நனவிடை தோய்தல் (8)- நினைத்தாலே இனிக்கும் நினைவுகள்: நத்தார் நினைவூட்டும் நண்பன் பற்றிய நினைவுகள்... - இந்து.லிங்கேஸ் -

இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்"என்று கூறுவதற்கு "பெலிஸ் நத்தால்"(Feliz Natal) என்றோ அல்லது "கொம்பிரி மென்டொஸ் பெலோ நத்தால்" (Cumprimentos pelo Natal)என்றோ போர்த்துக்கேய மொழியில் வாழ்த்துவார்கள். போர்த்துக்கேய வார்த்தையாகிய 'நத்தால்' சிறிது திரிபடைந்து தமிழில்'நத்தார்'ஆக மாறிவிட்டதாம்.எது சரியோ எது எமக்கு சம்மதமோ; இயேசுவின் பிறப்பான இந்நாளை நண்பர்களாகியதிலிருந்து நானும்,என் நண்பன் குட்டியும் கொண்டாடினோம். ஊரே கொண்டாடும். இந்த உலகமே கொண்டாடும். நானும் அவனும் கொண்டாடுகின்ற விதமிருக்கே,அது வேற லெவல். அதைச்சொல்லியே ஆகவேண்டும்.
படைப்பவன் இறைவன்.தாயின் தண்ணீர்க்குடத்தில் பிறக்கும் அவனது படைப்பை மதமெனும் அரசியல் ஆக்கியவன் மனிசன். அதற்குள் நான் இந்து ஆகவும்,என் நண்பனோ இந்துவும்,கிறிஸ்துவுமாக இருவரும் இந்த வாழ்வுக்குள் நாமும் கட்டுண்டு போனோம். அவன் தந்தை இந்துவாக. தாய் கிறிஸ்தவராக.காதல்கொண்டு கரம்பற்றிய வாழ்க்கை.பிறப்பால் இவன் பெயர் ஜோர்ஜ் செல்வகுமாரன்.சிவனும் சக்தியுமாக இவன் ஒருவனே இருவருமாக பெற்றோரை வாழ்நாள்வரை தன் முழுப் பெயரிலும் சரிசமமாக சுமந்தவன்.
விடிந்ததும் நத்தார் என்றால்,வடிவாக உடுத்து அம்மாவுடனும்,தங்கச்சியுடனும் முதலில் அவன் தேவாலயத்திற்கு சென்று வருவது வழக்கம். அன்று மத்தியானம் என் வீட்டிற்கு கேக் உடன் வருவான். என் அப்பா அம்மாவிடம் ஆசீர்வாதம் வாங்குவான்."உன்னை மத்தியானச்சாப்பாட்டுக்கு அம்மா கூட்டிக்கொண்டு வரச்சொன்னவா, வாடா" என்பான். ஒரே சைக்கிளில் இருவருமாக யாழ்.போதனா வைத்தியசாலை குவாட்டர்ஸ் இற்குச்செல்வோம்.அங்குதான் Matronஆக வேலை செய்தார் அம்மா. அவாவுக்கென்றே அழகான தனி விடுதி. அங்கு சென்று அன்பாய் ஆசைதீரக்கதைக்குக்கொண்டு ஆட்டிறைச்சிக்கறி, கத்தரிக்காய்க்கறி,ரசமென்று ஏப்பம் வரும்மட்டும் ஒரு பிடி பிடிப்போம்.அதைப்பார்க்கின்ற தாய்க்கும், தங்கச்சிக்கும் சிரிப்பு ஒரு பக்கம்,சந்தோசம் ஒரு பக்கமாய் ஆனந்தம் முகத்தில் வெளிப்படும். நானும்,குட்டியும் அன்பாய் அவ்வளவுகாலம் ப்ரெண்ஸ் ஆக இருப்பதைப்பார்த்து அம்மாவின்ர கண்கள் கலங்குவதை ஒவ்வொரு நத்தார் கொண்டாட்டத்திலும் என்ர கண்களும் கண்டு பனித்திரையாகும்.தங்கச்சியைக் கோபப்படுத்தி தங்கையிடம் அடிவாங்கும் பந்த பாசத்தையும் இந்த நாள் நிறைவேற்றும். நத்தார் என்றதும் என்றும் முதலில் என் நினைவில் நிற்பது மறக்கமுடியாத பேரன்பின் இக்காட்சிப்படிமங்கள்தான்.








