கவிஞர் தாமரையின் 'தொலைந்து போனேன்' கவிதையில் பெண் மன வெளிப்பாடுகள்! - முனைவர் மூ.சிந்து -

* கட்டுரையாசிரியர் - முனைவர் மூ.சிந்து, இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, டாக்டர் என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), கோவை
முன்னுரை
பெண்ணிய எழுத்தாளரான தாமரையின் 'கதவும் கள்ளிப்பாலும்' எனும் கவிதையின் தொகுப்பில் 'தொலைந்து போனேன்' கவிதையில் பெண்ணின் மனவெளிப்பாட்டினை வெளிப்படும் நோக்கில் அமையப் பெற்றதாகும்.
‘திருவிழா’ அல்லது ‘உற்சவம்’ என்பது, ஆண்டுக்கு ஒரு முறை அல்லது குறிப்பிட்ட சில தினங்களில் மக்கள் ஒன்றுகூடி கொண்டாடுவது. திருவிழா அல்லது ஊர்வலம் அல்லது வலம் என்பதே சரியான தமிழ்ப் பதமாகும். உற்சவம் என்பது பிற மொழிச் சொல்லாகும். திருவிழாவின் போது கிராமங்களில் மக்கள் ஒருமாதத்திற்கு முன்பே தன் இல்லங்களில் திருவிழாவிற்காக தன்னை தயார் செய்யும் நிலையைக் காண முடியும். அப்புாது தம் சுற்றங்களோடு ஒன்றாகத் திரண்டு இன்புற்று இருக்கும் நிலையில் அந்த நிகழ்வு மனதிற்கு இன்பம் தரக்கூடியதாகவும் பசுமையான நினைவுகளாகவும் அமைந்தமையைக் காணமுடிகிறது.
கவிதையின் போக்கு
இல்லத்தில் கடைக்குட்டியான மகள் எல்லோருக்கும் செல்லமாக வளரும் சூழலில் ஒரு திருவிழாவில் காணமல் போக தன் சுற்றம் முழுதும் அவளைத்தேடிப் பிடிக்கையில், அதே பெண் தான் வளர்ந்து திருமணவிழாவில் தன் சுற்றம் அனைவரும் முன் இருக்க தான் அந்த இடத்தில் எல்லோரும் இருக்க தொலைந்து போகும் தருணத்தில் பெண்ணின் மன உணர்வு எத்தகையது என்பதையும், சமூகச் சூழலில் பெண் தன் உணர்வினை தொலைத்து வாழும் நிலைப்பாட்டினையும் ஆசிரியர் படம் பிடித்துக் காட்டிச் செல்கிறார் என்பது கண்கூடத்தக்கது.
தொலைந்து போதல்
பெண் தனக்கான சுயத்தை வெளிப்படுத்துவது என்பது சிக்கலானதாகும். சிறு வயது முதல் இறப்புவரை ஏதோ ஒரு கட்டுக்குள் வாழும் வாழ்க்கையில் அவளது அனைத்து அடையாளங்கள் மறைக்கப்படுகின்றன. பெண் சமூகத்தில் வளர வளர அவர்களுக்கான கட்டுப்பாடுகளும் வளர்ந்து விடுகின்றன. காலப்போக்கில் அவர்களின் அடையாளங்களைத் தன் குடும்பத்திற்காக இழந்து நிற்கின்றனர். ஒரு பெண் தனது திருமண வாழ்க்கையில் எப்படி “தொலைந்து போகிறாள்” என்பதை தன் கவிதையில் பெண்ணின் மன உணர்வாகவே தாமரை எடுத்துரைத்துரைக்கிறார்.

[இக்கதையில் ஆசிரியர் கழுகு, தாமரை என்று குறிப்பிடுவது அக்காலகட்டத்தில் இலங்கையில் இயங்கிய தமிழ் அமைப்புகளில் இரண்டை. - பதிவுகள் -]
''அருள், இந்த உக்ரேன் பிரச்சனை...என்ன, ஒன்றுமே விளங்க மாட்டேன் என்கிறதே? '' கட்டடியிலே சபேஷ், கேட்க கூடி இருந்த உமா,யோகி, நாகேஷ்...எல்லார் மூஞ்சியிலும் அறியும் ஆர்வம் சுடர் விட்டது. அருளர் பழைய தொழில்சங்க அமைப்பில் இருந்தவர். அவனுடைய காலத்தில் அவர் ஒன்றாய் ஒரே விடுதலைக்குழுவில் புழங்கியவர் .மற்றவர்களுக்கு தான் புதியவர் . யாழ்ப்பாணத்திற்கு இடம் பெயர்ந்த பிறகு எவரும் தெரிந்தவர் எனக் காட்டிக் கொவள்தில்லை. கழுகால் தடை செய்யப்பட்டு , பல வருசங்கள் ஓடி விட்டன . யாரும் எவரையுமே இப்பவெல்லாம் தெரிந்து கொள்ளவும் முயல்வதில்லை . 









