ஆய்வு: கம்பராமாயணத்தில் முதன் முதலில்..!!! - முனைவர் க.மங்கையர்க்கரசி -

கட்டுரையாளர்: கம்பராமாயணத்தில் முதன் முதலில்..!!! - முனைவர் க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை 600061
முன்னுரை
தமிழ்மொழி எளிமையானது. இனிமையானது. தொல்காப்பியம் உள்ளிட்ட பல இலக்கணநூல்களைத் தன்னகத்தே கொண்டது. சங்கஇலக்கியம் முதலாக பல்லாயிரக்கணக்கான நூல்களைக் கொண்டது.பல செய்திகளை உள்ளடக்கியது என்றாலும் சில செய்திகளைக் கம்பரே தம் இராமாயணத்தில் முதன் முதலில் கூறியுள்ளார். அவற்றுள் சுவையான சில செய்திகளை மற்ற இலக்கியங்களில் காணப்படாத, கம்பரே கூறிய செய்திகளைக் கண்டு நாம் வியப்போம்.கம்பர் கூறிய வியப்பான சில செய்திகளை இக்கட்டுரையில் நாம் ஆராய்வோம்.
முதல் விவாகரத்து
கம்பரே முதன் முதலில் விவாகரத்து குறித்துக் கூறியுள்ளார். கைகேயி, தசரதனிடம் பரதன் நாடாளவும், இராமன் காடாளவும் வரம் கேட்டதால் மனமுடைந்த தசரதன், வசிஷ்டரிடம் இவள் என் மனைவி அல்லல் இவளை மனைவி எனும் நிலையிலிருந்து முற்றிலும் நீக்கிவிட்டேன். அரசனாக வரப்போகும் அந்தப் பரதனையும் இனி என் மகன் என்று கருத மாட்டேன். அவன் என் இறுதிச் சடங்கு செய்வதற்கு உரிமை உடையவன் ஆக மாட்டான் என்றான்.
“இன்னே பலவும் பகர்வான் இரங்காதாளை நோக்கி
சொன்னேன் இன்றே இவள் என் தாரம் அல்லள் துறந்தேன்
மன்னே ஆவான் வரும் அவ் பரதன்தனையும் மகன் என்று
உன்னேன் முனிவா அவனும் ஆகான் உரிமைக்கு என்றான்”
(நகர் நீங்கு படலம் 341)


நோக்கம்: இக்கட்டுரை, ஈழத்துச் சிறுகதை உலகின் முன்னோடிப் படைப்பாளி அ.முத்துலிங்கம் அவர்களின் "ஆயுள்", "வமிசவிருத்தி", "கொழுத்தாடு" ஆகிய சிறுகதைகளை மையமாகக் கொண்டு, மனித இருப்பிற்கும் இயற்கையின் விதிகளுக்கும் இடையிலான முரண்பட்ட உறவினைப் பகுப்பாய்வு செய்கிறது. மனித மையவாதச் சிந்தனையிலிருந்து (Anthropocentrism) விலகி, காலத்தின் பிரம்மாண்டத்தையும், பருப்பொருட்களின் (Objects) நிலைத்தன்மையையும் இப்படைப்புகள் எவ்வாறு முன்வைக்கின்றன என்பதை ஆராய்வதே இவ்வாய்வின் முதன்மை நோக்கமாகும்.



தனித்த வாழ்வியலிற்காக யுனெஸ்கோவால் உலகப் பூர்வகுடிகளாக அங்கீகரிக்கப்பட்ட படகர்களின் தொல்சடங்குகள் தனித்துவமானவை. சுமய சார்பற்றவை. இவர்களே உருவாக்கிய தொல் பண்பாட்டினைக் கட்டியங் கூறுபவை. இவர்களின் இயற்கையோடு இயைந்த வாழ்வியலின் உறுதிபாடாகத் தொடர்பவை. அந்தச் சடங்குகளில் சில சங்கக் கூறுகளின் தொடர்ச்சியாகத் திகழ்பவை. இன்றும் இவர்களின் இயற்கை வாழ்வின், வழிபாட்டின் எச்சங்களாத் தொடர்கின்றன. அதில், இவர்களின் மரவழிபாடு இன்றியமையானதாகும்.
கட்டுரையின் கட்டமைப்பு (Outline)

