
கவிஞர் ஆத்மாஜீவ் அவர்களின் இயற்பெயர் வி.சி. ராஜேந்திரன். 12.11.1966 ல் நெய்வேலியில் பிறந்தவர். 13 வயதில் பள்ளி ஆண்டுவிழா நாடகத்தில் நடிக்க ஆரம்பித்தது முதல் நாடகம் எழுதி இயக்கி நடிக்கத் துவங்கியதில் ஆரம்பித்த இவரது எழுத்தார்வம், நாடகத்திலிருந்து சிறுகதைக்கும், கவிதைக்குமாக, இடம் பெயர்ந்தது.
நாடகத்துறையிலிருந்தபோது திரு. அஸ்வகோஷ் அவர்களுடன் பரிச்சயம் ஏற்பட்டு அவர் எழுதி புத்தகமாக வெளிவந்த நாடகம் ஒன்றை அவர் முன் னிலை யல் அரங்கேற்றியிருக்கிறார்.
படிக்கிறபோதே, 1980 களில் "ஆத்மா" கையெழுத்து இதழை ஆரம்பித்து, தொடர்ந்து மூன்று ஆண்டுகள் மாதம் ஒரு இதழாக நெய்வேலி நூலகத்தில் வைத்தார். "ஆத்மா" பௌர்ணமி இலக்கிய கூட்டம் தொடர்ந்து நடத்தினார்.
1988-89ல் கணையாழியில் திரு.அசோகமித்ரன் பணியி லிருந்த சமயத்தில் ஒரு மாத காலம் அச்சு கோர்ப்ப வராகவும், புரூப் ரீடராகவும் அங்கு பணிபுரிந்திருக் கிறார்.
ஆத்மாஜி என்ற பெயரை "ஆத்மாஜீவ்" என்று நியூம ராலஜி யின்படி பெயர் மாற்றி தந்தவர் திரு. பிரமீள்.
வேர்கள் ராமலிங்கம், திரு. கோணங்கி, ரவி சுப்ர மணியம், இரா.நடராசன், பாவண்ணன், பிரம்மராஜன், நாகார்ஜூனன், கால சுப்ரமணியம் போன்ற பலருடன் நேர் மற்றும் கடிதத் தொடர்பும் கொண்டிருந்தார்.
1990 களில் "காலக்ரமம்" என்ற பெயரில் கவிதைகளுக் கான காலாண்டிதழ் ஆரம்பித்து சுமார் 15 இதழ்கள் வரை பல சிரமங்களுக்கிடையில் தொடர்ந்து நடத்தியவர். இவரது கவிதைகள் தமிழின் முக்கியமான சிறு பத்திரி கைகளில் வெளியாகியுள்ளன. கவிதைத் தொ குப்புக ளும் வெளியாகியுள்ளன.