தமிழ் இலக்கிய மரபில் நூல் விமர்சனம் என்பது ஒரு தனித்துவமான அறிவுச் செயல்பாடாகக் கருதப்படுகிறது. அது வெறும் தனிநபரின் விருப்பு–வெறுப்புகளை வெளிப்படுத்தும் முயற்சியாக அல்ல; வாசக சமூகத்தை வழிநடத்தும் பொறுப்புள்ள பணியாகவே பார்க்கப்படுகிறது. ஒரு நூலைப் பற்றி சொல்லப்படுகின்ற கருத்துகள், அந்த நூலின் மதிப்பை மட்டுமல்லாது, இலக்கியச் சூழலையும் சமூகச் சிந்தனையையும் நேரடியாகப் பாதிக்கக்கூடியவை என்பதால், விமர்சனத்திற்கு தெளிவான வரையறைகளும் ஒழுங்குகளும் தேவைப்படுகின்றன.
23-24 வயதே நிரம்பியிருக்கக்கூடிய இவ்விளைஞனின், சாதியம் பற்றிய உணர்வும், பெண்களின் அடிமைத்தனம் பற்றிய எண்ணமும், இதைவிட மேலாக எலும்பும் தோலுமாய் அன்று தோற்றமளித்திருக்கக்கூடிய தன் மக்கள் பொறுத்த சிந்தனையும், நாடு காலனித்துவ ஆங்கிலேயரிடம் இப்படி அடிமைப்பட்டு போயிருக்கின்றதே என்ற ஆதங்கமும் மேலோங்கி வீசுவதாய் இருந்தது. ஆனால், இவற்றை விட, தம் இன்னுயிரை தியாகம் செய்து வெஞ்சிறையினுள்ளும் தம்மை இருத்திக் கொள்ள துடிக்கும் தன்னிகரற்ற சிங்கங்களையும் அவன் தன் வாழ்நாளில் தரிசிக்க வேண்டி வருகின்றது. இருப்பினும் இவ்விளைஞனின் உணர்வலைகளுக்கு கடிவாளம் போட்ட இரு பெரும் அலைகளும் அன்று வீசாமல் இல்லை.
ஏற்கனவே போதிய பராமரிப்பற்ற நிலையில் இருந்த யாழ் மந்திரிமனைக் கட்டடம் அண்மைக்காலப் பெருமழையினால் மேலும் சிதைவுகளுக்கு உள்ளாகியுள்ளது.. அதன் நிலையினை வெளிப்படுத்தும் காட்சிகள் இவை. மந்திரிமனைக்கு இந்நிலை ஏற்படாமல் தடுத்திருக்கும் வல்லமை எமக்கிருந்தது. ஆனால் அதனை நாம் செய்யவில்லை. இது வருந்தத்தக்கது.

பெரும்பாலும் பத்து வயதளவில் பள்ளியில் படிப்பவர்களுக்கு பள்ளிப் புத்தகங்களல்லாத வாசிப்புக்கு ஈர்ப்பு ஏற்படுமென்று எண்ணுகிறேன். அந்த வயதளவில்தான் அது எனக்கும் ஏற்பட்டது.
பதினெட்டாம் திருப்பூர் குறும்பட விருது வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை தாராபுரம் சாலை சேவ்அலுவலக அரங்கில் சுசீலா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. சமூக ஆய்வாளர் வியாகுல மேரி அவர்கள் விருதுகளை வழங்கினார். அவர் உரையாற்றும் போது இப்படி குறிப்பிட்டார் :





தலைப்பிற்கேற்ப கடலும்,கடல் சார் நிலமும் - கடற்கரையுமாய் - மங்கிய மாலையில்,மஞ்சள் நிறப் பின்னணியில், மங்கலகரமான அட்டைப் படத்துடன் ரஞ்ஜனி சுப்ரமணியத்தின் 'நெய்தல் நடை' எனும் அவரின் முதற் படைப்பான இச் சிறுகதைத் தொகுப்புப் பற்றிய எனது பார்வையை மகிழ்வுடன் இங்கு பதிவு செய்ய விழைகின்றேன்.