1. உண்மை

உண்மைகள் என்றும் உவப்பானவை அல்ல​ !

அவை உறைக்கவும் செய்யும்
உறவை பிரிக்கவும் செய்யும்
காலம்
தீர்மானிக்கும்
மேடைகளில்
உண்மையும் ஒரு அங்கமே !
அவற்றைக் கையாள்வதில்
மிகுந்த​ கவனம் தேவை
அனாவசியமாக​ பகிரப்படும்
உண்மை
அமைதியை சிலவேளைகளில்
கெடுத்து விடுகிறது .
தேவையான​ அளவுக்கே
தேர்ந்து எடுத்து கொடுக்க​
வேண்டும் .

2. அம்மா ( தாய்) !

அருகிலிருந்து அமுதூட்டி
ஆசை முத்தம் கொடுத்தவளை
பேதை மனம் தேடுதுவே ,

அன்புடனே  உபசரித்து
அறிவு புகட்டிய​ அன்னை
மடியை
எண்ணி மனம் தேடுதுவே

உண்மை நிலை எடுதுரைத்து
உணர்வு நிலை ஏற்றி வைத்து
எண்ணம் எல்லாம்
என்றும் மனம் தேடுதுவே !

3. மிதவை

நேற்றும் , இன்றும் ,நாளையும்
வாழ்க்கை மனிதர்களோடு தான்
பின்னப்பட்டு கிடக்கிறது என்பதை
எப்படித்தான் சில​ மனிதர்கள்
மறந்து விடுகிறார்கள் .
அதனால் தான் சில​ மறதி
நோய்களுடன் மரணித்தவர்களாய்
வாழ்கிறார்கள் ,வாழ​
விடப்படுகிறார்கள் .
மனித​ தொடர்புகளின்
மகத்துவத்தை புரிந்து
கொள்வோம்
மமதைகளை அகற்றி வைப்போம் .
 
4. மனிதன்

இளமையில் கனவுகளையும்
முதுமையில் நினைவுகளையும்
சுமக்கும் ஒரு விலங்கு .

வீணையின்  ஒலியையும்
குழந்தையின் சிரிப்பையும்
புரியும் போது மனிதன்
முழுமை பெறுகிறான்.
பாகுபாடுகளைக் கடந்து
பக்குவம் பெறு .

5. கடல்

தினம் கடற்கரையில்
அவள் காலடியை தேடி நடக்கிறேன்
அந்த​ ஒற்றைப்பனை மரமும்
சாட்சி சொல்ல​ மறந்து
ச​ரிந்து படுத்துக் கொண்டது .

மனிதன் கடலோடு மட்டும் நிலச்
சண்டை போடுவது இல்லை
ஏனோ ?

கால்களை தொட்ட​
கடல் அலைகள்
ஆசிர்வாதம் வாங்கியதாய்
ஆணவம் கொள்ளாதே
அலைகளின்
ச​க்தி பல​ அழிவுகளை
நிகழ்த்திச் சென்று உள்ளது
அதற்காக​ அதன்
அழகை ரசிக்க​
மறந்து விடாதே
அது தன்னையும்
தாலாட்டும்
உன்னையும் தாலாட்டும் .

6. கருவி

யார் , யாரோ போராடிய​
துப்பாக்கி  மட்டும் அனாதையாகக்
கிடக்கிறது .

7. நோய்

உனக்கு கொடுக்கப்பட்ட​ காலம்
தான்
உனது குறிக்கோள்களை மாற்றி
வைக்கும்
உனது திசையை     காட்டி  நிற்கும்.

8. வரலாறு

1940 , ஒரே தேசமாய் இணைந்த​
வாழ்வு நல்லது
1950    மொழி அங்கீகாரம் வேண்டும்
1960 சமஷ்டி ஆட்சி வேண்டும்
1970  தனி நாடு வேண்டும்
1980
தனிநாடு
1990
மாகாணசபை வேண்டும்
2000  இணைந்த​ மாகாணசபை
வேண்டும் ,
அங்கீகாரம் வேண்டும்
2010 இணைந்து வாழ​ வேண்டும் ,
சமஷ்டி வேண்டும்
2020
தனிநாடு வேண்டும் .

( இதே போல​ எதிர்த்தரப்பும் எழுதட்டும் ... )

9. வாழ்க்கையில் ,

கணக்குப் பார்த்தால்
பல​ விசயங்கள் புரிவதில்லை
ஆயினும் என்ன​ ?
வாழ்க்கை கணக்குகளுக்கு
அப்பால் பட்டது  தானே !

