின் ஆசியப் பிரிவுக்கான இயக்குனர் பிரட் அடம்ஸ், வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், அந்த இறுதிக் கட்டப் போரின் போது இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டவர்கள் பலர் குறித்து அவர்களது குடும்பத்தினர் பல தடவைகள் முறைப்பாடு செய்த போதிலும், உரிய பதில் இலங்கை அரசாங்க தரப்பில் இருந்து வரவில்லை என்று கூறியுள்ளார். கைது செய்யப்பட்டு காணாமல் போனவர்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகளும், இலங்கை போர் குறித்த ஐநாவின் உத்தேச புலனாய்வுகளின் ஒரு பகுதி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். வெறுமனே மறுப்பதை மாத்திரம் செய்யாமல், காணாமல் போனவர்கள் குறித்த முறைப்பாடுகள் ஒவ்வொன்றுக்கும் இலங்கை அரசாங்கம் பதிலுரைக்க வேண்டும் என்றும், காணாமல் போனவர்களின் நிலைமை குறித்து அறிய அவர்களது குடும்பத்தினருக்கு உரிமை இருக்கிறது என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
பொது நலவாய நாடுகளின் கூட்டத்தில் உரையாற்றிய திருமதி காந்தி அவர்களை சந்தித்த உலகத் தமிழர் பேரவையின் மூத்த உறுப்பினர்கள், இலங்கையில் வாழும் தமிழ்ப் பெண்களின் இன்னல்களையும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளையும் பற்றி காந்தி அவர்களின் கவனத்திற்குக் கொண்டுவந்திருந்தனர். திருமதி காந்தி அவர்கள் இலங்கையின் தற்போதைய நிலைமை தனக்கும், இந்திய அரசாங்கத்திற்கும் மிகவும் கவலையளிப்பதாகக் கூறினார். மேலும் இந்தியாவில் காங்கிரஸ் தலைமையில் உள்ள கூட்டணி அரசாங்கம் தமது கவலையை இலங்கை அரசிற்கு வலியுறுத்திக் கூறியுள்ளதாகவும், கடந்த காலங்களில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் அனைவரும் தாமதமின்றி உடனடியாக மீள்குடியேற்றப்பட வேண்டும் எனவும் கூறினார்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