கட்டுரையாளர்: முனைவர் பீ. பெரியசாமி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, டாக்டர் எம்.ஜி.ஆர். சொக்கலிங்கம் கலைக் கல்லூரி, ஆரணி, திருவண்ணாமலை- 632317,
முருகு எனும் சொல் முருகனைக் குறிக்கின்றது. இந்த முருகனைப் பற்றி பல்வேறு தொன்மக் கதைகள் புனைந்துள்ளனர். அந்த வகையில் மிகவும் கவனிக்கத்தக்கது முருகன் சிவசக்தி மகனானது. ஆரம்ப கால முருக வழிபாட்டில் முருகன் யாருடைய மகனாகவும் (பரிபாடல், திருமுருகாற்றுப்படை தவிர்த்து..) பேசப்படவில்லை. மாறாக அவன் குறிஞ்சி நிலத்தின் தலைவனாகவும், போருக்கு உரியவனாகவும், நோய் தீர்ப்பவனாகவுமே அடையாளப்படுத்தப்பட்டுள்ளான். அவ்வாறான முருகன் இடைக்காலத்தில் சைவனாகவும் சிவசக்தி மைந்தனாகவும் திருமால் மருகனாகவும் புனைந்தது இந்து மத பரப்பும் நோக்கிலும் பிற வட இந்திய கடவுளோடு முருகனை இணைக்க வேண்டும் என்ற வலிய நோக்கத்தோடும் இது செய்யப்பட்டிருக்க வேண்டும். இங்கு முருகன் வெறியாட்டு உரியவன் செம்மறி ஆடு பலி பெற்றவன். சைவ கடவுளரகளோடு வலிய இணைத்ததன் காரணமாக அவன் சைவ படையலுக்கு உரியவனாக மாற்றம் அடைந்ததோடு மட்டுமல்லாமல் வழிவழியாக இருந்து வந்த தமிழர்களின் வழிபாட்டு நிலையிலும் பண்பாட்டு நிலையிலும் இந்த கடவுள் இணைப்பு என்பது மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கி இன்று அனைவரும் முருகனை சைவனாக ஏற்று சைவ படையலிட்டு வழிபடுவதை நாம் காண்கின்றோம். இது நம் பண்பாடு, நாகரிகம், வழிபாட்டு மரபு ஆகியவற்றின் மீதான மிகப்பெரிய சவாலான தாக்கம் என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் வேலனின் வெறியாட்டு நிலையும் கேரள தெய்யமும் எவ்வாறு ஒன்று என்கிறோம் என்பதை இவ்வாய்வு விரிவாக பேசவுள்ளது.
[எழுத்தாளர் மா.சித்திவினாயகம் 'ரொறன்ரோ தமிழ்ச் சங்க'த்தில் 'கனடாவில் நவீனத் தமிழ்க் கவிதை' பற்றி ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்]
கனேடியப் பனி நிலத்தின்இந்தப் பெருங் குளிரிலும், நம் தமிழ்க் கவிதைப் பூந்தோட்டம் சீரோடு செழிக்கிறது. அது கொடிவிட்டுத் தழைத்துச் செழிக்கின்ற புனிதத்தைப் போற்றுகிற, இந்த தமிழ்க்கவிதை உரையாடலுக்கு வருகை தந்திருக்கும் அறிஞர்களே, கவிஞர்களே அன்பு உறவுகளே உங்கள் கரங்களை தமிழன்போடு இறுகப் பற்றுகின்றேன். 
கட்டுரையாளர் - முனைவர். அ. ஸ்ரீதேவி , துறைத்தலைவர் தமிழ்த்துறை, நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்.105 -
கட்டுரையாசிரியர்: -கலாநிதி செல்லத்துரை சுதர்சன், தமிழ்த்துறை, பேரதனைப் பல்கலைக்கழகம் 
முன்னுரை





பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