நீ பல​ வருடங்கள் வாழ்ந்து
விட்டாலும் கைக்குள்
எண்ணக் கூடிய​ சில​
சந்தர்ப்பங்களில் தான் நீ
வாழ்ந்ததாக​ உனக்கே தெரியும்
மிகுதி எல்லாம்
வெறும் விகுதிகளே !

சவாரி செய்யும் போது
சற்று கடினமாக​ அமர்ந்து
விட்டோமா ?
இந்த​ விலங்குகள்
எம்மை தூக்கி எறிந்து விட்டன​
நாளை ஒரு வேசம் போடுவோம்
அதுவரையில் , சில​ இடைவேளைகள்
தொடரட்டும் .

' சிந்திக்கிறதை நிறுத்தக் கூடாது ' என்ற​
சோக்கிரஸ்டீஸ் சிந்தையை
நிறுத்த​ நச்சு கொடுத்த​
சமூகம் எங்கே போகிறது ?
கேள்வி கேட்கக் கூட​
உரிமை அற்றுக் கிடக்கிறது .

பிறரை எழுப்புவதற்காக​ தம்
உயிரைக் கொடுத்தவர்கள்
நினைவு கொள்ளப்படுவர் !

( நாட்டின் உள் வெளி  கொள்கைகளால்.... பலிகள் ! )

10. மேதை

ஆசிரியர்கள்  1000  க்கணக்கான​
கேள்விகளை  விதைக்கிறார்கள்
அவற்றில்  100   க்கணக்கான​
கேள்விகளுக்கு விடைகளை
அவர்கள் தந்து விடுகிறார்கள்

மிகுதியில் ,
சில​ கேள்விகளை ஒரு
சில​ மாணவர் பகுத்து
ஆராய்ந்து...விடைகளை கண்டு பிடிக்கிறார்கள்
இவர்களே ,
தத்துவஞானியாகவும் ,
விஞ்ஞானியாகவும்
திகழ்கிறார்கள் !

11. லோகாயம்

மனிதன் தான் பிறந்ததிலிருந்து
உள்ளேயும் வெளியேயும் தேடிக்
கொண்டே இருக்கிறான்
வெளியே தேடிக் கட்டிப் போட்டுக்
கொண்டவர் உறவாகவும் ,
கலந்து பேசியவர்கள்
நட்புபாகவும் இணைகிறார்கள்
உள்ளே ஆன​ தேடலில்
கடவுளையும் , கருணையும் கண்டு
புதிய​ பரிணாமமும் எழுகிறது .

12. காட்சிப்பிழை !

அன்புப்பாடம் புரியவில்லை
அனுபவம் புரிகிறது
விம்மி , விம்மி அழுத​ பின்பும்
விந்தை உலகம் புரியவில்லை .

விழ்ந்து எழுகிறேன்
வேசம் ஏதும் புரியவில்லை

தள்ளி நின்று பார்க்கிறேன்
தாண்டவக் கூத்துப் புரியவில்லை

தரையில் துவண்டு அழுகிறேன்
தாகம் இன்றும் தீரவில்லை

மீண்டும் வீழ்கிறேன்
மீட்சி இன்றித் தவிகிறேன்

காட்சி தான் மாறாதோ ?
கானல் வரிகள் அழியாதோ !

13. துடிப்பு

நீ ஒரு வாழ்த் தகுதியுள்ள​ மனிதன்
எனவே தான் வாழ்ந்து மரபணுவைக்
கடத்தி விட்டுச் செல்கிறாய்
அது மட்டுமில்லாமல்
கருத்தையும் விதைத்துச்
செல்கிறாய் . அதனால் மற்ற​
உயிர்களிலிருந்து
வேறு படுகிறாய்
கருத்தாலும் , கருவாலும் வாழத்
துடிக்கிறது மனித​ வாழ்வு .

14.  நிறவாதம்

அங்கங்கே காயம் செய்து
அழகு பூச்சு இடுவதை
நிறுத்த​
தோலின் நிறத்தையே  மாற்றிக்
கொண்டேன் . எனினும் இன்னும்
இன்றும்
நிற்கவில்லை என் நிறத்திற்கான​ தேடல்

இயலாமையும் , இல்லாமையும்
மனிதனை மனமுடைய​ வைத்து
விடுகிறது .
அதனால் அவன் சமூகத்தின் மீது
ஒரு
சீற்றம் கொள்கிறான் .

