பேர்க்லி
பல்கலைக் கழகத்தின் தமிழ் துறைத் தலைவரும் பேராசிரியருமான திரு ஜோர்ஜ் எல்
ஹார்ட்டின் தமிழ் சேவை உலகறிந்தது. இவருடைய கடும் முயற்சியினால்தான்
செப்டம்பர் 2004 ல் இந்திய அரசு தமிழைச் செம்மொழியாக அங்கீகரித்தது.
பேர்க்லி பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பீடம் நிறுவப்பட்டதற்கும் இவரே மூல
காரணர். தமிழின் மேன்மையையும், தொன்மையையும் உலகத்துக்கு உணர்த்திய திரு
ஜோர்ஜ் எல் ஹார்ட்டுக்கு வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருதான 'இயல்
விருது' கேடயமும், 1500 டொலர் பணப் பரிசும் வழக்கப்பட்டது.


க்ரியா ராமகிருஷ்ணன் என்று அழைக்கப்படும்
எஸ்.ராமகிருஷ்ணன் கடந்த 35 வருடங்களுக்கு மேலாக தமிழ் சேவையில் ஈடுபட்டு
வந்தவர். கசடதபற என்னும் தீவிர இலக்கிய பத்திரிகையை தொடங்கிய முன்னோடிகளில்
ஒருவர். 'சமகால தமிழில் மரபுச் சொற்களும், சொற்றொடர்களும்' என்ற தமிழ்-
தமிழ் - ஆங்கில அகராதியின் நிர்வாக இயக்குநராக பணியாற்றியவர். தமிழ் கூத்து
பட்டறையில் ஆழமான அக்கறை காட்டியவர். ஒரு லட்சம் நூல்களுக்கு மேல் அடங்கிய
ரோஜா முத்தையாச் செட்டியார் ஆய்வு நூலகத்தை சிகாகோ பல்கலைக் கழகத்தின்
துணையுடன் உருவாக்கியவர்.
'க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி' 2005ம் ஆண்டின் சிறந்த நூலாக 'அபுனைவு'
இலக்கியப் பிரிவில் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. இதற்குப் பரிசாக 500
கனடிய டொலர்கள் வழங்கப்படுகிறது.

தமிழ் இலக்கிய தோட்டத்துடன் தொடர்புகளுக்கு: http://www.tamilliterarygarden.ca/





