பதிவுகள்
|
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில்
வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை
சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம்.
விபரங்களுக்கு ngiri2704@rogers.com
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு
விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும்
ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில்
தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.
|
கடன் தருவோம்! |
நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு
இங்கே அழுத்துங்கள்
|
மணமக்கள்! |
|
தமிழர் சரித்திரம்
|
சுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்| |
|
|
தமிழ்
எழுத்தாளர்களே!..
|
அன்பான
இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி
அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ப் பகுதியில்
இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும். பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள்
யூனிகோட் தமிழ்
எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com
மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன்
தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல்
முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு
ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை
வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு
முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர்
மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது. 'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது
அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள்
மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். |
Download Tamil Font
|
|
|
இலக்கியம்! |
ஈழத்து எழுத்தாளர் வரதர் மறைவு!
[ஈழத்தின்
மூத்த எழுத்தாளர்களில் ஒருவரும், 'மறுமலர்ச்சி' இதழின் ஸ்தாபகர்களில்
ஒருவரும், வெளியீட்டாளருமான வரதரின் மறைவுபற்றிய செய்தியை இணையத்தின்
வாயிலாக அறிந்தோம். அவரது நினைவாகத் தமிழ் விக்கிபீடியாவில் வெளியான
அவரது வாழ்க்கைக் குறிப்பினை இங்கு மீள்பிரசுரம் செய்கின்றோம்.-ஆ-ர்]
வரதர் என அழைக்கப்படும் தி. ச. வரதராசன் (தியாகர் சண்முகம் வரதராசன்)
(ஜூலை 1, 1924 - டிசம்பர் 21, 2006), சிறுகதை, புதுக் கவிதை,
குறுநாவல், இதழியல், பதிப்புத்துறை என இலக்கியத்தின் பலதுறைகளிலும்
முத்திரை பதித்தவர். பிறப்பும் கல்வியும் 1924 இல் பொன்னாலையில்
சண்முகம் - சின்னத்தங்கம் தம்பதியினரின் நான்கு குழந்தைகளில்
மூன்றாவதாகப் பிறந்தவர் வரதர். இரத்தினம்மா, அன்னம்மா, தங்கச்சியம்மா
ஆகியோர் அவரது சகோதரிகள். இவரது தந்தை ஒரு வர்த்தகர். தனது ஆரம்பக்
கல்வியை பொன்னாலை அமெரிக்கன் மிசன் தமிழ்ப் பாடசாலையில் பெற்றார்.
ஆறாம் வகுப்பை மூளாய் சைவப்பிரகாச வித்தியாசாலையிலும், ஏழாம் வகுப்பை
சுழிபுரம் ஐக்கிய சங்க வித்தியாசாலையிலும், எட்டாம் வகுப்பை காரைநகர்
சுப்பிரமணிய வித்தியாசாலையிலும் கற்றார். சிரேட்ட தராதரப் பத்திர
வகுப்பை மீண்டும் மூளாய் சைவப்பிரகாச வித்தியாசாலையில் கற்றார்.
வரதர் தனது 27ஆவது வயதில் சுழிபுரத்தில் பிறந்து மலேயாவில் வாழ்ந்த
ஆறுமுகம் - மனோன்மணி தம்பதியினரின் மகளான மகாதேவியம்மாவை 1951
நவம்பர் 7 ஆம் திகதி திருமணம் செய்தார். இவர்களுக்குச் செந்தாமரை,
தேன்மொழி, மலர்விழி ஆகியோர் புதல்விகள். இவர்களில் செந்தாமரை
கனடாவிலும் மலர்விழி லண்டனிலும் உள்ளனர். வரதர் ஆசிரியையான
தேன்மொழியுடன் இறுதிவரை வாழ்ந்தார்.
இவரது முதற் சிறுகதையான கல்யாணியின் காதல் ஈழகேசரியில் வெளியானது.
ஜூன் 13, 1943 இல் ஈழத்தின் முதல் எழுத்தாளர் சங்கமான 'தமிழிலக்கிய
மறுமலர்ச்சிச் சங்கம்' தொடங்கப்படக் காரணமாயிருந்தோரில் இவர் ஒருவர்.
இதே ஆண்டில் (1943) ஈழகேசரியில் வரதர் எழுதிய ஓர் இரவினிலே எனும் வசன
கவிதையே ஈழத்தின் முதற் புதுக்கவிதை எனப்படுகிறது. வரதரின் முதற்
சிறுகதைத் தொகுதியான கயமை மயக்கம் 1960இல் வெளியானது.
மறுமலர்ச்சி சஞ்சிகையின் (1946 - 1948) ஆசிரியர் குழுவில் ஒருவர்.
ஆனந்தன் (1952), தேன் மொழி (1955), வெள்ளி (சஞ்சிகை), புதினம் (வார
இதழ்), அறிவுக் களஞ்சியம் ஆகியன இவர் நடத்திய இதழ்கள்.
வரதர் தொழிலால் ஓர் அச்சக முகாமையாளர். "வரதர் வெளியீடு" என்னும்
வெளியீட்டு முயற்சியின் மூலம் பெருமளவு நூல்களை வெளியிட்டுள்ளார்.
பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளையின் இலக்கிய வழியே வரதர் வெளியீடாக
வெளிவந்த முதல் நூலாகும். மஹாகவி, வித்துவான் பொன். முத்துக்குமாரன்,
செங்கை ஆழியான், சாந்தன், க. கைலாசபதி, முருகையன், நா. சோமகாந்தன்,
நாவற்குழியூர் நடராஜன் போன்ற பலரது நூல்கள் வரதர் வெளியீடாக
வெளிவந்துள்ளன. பதினைந்து வயதிற்குட்பட்ட சிறார்களுக்காக வரதர்
கதைமலர் தொடரில் ஐந்து நூல்களை வெளியிட்டார். வரதரின் பல குறிப்பு
என்ற பெயரில் தமிழ் மக்களுக்குத் தேவையான பலவித விடயங்களைத் தொகுத்து
ஆண்டுக்கு ஒன்றாக நான்கு பதிப்புக்கள் வெளியிட்டார்.
வரதரின் சேவைகளைப் பாராட்டி இலங்கைக் கலைக் கழகம் அவருக்கு சாகித்திய
இரத்தினம் எனும் பட்டத்தை அளித்தது.
இவரது நூல்கள்
கயமை மயக்கம் (சிறுகதைகள்)
நாவலர்
வாழ்க நீ சங்கிலி மன்ன
மலரும் நினைவுகள்
பாரதக்கதை
யாழ்ப்பாணத்தார் கண்ணீர்
சிறுகதை பட்டறிவுக் குறிப்புகள்
நன்றி: தமிழ் விக்கிபீடியா
|
|
©
காப்புரிமை 2000-2006 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன்
|
|
|
|