ஒருநாள் உன் உடல் எரிந்து சில​
எலும்புத் துண்டுகளும் சாம்பலும்
ஆகலாம் , அதுவரைக்கும் தான்
இந்த​ தாளங்கள் இங்கே நடக்கும் .

நாளைய​ விடியலின் போது
என் அருகில் நீயோ
உன் அருகில் நானோ
இல்லாமல் இருக்கலாம்
ஆயின் என்ன,  வாழ்வின்
இனிய​ நினைவுகள் எமது இருப்பை நினைவில்  
இருத்திச்  செல்லும் .


15. குறிக்கோள் !

ஏதோ ஒரு பற்றுடன் தான்
மனித​ வாழ்வு ஓடிக் கொண்டிருக்கிறது
வயதுக்கு  வசதிக்கு ஏற்ப​ அது மாறும் .

வானத்தைநோக்கி பார்க்க​ முடியும்
ஒருவனால் தான்
சிலவேளைகளில் வானவில்லைப் பார்க்க​ முடியும்
இலக்கை நோக்கிய​ பயணமே
இனிமையான​
நேரங்களை எமக்கு அளிக்கும் .

16. வருசம்  பிறக்க​

வர்க்க​ ஆண்டே வருக​
வசந்தம் கொண்டு தருக​

      அமைதி கொண்டு  வருக​
      ஆனந்தம் நிறையத் தருக​

அன்பை நிறையத் தருக​
அறிவைப் பெருக்கித் தருக​
      
      இன்பம் பெருக்கித் தருக​
       இதயம் இனிமை பெருக​

கல்வியில் உச்சம் பெருக​
கலைகளில் ஏற்றம் நிறைக​

      வாழ்வில் வசதி பெருகி
      வையகம் என்றும் நிறைக​

எப்படியோ சில​ ஆண்டுகள் கடந்து
போய் விடுகின்றன​
அவை கொடுத்த​ தாக்கங்களும்
கடந்து போய் விடுகின்றன​
எண்ணிப் பார்க்கும் போது
சிலருக்கு வெறுமை தெரியலாம்
ஆயினும்  சில​ அழிக்க​ முடியாத​
நினைவுகள் பதிந்து
கிடைக்கத் தான் செய்கிறது சிலருக்கு
அவைகளை எடுத்துப் பார்க்க​
நேரமோ மனமோ
வருவதில்லை அவ்வளவு தான்

17.  நிலமகள்

இறக்கும் தர்ணம் வரும் போதும்
இருப்பவர்களின் வளமான​
வாழ்விற்கு வகை
செய்து போவனே என்றும்
வாழும் மனிதன்

யாரையும் காரணமில்லாமல்
தண்டிக்கும் உரிமை தனி
மனிதனுக்கோ , குழுவுக்கோ , நீதிக்கோ
கிடையாது

நேற்றைய​ பொழுதுகளை பேசாமல்
கடந்து விட்டோம்
இன்றைய​ பொழுதுகளை
இசைக்காமல் சுருக்கி விட்டோம்
நாளை பொழுதுகளை
நாமே சுருக்கி விட்டோம்
மனிதனோடும் ,இயற்கையோடும்
உறவு கொள்ளாமல்
எதை சாதிக்கப் போகிறோம் ?

பயன்களை எதிர்பார்த்தே
பயணங்கள் தொடங்கியதால்
இயற்கையோடு இயைந்து
போக​ மறந்து விடுகிறோம்
சில​ இனிமைகளை இழந்து
விடுகிறோம்.

18. பொங்கல்

புதிர் நெல் அறுத்து எடுத்து
புதுப்பானை பார்த்து எடுத்து
முற்றத்தில் கோலமிட்டு
முக்கோண​ அடுப்பு வைத்து
ஆதவனுக்கு  அழைப்பு
வைத்து
பொங்கியபொங்கலில்
என் மனமும் மகிழ்ந்து
பொங்கட்டும்
இதயம் நிறையட்டும் .

19.அறிவிலி

உருண்டு கொண்டு இருக்கும்
உலகையே உருளாமல்
இருப்பதாய் உணரும் மனிதன்
எத்தனையோ எதிர்மறை
எண்ணங்களை கொண்டிருப்பது
ஒன்றும் ஆச்சரியமே இல்லை .