சிலப்பதிகாரத்தை ஏன் படிக்க வேண்டும்? சிலப்பதிகாரத்தில் அப்படி என்னதான் பொதிந்து கிடக்கிறது ! சிலப்பதிகாரத்தைவிட வேறு காப்பியங்கள் தமிழில் சிறந்து விளங்கவில்லையா ? என்றெல்லாம் எம க்குமுன்னே பல ஐயங்கள் வந்து நிற்கும் . சிலப்பதிகாரத்தைப் பற்றிய சிறப்பும் அதன் சிந்தனைகருத் துக்களும் சரியான முறையில் எம்மிடம் புகுந்துவிடுமானால் இப்படியான ஐயம் எழுவதற்கே இடமில் லாமல் போய்விடும் என்பது எனது மனக்கருத்தாகும்.தமிழில் வந்த முதல்காப்பியமாக சிலப்பதிகாரமே விளங்குகிறது. 




தமிழின் முக்கியமான கதைசொல்லிகளில் ஒருவரான தேவகாந்தன் தனித்துவமான மொழியாலும், தேர்வுசெய்யும் வித்தியாசமான களங்களாலும், தனது புனைவுகளூடாக சம்பவங்களையும் கருத்தியலையும் ஊடுநூலும் பாவுநூலுமாய்க் கலந்துபின்னும் ஆற்றலாலும் அறியப்பட்டவர். காவியங்கள் மீதான அவரது தாடனத்தையும் அவற்றை ஈடுபாட்டோடு கற்றுத் தெளிவதற்கான அவரது முனைப்புகளையும் அவருடனான உரையாடல்களின் வழியே அறிந்திருக்கின்றேன். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக எழுதிவரும் தேவகாந்தன், மிகுந்த தேடலுடன் தொடர்ச்சியாக தத்துவங்களையும், கோட்பாடுகளையும், அபுனைவு நூல்களையும் தொடர்ந்து தேடித்தேடி வாசித்தும் வருபவர். 

ஈழக்கவி என்னும் புனைபெயரில் எழுதிவரும் ஏ. எச். எம். நவாஷ் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் மெய்யியலில் சிறப்புப் பட்டம் பெற்றவர்; சிறிதுகாலம் மெய்யியல் துறையில் விரிவுரையாளராகவும் பணியாற்றியவர். நீண்டகாலம் ஆசிரியராகவும் அதிபராகவும் கடமையாற்றி அண்மையில் பணி ஓய்வு பெற்றிருக்கிறார்.




(ரஷ்ய இலக்கிய சிருஷ்டி, பெருங்கவி அலெக்சாண்டர் புஷ்கின் பிறந்த ஜூன் 06, 1799 இந்நாளையே “ரஷ்ய மொழி தினம்" என ஒவ்வொரு ஆண்டும் கிழக்கு ஐரோப்பாவிலும் ரஷ்யாவிலும் கொண்டாடப்படுகிறது)
எனக்கு அப்போது பன்னிரண்டு வயதிருக்கும். யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் அமைந்திருந்த ஸ்ரான்லி கல்லூரி ( பின்னாளில் இக்கல்லூரி கனகரத்தினம் மத்திய கல்லூரி என பெயர் மாற்றம் பெற்றது ) ஆண்கள் விடுதியிலிருந்து ஏழாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தேன். நவராத்திரி காலத்தில் நடந்த கலைமகள் விழாவில் ஒரு பெரியவர் கல்வி, செல்வம், வீரம் பற்றி பேசினார். அவர்தான் வித்துவான் வேந்தனார் என்று கல்லூரி அதிபர் மண்டலேஸ்வரன் அறிமுகப்படுத்தினார்.


குழந்தை இலக்கியம் என்பது ஆணிவேரை ஒத்ததாகும்.எழுதுவதற்கு மிகவும் சிரமாமன இலக்கியம் எது என்றால் அது " குழந்தை இலக்கியமே " குழந்தைகளின் உளவியலைப் புரிந்து கொண்டால்த்தான் அது சாத்தியமாகும்.குழந்தைகளின் இலக்கியம் இலக்கிய வகைகளிலே மிகவும் முக்கியமானதாகும். சிறிய வயதிலே படிக்கும் பழக்கம் இருந்தால்த்தான் பெரியவர்கள் ஆன பின்பும் படிப்பார்கள். பெரியவர்களின் இலக்கியத்துக்குக் கூட அடித்தளம் "குழந்தை இலக்கியம் " என்பதுதான் மனமிருத்த வேண்டிய உண்மையெனலாம். அவுஸ்திரேலியாவில் குழந்தை இலக்கியத்தை வளர்ப்பதில் குறிப்பிட்ட படைப்பாளர்களேஈடுபடுகிறார்கள்.குழந்தைகளுக்கான படைப்புக்களை படைப்பதை ஒரு முக்கிய பணியாக நினைத்தே அவர்கள் தங்களது படைப்புக்களை படைக்கின்றார்கள் என்றுதான் எண்ண வேண்டியிருக்கிறது.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









