அண்ணாமலை கனடா: சங்க இலக்கியம் - மீள் வாசிப்பு (கருத்தரங்குத் தொடர் -9)


- * தெளிவாகப் பார்க்க கீழுள்ள படத்தைக் 'கிளிக்' பண்ணவும் . -
பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் ஆறாவது சர்வதேசத் தமிழியல் ஆய்வு மாநாடு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 30, 31ஆம் திகதிகளில், “ஈழத்தில் அச்சுப் பண்பாடும் பதிப்பும்” எனும் கருப்பொருளில் இடம்பெறவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
“தமிழ்ச் சூழலில் அச்சுப் பண்பாட்டு இயக்கத்திலும் பதிப்புத்துறையிலும் ஈழத்தவர் பணிகள் மகத்தானவை. அச்சு, பதிப்பு ஆகியவற்றினூடு தமிழியல் வரலாற்றைக் கட்டமைப்பதிலும் பாதுகாப்பதிலும் நவீனப்படுதுவதிலும் ஈழத்தவரின் சாதனைகள் முன்னோடியானவை. அச்சியந்திரங்களைக் கொணர்ந்து அச்சியந்திர சாலைகளை நிறுவுதல், ஓலைச் சுவடிகளை அச்சேற்றி நூல்களுக்கு நிலையான ஆயுள் அளித்தல், அச்சிட்ட நூல்களைப் பரப்புவதனூடு அறிவுப் பரவலாக்கத்தை நிகழ்த்துதல் முதலாய செயற்பாடுகளை காலனிய காலத்தில் மேற்கொண்ட ஈழத்து அறிஞர்கள், தமிழ்ப் பதிப்புலகின் கேந்திர தேசமாக ஈழநாட்டை மிளிரச் செய்தனர். ‘சீர்பதித்த நற்பதிப்பு மூலவர்’ ஆறுமுக நாவலர், ‘பதிப்பு உலகின் தலைமைப் பேராசிரியர்’ சி.வை. தாமோதரம்பிள்ளை ஆகியோரதும் அவர்களைப் பின்பற்றி இத்துறைசார்ந்து ஈடுபட்டோரதும் பணிகளை ஆராய்ந்து பயன்கொள்வது நமது கடமையாகும்” என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்நிகழ்வு பற்றிய அறிவித்தலைத் தவற விட்டுவிட்டோம். வருந்துகின்றோம். ஓர் ஆவணப்பதிவாக இங்கு பதிவு செய்கின்றோம். - பதிவுகள்.காம் -

* அறிவித்தலைத் தெளிவாகப் பார்ப்பதற்குக் கீழுள்ள 'இமேஜ்'தனை அழுத்தவும்.

நேரம் மாற்றப்பட்டிருக்கிறது நண்பர்களே! சனிக்கிழமை
4:00pm to 8:00pm. கொரோனாக்கால வரைமுறை தளர்த்தியதில்
கொஞ்சம் வசதியாக்கப்பட்டிருக்கிறது.
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்


இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

குவியம் கனடா – கொலுசு சஞ்சிகைகள் இணைந்து நடத்தும் 2022 ஆண்டின் மனித உரிமை மீறல்கள் சார்ந்த சிறுகதைப் போட்டி
தேர்வுக்குழு தேர்ந்தெடுக்கும் சிறுகதைகள் விபரம்
முதலாம் பரிசு 6000 ரூபா (இந்தியன்)
இரண்டாம் பரிசு 4000 ரூபா (இந்தியன்)
மூன்றாம் பரிசு 2000 ரூபா (இந்தியன்)
நான்காம் பரிசு 1000 ரூபா (இந்தியன்)
ஆறுதல் பரிசுகள் எட்டு ஓவ்வொன்றும் 500 ரூபா (இந்தியன்)

பயணம் ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியமானது புதிய அனுபவங்களைக் கற்றுக்கொள்ள வழிவகுக்கிறது. ஏதோ போனோம் வந்தோம் என்றில்லாமல் ஒவ்வொரு பயணமும் வரலாறாய் பதிவு செய்யப்பட வேண்டும். இனிய நந்தவனம் ஏற்பாடு செய்யும் ஒவ்வொரு பயணமும் வரலாறாக்கப்படுகிறது.

கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்திய சர்வதேச சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற 16 சிறுகதைகள் அடங்கிய ‘சர்வதேச தமிழ்ச் சிறுகதைகள்’ என்ற சிறுகதைத் தொகுப்பு ஏப்ரல் மாதம், 17 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 3 மணியளவில் வெளியிட இருப்பதால், இலக்கிய ஆர்வலர்களை இந்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.